டேய் ஜேகே
பாலா, மதியுரைஞர்
ஆஸ்திரேலியா
ஈழத்தை சேர்ந்த படித்தவர்கள், இன்டலக்ட்ஸ், புத்திஜீவிகள் எங்கள் பிரச்னையை இன்னும் ஓபன் ஆக அணுகவேண்டும் என்று சொல்லுகிறேன், Facebook இல் அரசியல் கட்சிகள் இணைந்து விவாதம் செய்யலாமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பாஸ், இப்படி ஒரு கேள்வியை புத்திஜீவிகளிடம் கேட்காம என்னிடம் போய் ஏன் கேட்கிறீங்க? நானெல்லாம் ஒரு டம்மி பீசு என்று சொன்னாலுமே நம்பாமல் மென்னி திருகியே தீருவேன் என்று அடம் பிடிக்கிறீங்க. விதி வலியது!
எனக்கு ஒரு பரம்பரை குணம். நான் நினைப்பது தான் எப்போதும் சரி. உனக்கென்ன தெரியும்? உன்னோட கருத்தும் என்னோட கருத்தும் கொஞ்சம் முரண்பட்டால் கூட நீ துரோகியே தவிர நான் எப்போதும் உத்தமன் தான. இது தான் இப்போதைய தமிழ் உணர்வாளர் நிலை! உணர்ச்சி பெருக்கெடுத்து காவிரி டெல்டாவுக்கு பாயுதுன்னா பாருங்களேன்! இந்த பயத்திலேயே மற்றவனும் ஆமா போட்டு தேசப்பற்றை நிரூபிக்கவேண்டிய நிலையில். பிரபாகரன் இருக்கும் வரை, வாலை சுருட்டமுடியாமல் சுருட்டிக்கொண்டு இருந்தோம். அவர் இறந்தபிறகு, மீண்டும் தண்டல்காரன் ஆகிவிட்டோம். உணர்ச்சிவசப்படுபவருக்கு மவுசு ஜாஸ்தி. வீரம், புரட்சி என்றால் facebook இல் சராசரி லைக்ஸ் முப்பதாவது கிடைக்கும். சிங்களவர் அராஜகம் என்றால் நாலு கமெண்ட் கூட கிடைக்கும். நிஜமான சூழ்நிலையை உணர்ந்து ஆக்கபூர்வ அரசியல் பேசினால் ஐந்து பேர் லைக் பண்ணுவார்கள். அதிலும் இரண்டுபேர் auto mode ல் ஸ்டேடஸ் வாசிக்காமல் லைக் பண்ணுபவர்கள். அரசியல் போராட்டம் என்பது Facebook இல் எத்தனை லைக் வாங்குவது என்ற நிலைக்கு போய்விட்டதால், தமிழீழத்தை தவிர வேறு தீர்வுக்கும் புத்திஜீவிகள் தயாராக இல்லை!
அதையும் தாண்டி ஓபன் டிஸ்கஷனுக்கு உரிய சூழல் இன்னும் இல்லை. தூக்கி உள்ளே வைத்துவிடுவார்கள். தாண்டி பேசினாலும் ஒரு சிலர் “வயலுக்கு வந்தாயா? நாட்டு நட்டாயா? எம்மின பெண்களுக்கு மஞ்சள் …” கேள்வி கேட்பார்கள். அரைத்தோம் என்றால் நம்பமாட்டார்கள். அரைக்கபோகிறோம் வருகிறாயா என்றால் அவனவன் எஸ்கேப் ஆகிறான். பேசும்போது ஏதாவது தவறுதலாக தப்பாக பேசிவிட்டால், “ஷோபா சக்தியின் தம்பியா?” என்கிறார்கள். அதிலும் பேசும்போது, வெட்டி கதைப்பது, உன்னை விட எனக்கு அதிகம் அரசியல் தெரியும் .. இந்த வகை போட்டி தான். ஆளை ஆள் மடக்குவதும் .. பட்டிமண்டபம் தான் போ! இந்த அயர்ச்சியில் தான் நானெல்லாம் ஆணியே புடுங்குவதில்லை. அரசியலை அது சார்ந்து உருப்படியாக ஏதும் செய்யும் பெர்வழிகளுடன் மட்டுமே பேசவேண்டும் .. Arab Spring க்கு Facebook உம் ஒரு தோற்றுவாய் தான். அமெரிக்க அரசியலில் இதன் பங்கு அதிகம். வட்ட மேசை மாநாட்டுக்கு facebook நல்லது தான்! ஆனால் வட்டமேசையும் டீக்கடையும் பக்கம் பக்கம் இருப்பது தான் பிரச்சனை!
முத்துகுமார், நம்பி ஏமாந்த சோணகிரி
திரிசங்கு சொர்க்கம்
தமிழீழம் என் நிறைவேறாத கனவு, அது கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவேன் என்று கருணாநிதி சொல்லியிருக்கிறாரே? ஈழத்தமிழர் மீதான மிரட்டல்களை பிரதமருக்கு தெரியப்படுத்த பக்ஸ் அனுப்பியிருக்கிறார் போல?
அந்த கருமாந்திரம் பிடிச்ச பக்ஸ் மெஷினை காயலாங்கடைக்கு போடோணும். வாழ்க்கை கனவுகளை பக்ஸ் மேல் பக்ஸ் அனுப்பியே அடையலாம் என்றால் நானெல்லாம் இன்றைக்கு ஆப்பிள் CEO வாக வந்திருப்பேனே! இவரு கனவு கண்டா என்ன? குறட்டை விட்டா என்ன? யார் அழுதார்? இப்படி தான் “ராமர் எந்த என்ஜினியரிங் காலேஜில படிச்சவர்” என்று பகுத்தறிவு பேசி, சேது சமுத்திர திட்டம் அம்போ!
உண்மையிலேயே தமிழீழ கனவு காண்பவன் இப்போது இருக்கிற சூழ்நிலையில மூச்சு காட்டாமல் காதும் காதும் வைத்தது போல தான் காரியம் ஆற்றுவான். யுத்தத்தில் யாருமே நாளைக்கு காலைல ஐஞ்சு மணிக்கு ஆர்மி காம்ப் அடிக்கபோகிறோம் என்று சொல்லிக்கொண்டு அடிப்பதில்லை. சொன்னால் அலெர்ட் ஆகிடுவாங்கள். இப்ப ஈழத்தமிழர் இருக்கும் நிலையில் சிவனே என்று தானும் தன்பாடுமாய் செயல்பட வேண்டும். ஓவரா ஸ்டேட்மெண்ட் விடாம, சத்தம் போடாமா.. பச்சையா சொல்லப்போனா நம்பவைத்து கழுத்தறுத்து .. அந்த புத்திசாலித்தனம் எங்களில் இல்லை. அப்படி இருப்பவர்களை வேறு நாங்கள் துரோகிகள் ஆக்கிவிடுவோம்! பொங்கிடுவோம்ல!
டேய் ஜேகே, உங்கள் அரசியல் கருத்துக்கள் சூப்பர். அமரிக்க தேர்தல் நிலவரம் பற்றி சொல்லுங்களேன்? என்னவர் மீண்டும் வருவாரா?
அடங் கொய்யால, ஏதோ என் பாட்டுக்கு இலங்கை அரசியலை “பாலா” தொந்தரவு தாங்க முடியாம எழுதினா, அமரிக்க அரசியலா? திஸ் இஸ் டூ மச். அவனவன் ஏதோ நானே கேள்வி கேட்டு பதிலும் போடுவதாக நினைக்க போறாங்க. சரி குதிச்சாச்சு!
“அவர்” மீண்டும் வருவது அவ்வளவு சிக்கல் போல தெரியவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை குறைந்திருக்கிறது என்று ரிப்போர்ட். குடியரசு கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி வருவது ஏறத்தாள உறுதி. ரோப் புஷ்ஷும் ரூபியோவும் ரோம்னிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் ரோம்னிக்கு இருக்கும் சிக்கல் அவர் குடியரசுக்கட்சியின் ஆதாரமான கன்சர்வேடிவ் கொள்கையில் தீவிர பற்றாளர் இல்லை. பிஸ்கால் கன்சர்வேட்டிஸம் என்று செலவழிப்பதை குறைத்து நிகர லாபத்தை அதிகரிக்கும் உத்தியை நம்புபவர். அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமலுமான ஒரு அரசியல் தளம். ரொனால்ட் ரேகனின் வெற்றி சூத்திரம் என்கிறார்கள். ரேகனின் காலம் வேறு. அப்போது பனிப்போர் முடியும் நேரம். செலவுகளை அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடிந்தது. இப்போது செலவுகளை கட்டுப்படுத்தினால், பணப்புழக்கம் குறைந்து வியாபார சமநிலையே ஓடிந்துவிடும். இவரை குடியரசு கட்சியினரே “நம்மாளு தானா?” என்று சந்தேகமாக பார்க்கிறார்கள். குடியரசு கட்சியின் கோட்டைகளான புளோரிடா, டெக்சாஸ், ஜார்ஜியா போன்ற மாநிலங்கள் இல்லாமல் டெமோகிராட்ஸின் ம்ச்சாசுஸ்ட் மாநிலத்தில் இருந்து வருகிறார். அபார்ஷன் எதிர்ப்பு அது இது என பல அடிப்படைவாத கொள்கைகளையும் கொண்ட குழப்பவாதி ரோம்னி. மித வாத வாக்காளர்கள் ஒபாமா பக்கம் சாயவே சந்தர்ப்பம் அதிகம். வெற்றி ஒபாமாவுக்கு நிச்சயம். ஈழத்தவருக்கும் ஜனநாயக கட்சி ஆட்சியே சேஃப். குடியரசுகட்சியினர் அடிப்படை வாதிகள் எங்களை ஆதரிக்க சான்ஸே இல்லை. சோ என்னோட சப்போர்ட் இப்போதைக்கு ஒபாமாவுக்கே. சிங்கன் பல இடங்களில் சறுக்கினாலும், தோற்கும் அளவுக்கு அது இல்லை!
பை த பை சென்ற வாரம் உங்களின் லேட்டர்மான் ஷோ கலக்கல். உங்களை பார்க்க மரியாதை தானாகவே வருகிறது. ஆளுமை, எளிமை மற்றும் இயல்பு. ஆப்கானை கொலை பின்னணியில் படைவீரர் குடும்பங்கள் பற்றிய கருத்தில் உள்ள புத்திசாலித்தனம்! அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாகும் எண்ணம் இருக்கா என்ன?
ஓ பன்னீர்செல்வம்,
போயஸ்தொட்டம் காவலர் விடுதி
ஜெயலலிதாவுக்கு கனவிலும் துரோகம் நினைத்ததில்லை என்று சசிகலா கூறியிருக்கிறாரே?
விரைவில் கண்கள் பனித்து இதயம் இனிக்க போகிறது.
உதயகுமார், கூடங்குளம்!
கூடங்குளம் அணு மின்நிலையம் தொடர்பான உண்ணாவிரதம் வேலைக்காகுமா?
நீர்த்துப்போகும். விலக்கிக்கொண்டு விட்டீர்கள் என்று கேள்விப்பட்டேன். Wise idea! இந்திய தலைவர்களுக்கு “மணிக்கணக்கில்” உண்ணாவிரதம் இருக்க தெரியுமே ஒழிய அதற்கு மதிப்பு கொடுக்க தெரியாது. இந்த “உண்ணாவிரத பருப்பு” வேக வெள்ளைக்காரன் மனம் வேண்டும். எங்களிடம் அது கிஞ்சித்தும் கிடையாது. ஜெயலலிதாவுக்கு ம்கூம். ஞானி எல்லாம் வருஷக்கணக்காக இது பற்றி எழுதுகிறார். ஏதாவது நடந்துதா? உங்களுக்கு தெரியுமா? ஈழத்தமிழர் இருவர் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார்கள். ஒருவர் திலீபன். மற்றையவர் அன்னை பூபதி. இருவர் உண்ணாவிரதமும் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக தான். துரும்பை கூட இந்தியா தூக்கிப்போடவில்லை. நல்ல வேலை இந்தியாவை பிரிட்டிஷ்காரன் அடிமைப்படுத்தினான். இந்தியாவை இந்தியரே அடிமைப்படுத்தி இருந்தால் காந்தியை சுடும் வேலை கோட்சேக்கு இருந்திருக்காது. உண்ணாவிரதத்திலேயே அண்ணலாகி இருப்பார்!
அட இப்போது மட்டும் என்ன வாழுதாம்?
மச்சி, இந்த அண்டவெளி அகன்றுகொண்டே இருக்காமே? கேள்விப்பட்டியோ?
என்னடா ஹன்சிகா இடுப்பு அகன்றுகொண்டு போகுது, என்ன விஷயம்? என்று கேட்கபோறாய் என்று பார்த்தால் நீ அண்டவெளி ஆகாச வெளி என்று ஆரம்பிச்சிட்டாய். இப்பிடியே போனா வியாழ மாற்றம் ரொம்ப சீரியஸ் ஆகிடுமேடா!
இது கொஞ்சம் சிக்கல் தல! இந்த அண்ட சராசரம் எப்படி உருவானது என்று பலவித கருத்துக்கள் இருக்கு. இருக்கிற ஒன்று இல்லாத ஒன்றில் இருந்து தான் உருவாக வேண்டுமா என்று எனக்கு கூட பலநாள் ஒரு டவுட் இருக்கு. அத விடு. பிரபஞ்சத்தில் இருக்கும் விஷயங்களை ஒரு பக்க தராசில் வையேன். அதற்கு டார்க் மாட்டர்(Dark Matter) என்று பெயர் வைப்போமா? இப்போது பிரபஞ்ச சமநிலைக்கு தராசு தட்டின் மறுபுறம் ஏதாவது இருக்கவேண்டும் இல்லையா? இல்லாவிட்டால் static பிரபஞ்சம் என்பது சாத்தியமில்லை. இது ஐன்ஸ்டைன் விதி. அதை டார்க் எனேர்ஜி(Dark Energy) என்பார்கள். அது எது என்று இன்னும் தெரியாது. உணரமுடியாத கதிரியக்க சக்தியாக இருக்கலாம். எங்கள் வசதிக்கு டார்க் மாட்டரை கடவுள் என்றும் டார்க் எனேர்ஜியை அசுரன் என்றும் வைத்துக்கொள்வோம். ஆராய்ந்து பார்த்ததில் கடவுள்கள் பெருகும் விகிதம் அதிகமாம். அதாவது 12 பில்லியன் ஆண்டுகளில் கடவுள்கள் இரட்டிப்பாயிடுவர். இப்படியே போனால் சமநிலை குழம்பும். அசுரரை விட கடவுள்கள் அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் இது நீண்டு நீண்டு .. விரிந்து .. அகன்று ..வெயிட் வெயிட் .. பிரபஞ்சம் உடைந்து எல்லாமே அசுரராக .. டார்க் எனேர்ஜியாக போய்விடும். ஞாலமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா என்று நாமெல்லாம் பாட முதல் ஹன்சிகா இடுப்பு மாட்டரை அடுத்த வியாழமாற்றத்தில் தப்பாமல் கேளு!
நான் தமிழன் இல்லை!
கடந்த வியாழமாற்றத்தில் என் எழுத்தை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார்கள். நான் இந்திய தமிழ் கலந்து எழுதுகிறேன். என் கதைகள் இலக்கியம் இல்லை. வெறும் குப்பை என்பதில் ஆரம்பித்து இறுதியில் நான் ஈழத்தமிழனே இல்லை என்று எல்லா பக்கத்திலும் இருந்து மல்டிபரல். நானும் எவ்வளவு தான் வலிக்காதாது போலவே நடிக்கிறது? ஆணியே புடுங்கவேண்டாம், மீண்டும் ஆங்கில பதிவை தூசு தட்டுவோம், யாரும் விமர்சிக்க மாட்டார்கள். அட நான் மட்டும் தானே அங்கே வாசகன்! வியாழ மாற்றத்தை “Thursday Report” என்று மாற்றுவோமா என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போது தான் மன்மதகுஞ்சு இந்த வீடியோவை அனுப்பினான். பத்து தடவை பார்த்ததில் ஈழத்தமிழ் இப்போது தெனாலி அளவுக்கேனும் வருகிறது என்று நினைக்கிறேன்.
மணியத்தாரிண்ட பவுடியெல்லாம் பயங்கர முசுப்பாத்தி தான். அதிலயும், வெளிநாட்டில சாப்பிட வழியில்லை எண்டு தம்பிக்காரன் சொல்லேக்க, சரி அப்பிடி எண்டால் பேசாம யாழ்ப்பாணம் திரும்பி வா .. வந்து தேங்காய் கடை ஒண்டை போட்டு சீவிக்கலாம் எண்டு தமையன் கதைக்கேக்க நல்லா இருக்கும்!
மன்மதகுஞ்சு : மக்களே, இவரு யாழ்ப்பாண தமிழில எளுதுராராம்! இனி லக்கியத்தனமா தான் இவரு பதிவு இருக்குமாம். போடாங்! யாருடா இந்த சக்திவேல் கவுண்டரும் … மிட்நைட் வாலிபனும்? ரொம்ப அழும்பு பண்ணினா சொல்லு மச்சி! ரெட்டிய தாக்கறோம்.. பொண்ண தூக்கறோம்!
இந்த வார புகைப்படம்
கூகிள் உருப்படியான ஒரு வேலைக்கு நிதியுதவி செய்திருக்கிறது. நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை குறிப்புகள், அவரின் கடிதங்கள், அறிக்கைகள், சிறையில் இருந்தபோது எழுதியது, எல்லாவற்றையும் டிஜிட்டலில் ஆவணப்படுத்தும் முயற்சிக்கு உதவியுள்ளது. இன்றைக்கு மதியம் இந்த வெப்சைட்டில் தான் டேரா. அற்புதமான ஆவணப்படுத்தல். ஆர்வம் இருந்தால் இங்கே போய் அலையுங்கள்!
இது மண்டேலாவின் சிறையறை. அவ்வளவு மோசமில்லை! கனிமொழியிடம் எது பெட்டர் என்று ஒருமுறை கேட்க வேண்டும்!
கள்ளுக்கடை பக்கம்!
வெண்பா எழுதி அனுப்புங்கள் என்று சொல்லியிருந்தேன் அல்லவா. சுமார் ஒன்றுக்கும் மேற்பட்ட வெண்பாக்கள் வந்து குவிந்ததில் அப்பா டென்ஷன் ஆகிவிட்டார். குவியலுக்குள் புகுந்து தெரிந்தெடுத்ததில் “கட்டிளங் கவிஞர்” என்று தன்னை தானே சொல்லிக்கொள்ளும் கேதா அவர்களின் வெண்பா முதல் பரிசை பெறுகிறது.
கண்ணீர் வழிந்தோட கருவாட்டு சுவை ஊற
கொல்லை பனங்கள்ளை நியூட்டன் புதுப்பிளாவில்
புசித்து ரசிக்கையிலே- உச்சந்தலையை பொத்தி ஓவென்று
தான் அழுதான் -ஏனோ ஓர் பனங்காய் விழ
வெண்பாவின் பொருட்சுவை அதகளம். நம்ம ஊரிலே குடிகாரன் தலையில் குண்டே சாதாரணமாக விழும்போது பனங்காய் எல்லாம் சாதா மாட்டர்! ஆனால் பாடல் என்ன சொல்லவருகிறது என்கிற contextஐ கவனியுங்கள். அதில் ஏன் நியூட்டன்(பின் நவீனத்துவம்) வருகிறான்? நாம் செய்யாதது எதை நியூட்டன் செய்தான்? எப்படி அவனால் மட்டும் அது முடிந்தது? … கவிதையை விளக்கினால் சுவை போய்விடும். அனுபவியுங்கள்.
சாதாரணமாக பார்க்கும் போது கேதா நவீன புகழேந்தி தான். நல்லகாலம், பக்கத்தில் சக்திவேல் அண்ணன் பரிசளித்த மூக்குக்கண்ணாடி கிடந்தது. அணிந்துகொண்டு பார்த்தால் வெண்பா முழுதும் திட்டு திட்டாய் கறைகள்! வெற்றுப்பார்வைக்கு இது நேரிசை வெண்பா தான். யாப்பிலக்கணம் பார்த்தால் ஜெகேயின் சிறுகதையே பெட்டர் என்னும் அளவுக்கு ஏகப்பட்ட தவறுகள்!
நேரிசை வெண்பா என்ன சொல்கிறது? நான்கடி, இரண்டாவது அடியில் தனிச்சொல். நான்கடியும் எதுகையில் இருத்தல் வேண்டும். அட்லீஸ்ட் இவ்விரண்டு அடிகளாவது. இத்தனைக்கும் நான் இன்னும் சீர் வரிசைக்கே போகவில்லை. தாவு தீர்ந்துவிடும்!
யாழ்ப்பாணத்தில் 90களில் தமிழிலக்கியம் படித்தவர்கள் இன்னமும் ஞாபகம் வைத்திருக்கும் வெண்பா உதாரணத்துக்கு.
வாங்குவளைக் கையார் வதன மதிபூத்த
பூங்குவளைக் காட்டிடையே போயினான்--தேங்குவளைத்
தேனாடி வண்டு சிறகுலர்த்தும் நீர்நாடன்
பூநாடிச் சோலை புக.
நாலடி கவிதை, “தேங்குவளை” தனிச்சொல். ஈரடி எதுகை தேனாடி, பூநாடி, வாங்குவளை, பூங்குவளை. டிப்பிகல் நேரிசை வெண்பா. பிச்சு உதறீட்டடா புகழேந்தி!
கேதா நெற்றிக்கண் திறக்கும் முன் அவன் கவிதைக்கு வருவோம். நான்கடி எல்லாம் ஓகே தான். ஆனால் ரெண்டாவது ரூல் சிதறுகிறது. “நியூட்டன்” தனிச்சொல் தான், வரும் இடம் நெருடுகிறது. எதுகை எதுக்கடா என்று கேட்கிறான்! அவன் அனுமதியின்றி இப்போது இதை நேரிசை வெண்பாவாக்க முயற்சிக்கிறேன்.
கண்ணீர் வழிந்தோட கருவாட்டு சுவை ஊற
பன்னீர் பனங்கள்ளை புதுப்பிளாவில் - நியூட்டன்
புசித்து ரசித்தனன் தலைபொத்தி
விசித்து அழுதனன் பனங்காய் கெலித்து விழ!
பன்னீர் செருகியது கவிதைக்கு நயம் கூட்டியது என் கருத்து என்றாலும் ஆசிரியர் கருத்தில் கை வைத்தது தப்பே. இங்கே விதிப்படி சீரும் தளையும் சேர்க்க எனக்கு கவியாழுமை பத்தாது. இடமும் பத்தாது. யாராவது ட்ரை பண்ணுங்களேன்? வாலிபன் .. சீர் வரிசை கொண்டு வாவேன்?
இந்த வார பாடல்
94 – 99 காலப்பகுதி தேவாவின் பொற்காலம். தொட்டதெல்லாம் மெலடிதான். 98 இல் சுரேஷ்கிருஷ்ணாவின் “ஆகா” வெளியானது. படம் வெறும் “ஆகா” தான். ஆனால் அதில் ஒரு பாடல். தேவா ஏன் தேனிசை தென்றல் என்பதை நிரூபிக்கும் பாடல். “உயிரே உயிரே” யில் ஆரம்பித்த ஹரிஹரன் சித்ரா ஜோடி மீண்டும் இந்த பாட்டில். இதே வருடம் தான் “நீ காற்று நான் மரம்” கூட வந்தது. ஹரிகரனுக்கும் சித்ராவுக்கும் இயல்பாகவே ஒரு கெமிஸ்ட்ரி இருக்கிறது. ஹரி சங்கதிகள், பிர்க்கா என அடித்து ஆட, சித்ரா சத்தம் போடாமல் ஒரு சின்ன பாவத்தை, காதலை, ஏக்கத்தை குரலில் கொண்டுவந்து சிக்ஸர் அடிப்பார். இந்த எதிரும் புதிருமான பாணி, இசையில் வருமே ஹார்மனி? அதற்கு நிகரானது. ஆணுக்கும் பெண்ணுக்குமான காதலின் நுணுக்கங்களை, வன்மையை, மென்மையை குரலில் புரிந்து உருவேற்றும் விற்பன்னர்கள்.
இந்த பாட்டுக்கும் அதே கதி தான். முதல் சரணம் ஹரி. சங்கதி எல்லாம் சும்மா விறு விறு என்று விழுகிறது. சான்ஸே இல்லை. சின்னக்குயில் சிக்கி சின்னாபின்னமாகபோகிறதே என்று நினைக்கும் போது அடுத்த சரணம் ஆரம்பிக்கிறது. கேட்கும் நமக்கு பதட்டம். பாவம் சித்ரா. இதுக்கு ஹரிணி தான் சரிவரும் என்று நினைக்கும் தருணத்தில் தான் சித்ரா குரல் “ஏழு ஸ்வரத்தில்”. “தேகமெங்கும் கண்கள் தோன்றாதோ, நீயென்னை பார்க்கையில் நாணத்தில் மூட” என்ற பாடும்போது ஒரு வெட்க சிரிப்பு சிரிப்பாரே! ஐயோடா இது கதையில்லையினு காதில் சொல்லுங்கோவன்! “என்னில் இன்று நானே இல்லை, காதல் போல ஏதும் இல்லை” என்று ஏங்கும் போது “போடா நீயும் உன்னுடைய சங்கதியும்” என்று ஹரிகரனை பார்த்து சொல்ல தோன்றுகிறது. Gem of a song!
ஒருமுறை இப்படி தான். RMIT நூலகத்தில் இருந்து படித்துக்கொண்டிருக்கும் போது என்னுடன் கூடப்படித்த குஜராத்தி நண்பி(யாவும் கற்பனை!) முன்னாலே இருந்து அசைன்மன்ட் செய்துகொண்டிருந்தாள். iPod இந்த பாடலை ப்ளே பண்ணுகிறது. சித்ராவின் போர்ஷன் வரும்போது இயல்பாக என்னையறியாமல் நான் புன்னகைக்க அவள் கவனித்து என்ன? என்றாள். பாட்டு என்றேன். ஆச்சரியத்துடன் கேட்டு வாங்கி கேட்டுவிட்டு .. சிரித்தாள். என்ன? என்றேன். இந்த பாட்டு ஏற்கனவே ஹிந்தியில் வந்த தீவானா பட பாடல் என்றாள்! குமார்ஷானு பாடியது.
எங்களுக்கென்ன? கோழி அமெரிக்காவில இருந்து வந்ததா, ஆண்டிப்பட்டியில் இருந்து வந்ததா என்பது முக்கியம் இல்லை. குழம்பு ருசியாக இருக்கவேண்டும். தேவா இந்த பாட்டை காப்பி பண்ணியிருக்காவிட்டால் நமக்கு தமிழில் இது கிடைத்திருக்குமா? என்ன ஒன்று .. பயபுள்ள ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்!
மன்மதகுஞ்சு: அது சரி அந்த குஜராத்தி பொண்ணுக்கு இப்போ எத்தனை குழந்தைகள் ஆச்சு மச்சி?
ஹாட் நியூஸ்
தவா இந்த வாரம் பளுரே போர்மட்டில் தமிழ் பாட்டு வீடியோக்கள் கொண்டுவந்து தந்தான். அதில் “180” என்ற படத்தில் வரும் “சந்திக்காத கண்கள்” என்ற பாட்டில் வரும் நித்யா மேனனை அவசர அவசரமாக காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். கண்டதும் காதல் தான்! இப்போ தலைவர் காதல் மூடில் இருக்கிறாரு. டோன்ட் டிஸ்டர்ப் ப்ளீஸ்! காதல்னா என்னனு தெரியுமா யாருக்காவது? நிலா வானம் காற்று ஜட்டி .. எல்லாமே கவிதையா தெரியும்டா! அந்த முட்டை கண்ணுக்குள் இருக்கும் ஒரு சோகம், அதை கடந்து வரும் சின்ன சிரிப்பு … கீர்த்தி ஒரு பார்ட்டி அரேன்ஜ் பண்ணுடா! பீல் பண்ணனும் போல இருக்கு!!
அம்மம்மா இன்று மாறினேன்
அன்புக்கு நன்றி கூறினேன்
உள்ளத்தின் காயம் ஆறவே
உதவியது உன் வார்த்தை தான்
நிம்மதி இன்றி வாடினேன்
நின்றிட நிழல் தேடினேன்
திக்கற்று போன வேளையில்
தெரிந்தது என் பாதைகள்
உனது பாடல் கேட்டது
மனதில் பாலை வார்த்தது
புயல் காற்றில் வாடி நின்ற ஓடம் தான்
கரையை சேர்ந்ததுகண்களில் என்ன ஈரமோ
நெஞ்சினில் என்ன பாரமோ
மன்மதகுஞ்சு : ஐ ஜாலி .. ஜேகே பீல் பண்ண தொடங்கீட்டாண்டா .. நமக்கு நைட் பூரா ரிக்கி மார்ட்டின் சாங் தான் மச்சி!!




good one
ReplyDeleteரொம்ப பேசுற நீயி.
ReplyDeleteThanks Samuthra !
ReplyDelete@பாலா
ReplyDeleteபாடும் எனை நீ பாட வைத்தாயே!!!
மச்சி ஈழம் பற்றிய கருத்துரையாடல்கள் வரும்போது எழும் சுயபிதற்றல்கள், ஈகோ ,வயலுக்கா வந்தாய குழாயடிச்சண்டைகளும்,தலைமுடி பிச்சுக்கொண்டதுகளும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். ஏனென்றூ உனக்கும் தெரியும் ஊருக்கும் தெரியும். போராட்டத்தின் 30 ஆண்டுகளுக்குல் வெவரம் தெரிஞ்ச நமது 11 வருடம் இருந்திருக்கு ஆனால் எம்மால் செய்யமுடிந்தது 2012 இல் ஸ்டேட்டஸ் போட மட்டுமே.. 1989 இல யாழ்ப்பாணம் ரேடியோச்பதியில ஒரு கேசட் மிகப்பிரபலமாக விற்கப்பட்டது அது " பொறின் புளுகர் பொன்னம்பலம்" .கேசட் ரீல் தேய தேய கேட்டு இன்றூம் பத்திரப்படுத்தி வைச்சிருக்கேன், அதில் ஒரு இடத்தில் அவர் சொல்லுவார் போராட்டம் எண்டா சாப்பாடு கொடுக்கிறது காசு கொடுத்தா மட்டும் போதுமெண்டு சனம் நினைக்குது ஆனால் எமது உடல் வலுவும் இருக்கவேண்டும்.இது கூட உண்மைதான்.இன்று ஈழம் பற்றி விவாதித்தால் நாம் 100 பேர் கூடி விவாதிக்க தயாராக இருக்கிறோம் ,ஆனால் அதே ஈழத்துக்காக நாம் எம்மை இழக்க தயாராக இருந்திருக்கவில்லை. இன்றூ வெளியில் இருந்து நாம் கூப்பாடு போடுகிறோம் அணுகுமுறை சரியாக பின்பற்றப்படவில்லை என்று.. என்ன செய்வது சில நேரங்களில் சிலரால் விட்டுக்கொடுத்து இறங்கி போகமுடியாதுதான். சரி விடுவோம்.இப்போதைய கருத்து கூட புலத்தில் தமிழர் அமைப்புக்கள் ஆதரவு கோரி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் போது கூட கலந்துக்கொள்ளலாம் இல்லையா. இந்தியாவை திட்டுகின்றோம் எமது பிரச்சினையை மக்கள் ஆட்சியாளர்களிடம் கொண்டு செல்லவில்லை என்று.ஆனால் எத்தனை ஈழ மக்கள் இன்றூ கூடங்குளமக்களை எண்ணிப்பார்த்தோம்,அவர்களுக்கு குரல் கொடுத்தோம்? இதுதான் உண்மை நிலை,அனைவரும் கொஞ்ச நேரம் சிந்திக்கவேண்டும்,செயலில் இறங்கவேண்டும்.கொலைக்களம் வெளியானபோது டிவிட்டரில் #KillingField என்ற பட்டி அனைத்து தமிழக கீச்சர்களும் உணர்வுகளை கீச்சுக்களை கொட்டினார்கள்,ஆனால் இலங்கையில் இருந்து கீச்சுவதற்கு இங்குள்ள கீச்சர்கள் தயங்கினர்.துணிந்து இறங்கி மன்மோகன் சிங் உட்பட அனைத்து கட்சி தலைவர்கள்,செய்தி நிறூவனங்கள்,பத்திரிகைகள் அனைவரின் டிவிட்டர் ஜடிகளுக்கு போர்க்குற்றம்,தீர்மானம் பற்றீ 140 எழுத்துக்களில் தொடர்ந்து இரவு,சாமம்,அதிகாலை என நேரம் பார்க்காமல் கீச்சினோம்,இந்திய டிரெண்டில் வரவே இல்லை அந்த பட்டி.. அதன் பின்பு நிலைமை உணர்ந்து அனைத்து உலக டிரண்டில் இருந்த பட்டிகளில் போர்க்குற்ற வீடியோவை இணைத்து அனுப்ப தொடங்க பலன் கிடைத்தது. இதே போன்றுதான் அனைவரும் ஒன்றாக குரல்கொடுத்தோமேயானால் கைக்கெட்டும் தூரம் வெகுவிரைவில்.. ..
ReplyDeleteதேவா ஹரிஹரன் இணைந்தாலெ செம பட்டையை கிளப்பல்தான்.. ஆஹா படம் நான் பார்த்தது புதுக்குடியிருப்பில்,படம் முழுக்க தேவை பட்டையை கிளப்பியிருப்பார்,அதிலும் அந்த விளம்பரபட மியூசிக்கை ஆஹா என்ற உதித் இன் பாடலில் பயன்படுத்தியவிதம் செம்ம..
டேய் நாதாரி அந்த மணியத்தாரோட வீடியோவை நான் தேடப்பட்ட பாடு.ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா நாக்கில நுரை தள்ளிடிச்சிடா,
டேய் உனக்கு வர வர பொம்பிளைப்பிள்ளைகளோட சாபம் கூடிக்கொண்டே போது இப்போ நினைவெல்லாம் நித்யாவா ? அதுசரி பார்ட்டி மன்னாரில பக்குவமா அரேஞ் பண்ணிடலாம்,உன்னால கட்டுநாயக்கா டியூட்டி பிரி தாண்டி வந்திடமுடியுமாடா ( அப்பாடா பத்தவைச்சாச்சு)
உண்மையிலேயே அந்த டாக்டர் .உதயகுமாரின் கருத்துக்கள் காத்திரமானவை.. இதுவரைக்கும் அரசு இடர்பாடு வந்தால் அதற்கான அவசர நடவடிக்கைகளுக்கான பயிற்சிகளை சூழ இருக்கும் மக்களுக்கு கொடுக்கவில்லை, அணு உலை கழிவுகளை பாதுக்காப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகளில் இன்னும் சிறப்பான வரைபு இல்லை.. அதைவிட இன்னும் சர்வதேச அணுசக்தி கழகத்திடம் இன்னும் அனுமதி பெறவில்லை.. இவையெல்லாம் இருக்க 60 ரஸ்ய விஞ்ஞானிகளுடன் அவசரம் அவசரமாக இந்த அணூ உலை அமைக்கப்படுவதன் பின்னணி ???? ஜப்பான் கூட மின்சாரத்தயாரிப்புக்காக இருந்த தனது அணூலைகளை இப்போது நிறுத்தி அவைகளை பாதுகாப்பாக அழித்து வருகிறதே, இதில் அப்துல் கலாம் வேறூ சர்டிபிக்கெட் கொடுக்கிறார்.. அந்த மக்களின் உணர்வுகளை ,கருத்துக்களுக்கு செவி கொடுக்காமல்.. இன்னொரு முள்ளீவாய்க்காலை கூடங்குளத்தில் விதைத்துவிடுமோ என்று அஞ்சமே தோன்றுகிறது.
அன்பின் ஜேகே, "வியாழமாற்றம் 29-03-2012" பார்த்தேன். எல்லாம் அருமை. படங்களும் காட்சிகளும் அற்புதம்.
ReplyDeleteVersion 2 (ஒரு பாதுகாப்பிற்குத்தான்);
வியாழமாற்றம் தூள், டக்கர் ; ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
----------------
குறிப்பு: "இனிமேல் வம்புதும்புக்குப் போகக்கூடாது" என்று மேலிடத்து உத்தரவு. அத்தோடு அச்சடித்த குறிப்பு ஒன்று என் மேசையில் வீசியெறியப்பட்டது. அதில் இருந்து
அனுபதிக்கப்பட்ட சொற்கள் (சாம்பிள் மட்டும்)
-----------------------
அருமை, தூள், டக்கர், பிரமாதம், என்னே அருமை, ஐயா சொன்னதுதான் சரி, ஏவ்வ்வ்வ்வ்வ், வாங்க, போங்க
கண்டிப்பாகாக அனுமதிக்கப் படாதவை
---------------------------------
ஈழத்தமிழ், பேச்சுவழக்கு,இந்தியத் தமிழ், எழுத்து வழக்கு, விமர்சனம் (உம் அதுசார்ந்த சொற்களும்), இது ஈழத்தமிழா?, இது எங்கோ இடிக்குதோ, வாங்கோ, போங்கோ
ஜயயோ என்னயா கொடுமை!
ReplyDeleteஉனக்கு விழங்குது எனக்கு விழங்குது... என்ன தமிழா இருந்தா என்ன
விசையத்தைப்பாருங்கப்பா!
வெரி நைஸ் ஜேகே...!
மன்மதக்குஞ்சு! டுவிட்டர், நீயூஸ்பேயுகளுக்கு கொமன்ஸ்போடுறது, பிரபலமானவர்களுக்கு லெற்றர் போடுறது... இந்த மாதிரி இரவுபகல் பாக்காம் செய்யும் போது "நீ மட்டும் நெரத்த வீணாக்கி என்ன கிளியப்போது அங்க" என்ற கேள்வீலை வேணாமெண்டுபோகும். ஆனா தனிச்சில்லை என்னமாதிரி கனக்கப்பேர் இது ஒரு போராட்ட வடிவம் எண்டு நினைக்கினம் என்று நினைக்க திருப்தியா இருக்கு.
இந்த சந்தர்ப்பத்திலை ஒண்டு சொல்லோனும் - முதல்முதல் அசிங்கப்படுத்தப்பட்ட பெண்போராளிகளின் படங்கள் இணையத்தில் உலாவியபோது அவற்றோடு சேர்த்த கடிதத்தோடு எல்லா (என்னால் முடிந்த) பெண்கள் அமைப்பு, மனித உரிமைகள் அமைப்பு எல்லா வற்றுக்கும் அனுப்பியிருந்தேன் அதை நெல்சன் மண்டேலா பவுண்டேசனுக்கும அனுப்பியிருந்தேன் எனக்குக் கிடைத்த சிறிய வெற்றியாக அவர் அசிஸ்ரனிடம் இருந்து ஒரு பதில் கிடைத்தது "அவர் உன்னிப்பாகக்கவனித்துக்கொண்டிருக்கிறார் இரு உள்நாட்டுப்போர் எவரும் தலையிட முடியாது ஆனாலும் அந்த மக்களுக்காக ஏதாவது செய்ய ஆர்வமாக இருக்கிறார்" என்று.... பல மனித உரிமை அமைப்புக்கள் பதிலளித்தன தம்மால் சட்டநடவடிக்கை எடுக்க முடியும் தனிப்பட்வராக இதை நாம் தம்மோடு பதிவுசெய்தால் என்று....! நான் ஒரு வெளிநாட்டுக்குடி உரிமை பெற்றவர் என்றால் ஏதாவது செய்திருக்கலாமோ என்னவோ?
@மன்மதகுஞ்சு
ReplyDelete//ஆனால் எத்தனை ஈழ மக்கள் இன்றூ கூடங்குளமக்களை எண்ணிப்பார்த்தோம்,அவர்களுக்கு குரல் கொடுத்தோம்? இதுதான் உண்மை நிலை,அனைவரும் கொஞ்ச நேரம் சிந்திக்கவேண்டும்//
கூடங்குளம் பற்றி நான் எழுதிக்கொண்டு இருக்கும்போது பாலாவிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. கூடங்குளம் பற்றி எழுதும்படி. யோசிக்காமல் இல்லை. ஆனால் அதில் எந்த பக்க நிலை எடுப்பது. அணு உலை பாதுகாப்பா இல்லையா என்று இரு பக்க வாதங்கள் இருக்கின்றது. மேலும் அமெரிக்காவில் சூறாவளி என்றால் இஸ்ரேல் என்ன செய்யமுடியும்? சின்ன நாடு இல்லையா? அது போல தான், எங்களால் தமிழ் நாட்டவர் பிரச்னைக்கு குரல் கொடுத்து ஏதாவது நடக்குமா என்ன?
//டேய் நாதாரி அந்த மணியத்தாரோட வீடியோவை நான் தேடப்பட்ட பாடு.ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா நாக்கில நுரை தள்ளிடிச்சிடா,//
நன்றி தல .. தேடிப்பார்த்து கிடைக்கவில்லை. உன்னிடம் கேட்டால் எப்படியும் கிடைக்கும் என்று தெரியும். சொன்னது போலவே எடுத்து தந்தாய்!
//கட்டுநாயக்கா டியூட்டி பிரி தாண்டி வந்திடமுடியுமாடா//
நீயே போன் பண்ணி சொல்லுவாய் போல... மவனே நான் மாட்டினா உங்களை சும்மா விட்டிடுவனா? தமிழன்டா!
அணு உலைகள் பற்றி ஞானியின் எழுத்துக்களை தவறாமல் வாசித்து வருகிறேன். எழுதும் எண்ணமும் இருக்கிறது!
@சக்திவேல் அண்ணே
ReplyDeleteஎன்ன இப்படி சொள்லீட்டீங்க .. தம்பிமார், இளம் இரத்தம், கொஞ்சம் அப்பிடி இப்படி ஓவரா எழுதினாலும் நீங்க மூத்தவர், சொல்லி அடக்க வேண்டாமா? நாளைக்கு சக்திவேலின் சிஷ்யன் ஜேகே இப்படி ஆகீட்டானே என்று ஒரு கதை வந்தால் யாருக்கு அவமானம்?
@தமிழினி
ReplyDelete//உனக்கு விழங்குது எனக்கு விழங்குது... என்ன தமிழா இருந்தா என்ன
விசையத்தைப்பாருங்கப்பா!//
அவர்கள் என் எழுத்தை இலக்கியமாக்கு அழகுபடுத்த தான் இப்படி சொல்கிறார்கள். நான் சும்மா இப்படி எழுதினாலும், சொல்வதை கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக திருந்த முயற்சிக்கிறேன். ஆனால் வியாழ மாற்றத்தை இலக்கியமாக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. இது இப்படி தான் இருக்கும். இல்லாவிட்டால் என் பதிவில் ஈயோட்டவேண்டிய நிலை தான் வரும்!
தமிழினி, உங்கட உணர்வுகளை நான் தொடர்ந்து கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். தொடர்ந்து செய்யுங்கள். இன்னும் இன்னும் வாசியுங்கள். அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் வெளியே வந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு சமூக பொறுப்பு இப்போது கூடுதலாக இருக்குது. அதை வாசிப்பு மூலமே சமாளிக்கலாம் என்பது என் தாழ்மையான எண்ணம்!
JK சின்னதா ஒரு விளக்கம், நான் சொல்லவந்தது இந்த முகநூலில கருத்துக்களம் திறந்து கலந்துரையாடுவதை பற்றீ மட்டுமே.அது முற்றாக தவறென்னு கூறவில்லை.ஆனால் முகநூலில் கருத்து தெரிவிப்பதால் லைக் .. விமர்சனங்கள் வருமே தவிர வேலைக்காகாது , ஆனால் பெரும்பான்மை இன நண்பர்கள் நண்பிகள் கொலைக்களம் பொய்யென்று கூறி ஒரு முகநூல் பக்கம் ஆரம்பித்து அனைவருக்கு அனுப்பி கொண்டிருந்தார்கள்,எனது 300 பேருக்கு மேல் உள்ள எனது முகநூலில் 4,5 பேரை தவிர வேறு யாரும் கொலைக்களத்தை பகிரவில்லை என்பது என் ஆதங்கம்,பகிர்ந்து கொண்ட என்னை கூட நடுச்சாமத்தில தொலைபேசி தொடர்பு எடுத்து உடனே அழிக்க சொல்லி வற்புறுத்தினார்கள்.. புலத்தில் இருந்தவர்கள் என்ற வேதனை இன்றூம் எனக்குள் இருக்கின்றது.
ReplyDeleteடிவிட்டரில் எமது கருத்துக்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்ககூடிய வசதிகள் உள்ளது..பேஸ்புக்கை விட..அத்துடன் முகநூலில் அனைத்து குடும்ப விபரங்கள் இருக்கையில் அனைவரும் விரும்புவதில்லை சுகந்திரமான கருத்துக்களை வெளிப்படுத்த ,ஆனால் டிவிட்டர் அப்படியில்ல ஒரு ஜடி இருந்தால் போதுமானது எமது கருத்தை அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க.அதற்கு ஒரு சிறந்த உதாரணம். கொலைக்களம் 14.03 அன்று வெளியானபோது தினமலம் என எல்லோராலும் விமர்ச்சிக்கப்படும் இந்திய பார்ப்பனிய அதிகாரத்தின் பத்திரிகையான தினமலர் பின்வருமாறூ தலைப்புச்செய்தியாக போட்டிருந்தது.
https://twitter.com/#!/ulavu/status/180574039964786688/photo/1
ஆனால் டிவிட்டர்கள் எல்லோரும் இணைந்து தினமலரின் டிவிட்டருக்கு தொடர்ந்து எமது உணர்வுகளையும் கண்டனங்களையும் பதிவு செய்து அந்த செய்தியையும் தலைப்பையும் மாற்றவைக்கமுடிந்தது..
https://twitter.com/#!/Mrkunchu/status/180385084447268864
https://twitter.com/#!/Mrkunchu/status/180255874747613184
இந்திய டிரண்டில் #KillingField பட்டி வர மறுத்தது,தடைசெய்யப்பட்டது என்றூம் சொல்லலாம்,இதை அறிந்து உணர்ந்துகொண்ட அனைவரும் உடனடியாக அப்போது உலக டிரண்டில் சென்றூகொண்டிருந்த அனைத்து பட்டிகளிலும் கொலைக்களம் வீடியோ இணைத்து கீச்ச தொடங்க நடுநிசியானபோது உலக டிரண்டில் #KillingField பட்டி வரத்தொடங்கியது,பலரின் கவனத்தை ஈர்த்தது. இதுவெல்லாம் ஒன்று சேர்ந்த கரங்களுக்கு கிடைத்த பலன்..ஆனால் தமிழக தமிழ் சொந்தங்கள் போல எத்தனை புலம்பெயர் சொந்தங்கள் இந்த பரப்புரையில் இணைந்துகொண்டார்கள் எனதெரியாது..
இந்த இணைப்பில் பாருங்கள் புரியும்..
www.flickr.com/photos/7195593@N03/sets/72157629336347030
ஆனால் முகநூலில் லைக் போடவும் விமர்சனம் போடவுமே உதவுகின்றது,இதைத்தான் நான் சொன்னேனே தவிர முகநூலில் கருத்துரையாடல் செய்வது தவறு என்று சொல்லவில்லை. இப்படியான கருத்துரையாடலால் நிகழ்வதை விட செயலில் தெரிவிப்பதுதான் சரியான பாதை என்பதே எனது தாழ்மையான கருத்து.
https://twitter.com/#!/Mrkunchu/status/180215886714634240
இவையனைத்தும் சிறிய உதாரணங்களுக்காக பகிர்ந்து கொண்டவை மட்டுமே, அதற்காக நான் மட்டும்தான் ஆத்துகிறேன் எண்டு சொல்ல வருவதாக நினைத்துவிடாதீர்கள்.
மன்மதகுஞ்சு
ReplyDeleteTwitter/Facebook இன் மதிப்பை நீ சொல்லுவது போல குறைத்து எடை போடா முடியாது. ஆனால் அது இருப்பதால், அதை தாண்டி எதுவும் செய்யாமல் இருக்கிறோம் என்ற உன்னுடைய வாதமும் சரியே.
என்னளவில், என் கருத்த்துகளை உணர்ச்சிவசப்படாமல் சொல்லமுடிகிறது, நாலு பேருக்கு போய் சேருகிறது என்பதே ஒரு வெற்றி தானே. அதுவும் இல்லை என்றால் நான் என்ன இங்கே இருந்து செய்யமுடியும் அரசியல் ரீதியாக. செய்ய கூடியதை செய்கிறோம். சொல்லாமலும் .. சொல்லியும்
JK,
ReplyDeleteMany thanks for thinking about me while writing stories for your blog. I just want to let you know that I will continue to read your blog whether I am able to understand it fully or not. You write whichever way you want. I read the "Kajan's Wedding Night"...definitely the Tamil version is too good. Tomorrow onwards the Spring break starts, so soon I will read the other one also. Do you think "ஈழத்தவருக்கும் ஜனநாயக கட்சி ஆட்சியே சேஃப்."? I am not sure though. It does not mean that I am against Obama. I voted first time in my life during 2008 US Presidential election for Obama (I never got a chance to vote when I was a Indian). I am going to vote for Obama in 2012. Let see what happens. In my view American politics is equally complex like Eelam Tamil politics.
ஒரு நீண்ட விமர்சனமாகிட்டதால: http://athens-valiban.blogspot.com/2012/03/blog-post_31.html.
ReplyDeleteஇது வியாழமற்றம் சம்பந்தமான விமரிசனம் இல்லை. தளை தட்டினா ஆடோ மாடோ மேய விடுங்கோ, எனக்கு கவிதையே தெரியாது என்டுரன் இதில மரபுக் கவிதை, அரபுக் கவிதை எனண்டுகொண்டு, பல எண்ணை கிணறுகளை வவுனியாவில வைத்தது வியாபாரம் பண்ணும் மன்மதக்குஞ்சு இதுக்கு பதிலளிக்க கூடும்.
@Mohan
ReplyDeleteThanks Mohan
// Do you think "ஈழத்தவருக்கும் ஜனநாயக கட்சி ஆட்சியே சேஃப்."?//
Is the fox better than the wolf story Mohan ... Rubublicans' foreign policy is so intimidating and fundamental, most of the Republicans over the years had very little idea of the "problems of others". This was widely pointed out by Obama in 2008 primaries .. It doesn't mean democrats will do any good. But at-least they have a fair stance on our issue compared to Republicans who I think are clueless on this.
My point may be biased too ... Most of the materials I read are democratic driven ones... especially from New York
தம்பி வாலிபன் !!
ReplyDeleteபெரியாரை கனம் பண்ணு, பெண்களை கவர் பண்ணு என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார்( வள்ளுவரா? வாஜ்பாயா?) ... அத follow பண்ணாம கொஞ்சம் ஓவரா எழுதீட்டன் போல இருக்கு .. நீ வேற சாம்பிராணி போடாதேயப்பா!!
//இதில மரபுக் கவிதை, அரபுக் கவிதை எனண்டுகொண்டு, பல எண்ணை கிணறுகளை வவுனியாவில வைத்தது வியாபாரம் பண்ணும் மன்மதக்குஞ்சு இதுக்கு பதிலளிக்க கூடும்.//
வியாழ மாற்றம் என்பதால் நகைச்சுவையாக எழுதினாலும் இந்த வெண்பா விஷயம் நான் சீரியஸாக எடுத்து அனலிஸ் பண்ணின விஷயம். ஆனா வாசிக்கும் பொது அந்த கனம் தெரியகூடாது என்பதற்காக தான் கேதாவை அந்த வாங்கு வாங்கினேன்( அனுமதி பெற்றுக்கொண்டு!).
வெண்பாவில் இருக்கும் சீர்/தளை கணக்கு வழக்கும் எங்களிண்ட வகையீடு தொகையீடு, சார்பு வேகத்துக்கு கொஞ்சமும் குறைந்ததில்லை. விதிகளை வாசிக்கும் பொது பெரும் சவாலாக இருந்தது .. உன்னால் முடியும் என்று நினைத்தே சவால் விடுத்தேன்!! ட்ரை பண்ணி அனுப்பினால் இந்த "வெண்பா பகுதி" யை இதே பாணியில் அடுத்த வாரமும் தொடரலாம்..
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE
//முத்துகுமார், நம்பி ஏமாந்த சோணகிரி
ReplyDeleteதிரிசங்கு சொர்க்கம் //
அது உண்மை தான் ஆனால் நாங்களே( இலங்கை தமிழர்கள்) இவ்வாறு கேவலப்படுத்தக் கூடாது
மன்மதகுஞ்சு நாங்கள் என்ன தான் செய்தாலும் அதற்கு பலன் இல்லை என்று கடைசியில் சிங்கள இனவாதிகளின் பக்கத்தில் ஆவது எதிரான கருத்துக்களை போடுங்கள் எண்டால் அதற்கு கூட இவர்கள் உதவவில்லை இலங்கையில் உள்ள சிலரே fake account create பண்ணி அதில் தலையிட்டோம் இப்போது கூட 21000 likes அந்த page இல் உண்டு
ReplyDelete//ஆனால் நாங்களே( இலங்கை தமிழர்கள்) இவ்வாறு கேவலப்படுத்தக் கூடாது//
ReplyDeleteஅது யாரை கேவலப்படுத்துகிறோம் என்பதை பொறுத்தது. அந்த வரியில் கேவலப்படுவது முத்துகுமார் இல்லை.
இலங்கை தமிழன் .. அந்த facebook page விஷயம் ... என் அப்பாவை ஒருவன் என் அப்பனே இல்லை என்று சொல்லும் விஷயம். அவன் அதை தெரிந்தே வேண்டுமென்று செய்கிறான். provocative attempt.. அதற்கு இல்லை விளக்கும் கோடுக்கும் நிலையில் நான் இல்லை...
//நாம் செய்யாதது எதை நியூட்டன் செய்தான்? எப்படி அவனால் மட்டும் அது முடிந்தது?//சூர்ய சித்தாந்தம் என்ற பழைய ஒரு நூலில் (நியூட்டனுக்கு 1200 வருடங்களுக்கு முன்) பாஸ்கராசாரியார் என்றொருவர் இது பற்றி சொல்லி உள்ளாராமே. நம் முன்னோர்கள் தான் அதை சரியாக சந்தைப்படுத்தாமல் விட்டுவிட்டார்களோ?
ReplyDeleteஉணர்ச்சி பெருக்கெடுத்து காவிரி டெல்டாவுக்கு பாயுதுன்னா பாருங்களேன்! இந்த பயத்திலேயே மற்றவனும் ஆமா போட்டு தேசப்பற்றை நிரூபிக்கவேண்டிய நிலையில்.
ReplyDeleteநான் படித்த காலத்தில் science hallல் பங்கர் வெட்ட கூப்பிட்டால் முதலில் science masterக்கு news வந்துவிடும் ,masters ல் கூப்பிட்டால் hallற்கு news வந்துவிடும் ஆதலால் நாங்கள் வருவதற்கு முன்னால் போய்விடுவோம்அப்படி தானஂ நாங்கள் இருந்தோம் வெளியில் சொல்ல கூடியமாதிரி எதுவுமே செய்யவில்லை என்பது தானஂ உண்மை ஆதலால் இதற்கு பதில் சொல்ல எனக்கு முடியவில்லை
யுத்தத்தில் யாருமே நாளைக்கு காலைல ஐஞ்சு மணிக்கு ஆர்மி காம்ப் அடிக்கபோகிறோம் என்று சொல்லிக்கொண்டு அடிப்பதில்லை.
சரியாக சொன்னீர்கள் .குடும்பகதிரைக்கு பிரச்சனை என்றால் ஏனோ faxவேலை செய்யாது நேரில் சென்று கொடுப்பார்
ஆளுமை, எளிமை மற்றும் இயல்பு. ஆப்கானை கொலை பின்னணியில் படைவீரர் குடும்பங்கள் பற்றிய கருத்தில் உள்ள புத்திசாலித்தனம்!
நானும் பார்த்து வியந்தேன் நிச்சயமாக திறமை இருக்கிறது
அவனவன் ஏதோ நானே கேள்வி கேட்டு பதிலும் போடுவதாக நினைக்க போறாங்க.
சீச்சீ நாங்கள் அப்படி நினைப்போமா
கூடங்குளம் அணு மின்நிலையம் தொடர்பாக எழுதவும்
இது மண்டேலாவின் சிறையறை
என்னுடைய படிக்கும் அறை போல் இருக்கிறது
சுமார் ஒன்றுக்கும் மேற்பட்ட வெண்பாக்கள் .........
“கட்டிளங் கவிஞர்” என்று தன்னை தானே சொல்லிக்கொள்ளும் கேதா அவர்களின் வெண்பா முதல் பரிசை பெறுகிறது.
கடுப்பேத்திறாங்க
ஹரிகரனுக்கும் சித்ராவுக்கும் இயல்பாகவே ஒரு கெமிஸ்ட்ரி இருக்கிறது. ஹரி சங்கதிகள், பிர்க்கா என அடித்து ஆட, சித்ரா சத்தம் போடாமல் ஒரு சின்ன பாவத்தை, காதலை, ஏக்கத்தை குரலில் கொண்டுவந்து சிக்ஸர் அடிப்பார்
மிகவும் பிடித்த பாடல் காரில் இப்போதும் ஒலிக்கும் பாடல்
கீர்த்தி ஒரு பார்ட்டி அரேன்ஜ் பண்ணுடா! பீல் பண்ணனும் போல இருக்கு!!
இது என்ன புதுசா இருக்கு. ஹன்சிகாவை பீல் பண்ண வச்சிட்டேளே
நன்றி கோபி ... டீடைல்ஸ் இருக்கா? இருந்தால் கொஞ்சம் அலசலாம்.
ReplyDeleteஎன்ன சிக்கல் என்றால், எங்கட ஆட்கள் ஆருடம் கூறுவார்கள். "அணுவை துளைத்து ஏழ் கடலை" முதல் புட்பக விமானம் வரை விஞ்ஞானம் என்று ஆர்கியூ பண்ணலாம் தான். ஆனால் வெறும் சிந்தனையை, ஆராய்ச்சி செய்து, நிறுவி, விஞ்ஞான பூர்வ கண்டுபிடிப்புகளுக்கு காலாக மாற்றவேண்டும் இல்லையா? அதை நாங்கள் செய்யாதவரைக்கும் உரிமை கோருவது சரிபோல எனக்கு படவில்லை.
நன்றி கீதா...
ReplyDelete//இது என்ன புதுசா இருக்கு. ஹன்சிகாவை பீல் பண்ண வச்சிட்டேளே//
பொண்ணுங்க எப்ப தான் பீல் பண்ணியிருக்காங்க மேடம்?