புத்தாண்டுக் காலை. கையில் தேநீரோடு ஜெயமோகன் தளத்தில் மேய்ந்தால் அற்புதமான வாக்கியம் ஒன்று அகப்பட்டது. “பெய்தொழிந்தாலொழிய முகிலுக்கு மீட்பில்லை” எவ்வளவு உண்மை. அங்கிங்கெனாதபடி அலைந்தோடும் முகிலினுடைய பேறுதான் என்ன? பெய்தொழிதலே. பெய்தொழிந்து, மண் சென்று, அது நீங்கி, மீண்டும் முகிலாகிப் பெய்தொழிந்து என்ற சங்கிலியில் முகிலுக்கு என்றைக்கும் மோட்சமில்லை. பெய்தொழிந்தாலும் அதற்கு மீட்பில்லை. அப்படியானால் முகிலிடம் எதற்கு இத்தனை அவதி? எழுத்தும் வாசிப்பும் எப்போதுமே தூங்குகின்ற எரிமலைபோல. அடிவயிற்றில் ஒரு அந்தளிப்பு எப்போதுமே இருக்கும். எழுத்தைக்கூட விட்டுத்தள்ளலாம். ஆனால் இந்த வாசிப்புக் கொண்டுவரும் அந்தளிப்பு தாங்க முடியாதது. பொக்ஸ் கதைப்புத்தகத்திலே அந்தப் பாலியல் விடுதி பற்றி வருகின்ற இடத்திலே எரிமலை குமுறும். யாமத்தில் பண்டாரத்தொடு நாயின் பின்னே நாமும் செல்லும்போது கடைசிநேரத்தில் அந்த நாய் செய்கின்ற “நாய் வேலை”க்கு அதனை அடித்துக்கொன்றால் என்னவென்றிருக்கும். இப்போது வாசித்துக்கொண்டிருக்கும் சைமன் சிங்கின் “Big Bang” புத்தகம் கொடுக்கின்ற அந்தளிப்பு அளவிலாதது. வெள்ளையானையில் தொங்கி