பரிசில், ஆதி மற்றும் யூடான்ஸ் இணைந்து வழங்கிய சவால் சிறுகதை போட்டி முடிவுகள் வெளியாகி விட்டன. நான் எழுதிய “சட்டென நனைந்தது நெஞ்சம்” சிறுகதைக்கு இரண்டாம் இடம் கிடைத்து இருக்கிறது. காலையிலிருந்து கிள்ளி கிள்ளி பார்த்து கை முழுதும் காயம் என்றால் பார்த்து கொள்ளுங்கள்!
78 கதைகள் போட்டிக்கு வந்தன. அனுஜன்யா, ஸ்ரீதர் நாராயணன், எம்எம். அப்துல்லா என மூன்று தேர்ந்த நடுவர்கள். பரிசிலும் ஆதியும் ஒருங்கமைப்பாளர்கள். இரண்டு வாரங்களுக்குள் எல்லா கதைகளையும் வாசித்து அவற்றுக்கு நறுக்கென விமர்சனங்கள் கொடுத்து இறுதியில் நேற்று முடிவுகளை அறிவித்தார்கள். நான் மெல்போர்னில் வசிப்பதால் காலை ஐந்து மணிக்கு திடுக்கிட்டு எழுந்து பக்கத்தில் கிடந்த ஐபாடில் எடுத்து பார்த்த போது, முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து விழியன் ஓரம் வழிந்தது இன்று! முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து மழையைப் போலே பொழிந்தது இன்று !!
முதலாம் இடத்தில் இரண்டு கதைகள். இரண்டுமே தேர்ந்த குழப்பமில்லாத சிறுகதைகள். வாசித்தபோது அவற்றின் தகுதியை மனதார மெச்சினேன். என்னுடைய கதையோடு சேர்ந்து இன்னொரு கதைக்கும் இரண்டாம் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. “சின்ன கல்லு பெரிய வைரம்” போல ஒரு சூப்பர் பிளாட், ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஆக முடித்திருப்பார். நான் என்றால் அதற்கு முதலாம் இடமே கொடுத்து இருப்பேன்! வாழ்த்துக்கள் சக போட்டியாளர்களே.
என்னுடைய கதை ஆங்காங்கே சற்றே குழப்பம் நிறைந்த நோன்-லீனியர் ப்ளோ, தமிழில் எழுத ஆரம்பித்து இரண்டாவது வாரத்திலேயே அனுப்பிய சிறுகதை. அதனால் ஆங்காங்கே புதுமுக எழுத்தாளர் செய்யக்கூடிய சில அதிக பிரசிங்கித்தனங்கள், குறியீட்டை தெளிவாக விளக்காமை என்று முதலாம் இடத்துக்குரிய தகுதியை என் கதை ஏற்கனவே இழந்துகொண்டு இருந்ததை மற்றைய கதைகளை வாசிக்கும்போது புரிந்தது. யாழ்ப்பாணத்தளத்தில், அந்த தமிழில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் எழுதி அதை பலர் வாசித்தது என்னுடைய பிறவிப்பயன். இப்போது வந்தோரை தொடர்ந்து வரவைக்க மேலும் எழுத வேண்டும். எழுதுவேன்!
நறுக்கு தெறித்தது போன்ற நடுவரிகளின் விமர்சனம்
சட்டென நனைந்தது ரத்தம் -ஜேகே
http://orupadalayinkathai.blogspot.com/2011/10/2011.html
முதலில் கொஞ்சம் புரிதல் சிக்கல் இருந்தது. மீண்டும் வாசித்தபோது, இரு பத்திகளை மாற்றிப் போட்டிருக்கிறார் என்று புரிந்தது. திலீபன் குமரனை சந்தேகிக்கும் இடம் சற்று சறுக்கினாலும், நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லராக அமைந்திருக்கிறது. சவால் சூழலை இயல்பாக பொருத்தி இருந்தார். அருமை.
கனகச்சிதமான விமர்சனம், Hats off to judges!
எனக்கு இந்த கதை எழுதியது ஒரு திருவிழா போல தான். நண்பர்கள் பலர் அடுத்தடுத்து ஆதரவு தந்தார்கள். சிலர் குட்டினார்கள். 69 வாக்குகள் இந்த புதுமுகத்துக்கு விழுந்தது. புதிய வலையுலக நண்பர்கள் என்று ஏராளம் ஆஸ்கார்கள் எனக்கு கிடைத்தன. அந்த சந்தர்ப்பத்தை தந்த ஆதி, பரிசில், யூடான்ஸ் குழுமம் மற்றும் ஏராளம் நண்பர்களுக்கு (சரியாக 688 visits) கோடானுகோடி நன்றிகள்!
மச்சி வாழ்த்துக்கள், உனது எழுத்து தூறையின் பயணம் என்றும் தொடர எனது வாழ்த்துக்காள் ,நம்ம லெமி மார்ட்டின்,நெப்போலியன், ஜொனி வோக்கர்,டக்கீல எல்லாரையும் கூப்பிட்டு பார்ட்டியை களைகட்டிடுவோம், பொண்ணு இல்லாட்டி நல்லா இருக்காது மச்சி அதனால கல்யாணிக்கும் சொல்லிப்புடு
ReplyDeleteவாழ்த்துக்கள் பாஸ் தொடர்ந்து கலக்குங்க நாங்க இருக்கோம்
ReplyDeleteநன்றி மன்மதகுஞ்சு ... ஸ்டார்ட் பார்ட்டி
ReplyDelete@நன்றி Rajh .. உங்கட ஆதரவு இல்லாட்டி என்றைக்கோ மூட்டை கட்டி இருப்போம் .. வாங்க தொடர்ந்து பழகலாம்!
ReplyDeleteCongrats!
ReplyDeleteThanks Gopi!
ReplyDeleteவாழ்த்துக்கள் தல
ReplyDeleteCongrats !!!
ReplyDeleteஹாய் அண்ணா!
ReplyDeleteஇனிய வாழ்த்துகள். "ஆரம்பமே அசத்தல்தான்" என்று அமையும்படி சிறுகதை நல்ல இடத்தினை பிடித்திருக்கிறது. இது இனி வரப்போகும் உங்கள் நல்ல படைப்புகளுக்கு தூண்டுகோலாக அமையும்.
இனி என்ன பார்ட்டிதான்.. கொழும்பில பார்ட்டி வைக்க காசை எனக்கு அனுப்புங்ண்ணா! :). A1னில ஒரு மசாலா தோசை பார்ட்டி வைச்சிடுவோம்.
நன்றி suryajeeva ... தொடர்ந்து வாங்க பாஸ்
ReplyDelete@விமல் ... தாங்ஸ் விமல் ... பார்ட்டி நீங்களே arrange பண்ணுங்க !!
ReplyDeleteவாழ்த்துக்கள் JK :-)
ReplyDeleteநன்றி நிரோஜன்!
ReplyDelete