Skip to main content

Posts

Showing posts with the label கந்தசாமியும் கலக்சியும்

கந்தசாமியும் கலக்சியும் - புதுப்பதிப்பு

வணக்கம் நண்பர்களே, என்னுடைய புத்தகங்களை மறுபதிப்பு செய்யவேண்டும் என்ற ஆவலை வெண்பா புத்தக நிலையத்தின் நிறுவனர் சுதர்சன் சென்ற வருடம் வெளிப்படுத்தியிருந்தார். தாமே பதிப்பகம் ஒன்றை ஆரம்பிக்கப்போவதாகவும் “கந்தசாமியும் கலக்சியும்” நாவலிலிருந்து ஆரம்பிக்கலாம் என்றும் சொன்னார். அப்படித்தொடங்கியதுதான் இந்த மூன்றாம் பதிப்புக்கான வேலைகள்.

கந்தசாமியும் கலக்சியும் - ஒரு கண்ணோட்டம்

அண்மையில் பங்கு கொண்ட ஒரு இலக்கியக் கூட்டத்தில் காமெல் தாவூத்தினால் எழுதப்பட்ட "மறுவிசாரணை" மொழிபெயர்ப்பு நாவல் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது. இது அல்பேர்ட் காம்யூவின் அந்நியன் நாவலின் எதிரொலியாக எழுதப்பட்டது எனும் கருத்து எல்லோரிடமும் நிலவியது. கலந்துரையாடலில் பேசிய எழுத்தாளர் ஜேகே இந்தக் கருத்தை உடைத்துப் போட்டார். ஒரு நல்ல எழுத்து, அதனின்றும் அடுத்த சிந்தனைக்கு இன்னொரு எழுத்தாளரை இட்டுச் செல்லும், அந்நியனின் தொடர்ச்சியே மறுவிசாரணை நாவல் அன்றி, அதற்கு எதிராக எழுதப்பட்டதல்ல எனும் தெளிவான விளக்கம் ஜேகேயால் வைக்கப்பட்டது. ஜேகேயின் எழுத்துக்களில் வெளிப்படும் நுண்மாண் நுழைபுலம் கண்டு நான் அதிசயித்ததுண்டு. இலக்கியச் சந்திப்பிலும் சரியான கோணத்தில் சிந்திக்கும் இவரின் திறனிலிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அமைந்தது.

கந்தசாமியும் கலக்சியும் (கிண்டில்)- கீதா ஜீவனின் பார்வை

வணக்கம் ஜேகே இரு வருடங்களின் முன் ஒரு நண்பர் வீட்டிற்கு சென்ற போது  " கந்தசாமியும் கலக்சியும் " என் கைகளில் அகப்பட்டது. எனது போதாத காலம் ஒரு பக்கத்தை சும்மா பார்ப்பம் என்று திறந்து வாசித்தேன்.அது சுமந்திரனும் மிகிந்தர்களும் சந்திக்கும் தருணம். மூடி வைத்து விட்டு இவருக்கு விசர் இவரும் அரசியல் எழுத தொடங்கி விட்டார் என்று முடிவெடுத்ததுதான். அதன் பின் அந்த புத்தகத்தை வேண்டவேண்டும் என்ற எண்ணமே இல்லை . மூன்று நாட்களின் முன் இந்த புத்தகம் கிண்டிலில் கிடைப்பதாக நண்பர் மூலம் அறிந்தேன். விடுமுறை வேற வாசித்துதான் பார்ப்போமே என்று காலம் தாழ்த்திய   ஞானோதயத்தால் வாங்கியதுதான் இந்த “கந்தசாமியும் கலக்சியும்”  வாசிக்க தொடங்கியதுதான் எங்கே சுவாரசியம் போய்விடுமோ என்று இரண்டு நாட்களில் வாசித்து உங்களுக்கு பதில் எழுதுவது வரை தூண்டியிருக்கிறது இந்த புத்தகம்.

கந்தசாமியும் கலக்சியும் - வாசிப்பு அனுபவப் பகிர்வுகள்

கந்தசாமியும் கலக்சியும் நூல் வாசிப்பு அனுபவப் பகிர்வின்போது இடம்பெற்ற உரைகளின் தொகுப்பு. சுபாசிகன் கேதா சகுந்தலா கணநாதன் ஜூட் பிரகாஷ் முருகபூபதி நிருஜன் - தமிழ்த்தாய் வாழ்த்து

ஜே.கே.யின் கந்தசாமியும் கலக்சியும் - முருகபூபதி

"மௌன வாசிப்பில் வெடித்தெழும் சிரிப்பலைக்குள் மூழ்கும் அனுபவம் தரும் நாவல்" நவீன படைப்பிலக்கியப்பிரதிகளை நான் வாசிக்கத்தொடங்கிய 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் ஒரு எழுத்தாளர், "இலக்கியம் படைப்பவர்களுக்கு கம்பராமாயணமும் கல்குலசும் ஓரளவாவது தெரிந்திருக்கவேண்டும்" என்றார். அவுஸ்திரேலியாவில் எமக்கு கணினி அறிமுகமானதன் பின்னர், எழுத்தாளர்களுக்கு கம்பராமாயணம் முதல் கம்பியூட்டர் வரையில் தெரிந்திருத்தல் வேண்டும் என்ற நிலை வந்தது. ஜே.கே. எழுதியிருக்கும் கந்தசாமியும் கலக்சியும் படைப்பை படித்ததும், மேலும் ஒரு படி சென்று கலக்சியும் தெரிந்திருக்கவேண்டியதாயிற்று. ஒரு ஓவியக்கண்காட்சியில் பால்வீதியை சித்திரிக்கும் படத்தை பார்த்திருக்கின்றேன். பால்விதியில் கலக்சி வருகிறதாம். பார்த்ததில்லை. ஜே.கே.யின் இந்தப்படைப்பில் பார்க்க முடிகிறது. ஒரு நாவலாக தொடங்கினாலும் நாவலுக்கே உரித்தான நேர்கோட்டுத்தன்மையில் விரியவில்லை.

"கந்தசாமியும் கலக்சியும்" : நாவலை உரையாடுதல்

கந்தசாமியும் கலக்சியும் - ஆனந்த் பாலா

கந்தசாமியும் கலக்சியும் - அறிவியல் +அரசியல் + நையாண்டி - Its a Bloody Mary Cocktail!! எங்களுக்கு எல்லாம் அரை டவுசர் போட்ட அஞ்சாம் வகுப்பிலிருந்தே அறிவியல் என்றால் அடி வயிற்றில் புளி கரைக்கும். அறிவியலும், அறிவியல் மாஸ்ட்டரும் குனிய வைத்து கும்மிய மறத் தமிழர் வம்சம் நாங்கள்..! ராஜ ராஜ சோழன் காலத்திலேயே அறிவியலை எல்லாம் கூரை மீது ஏத்தி விட்டு, கலையின் ஆழம், ஆழம், ஆழம் சென்று "ஆலுமா, டோலுமா" வை கண்டெடுத்த சாதனையாளர்கள். அப்படி இருக்க இந்த கந் தசாமியும், கலெக்சியும் - படலைல தல சினிமா விமர்சனம் எழுதும் ன்னு ஆசையோட காத்திருந்தா இந்த நாவல update பண்ணிட்டு ஒரு வாரத்துக்கு escape ஆயிடும். அடுச்சு புடுச்சு அத்தோட முடுஞ்சுதுன்னு பாத்தா தல கடைசில புக்காவே release பண்ணி புடுச்சு. சரி ஆனது ஆய் போச்சு படுச்சு தான் பாத்திருவோம் ன்னு எடுத்தா.. "பூமியப் பத்தி ஒரு அற்புதமான intro.. முடிவா, இந்த லூசுக் கூட்டத்தில் ஒருவர் தான் கந்தசாமி!!" கதையோட ஹீரோவுக்கு என்ன ஒரு opening!! அப்ப தான் ஒரு நம்பிக்க வந்துச்சு. கந்தசாமி மேல பாரத்த போட்டுட்டு பக்கத்த தள்ளுன்னா.. climax ல ஜிகர்தண்டா

கந்தசாமியும் கலக்சியும் - ரோசி கஜன்

மனைவி மகன்களை கனடா அனுப்பிவிட்டு யாழில் தனிமையில் வாழும் கந்தசாமி எனும் வயோதிபர்! ஒரு சில மணித்தியாலங்களில், பூமி பஸ்பமாகப் போவது தெரியாது நடைபெறும் நிகழ்வுகள்! இப்படி, சுவாரஸ்சியமாக ஆரம்பிக்கின்றது ‘ஜேகே அவர்களின் கந்த சாமியும் கலக்சியும்’. பூமியின் கதை அவ்வளவுதானா என்ற ஏக்கம் மறைய முன்னரே கமகம வாசத்தோடு(என்ன சாப்பாடா என்று கேட்க நினைப்பவர்கள் கதையை வாசித்து அனுபவிக்க வேண்டுமாக்கும்.) பிரபஞ்ச வெளியில் கைபிடித்து அழைத்துச் செல்கின்றது கதை. சுமந்திரன் கந்தசாமியை அழைத்துக்கொண்டு எப்படிக் களவாக மகிந்தர்களின் ‘காற்று’க்குள் புகுந்தார்களோ, அப்படியே நானும் கைகாவலாக ஒரு துவாயை எடுத்துக்கொண்டு பயணபட்டுவிட்டு வந்தேன் . பயணத்தில் சந்தித்தவை சில இடங்களில் புரியாத நிகழ்வுகள்.(நம்ம கொம்புயூட்டர் ஒழுங்காக அப்டேட் பண்ணப்படாதது) ‘ஆ!’ என்று பார்க்க மட்டும் செய்தேன். ஆனாலும் மிகவும் சுவாரஸ்சியம் குறையாது இருந்தது. கதைக்குள் செல்ல முன்னரே, ‘இதைச் சொல்லியே ஆகவேண்டும்’ என்று ஆரம்பித்து, முழுக்க முழுக்க கற்பனையே என்று கண்டிக் கதிர்காமரில் கதாசிரியர் ஆணையிட்டிருந்தாலும் பூமி அழித்தல

கந்தசாமியும் கலக்சியும் - காயத்திரி

ஒரு கணித-கணினி மூளையின் தமிழ் பரிசோதனைகள் தரத்தில் தகதகக்கின்றன… உங்கள் பாஷையில் சொல்வதானால்… Virtual realitiy யில் ஓர் பிரபஞ்சப் பயணம் - கந்தசாமியும் கலக்சியும் அசையும் கரும்பொருட்கள் எல்லாம் அகக் கண்ணில் தெரிகிறது… ஓடும் எலிகள் எல்லாம் விஞ்ஞானிகளாய் மிரட்டுகிறது… ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் ஓர் புதிர்.. பல புரிதல்கள்.. புரியாத புதிர்கள் கூட புன்னகைக்க வைக்கிறது… நகைச்சுவை நதியில் ஓர் விஞ்ஞானப் பயணம் - ஒளித்து வைத்திருக்கும் உள்ளுணர்வுகளுடன் கூட.. இது தான் உஙகள் வெற்றிக்கான தனித்தடம்… எங்கள் எல்லோரினதும் - இதயத்திற்குள் ஒளிந்திருக்கும் நப்பாசையை முடிவாக்கி உங்கள் காவியம் தானே மகுடம் சூடிக்கொண்டது… ‘தமிழுக்கே தமிழா’.. என.. இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.. சின்னப் பெருமையுடன்,.-எனக்கு உங்களைத் தெரியும்.. உங்களுக்கும் என்னை ஞாபகமிருக்கலாம்.. பட்டிமன்ற எதிரணியில் இருந்துகொண்டு - உங்களின் சரளமான மொழிநடையில் ‘ஆ’வென வியந்து – அடுத்ததாய் பேச வார்த்தைகள் இடறிய கல்லூரிக் கால நினைவுகளுடன்.. உங்கள் எழுத்துக்களின் பல்லாயிரம் விசிறிகளில் ஒரு விசிறி – காயத்திரி

கந்தசாமியும் கலக்சியும்

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, சிங்கப்பூர், மலேசியா  இலங்கை, இந்தியா இலங்கையில் கொழும்பு,  நல்லூரடி பூபாலசிங்கம் புத்தகசாலைக் கிளைகளிலும் பெற்றுக்கொள்ளலாம். ஏனைய வழிகளில் பெற்றுக்கொள்ள jkpadalai@gmail.com எனும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள். முகப்பு

கந்தசாமியும் கலக்சியும்

நண்பருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தி கேட்டு வைத்தியசாலை விரைகிறேன். வைத்தியசாலை வாசலிலேயே பிறந்த குழந்தைகளுக்கு வாங்கிச்செல்ல என்று பொருட்களை விற்றுக்கொண்டிருப்பார்கள். ஒரு கிப்டைத் தூக்கிக்கொண்டு, அவர்களுடைய வார்டுதேடி அலைந்து, கண்டுபிடித்துப் போனால், நண்பர் வெளியில் யாருடனே தொலைபேசியில் சிரித்துக்கொண்டிருந்தார். மகன் பிறந்த சந்தோசத்தில் சிரிக்கும் தகப்பன். வாழ்த்துச்சொன்னேன். உள்ளே என்று கையைக் காட்டினார். வார்டுக்குள் நுழைந்தேன். கட்டிலில் நண்பி. கலைந்த தலை. களைத்த முகம். கண்ணெல்லாம் சொருகிக்கிடந்தது. என்னைக் கண்டதும் “வாங்கோ” என்று சன்னமாக அழைத்தார். “வாழ்த்துகள்” என்றேன். “பயங்கரமாகப் படுத்திவிட்டான், கள்ளன்” என்றார். மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வலி வருவதும் போவதுமாக இருந்ததே ஒழிய பிரசவம் தாமதமாகிக்கொண்டேயிருந்தது. வைத்தியர்களும் இயற்கையாகவே நிகழட்டும் என்று கத்தி வைக்க மறுத்துவிட்டார்கள். எதிர்பார்ப்பு, பயம், வலி, அலைச்சல் என்று எல்லாமே கலந்த மூன்று நாட்கள். இத்தனையையும் சத்தம்போடாமல் நிகழ்த்திய அண்ணர் அருகே தொட்டிலில் நிம்மதியாக நித்திரைகொண்டபடிக் கிடந்தார். ஒரு வ