Skip to main content

Posts

ஞானம் சஞ்சிகையின் "ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்"

அனைவருக்கும் வணக்கம். சிறுகதைகள். சிறுகதைகள் என்றால் என்னவென்று இப்போது ஒரு கேள்வி கேட்டால் இங்கிருந்து நூற்றைம்பது வரைவிலக்கணங்கள் வந்து சேரும். ஐம்பது பேர் உள்ள கூட்டத்தில் நூற்றைம்பது வரைவிலக்கணங்கள் வருகிறதென்றால், ஆளுக்கு மூன்று வரைவிலக்கணம் ரெடியாக வைத்திருக்கிறோம் என்று அர்த்தம். இப்போது இதுதான் சிறுகதை என்று தீர்மானமாக எல்லோரும் கூடி ஒரு அறிக்கை விட்டாலும் நாளைக்கும் இல்லை என்று வேறுவிதமாகத்தான் சிறுகதை எழுதப்படும். ஒருவன் ஒரு கதை எழுத உட்காரும்போது இந்த கட்டுரைகளையெல்லாம் வாசித்துவிட்டும் ஆரம்பிக்கப்போவதில்லை. அதனால் எது சிறுகதை என்கின்ற விவாதத்தினுள் நான் செல்லப்போவதில்லை. டைம் வேஸ்ட்.

காதல்

  மாளவிகா அக்கா பயங்கரக் கெட்டிக்காரி. பயங்கர வடிவு. பயங்கரமா இங்க்லீஷ் கதைப்பா. இப்படி பல பயங்கரங்கள் அவரிடம் இருந்தன. அதனாலேயே அவரை எனக்குப் பயங்கரமா பிடிக்கும். அவர் அப்பாவிடம் சேர்வயிங் படிக்கவரும் சமயம் கணக்கு கொப்பியை எடுத்துக்கொண்டுபோய் நானும் பக்கத்தில் உட்காருவேன். ஏற்கனவே செய்து பிழை திருத்திய கணக்குப்பேப்பரை திரும்பவும் அவவுக்கு முன்னாலேயே செய்து முடிப்பேன். “மண்டைடா நீ” என்பார். வெளிப்படை உண்மை நிறுவிவிட்டு கீழே இரண்டு கோடுவேறு சரிவாக சர்க் சர்க்கென்று அடிப்பேன். “ஜீனியஸ்” என்பார். அப்பா கிளையண்டோடு பேசுகின்ற சமயங்களில் செஸ் விளையாடுவோமா? என்று கேட்டு அடம் பிடித்திருக்கிறேன். கோபப்படமாட்டார். நிறைய கதைப்புத்தகம் வாசிப்பார். அம்மாவுக்கு கொண்டுவந்து கொடுப்பார். ஒரு முறை அவர் கொண்டுவந்த “தீப ஒளி”யை வாசித்துவிட்டு நானும் வளர்ந்து ரமணிச்சந்திரன் ஹீரோமாதிரி ஒரு கொம்பனிக்கு நிர்வாகியாக வருவேன் என்று சொன்னேன். இந்த வயசில உனக்கு ரமணிச்சந்திரன் கேட்குதா என்று மெல்லமாய் குட்டுவார். வலிக்கவே வலிக்காது. அடுத்த நாள் அம்புலிமாமா ஒன்றைக் கொண்டுவந்து தருவார். விறகு வெட்டி தங்கக்கோடரி தன்னத

ஈர்ப்பு அலைகள்.

  கடந்த சில நாட்களாக மொத்த உலகமும் பரபரக்கின்ற விடயம் இது. நூறு வருடங்களுக்கு முன்னாலே ஐன்ஸ்டீனால் உய்த்தறியப்பட்டிருந்த ஈர்ப்பு அலைகளை இப்போது அதி நவீன கருவிகள் மூலம் அவதானிக்க முடிந்திருக்கிறது. நாம் எல்லோருமே ஈர்ப்பு சக்தியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன ஈர்ப்பு அலைகள்? வெண்முரசு நீளத்துக்குப் பாகம் பாகமாக விவரிக்கவேண்டியதை அம்புலிமாமா சைசுக்குள் சுருங்கச்சொல்ல முயல்கிறேன். ஈர்ப்பு அலைகளை விளக்குவதற்குமுன்னாலே சார்பு விதிகளைப்பற்றி மேலோட்டமாகப் பார்க்கவேண்டும். நீங்கள் 100km/h வேகத்தில் செல்லும் ஒரு ரயில் வண்டியினுள்ளே அமர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு முன்னே உசைன் போல்ட் உட்கார்ந்திருக்கிறார். ரயில் நூறு கிலோமீட்டர் வேகத்தில் சென்றாலும் ரயிலுக்குள்ளே உட்கார்ந்திருக்கும் உங்களுக்கு ரயில் கண்ணாடிகளை மூடிவிட்டால் அதனை உணர்வது கடினம். முன்னே உட்கார்ந்திருக்கும் உசைன் போல்ட் 100km/h வேகத்திலே பயணம் செய்வதுபோலவும் உங்களுக்குத் தோன்றாது. ஏனெனில் நீங்கள் இருவருமே ரயிலுக்குள் இருப்பவர்கள். ரயிலின் சட்டத்தில் நீங்கள் இருவரும் நிலையாக இருக்கிறீர்கள். சீரான வேகத்தில் இயங்கும் ஒ

ஆதிரை

      ஐநூற்றுத்தொண்ணூற்றிரண்டாம் பக்கம். 24 – 04 – 2009 முள்ளிவாய்க்கால் சந்திராவுடைய வாய் மெல்லத் திறந்திருந்தது. உதடுகளில் மண்பருக்கைகள். “ நான் கேக்கிற நிறையக் கேள்வியளுக்கு நீங்கள் ஏன் பதில் சொல்லுறேல்லை …” அத்தார் சந்திராவைக் கட்டிக்கொண்டு வெடித்து அழத்தொடங்கினான். “ அண்ணை வெளிக்கிடுங்கோ …” வெள்ளையன் கையை ஆறுதலாகப் பற்றினான். “ என்னை விடு. நீ போ ” “ ஷெல்லடி கூடுதண்ண … வாங்க போவம் ” “ டேய் … நாயே … ஒருக்காச் சொன்னா கேக்க மாட்டியே …. நீ போ … நான் வரேல்ல ” அத்தார் சந்திராவின் கன்னங்களை வருடினான். குருதி தோய்ந்த விரல்கள் சிவப்புக்கோடுகளை வரைந்தன. “ குடும்பத்தில ஆரும் வேண்டாமெண்டிட்டு என்னை மட்டுமே நம்பி வந்தவளடா … என்ர சுகதுக்கம் எல்லாத்திலயும் பக்கத்தில நிண்டவளை ஒரு அநாதையா விட்டிட்டு வரச்சொல்லுறியே …” அத்தார் சந்திராவின் தலையைத் தூக்கித் தன் மடியில் கிடத்தினான். “ என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாமெல்லே …” அவளுடைய கழுத்தில் தலையைச் காய்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதான். ஷெல் சத்தங்கள் மறுபடியும் கூவின. மறுநாள் காலை , இயக்கத்தின் தமிழர் ‘ புனர்வாழ்வு ’ கழகத்தைச் சேர்ந்த

தீண்டாய் மெய் தீண்டாய் : கண்டேன் கண்டேன்

    இரண்டு நாட்களாக கோடை மழை. இன்றைக்கும் விடிந்தும் விடியாததுமாக மழைச் சிதறல்கள் கூரையில் தாளம் போட்டுக்கொண்டிருந்தன.  சுடச்சுட தேநீரும் கையுமாக யன்னலைத்திறந்தால் கூதல் முகத்தில் அறைந்தது. தோட்டத்து அகத்தியில் தனியனாக ஒரு பறவை குறண்டிக்கொண்டு தூங்கியது. இன்னொரு பறவை பறந்துவந்து மேற்கிளையில் அமர்கிறது. அது வந்தமர்ந்த அசைவில் தண்ணீர் தெறித்து கீழே இருந்த பறவையின் தூக்கம் கலைகிறது. இப்போது தூக்கம் கலைந்த பறவை மேற்கிளைக்குத் தாவுகிறது. தண்ணீர் மீண்டும் சிதறுகின்றது. இப்போது இரண்டு பறவைகளுமே செட்டை அடித்து கிளைக்குக் கிளை தாவி குரங்குச் சேட்டை புரிய ஆரம்பிக்கின்றன. அகத்தி மரமே அதிர ஆரம்பிக்கிறது.  நான்கடி தள்ளி யன்னலினூடே நானிருந்து பார்க்கிறேன் என்ற விவஸ்தையே இல்லாமல் பறவைகள் இரண்டும் காதல் செய்கின்றன.   தேநீர் சுட்டது.

BOX கதைப்புத்தகம்

    கார்த்திகை என்ற அந்தச் சிறுவன் தனது கண்களில் நீர் படரப் பார்த்துக்கொண்டிருந்தான். பின்பு அவன் தனது கைகளை உயர்த்தியவாறு “ ப ப ப ப ப ” எனக் கத்திக் குழறியவாறே அந்த விளையாட்டை நிறுத்துமாறு சிறுவர்களிடம் சைகைகளால் மன்றாடினான். ஆனால் சிறுவர்கள் விளையாட்டை இலேசில் நிறுத்துவதாகயில்லை. அவர்கள் உண்மையிலேயே இராணுவமாகவும் புலிகளாகவும் சனங்களாகவும் காயம் பட்டவர்களாகவும் செத்தவர்களாகவும் உடல்களாகவும் இரத்தமாகவும் தசையாகவும் அந்தப் பெட்டிக்குள் சந்நதத்தில் இயங்கிக்கொண்டிருந்தனர். -- BOX கதைப் புத்தகம்

நாச்சார் வீடு : கடிதங்கள்

நாச்சார் வீடு பற்றிய கட்டுரைக்கு வந்த கருத்துகள். ஜே.கே., பொய்யுக்குச் சொல்லவில்லை. மெய்யாலுமே நாச்சார் வீடுகளில் அபரிமிதமான காதல் உண்டு. பிடித்த வீடும் அதுதான். இங்கே அவுஸ்திரேலியாவில் கூட, வசதி இருந்திருந்தால் நான் சின்ன அளவிலான நாச்சார் வீடு கட்டிக் குடியிருந்திருப்பேன். படங்கள் ஏதாவது பார்க்கும் போது, நாச்சார் வீடு காட்டினால், பாத்திரங்களில் ஒன்றாமல், வீட்டை 'ஆவென்று' பார்ப்பது வழக்கம். நாச்சார் வீட்டு மோகம் உங்களுக்கும் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. வராந்தா வைத்த இங்குள்ள கிராமத்து வீடுகள் கூடப் பார்க்கும் போது ஒரு சந்தோசம் தரும்.  நாம் சின்ன வயதில் பள்ளி விடுமுறைக்குச் சண்டிலுப்பாயில் உள்ள அப்பாச்சி வீட்டுக்குப் போவோம். எங்கள் பொழுது முழுக்கப் பக்கத்து அன்ரி வீட்டுப் பிள்ளைகளோடு விளையாடுவதில் கழியும். அது நீங்கள் சொன்ன அதே குணமும், மணமும் கொண்ட நாச்சார் வீடு. ஜே.கே. நீங்கள் புதுசு, புதுசாக எழுதும் போது, அது எல்லோர் வாழ்விலும் எங்கோ தட்டுப்படுகிறது.  நாம் இந்தியா போகும் போது இதற்காகவே பாலக்காடு கல்பாத்திக்குப் போனோம். திண்ணைகள் வைத்த, கட்டு வீடுகள் கொண்ட நா

ஆடை நீக்கு

  அழுதுவிட்டு அகல்யா “சொறி அண்ணா” என்கிறாள். அண்ணருக்கு இப்படி எதிர்பாக்காமல் காதல் தோல்வி வரும் என்று தெரியாது. தண்ணி அடிச்சா தெம்பாக இருக்கும் என்று தவறணைக்குப் போகிறார். மப்பு பிடிபடுகிறது. அடுத்தநாளும் போகிறார். இரண்டு பிழா கேக்கிறது. மூன்றாம் நாள் கலன். ஐந்தாம் நாள் தவறணை திறக்கமுதலே அண்ணர் வாசலில் நிக்கிறார். ஆறுமாதம் கழித்து கோயிலடியில் கோமதியைக் காண்கிறார். கண்ட கணமே அவர் வீட்டு கனகாம்பரப் பூக்கள் எல்லாம் அவளுக்கு மாலை கட்ட நூலைத் தேடின. அண்ணர் அவசர அவசரமாக கோமதிக்கு நூலு விட்டுப்பார்த்தார். அவளோ “ஒரு சொப்ட்வேர்காரனுக்கு கழுத்தை நீட்டிச் சீரழிந்தாலும் சீரழிவேனேயொழிய உன்னைப்போல குடிகாரனுக்கு தலையை நீட்டமாட்டேன்” என்றுவிட்டாள். மீண்டும் காதல் தோல்வி. கனகாம்பரப் பூக்கள் வாடிப்போயின. மொழிப்பயன்பாடும் அப்படித்தான் என்கிறார் ஜோர்ஜ் ஒர்வல். எழுபது வருடங்களுக்கு முன்னர் “Politics and the English Language” என்று அவர் எழுதிய கட்டுரையின் சில குறிப்புகள். இப்போதும் தமிழுக்கு நன்றாகவே பொருந்துகிறது.

நாச்சார் வீடு

நாச்சார் வீடுகள். நடுவிலே செவ்வக வடிவிலே முற்றம் அமைத்து, சுற்றிவரத்' திண்ணை அமைத்துப் பின்னர் அதனைச் சுற்றி அறைகளை அமைத்திருப்பார்கள். திண்ணையின் உள்புற சுவர்கள் பூராக ரயில் டிக்கட் எடுத்தவர்களின் படங்கள் தோற்றம் மறைவோடு உக்கிப்போய் காட்சியளிக்கும். திண்ணை மாடங்களில் உக்கிய நிலையில் ஒரு கந்தபுராணம், அந்திரட்டிக் கல்வெட்டு, பழைய பஞ்சாங்கங்கள் என அடுக்கியிருக்கும். பஞ்சாங்கத்தின் உள்ளே ஒரு பக்கத்தில் குட்டி குட்டிப் கட்டங்களால் நிரம்பிய பக்கம் ஒன்று இருப்பதுண்டு. ஒவ்வொரு கட்டத்துள்ளும் ஒரு இலக்கம் இருக்கும். கண்ணை மூடிக்கொண்டு சுட்டுவிரலை ஒரு கட்டத்தின்மேலே வைத்துப் பின்னர் அந்தப் கட்டத்தின் இலக்கத்துக்குரிய பலனை அடுத்த பக்கத்தில் அறிந்துகொள்ளலாம். “பணம் வரவு”, “வீண் அலைச்சல்”, “காரியம் சித்தம்” என்று ஏதோ ஒன்று இருக்கும். நாற்சார் வீடுகள் யாழ்ப்பாணம் முழுதுமே பரவலாக இருப்பினும் மானிப்பாய், மருதனார்மடம் உட்பட்ட வலி மேற்கு, வலி வடக்கு பகுதிகளிலேயே அதிகம் என்று ஒரு அநுமானம். கோட்டைப் பிரச்சனை மூட்டம் நாம் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மானிப்பாய் வீடும் ஒரு நாச்சார் வீடுதான். சிறு

பிடித்ததும் பிடிக்காததும் : 2015

    புத்தாண்டுக் காலை. கையில் தேநீரோடு ஜெயமோகன் தளத்தில் மேய்ந்தால் அற்புதமான வாக்கியம் ஒன்று அகப்பட்டது. “பெய்தொழிந்தாலொழிய முகிலுக்கு மீட்பில்லை” எவ்வளவு உண்மை. அங்கிங்கெனாதபடி அலைந்தோடும் முகிலினுடைய பேறுதான் என்ன? பெய்தொழிதலே. பெய்தொழிந்து, மண் சென்று, அது நீங்கி, மீண்டும் முகிலாகிப் பெய்தொழிந்து என்ற சங்கிலியில் முகிலுக்கு என்றைக்கும் மோட்சமில்லை. பெய்தொழிந்தாலும் அதற்கு மீட்பில்லை. அப்படியானால் முகிலிடம் எதற்கு இத்தனை அவதி? எழுத்தும் வாசிப்பும் எப்போதுமே தூங்குகின்ற எரிமலைபோல. அடிவயிற்றில் ஒரு அந்தளிப்பு எப்போதுமே இருக்கும். எழுத்தைக்கூட விட்டுத்தள்ளலாம். ஆனால் இந்த வாசிப்புக் கொண்டுவரும் அந்தளிப்பு தாங்க முடியாதது. பொக்ஸ் கதைப்புத்தகத்திலே அந்தப் பாலியல் விடுதி பற்றி வருகின்ற இடத்திலே எரிமலை குமுறும். யாமத்தில் பண்டாரத்தொடு நாயின் பின்னே நாமும் செல்லும்போது கடைசிநேரத்தில் அந்த நாய் செய்கின்ற “நாய் வேலை”க்கு அதனை அடித்துக்கொன்றால் என்னவென்றிருக்கும். இப்போது வாசித்துக்கொண்டிருக்கும் சைமன் சிங்கின் “Big Bang” புத்தகம் கொடுக்கின்ற அந்தளிப்பு அளவிலாதது. வெள்ளையானையில் தொங்கி

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி விக்கி விக்னேஷ்.

தூக்கத்தை தொலைத்த ஒரு இராப் பொழுதை, என் குழந்தையின் அழுகையோடு கழிக்க நேர்ந்தது. குழந்தையை ஒரு பக்க மார்பில் சாய்த்தவாறு, குறுகிய அறைக்குள் நடந்துக் கொண்டிருந்தேன். நீண்ட தினங்களுக்கு முன்னர் வாங்கி சில அத்தியாயங்களை மாத்திரமே வசித்துவிட்டு வைத்த ஜே.கே. அண்ணாவின்; நூல் நினைவுக்கு வந்தது. புத்தகத்தை எடுத்து நடந்து கொண்டே வாசித்தேன்…

சந்திரனுக்குப் போன சுந்தரி

    அனேகமான விஞ்ஞானக் கதைகளைப்போலவே அன்றைக்கும் நாசாவின் விண்வெளி நிலையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. விண்கல ஏவுதளத்துக்கான இறுதிநேர சரிபார்த்தல்கள், தயார்படுத்தல்கள் நடந்துகொண்டிருந்தன. விஞ்ஞானிகள் குறுக்கும் நெடுக்குமாக  கைகளில் இருந்த டப்லட்டில் எதையெதையோ சுட்டிக்காட்டிப் பேசியபடி உடைகள் பறக்க நடந்து திரிந்தார்கள்.   கணனித்திரையில் ஏவுதளம் 40Bயிலே "சுண்டர்1" விண்கலம் சிறிய உருவில் தெரிந்தது. “சுண்டர்1” சந்திரனுக்கு மனிதர்களைக் கொண்டுசெல்லுகின்ற ஏழாவது விண்கலம். நாற்பது ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மனிதர் சந்திரனுக்குச் சென்று திரும்பப்போகும் பயணம். மூன்று விண்வெளி வீரர்கள், ஒன்பது பயணிகள் என்று மொத்தமாக பன்னிருவர் ஒரே சமயத்தில் பிரயாணம் செய்யும் முதல் பயணிகள் விண்கலம். அணுச்சக்தியில் இயங்கும் எஞ்சின், உள்ளக ஈர்ப்பு என்று பல நவீன தொழில்நுட்பங்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் விண்கலம். இப்படி சுண்டர்1 விண்கலத்துக்குப் பல சிறப்புகள் இருக்கின்றன. இன்னமும் மூன்று மணித்தியாலங்களில் "டி மைனஸ்" கவுண்டவுன் ஆரம்பித்து ஒவ்வொன்றாக சரி பார்க்கப்பட்டு, வானிலையும

என் சொல்லே!

படைக்கும் வார்த்தைகளை விட அழிக்கும் வார்த்தைகள் அதிகமாயின. முதல்வரியிலேயே முழுநாளும் சிறுகதைகள் தேங்குகின்றன. எது எழுதியும் எழுதா வரியதைத் தேடி மனம் அலைகிறது. வார்த்தைகளுக்காய் காத்திருந்து வாயிலிலே கறையான் ஏறிவிட்டது. வருதும், வருதும் என்று வழிபார்த்து கண்மூடி. துளிசோர கிடந்தேனடி. வருவாயோ. வரம் தருவாயோ. என் மனது சஞ்சலிக்கிறது. வருவதை எலாம் வீதியில் வைத்து வேடிக்கை மனிதரலாம் வெட்டிப் புதைத்தனரடி. பசிக்கிறது. வாசிப்பு, இருக்கும் ஓரிரு வார்த்தைகளையும் பிடுங்கிக்கொள்கிறது. எல்லாமே இங்கே எழுதிச் சிறை பிடிக்கப்பட்டுவிட்டது. தப்பிய வார்த்தைகள் கண்காணா பிரபஞ்சத்துள் சுற்றித் திரிகின்றன. எனக்கு அவை வேணும். எடுத்து வா. எப்போதோ எனக்காக புறப்பட்ட ஒளிக்கதிரின் துணுக்குகளில் உட்கார்ந்து கடுகதியில் பறந்துவா. என் சொல்லே! ஊடலுற்ற காதலிபோல உம்மணாமூஞ்சியுடன் என்னைப்பார்த்து நீ திருப்பிக்கொள்ளாதே. என் காதல் சொல்ல நீ வேண்டும். நான் காதலிக்க சொல் வேண்டும். வார்த்தைகளின் வரம் வேண்டும். அடியேய் சிவசக்தி. அதை அருள்வதில் உனக்கெதுந் தடையுண்டோ?

கறுத்தக் கொழும்பான்

  எங்கள் ஊரிலே கொழும்பர் மாமி என்கின்ற ஒரு ஆச்சி இருக்கிறார். இப்போது அவரின் வயது தொண்ணூறைத் தாண்டியிருக்கலாம். கலியாணம் கட்டி சில மாதங்களிலேயே "கொழும்பர்" இறந்துவிட, கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளாக கொழும்பரை பெயரில் தாங்கியவாறு மாமி தனிக்கட்டையாக வாழ்ந்துவருகிறார். கொழும்பர் மாமி இத்தனையாண்டுகளில் உறவுக்காரர்களின் அத்தனை பிள்ளைகளையும் தூக்கி வளர்த்தவர். என் அம்மாவைத் தூக்கி வளர்த்தவர். என் அண்ணாவை. என் அக்காவை. என்னை. இப்படி சொந்தக்காரர்கள் பலரின் பிள்ளைகளை எல்லாம் தூக்கி வளர்த்தவர். அவரின் வீடு இருப்பது என்னவோ நயினாதீவில். ஆனால் அம்பாள் கோவில் தீர்த்தத்திருவிழா முடிய அவரும் எம்மோடு யாழ்ப்பாணத்துக்கு பஸ் ஏறிவிடுவார். மாதத்துக்கு ஒரு வீடு என்று யாழ்ப்பாணத்து உறவுக்காரர்களின் வீட்டில் மாறி மாறித் தங்குவார். எவர் வீட்டிலாவது பிள்ளைப்பேறு, சாமத்தியச் சடங்கு, கலியாணம், செத்தவீடு, ஆட்டத்துவசம் என்றால் முதலில் அழைத்துவருவது கொழும்பர் மாமியைத்தான். மாமி வீட்டில் நின்றாலே போதும். வேலைகள் எல்லாமே தன்னாலே நடைபெறும். வீட்டு வாசல்கட்டில் இருந்து வெத்திலை போட்டபடியே முழு நிகழ்வையும் நெறிப்ப

தமிழும் புலம்பெயர் இரண்டாம் தலைமுறையும்

    ஒரு சின்ன சந்தேகம். தமிழை ஏன் நம் குழந்தைகள் கற்கவேண்டும்? இந்த நாட்டில் தமிழ் கற்று என்ன பிரயோசனம்? தமிழ் படிப்பதால் என்ன வேலை கிடைத்துவிடப்போகிறது? லத்தீன் மொழி படித்தால்கூட மருத்துவப்படிப்பு வார்த்தைகளை புரிந்துகொள்வது இலகுவாகவிருக்கும். மாண்டரின் படித்தால் எதிர்காலத்தில் உத்தியோகங்களுக்கு பயன்படலாம். பிரெஞ்சு ஸ்பானிஷ் படித்தால்கூட வேறு நாடுகளுக்குச் செல்லும்போது சமாளிக்கலாம். தமிழை எதற்காகப் படிக்கவேண்டும்? பெற்றோர்களின் மொழி தமிழ் என்பதற்காக குழந்தைகளும் படிக்கவேண்டுமா? இரண்டாயிரம் ஆண்டு பழமையான மொழி என்பதால் படிக்கவேண்டுமா? வள்ளுவனும் பாரதியும் கம்பனும் தமிழில் இருப்பதால் தமிழைப் படிக்கவேண்டுமா? அற்புதமான இலக்கியங்கள் இருப்பதால் படிக்கவேண்டுமா? எந்த மொழியில்தான் இலக்கியங்கள் இல்லை? சமகாலத்தில் தமிழில் அப்படி என்னதான் சிறப்பு இருக்கிறது? யோசியுங்கள். பாரதிக்குப்பிறகு பள்ளியில் சொல்லிக்கொடுக்கிறமாதிரி எந்த அறிஞனுமே உருவாகாத, உருவானாலும் அப்படியான அறிஞர்களை பாடத்திடடங்களில் உள்வாங்காத, பழைமையிலே குளிர்காயும் ஒரு மொழியை எதற்கு எம் பிள்ளைகள் மெனக்கெட்டுப் படிக்கவேண்டும்? திருக்கு

கனக்ஸ் மாமா வளர்த்த ஆட்டு மரம்

  கனகநாய்கம் J.P விவசாய விஞ்ஞானி புத்தூர். கனக்ஸ் மாமாவினுடைய வீட்டுப் படலையை திறக்கும்போதுதான் கவனித்தேன். யாரோ அவருடைய பெயர்ப்பலகையில் 'ய'வில் குத்துப்போட்டு அவரை நாய்கம் ஆக்கியிருந்தார்கள். சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன். கனக்ஸ் மாமா வீட்டு முற்றத்துக்குள் நுழையும்போதே ஒரு வித்தியாசத்தை உணரலாம். அவரின் தோட்டம் முழுதும் புதினமான மரங்களே நிற்கும். எந்த செம்பரத்தையிலும் ஒரே நிறப்பூ பூக்காது. விதம் விதமான செம்பரத்தைகள் ஒரே மரத்திலேயே பூத்துத்தொங்கும். செம்பரத்தையின் கொப்புகள் எல்லாம் டிஷ்ஷு பெப்பர் சுற்றி ஒட்டப்பட்டு கிடக்கும். அருகில் இருந்த எலுமிச்சையின் கிளைகளில் சுற்றிக்கட்டப்பட்டிருந்த பொச்சுமட்டை பதியங்களில் தண்ணீர் எந்நேரமும் வடிந்தபடியே இருக்கும். வாழைமரத்தண்டுகளில் எல்லாம் சிறிய சிறிய பொந்துகள் அடித்து அதில் ரோசாச்செடிகள் நட்டு வளர்த்திருப்பார். வாழைக் குலை போட்டிருக்கும். அரையில் ரோசா பூத்திதிருக்கும். ஒரு வாழை பூராக மஞ்சள் கோன்பூ பூத்துக்கிடந்தது. ஒரு பக்கம் அரை அடியில் பிலாமரம் காய்த்திருந்தது. எல்லாவற்றுக்குமேலாக வாசலில் இரண்டு நீளமான தென்னை மரங்கள் எதிரெதிரே வ

தூங்கா வனம்

    தூங்காவனம் உலகத்தரம். அதிலும் அலமேலு மாமி. அசத்திட்டேள் போங்கோ!

ஊரோச்சம் : வட்டக்கச்சி 2

  முற்றத்தில் மூன்று பரப்பு நிலத்துக்கு நிழல் பரப்பி நிற்கும் ஒரு மிகப்பிரமாண்டமான மாமரம். அதிலே இரண்டு ஊஞ்சல்கள். மரத்தடியில் “ட” வடிவ பங்கர். ஒன்றிரண்டு கதிரைகள். கயிற்றுக்கட்டில். பேப்பர் படிக்கும் இரண்டு முதியவர்கள்.  மணல் அளையும் சிறுவர்கள்.  ஒருபுறம் செவ்வரத்தைகள். ஜாம்பழ மரம். தூர்ந்த மணற்கிணறு ஒன்று. ஒரு வைக்கோல் கும்பி.  தனியாய் தரித்து நிற்கும் டிரக்டர் பெட்டி. மாட்டுவண்டில். வேப்பமரத்தில் கட்டப்பட்டிருந்த இரண்டு காளை மாடுகள். குறுக்கும் நெடுக்குமாக கேறிக்கொண்டிருக்கும் கோழிக்கூட்டம். பிறவுன் கலரில் ராமு. வீடு சிறியது. ஒரு படுக்கையறை. ஒரு குட்டி ஹோல். UNHCR தறப்பாள்போட்டு பெரிதாக்கப்பட்ட திண்ணை. தனியாகக் குசினிக்கு புகைக்கூண்டோடு ஒரு சின்னக் கொட்டில். அவ்வளவும்தான் வீடு.   சிவிக் சென்டர் என்பது அறுபதுகளில் படித்த வாலிபர் திட்டத்தில் இளைஞர்களுக்கு வீடும் காணியும் கொடுத்து உருவாக்கப்பட்ட ஒரு சிறிய கிராமம். படித்த இளைஞர்களை கிராமங்களுக்கு வரவழைத்து விவசாயத்தில் ஈடுபடுத்தும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது. சிவிக்சென்டரின் குடும்பங்கள் அத்தனையுமே விவசாயம் செய்பவை. எல்லோருமே இரு ப

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" - ஒரு வருடம்.

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" வெளியாகி ஒருவருடம் ஆகிவிட்டது. இந்த நூல் நிறைய வாசகர்களையும் சில நண்பர்களையும் கொண்டுவந்து சேர்த்தது. வெள்ளி, அமுதவாயன் போன்ற நாவல்களை எழுதும் தைரியத்தையும் கொடுத்தது. தொடர்ந்து எழுத்தாகிக்கிடக்க ஊக்கம் தந்தது. அவ்வப்போது என்னத்துக்கு எழுதுவான் என்று தோன்றுகின்ற எண்ணங்களையும் வரவேற்பறையில் சிரித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தின் அட்டைப்படச்சிறுவன் அடித்துத் துரத்திவிடுவான். என்னளவில் கொல்லைப்புறத்துக் காதலிகள் அடிக்கடி "மரணம் மீளும் ஜனனம்". இதனை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றிகள்.

ஊரோச்சம் : வட்டக்கச்சி 1

நன்றாக இருட்டி விட்டிருந்தது. படகிலே ஒரு நாற்பது ஐம்பது பேர் இருந்திருப்போம். எல்லோரும் கடல் தண்ணீர் தெறிக்காவண்ணம் துவாயையோ சாரத்தையோ சுற்றிக்கொண்டு அமர்ந்திருந்தோம். ஒரு சிலர் ஒல்லிக்கோம்பைகளை இடுப்பில் கட்டியிருந்தனர். சிலர் இடுப்பில் தேங்காய் மட்டைகள். சந்நிதியானுக்கும் அம்மாளுக்கும் அவசர நேர்த்திகள் வைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. குழந்தைகள் அழ ஆரம்பித்திருந்தன. சிறுவர்கள் பாணும் வாழைப்பழமும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். பெரியவர்கள் எவருமே பேசவில்லை.   அக்காவும் நானும் அம்மாவின் கைகளை இறுக்கப்பற்றியிருந்தோம். அல்லது அம்மாதான் எங்கள் கைகளை பற்றியிருந்தாரா என்று தெரியவில்லை. எம்மிடம் பேசுவதற்கு எதுவுமே இருக்கவில்லை. வாயைத் திறக்கும்போதெல்லாம் தாடைகள் தம்பாட்டுக்கு அடித்துக்கொண்டன. பயத்தாலும் மார்கழி கடல்காற்றின் குளிராலும் உடல் நடுங்கியது.   படகின் ஓரமாக கட்டப்பட்டிருந்த டயர்களில் பட்டுத்தெறிக்கும் கடலலைகளின் சத்தம்மட்டும் அவ்வப்போது உப்புத்தண்ணியோடு காதுகளில் விழுந்துகொண்டிருந்தது. எம் படகுக்குப்பின்னே இரண்டு படகுகள் கட்டி இழுக்கப்பட்டு வந்தன. ஒரு படகு முழுதும் சைக்கிள்களும் சில ம