Skip to main content

Posts

“கொச்சின் மாடப்புறா!”

1998ம் ஆண்டு தீபாவளி. காலையிலேயே பொதிகையில் புதுப்பட பாடல்கள் நிகழ்ச்சி ஆரம்பித்தது. அம்மாவிடம் ஏச்சு வாங்கிக்கொண்டு டிவி முன் உட்கார்ந்த போது,  முதல் பாடல் ஒரு சுலோகத்துடன் ஆரம்பித்து, “பச்சை மா மலை மேனி” என்று தொடர, தேவாவுக்கே உரிய வயலின் ரீங்காரத்துடன் கோரஸ் சஞ்சாரிக்க, ஹரிஹரன் கணீரென்று பாடத்தொடங்கினார். எனக்கோ ஒன்றுமே புரியவில்லை. ஒரு வித பரவசத்தில் பார்த்துக்கொண்டு இருந்ததில் எந்த படப்பாடல் என்றும் கவனிக்கவில்லை. பாடல் முடிந்த கையோடு, மிகுதி நிகழ்ச்சியை பார்க்காமல், நண்பன் பார்த்தியிடம் ஓடிப்போய் என்ன படம் என்று விசாரித்தபோது தான் தெரிந்தது அது "உன்னுடன்” என்று. வானம் தரையில் வந்து ! இந்த பாடலில், ஹரிகரனை ஷேவாக் மாதிரி அடித்து ஆட தேவா அனுமதித்திருப்பதாக தெரிகிறது. தலை சும்மா பின்னி எடுத்து இருப்பார். இன்றைக்கு வரைக்கும் யாரும் இந்த பாடலை மேடையிலோ வேறு நிகழ்ச்சியிலோ நன்றாக பாடியதாய் தெரியவில்லை. அத்தனை கடினம் இது. ஒருமுறை ஹரிஹரன் கூட மேடையில் பாடி சொதப்பி இருப்பார்! வைரமுத்துவுக்கு மெட்டை கேட்டவுடனேயே இது ஒரு கோகினூர் என்று தெரிந்து விட்டது. ஆரம்ப வரிகளே அம

“நிலவும் மலரும் பாடுது”

2001ம் ஆண்டு கொழும்பில் ஒருமுறை சக்தி FM  இன் “அழைத்து வந்த அறிவிப்பாளர்” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் நண்பன் கஜன் மூலமாக கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் நான் இரண்டாவதாக ஒளிபரப்பிய பாடல் இவருடைய பாடல். இவரை அறிமுகம் செய்யும்போது ஒரு கேள்வி கேட்டிருந்தேன். இந்த பாடலை பாடியவரை ஒரு இசையமைப்பாளர் என்று கூறுவீர்களா? இல்லை பாடகர் என்று கூறுவீர்களா? இரண்டு துறைகளையும் ஒரே விகிதத்தில் கலக்கியவர். இளையராஜா, ரகுமானை எடுத்துக்கொண்டால் அவர்கள் முதலில் கம்போசர்ஸ், பின்னர் தான் பாடகர்கள். ஹரிஹரன், SPB,  ஷங்கர் மகாதேவனை எடுத்துக்கொண்டால் அவர்கள் முதலில் பாடகர்கள். பின்னர் தான் கம்போசெர்ஸ். ரமேஷ் விநாயகம் கூட முதலில் ஒரு இசையமைப்பாளர் தான். ஆனால் இந்த இராட்ச்சனை அப்படி ஒரு வட்டத்திற்குள் அடக்கிவிட முடியாது. கம்போசிங், பாடல்கள் என்று ஒரு பத்து வருஷங்கள் திரையிசையை கலக்கியவர். ஆம், இந்த வாரம்  “உ.. ஊ.. ம ப த ப மா” வில் ஐம்பதுகளில் திரையிசை துறையில், கம்போசிங்கிலும், பாடுவதிலும் தனக்கென மூன்றாம் தலைமுறை ரசிகர்களை கூட உருவாக்கிய திரு A M ராஜா அவர்கள் பாடிய, இசையமைத்த பாடல்களின் தொக

சுந்தர காண்டம்

  " ஆழ நீர்க்கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு, 'எம்பி நின்தம்பி, நீ தோழன், மங்கை கொழுந்தி ' எனச் சொன்ன வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்" பொருள்: கங்கைக் கரை வேடன் குகனிடம் நட்பு கொண்டு என் தம்பி, இனி உனக்குத் தம்பி என்றும், நீ எனக்குத் தோழன் என்றும், சீதை உனக்குக் கொழுந்தி என்றும் சொன்ன அந்தப் பரிவை எண்ணி மயங்குகிறாள். என்னைத் திருமணம் புரிய வந்து, ஜனகன் சபையில் இருந்தோர் வியப்புற வடவரை போன்ற சிவதனுசை நொடியில் வளைத்து ஒடித்த பெருமான் இன்று என்னை வந்து மீட்காமல் இருக்கிறாரே என்று வருந்துவாள்   புத்தகத்தில் ஆழ்ந்திருந்தவள் இராணுவ போலீஸ்காரியின் அழைப்பைக்கேட்டு திரும்பினாள். “மிஸ்டர் குமார ஓயாவ பலன்ட அவிள்ள இன்னவா” ( திரு குமார உன்னை பார்க்க வந்திருக்கிறான்) “குமார? ஹூ இஸ் இட் … கவுட?” “குமாரா, ஓய தன்னவலு?” (குமார, உனக்கு தெரியுமாம்) சிலிர்த்தெழுந்தாள் மேகலா, “இஸ் இட் குமரன்? குமரன்த?” “ஔ எயா தமாயி” (ஓம் அவனே தான்)   --------------------------------------------------   கிளிநொச்சி மகாவித்தியாலயம் முடிவடைந்து மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக்கொண்டு இருந்

என் கொல்லைப்புறத்து காதலிகள் : மணிரத்னம்

ஆரம்பம் ஒரு சின்ன ஒளிப்புள்ளியில் இருந்து ஆரம்பிக்கிறது. பின்னணி இசையின் எலெக்ட்ரிக் பேஸ் கிட்டார் பிட்ச் திகிலூட்டுகிறது. அப்புறம் சேசிங். ஐந்து நிமிடத்தில் காஷ்மீரிய போராளி வாசிம்கான் சுற்றி வளைக்கப்படுகிறான். கட். அடுத்த காட்சி சுந்தரபாண்டியபுரத்தில். சின்ன சின்ன ஆசை பாடல். 

தேடித்தேடி தேய்ந்தேனே!!

சிறுவயதில் உங்களுக்கு அந்த பெண்ணை பிடித்திருக்கும்! ஒரு பதினைந்து வயது என்று வையுங்கள். அப்போது அவளுக்கு தெரியாமலேயே அவளை நோட்டம் விட்டிருப்பீர்கள். கணக்கே எடுத்திருக்கமாட்டாள்.  அவள் போகும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து, அத்தனை இளையராஜா டூயட்களையும் அவளோடு வயற்காட்டிலோ இல்லை இண்டோர் செட்டிலோ பாடிப்பார்த்து இருப்பீர்கள். ஒரு மழைக்கால இரவில் “புதுவெள்ளை மழை” பாட்டை ரேடியோவில் போட்டுவிட்டு அவளின் கண்கள் இரண்டையும் உங்கள் கைகளால் பொத்திக்கொண்டு கூட்டிச்சென்று காஷ்மீர் பனிமலைகள் காட்டி இருப்பீர்கள். அவளும் சொக்கிப்போய் சுத்தி சுத்தி பார்க்க, கண்ணாடி சில்லுகளாய் இசை சிதறி கிறங்கடிக்கும். ஆனால் நிஜத்தில் அவள் நேரில் வந்தால் அப்போது தான் பனைமரத்தில் எத்தனை நொங்குகள் இருக்கின்றன என்று எண்ணியிருப்பீர்கள். சரி, காலம் ஓடிவிட்டது, இப்போது வளர்ந்து பெரியவன் ஆகி விட்டீர்கள். ஒருநாள் திடீரென்று அவள் எதிரே வந்து நிற்கிறாள். ஒரு உறவுக்கார திருமணம் என்று வைய்யுங்களேன்! நீங்கள் நினைத்த கலரிலேயே சேலை, நீங்கள் நினைத்ததுபோலவே சிரிக்கிறாள். உங்களை ஞாபகம் வைத்து பேசுகிறாள்.  ரோஜா மதுபாலா போல “சிறு பறவை நீய

அப்பா வருகிறார்!

குமரனின் அப்பா இன்று தான் வருகிறார்.  காலையிலிருந்தே அவன் படலைக்கும் வீட்டிற்குமாய் ஓடிக்கொண்டு இருந்தான். இருப்புக்கொள்ளவில்லை அவனுக்கு. இரவு முழுதும் தூக்கம் இன்றி உழன்றுவிட்டு அடிக்கடி எழும்பி நேரம் பார்த்து பார்த்து வெறுத்துப்போனான். அடடே குமரனைப்பற்றி சொல்லவேயில்லை. எப்படித்தொடங்குவது? நான் தான் குமரன் என்று சொன்னால் வேலை இலகுவாக முடிந்துவிடும். ஆனால் அதில் ஒரு சங்கடம் இருக்கிறது. இதையெல்லாம் ஏன் எழுதுகிறாய் என்பார்கள். அட மறந்துவிட்டேன், சத்தியமாக இந்த குமரன் நான் இல்லை.  எங்கள் வீட்டில் அப்போது படலை இருக்கவில்லை. இரும்பு கேட் தான், ஓஹோ படலையை கேட் என்று மாற்ற அதிகம் நேரம் பிடிக்காது என்ன? ம்ம்ஹூம் ஏன் வீண் வம்பு, அது படலை தான். நான் குமரனும் இல்லை! குமரன், வரும் ஆவணிக்கு அவனுக்கு பதின்மூன்று வயது ஆகிறது. எங்கே வசிக்கிறானா? இதெல்லாம் இந்த கதைக்கு தேவையில்லை, இருந்தாலும் சொல்கிறேன். எப்போதாவது யாழ்ப்பாணம் வந்திருக்கிறீர்களா? வந்தால் அங்கே  பரமேஸ்வராச்சந்தி என்று ஒரு பிரபல முச்சந்தி இருக்கிறது, ஆம் அதே தான், பல்கலைக்கழகத்துக்கு அண்மையில், நிறைய பையன்கள் கூடும் சந்தி. ம

என் கொல்லைப்புறத்து காதலிகள் - கம்பவாரிதி ஜெயராஜ்

“ மனப்போராட்டம் நிறைந்த யதார்த்த மானிடம் பெரிதும் வெளிப்படுவது கம்பனில் …. “ என்று ஒரு பட்டிமண்டபம், 1992ம் ஆண்டு யாழ்ப்பாண கம்பன் விழாவில் நடந்தது. நல்லை ஆதீனத்தில் இடநெருக்கடியால் வெளியிலே நெரிசலில் நின்று,அப்பாவை இம்சித்து,என்னை தூக்கிவைத்து காட்டச்சொல்லி பார்த்த பட்டிமண்டபம். “இந்தை இப்பிறவிக்கு இரு மாந்தரை என் சிந்தையாலும் தொடேன்”  என்று சொல்லி பின்னாலே சீதைக்கு சிதை மூட்டச்சொன்ன போது அடைந்த கோபம் ராமனில் வந்ததா இல்லை அதற்கு வக்காலத்து வாங்கிய கம்பனில் வந்ததா என்று ஞாபகம் இல்லை. “சண்டாளி சூர்ப்பனகை தாடகை போல் வடிவு கொண்டாளைப் பெண்ணென்று கொண்டாயே தொண்டர் செருப்படி தான் செல்லாவுன் செல்வமென்ன செல்வம் நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்”  என்று அவர் ஔவையை அறிமுகம் செய்தபோது அதை மீண்டும் மனப்பாடம் செய்யும் தேவை இருக்கவில்லை. ஈழத்தில் தொண்ணூறுகளில் தனக்கென ஒரு தலைமுறை இலக்கிய ஆர்வலர்களை உருவாக்கிய கம்பவாரிதி இ. ஜெயராஜ் தான் இன்றைய கொல்லைப்புறத்து காதலி. என்னுடைய முதல் காதலியும் கூட. ஜெயராஜ் என்றால் யார் என்பதை தொண்ணூறுகளின் ஆரம்ப காலத்தில் சிறுவர்களாகவோ இல்லை இளைஞர்கள