Skip to main content

காதல்

 

premam-759

மாளவிகா அக்கா பயங்கரக் கெட்டிக்காரி. பயங்கர வடிவு. பயங்கரமா இங்க்லீஷ் கதைப்பா. இப்படி பல பயங்கரங்கள் அவரிடம் இருந்தன. அதனாலேயே அவரை எனக்குப் பயங்கரமா பிடிக்கும். அவர் அப்பாவிடம் சேர்வயிங் படிக்கவரும் சமயம் கணக்கு கொப்பியை எடுத்துக்கொண்டுபோய் நானும் பக்கத்தில் உட்காருவேன். ஏற்கனவே செய்து பிழை திருத்திய கணக்குப்பேப்பரை திரும்பவும் அவவுக்கு முன்னாலேயே செய்து முடிப்பேன். “மண்டைடா நீ” என்பார். வெளிப்படை உண்மை நிறுவிவிட்டு கீழே இரண்டு கோடுவேறு சரிவாக சர்க் சர்க்கென்று அடிப்பேன். “ஜீனியஸ்” என்பார். அப்பா கிளையண்டோடு பேசுகின்ற சமயங்களில் செஸ் விளையாடுவோமா? என்று கேட்டு அடம் பிடித்திருக்கிறேன். கோபப்படமாட்டார். நிறைய கதைப்புத்தகம் வாசிப்பார். அம்மாவுக்கு கொண்டுவந்து கொடுப்பார். ஒரு முறை அவர் கொண்டுவந்த “தீப ஒளி”யை வாசித்துவிட்டு நானும் வளர்ந்து ரமணிச்சந்திரன் ஹீரோமாதிரி ஒரு கொம்பனிக்கு நிர்வாகியாக வருவேன் என்று சொன்னேன். இந்த வயசில உனக்கு ரமணிச்சந்திரன் கேட்குதா என்று மெல்லமாய் குட்டுவார். வலிக்கவே வலிக்காது. அடுத்த நாள் அம்புலிமாமா ஒன்றைக் கொண்டுவந்து தருவார். விறகு வெட்டி தங்கக்கோடரி தன்னது இல்லை என்று மொக்கை போடுவான். சுத்த போர் என்றால் “மற்றதெல்லாம் வளர்ந்தாப்பிறகு வாசிக்கலாம்டா”. கியூட்.

திடுப்பென்று ஒருநாள் மாளவிகா அக்கா தன்னுடைய திருமண அழைப்பிதழை அப்பாவிடம் நீட்டியபோது எனக்கு கண்கலங்கிவிட்டது. “அப்ப என்னைக் கலியாணம் செய்ய மாட்டீங்களா அக்கா?”. “அய்யோ .. ச்சோ ஸ்வீட் .. நீ நல்லா படிச்சியண்டா என்னை விட ஹண்ட்ரட் டைம்ஸ் பெட்டர் கேர்ள் கிடைப்பாடா ..இந்த வயசில என்னைக்கட்டி நீ என்னதான் செய்வ சொல்லு?”. “என்ன செய்யேலாது .. சொல்லுங்க?”. மீண்டும் அதே குட்டு. கலியாண வீட்டன்று மாப்பிள்ளையிடம் தன்னுடைய லவ்வர் என்னை அவர் என்று அறிமுகப்படுத்த அந்தாள் வேறு என் தலையில் மெதுவாக ஒரு குட்டு போட. வலித்தது. படுபாவி.

மாளவிகா அக்கா இல்லாத வாழ்க்கையில் அர்த்தமில்லை என்று பிள்ளையார் கோயிலடி அரச மரத்தில் போய் குந்தியிருந்து அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணியிருப்பேன். ஒளிவட்டம், ஞானம் நத்திங் ஹப்பிண்ட். ஆனால் அந்த வழியால் கார்த்திகா போனாள். நான் மரத்தடியில் தனியே இருந்ததை கண்டு அக்கம்பக்கம் பார்த்துவிட்டு சிரித்தாள். “சித்தகத்தி பூக்களே சுத்திவர பார்க்குதே” என்று எஸ்பிபி வொய்ஸ் பின்னணியில் சிரித்துக்கொண்டே பாட, கார்த்திகா அந்தக் கணமே யாவுமானாள். அடுத்தநாள் மணி டியூஷனில் முதல் வகுப்பு கணக்கு. கோண்டாவிலில் இருக்கும் அவள் வீட்டுக்கு தின்னவேலியிலிருந்து விடியக்காலமையே சைக்கிள் மிதிக்கவேண்டும். அவள் படலையால் வெளியே வரும்வரைக்கும் காத்திருந்து நூறு மீட்டர் பின்னாலே, போகிற போக்கில உதயன் பேப்பரை வாங்கி ஹாண்டிலில வச்சே வாசிக்கிறது. அவள் எப்போதாவது திரும்பிப்பார்க்கும்போது என்னையும் பேப்பரையும் பார்த்தால் “பெடியன் ஒரு படிப்பாளி” என்று யோசிக்கலாம். கொக்குவிலில் இருக்கும் மணி டியூஷனுக்கு எதுக்கடா கோண்டாவில் போறாய்? என்று யாராவது கேட்டால் இன்ஸ்டன்டான பதில் “அம்மா கொண்டாவில் கடைல இறைச்சி வாங்கியறச் சொன்னவா”.

சுகுமாரனும் கார்த்திகாவுக்கு ரூட்டு போடுகிறான் என்று அவனும் நானும் ஒரே கடையில் ப்ளேன்டீ குடிக்க ஆரம்பித்தபோதுதான் தெரிந்தது. அவன் கொஞ்சம் ஸ்டைல். மேவி இழுப்பான். பிடரியிலே இரண்டு பக்கத்தில் இருந்தும் தலைமயிர் ஒன்று கூடி நடுவிலே கொடு வரையும். நமக்கு மேவி இழுப்பதே பெரிய விஷயம். சுகுமாரனுக்கு முன்னாலே நான் ஒரு சப்பை என்று புரிந்ததால் “கார்த்திகா எங்கிருந்தாலும் வாழ்க” என்று மீண்டும் அரச மரமே என் கதியானது.  பின்னாளில் சுகுமாரன் கார்த்திகாவுக்கு நாச்சிமார் கோவிலடியில் கடிதம் குடுத்ததும் அவள் கிழித்து எறிந்ததும் கேள்விப்பட்டபோது சந்தோசமாக இருந்தது. எனக்குமில்லை. அவனுக்குமில்லை. கார்த்திகாவுக்கு நான் மானசீகமாக எழுதிய கடிதங்களை பயத்தில் கிழித்து போட்டுவிட்டேன். சுகுமாரன் அதே கடித வரிகளை மீண்டும் மீண்டும் பல ***திகாக்களுக்குக் கொடுத்து கிழி வாங்கி …. பல வருடங்களாக டச்சில் இல்லை. மூன்று வருடங்களுக்கு முன்னர் தொலைபேசியில் அழைத்தான்.

“டேய் எனக்கு கலியாண வீடடா”
“வாவ் .. பொண்ணு ஆரு?”
“கெஸ் பண்ணு பார்ப்பம்?… உனக்கும் தெரியும் ஆளை”
“வதனாவா?”.
“இல்லை மச்சான் .. அது பிழைச்சுப்போச்சு ..”.
“ஓ சொறி .. துவாரகாவா?”.
“அவள் ஒரு அமுசடக்கி மச்சான் ..வேலைக்காகாது”.
“சுபாஷினி?”.
“ம்ஹூம்”.
“லோஷனாவா?” ..
”டேய் உன்னை விட்டா சொல்லிக்கொண்டே இருப்பே .. நானே சொல்லுறன் .. ”

பெயரைச் சொன்னான். You gotta be kidding maite!

கார்த்திகா இல்லை என்றானதும் இம்முறை மணி அடித்து பாட்டு கேட்டது அபர்ணாவிடம்தான். ஆத்திசூடி ரோட்டில வழி மறிச்சு ஹெல்த் சயன்ஸ் நோட்ஸ் கேட்டபோதுதான் மிதிலை சம்பவம் முதன் முதலில் இடம்பெற்றது. இத்தனை பேர் இருக்க கோழி கிறுக்கலோடு இருக்கும் என் நோட்சை ஏன் கேட்டாள் என்று யோசித்த மறுகணம் வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டை எல்லாம் ஓடத் தொடங்கியது. கட்டுப்படுத்தி வைக்க பெரும் பிரயத்தனம். அடுத்த நாள் அவள் திருப்பி தந்தபோது ஒவ்வொரு பக்கமாக திருப்பி ஏதாவது குறிப்பு குடுத்திருக்கிறாளா? எனி ஹின்ட்ஸ்? மயிலிறகு? மின்மினிப்பூச்சி என்று ஏதாவது கிடைக்கிறதா என்று தேடினேன். சிலவேளை சவர்க்காரத்தில எழுதி இருப்பாளோ? கொப்பி நனைந்து மை எல்லாம் கரைஞ்சதுதான் மிச்சம்.

ஏஎல் படிக்கும்போது ஒரு பெண்கள் பாடசாலையில் “என்ன தவம் செய்தனை யசோதா” என்று ஒரு பெண் பரதநாட்டியம் ஆட “என்ன பொண்ணுடா இது?”!  அவளுடைய கண்கள் தனியாகவே வானத்துக்கும் பூமிக்கும் ஏறிக்குதிக்கும். பார்த்துக்கொண்டிருக்கும்போதே “விழிகளை வீசிய இளைய கொடி, இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி” என்று முரளி பாடிக்கொண்டே மேடைக்கு போனார். என்ன ஒன்று பக்கத்தில் திரும்பிப்பார்த்தால் பல முரளிகள் பாடிக்கொண்டிருந்தார்கள்.

வளர வளர பார்த்தவுடன் இடம்பெற்ற விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சம் குறையத்தொடங்கி மெதுவாக பார்க்க பார்க்க இடம்பெற தொடங்கியது. அதேநேரம் தூர நின்று காதலித்துவிட்டு இரவு வீட்டபோய் சிவனே என்று பொன்னியின் செல்வன் வாசிக்க முடியாத சூழல். வெறும் lust மற்றும் attraction இரண்டுமே இருபதுகளில் attachment க்குள் நுழைந்துவிடும் சந்தர்ப்பங்கள் வலுவாக ஏற்படத்தொடங்கும். இதில் தப்பவேண்டும். அனேகமாக அப்பா அம்மா பார்த்த பெண்ணையோ ஆணையோ திருமணம் புரிந்தவர்கள் இந்த இடத்தில் தங்களை இன்டெலிஜண்ட் என்று நினைத்துக்கொள்ளலாம். அது போங்காட்டம். அவர்களுக்கு சந்தர்ப்பம் அமையவில்லை. அவ்வளவே. Love is not a feeling but an ability என்று எங்கோ ஒரு ஆங்கில படத்தில் கேட்டதாக ஞாபகம். ஒரு ஆணிடம் போய் ப்ரொபோஸ் பண்ணுவதும், பெண்ணிடம் ஹாய் சொல்வதும் இலேசல்ல. கொஞ்சம் guts வேண்டும்.

அப்படி என்றால், உண்மைக்காதல், பத்து வருஷம் காதலித்து திருமணம். ஐம்பது வருஷ தாம்பத்ய வாழ்க்கை, தெய்வீக காதல், ஒருவரை ஒருவர் உணர்ந்து புரிந்த செம்புலப் பெயனீர் மாட்டர் ...இதெல்லாம் பொய்யா? வெறுமனே ஒரே வார்த்தையில் ஹோர்மோன்கள் என்று முடிக்காமல் கொஞ்சம் ஆலாப் பாடிப்பார்ப்போம்.

காதலிலே மூன்று பிரதான கட்டங்கள் என்கிறார்கள். Lust, attraction and attachment. அந்த பெண் பரதநாட்டியம் ஆடியபோது “வாவ்” என்று   உடனே ஓடிப்போய் டூயட் பாட என்ன காரணம்? டெஸ்ட்டோஸ்தரன் மற்றும் ஈஸ்ட்ரோஜன். இனவிருத்திக்கான இயற்கை வைக்கின்ற முதல் அடி. பார்த்தவுடன் இந்த இரண்டு ஓமோன்களையும் அதிகப்படியாக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய உடலில் அதற்குரிய டிபார்ட்மெண்ட்கள் தயாராகின்றன. வோர்ம் அப். இந்த நிலையை ஆங்கிலத்தில் lust என்பார்கள். தமிழில் சிற்றின்ப இச்சை என்று கூகிள் சொல்கிறது. கொச்சைப்படுத்தாதீங்க பாஸ். சிற்றின்ப இச்சை ஒரு இரண்டு மூன்று வாரத்துக்கு தாங்கும் என்கிறார்கள். அதற்குள் நீங்கள் அயலூர் போனாலோ இல்லை உங்கள் தாத்தா செத்துப்போனாலோ அந்த ஓமோன்கள் குறைந்து .. லஸ்ட் பஸ்டாகிடும்.

அதையும் தாண்டி மூன்று வாரங்களுக்கு அந்த ரெண்டு ஓமோன்களும் சுரந்து கொண்டிருந்தால் அடுத்த நிலை வருகிறது. attraction. ஈர்ப்பு. இந்த இடத்தில் உதிரியாக வாய்க்குள் நுழைய முடியாத புதிய ஹோர்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கின்றன. பீரோமோன்ஸ், டோபமின், நோரிபினேபிரின், செரடோனின் என்று பெயர்கள் முக்கியமில்லை. அவை என்ன செய்கின்றன என்பதுதான் முக்கியம். மூளையில் சந்தோஷமையம் ஒன்றை இவை ஏற்படுத்துமாம். அவளை நினைக்க நினைக்க சந்தோசம் பீறிடும். பக்க விளைவுகளும் இல்லாமலில்லை. அதிகமான இதய துடிப்பு, பசி இல்லாமை, தூக்கம் இல்லாமை … ஒரு வித எக்ஸைட்மெண்ட். கூர்ப்பின் உச்சம் இது. உங்களை தூண்டிவிட்டு அவளின்/அவனின் பின்னால் அலையவிட்டு எப்படியாவது மடக்கிவிட்டால் .. that’s exactly nature wants. இது ஒரு ஒன்றரை இரண்டு வருடங்கள் இழுக்கும் என்கிறார்கள். இரண்டு வருஷம் ட்ரை பண்ணியும் செருப்புத்தான் என்றால் ஓமோன்கள் பெருகுவது நின்றுவிடும். மூளை சுதாரித்துவிடும்.  விளைவு .. “இவள் இல்லாட்டி உலகத்தில வேற பொண்ணுங்களா இல்ல? go to hell”, “ஆண்கள் எல்லோருமே ஏமாற்றுப் பேர்வழிகள்” என்று ஸ்டேடஸ் போடுவீர்கள். கொலைவெறியும் பீப்பும் பிளேலிஸ்டில் போகும். அடுத்த நாளே ஷேவ் பண்ணிவிட்டோ, இல்லை முடியை ஸ்ட்ரைட் பண்ணிவிட்டோ, profile picture மாற்றிவிட்டு, சிங்கிளாக இருக்கும் ஆணின்/பெண்ணின் facebook profile களை மேய்வீர்கள். அவர்கள் ஸ்டேடஸ் எல்லாம் லைக் பண்ணி, “awesome” என்று கொமென்ட் போட்டு, போக் பண்ணி, ஹாய் சொல்லி … மீண்டும் லஸ்ட்!

உங்கள் சமிக்ஞைகளுக்கு எதிர்ப்பால் ஐந்துவும் ரியாக்ட் பண்ணுகிறது என்றால் அடுத்த கட்டம். நீங்கள் ஹாய் சொன்னால் அவள் ரிப்ளை பண்ணுகிறாள். நீங்கள் “எங்கட வீட்டில இடியப்பம்” என்றால் அவள் “இட்லி” என்கிறாள். வைபர், வாட்சப் பேச்சுகள் கோப்பிக்கடையிலே சந்திப்பாக மாறுகிறது. அங்கே நீங்கள் இருவரும் என்ன ஐட்டம் என்று தெரியாமல் தொட்டுக்காட்டி வாங்கிய கச்சல் கப்புசீனோவை ஒரு பாக்கட் சீனி கூட போடாமல் மூன்று மணி நேரம் குடிக்கிறீர்கள் என்றால் நீங்கள் அடுத்த ஸ்டேடஸுக்கு ரெடி என்று அர்த்தம்.

அடுத்த நிலை. Attachment. இது நடக்கும்போது முதன் முதலாக கண்ணைப் பார்த்து பேச தொடங்குவீர்கள். பாசாங்குகள் குறைய தொடங்கும். நிஜ முகங்கள், வண்டவாளங்கள் வெளிப்படும். வெளிப்பட்டால் பிரச்சனை வரும். சண்டை வரும். இந்த உலகத்தில் யாருமே ஒத்த சிந்தனைகளோடு வலம் வர முடியாது. அவ்வளவு ஏன், ஒரு தனிமனிதனின் சிந்தனையே ஒவ்வொரு நிமிடமும் மாறுபடலாம். ஆக இரண்டுபேர் ஒன்றாக இருந்து வாழ்க்கை நடத்துவது என்பது? சான்ஸே இல்லை. பிரியவேண்டி வரும். அப்படி விட்டு விட முடியுமா? இதை தவிர்க்கவேண்டுமே? அதற்குதான் ஒக்சிடோசினும் வசோபரசினும் அறிமுகம் ஆகிறார்கள்.  காதலிக்க ஆரம்பித்து ஒன்றிரண்டு வருடங்களுக்கு அந்த ஓமோன்கள் இதற்கென்றே பெருகுமாம்.  அதுவும் முதல் வருஷம் பின்னி பெடலெடுக்கும். “இங்கிவளை நான் பெறவே என்ன தவம் செய்தேனோ?” என்று ஸ்டேடஸ் போடுவீர்கள். “நீ என்னை தாலாட்டும் தாயல்லவா?” என்று வாலியை கொப்பி பண்ணுவீர்கள்.  survival instinct இற்காக கூர்ப்பு செய்திருக்கும் அதிசயங்கள். தொடர்பு நிலைத்து நீடிக்கவேண்டும் என்பதற்காக இயற்கை செய்யும் பகீரத பிரயத்தனங்கள் இவை.

அப்ப என்ன சொல்ல வாறீங்க பாஸ்? தெய்வீக காதல் என்பதே இல்லையா? இல்லையென்று சொல்லவில்லை .. இருந்தா நல்லா இருக்கும் என்றுதான் சொல்லுறன்!

இவற்றை தாண்டியும் பிரிவு வருகிறதே என்றால் பல காரணங்கள். உடம்பில் கிட்டத்தட்ட ஐம்பது ஹோர்மோன்கள் இருக்கின்றன.  இதில் காதலுக்கு ஒரு ஏழு இருக்கிறது. பிரிவுக்கான காரணங்களை தூண்டும் ஹோர்மோங்களின் வீரியம் இந்த ஏழு ஹோர்மோன்களை தாண்டும்போது “பிரிந்துவிட்டால் உயிர்தப்பலாம்” என்ற எண்ணம் வரும். மூளை சாதக பாதக விளைவுகளை எடை போடத் தொடங்கும். எந்த ஹோர்மோன் அதிகமாக சுரக்கிறது, கலாச்சாரம் என்ன சொல்லிக்கொடுத்தது, விட்டுக்கொடுக்கும் இயல்புகள், சகிப்புத்தன்மை, பிரிந்தால் சமாளிக்கலாமா? நமக்கு என்ன குறை? குழந்தைகள், இப்படி பல காரணங்களை மூளை அடுக்கும். இதெல்லாமே கூட்டிக்கழிச்சு ஒன்றாக இருப்பதே பெட்டர் என்று நினைத்தால் உண்மைக்காதல் என்று காதலர் தினம் கொண்டாடலாம். இல்லையா? காதல் எல்லாம் நத்திங் பாஸ். வெறும் ஹோர்மோன் பிசினெஸ்!

சிலவருடங்களுக்கு முன்னர். கூட வேலை செய்யும் பெண். அவள் ஒரு தேவதை. “மச்சான் கட்டினா இந்த பொண்ணு தாண்டா, இல்லை எண்டால் கலியாணமே வேணாம் .. என்ன அழகுடா” என்று கோகுலிடம் போய்ச் சொன்னேன்.

“டேய் டேய் .. இது ஈஸ்ட்ரோஜன் .. அண்ட் டெஸ்ட்டோ.. சம்திங் .. கவர்ச்சி .. செக்ஸ் .. இச்சை மச்சான்.. வேண்டாம்”
“இல்லைடா இது வேற .. நான் மச்சுவர்ட்டான ஆள்டா மத்தவங்கள் மாதிரி இல்லை”
“அப்பிடியா ஒண்டு செய் . மூணு வாரம் .. ஓமோன் எல்லாம் அடங்கட்டும் .. பார்க்கலாம்”

மூன்று வாரங்களுக்கு பின்னர் கோல் பண்ணினேன் அவனுக்கு.

“இன்னும் இங்க வலிக்குதடா .. ஷி இஸ் த கேர்ல் .. .. நிச்சயம் இது லவ் தாண்டா.. ஐ வோண்டு ப்ரோசீட்”
“நல்லா தெரியுது.. இது அட்ட்ராக்ஷன் ஸ்டேஜ் ”
“இல்லடா .. வந்து ..”
“உனக்கு நித்திரை குழம்புதா?”
“வந்தாதானே குழம்ப”
“இதயம் படக் படக் என்று துடிக்குதா?”
“இரண்டு ‘படக்’ குகளுக்கிடையில் இன்டர்வலே இல்லை மச்சி”
“பசி?”
“தண்ணி குடிச்சா கூட வாந்தி வருது”
“ஆ . இது பீரோமோன்ஸ், டோபமின் என்று பக்கா போதைப்பொருள் ஹோர்மோன்கள் மச்சான் .. அடுத்த ஸ்டேஜ் .. விழுந்துடாத .. “
“உனக்கு விளங்குதில்ல மச்சி .. நான் மற்ற ஆக்கள் மாதிரி இல்ல .. இட்ஸ் ரியலி ஸ்ட்ரேஞ் .. அவளோட எந்த நேரமும் பேசோணும் போல இருக்கு .. கார்த்திகா அபர்ணாவோட கூட இவ்வளவு பீலிங் வந்ததில்ல”
“கொஞ்ச நாளா இப்பிடித்தான் இருக்கும் மச்சி .. ஒண்டு செய் ஒரு வருஷம் கழிச்சு வா … அப்பவும் பசி இல்லை எண்டால் தென் வீ கான் பி ஷூவர்”

இரண்டு வருடங்கள் கழித்து காந்தி உணவகத்தில் மீட் பண்ணினோம். கோகுல்தான் ஆரம்பித்தான்.

“டேய் .. நீ ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே .. அந்த பொண்ணு .. யூ ரிமெம்பர்?”
“ஓ அதுவா? தப்பீட்டன் மச்சி .. நல்ல காலம் … தட் வோஸ் ஜஸ்ட் எ கிரஷ் .. ஒண்டுமே சரி வராது எண்டு வீட்டில பொம்பிளை பாக்க சொல்லீட்டன்”
“நல்ல காலம் .. தட்ஸ் குட் .. அப்பவே சொன்னேன் இல்ல”
“ஓமடா .. நீ சொன்ன .. எனக்கு விளங்க இல்ல .. சரி விடு .. பயங்கர பசி .. நான் ஒரு தம் புரியாணி அடிக்க போறன் .. உனக்கென்ன வேணும்”
“எனக்கு கொஞ்ச நாளா என்னவோ பசியில்ல மச்சான் .. ஒரு ஜிஞ்சர் பியர் ஓடர் பண்ணு!”


மீள் பதிவு

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக