Skip to main content

Posts

அன்போடு அழைக்கிறோம்

ராஜாக்களின் சங்கமம்

    பதின்மத்தில் எப்போதும் என்னோடு நெருங்கிய தோழிகளாக பயணித்த இருவர் "என் கொல்லைப்புறத்துக் காதலிகளில்" வருகிறார்கள்.  ஒருவர் "ஏகன் அநேகன்" இளையராஜா. அடுத்தது "என் மேல் விழுந்த மழைத்துளியே" ஏ. ஆர். ரகுமான்.  இசையை ரசிக்கவைத்தவர்கள். அதேபோல  தோழர்கள் "இருவர்".  அகிலன், கஜன்.  அந்த மூன்று அத்தியாயங்களையும் எழுதும்போது கிடைத்த சந்தோசம் கொஞ்ச நஞ்சமில்லை. எல்லாப்பாடல்களையும்கேட்டுக்கொண்டே, ரசித்து ரசித்து எழுதிய தருணங்கள், எழுத்துப் பிழை திருத்த உட்கார்ந்தால் கூட, திரும்பவும் புதிதாக ஒரு பந்தி முளைத்துவிடும். புத்தக அறிமுகத்துக்கென்று ஒரு நிகழ்ச்சி செய்வோம் என்று முடிவெடுத்தகணம், அகிலனையும் கஜனையும் ஒரே மேடையில் ஏற்றி அழகு பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் கஜனை சிங்கப்பூரிலிருந்து அழைப்பதுமுதல், அப்படிப்பட்ட மேடைக்குரிய அரங்கைத் தயார்படுத்துவது என எல்லாமே என் சக்திக்கு மீறிய விஷயங்கள் என்று விளங்கியது. மெதுவாக ஜூட் அண்ணாவிடம் இதைப்பற்றிக் கேட்டேன். சென். ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர் சங்கத்துக்கூடாக ஒரு கை கொடுப்பதாக சொன்னார். இன்னொரு கை வ

"குட் ஷொட்" சிறுகதை ஒலி வடிவில்.

அவுஸ்திரேலியாவின் SBS வானொலியைச் சேர்ந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரைசல் அவர்களின் முன் முயற்சியில் " குட் ஷொட் " சிறுகதை வானொலி நாடகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இனி சிறுகதை. இதைத்தொடர்ந்த என்னுடைய வானொலிப்பேட்டி. சிறுகதைக்கு உயிர்கொடுத்த ஸ்ரீபாலன் மற்றும் பாலசிங்கம் பிரபாகரனுக்கும், இதைத் தயாரித்தது மட்டுமல்லாமல், படலையின் ஏனைய சிறுகதைகளை வாசித்து தன்னுடைய விமர்சனங்களை கொடுக்கின்ற ரைசல் அவர்களுக்கும், SBS வானொலிக்கும் மிகவும் நன்றிகள். இந்த சிறுகதையின் முடிவுக்கான முடிச்சைப் போட்டுக்கொடுத்த கேதாவுக்கும் நன்றிகள்.

“என் கொல்லைப்புறத்துக் காதலிகள்” - கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்களின் வாழ்த்துரை.

  சின்ன வயது முதல், கோயில் வீதிகளில், குருமணல் காற்சட்டையில் படிய அமர்ந்திருந்து, தமிழ் இலக்கியத்தையும், சுவையையும், நயத்தையும் இவரிடமிருந்தே கேட்டு ரசித்தேன். அவரிடமிருந்து பாராட்டு பெறுவது பேருவகை கொடுக்கிறது. தொடர்ந்து எழுதுவது ஒன்றே இவருக்கும், என் எழுத்தில் நம்பிக்கைவைத்து ஊக்குவிக்கும் அனைவருக்கும் நான் செய்யக்கூடிய ஒரே கைம்மாறு. எழுதுவேன்.   “என் கொல்லைப்புறத்துக் காதலிகள்” புத்தகத்தை இணையத்தில் வாங்குவதற்கு இங்கே அழுத்தவும்.   நேர்காணல் கண்டு காணொளியை தயாரித்துத் தந்த நண்பன் கேதாவுக்கு மிக்க நன்றி.