Skip to main content

Posts

மஹாகவியோடு ஒரு மாலைப்பொழுது - காணொலிப் பகிர்வுகள்

வரவேற்புரையும் கவிதை வாசிப்பும் "சங்ககாலத்துக்குப் பின்னர் இலக்கியங்கள் அதிகாரத்தின் வசம் சிக்கிவிட்டன, அல்லது இலக்கியவாதிகள் அதிகாரபீடத்தைத் தாமே கட்டியமைத்துக்கொண்டனர்"

மழையின் கதை

நியால் வில்லியம்ஸ் எழுதிய “The History of Rain” நாவலை ஒலிப்புத்தகத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எப்படி இந்த நாவல் என்னைத் தெரிவு செய்தது? முதல் வரியினூடாகத்தான். “We are our stories. We tell them to stay alive or keep alive those who only live now in the telling. In Faha, County Clare, everyone is a long story” இளவயதிலேயே நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாகக் கிடக்கும் ரூத். தந்தை ஒரு கவிஞர். தாத்தா ஒரு போதகர். தாத்தா இறந்துபோய்விட்டார். தந்தை எங்கென்று தெரியவில்லை. அவரும் இறந்துபோயிருக்கலாம். மேல்மாடி அறை ஒன்று. அங்கே பல ஆண்டுகளுக்கு முன்னர் தகப்பன் அரைகுறையாகத் தானே செய்துகொடுத்த படகுபோன்ற ஒரு கட்டில்தான் ரூத்தின் உலகம். சுற்றிவர புத்தகக் குவியல்கள். மொத்தமாக 3958 புத்தகங்கள். தனிமையில் வாடும் ரூத்துக்குத் தன் தந்தையைத் தேடிக்கண்டறியவேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது. விளைவு கதைகளினூடாக அவள் தன் தந்தையைக் காண முனைகிறாள்.

மஹாகவியோடு ஒரு மாலைப்பொழுது

அளவற்ற மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் இந்த அறிவிப்பினைச் செய்கிறோம். மஹாகவி பற்றிய நிகழ்வினைச் செய்தல்வேண்டும் என்பது நமது நீண்டநாளைய கனா.  திரு முத்துகிருஷ்ணனின் வருகை நம்மை அதற்காக மீண்டுமொருமுறை ஒருங்கிணைத்திருக்கிறது. “இன்னவைதாம் கவியெழுத ஏற்ற பொருள் என்று பிறர் சொன்னவற்றை நீர்திருப்பச் சொல்லாதீர். மின்னல் முகில் சோலை கடல் தென்றலினை மறவுங்கள் – மீந்திருக்கும் இன்னல் உழைப்பு ஏழ்மை உயர்ச்சி என்பவற்றைப் பாடுங்கள்” என்ற கவிஞனின் படைப்புகளோடு வரும் சனி மாலைப்பொழுதைக் களித்து மகிழ இருக்கிறோம். வந்து, கேட்டு, பகிர்ந்து, உயிர்த்து, முகிழ்த்து, நினைந்து மகிழ்வீர்கள் என்ற நம்பிக்கையுடன், அன்புடன் அழைக்கிறோம். நன்றி.

ஓய்வு

புகழின் உச்சத்தில் இருக்கும்போதே மரியாதையாக ஓய்வு பெற்றுவிடல் வேண்டும் என்பது பொதுவெளியில் இருக்கின்ற கருத்தியலாக இருக்கிறது. ஒருவர் திறமையாக விளையாடும்போது ஓய்வுபெறுதலும், கலைத்துறையில் உச்சியில் இருக்கும்போது ஓய்வுபெறுதலும் பெருமைக்குரிய விடயமாக கருதப்படுகிறது. ஒருகட்டத்தில் அந்த எண்ணம் மேலோங்கி, துறையாளர்கள் மனதிலும் ஆழத் திணிக்கப்பட்டும் விடுகிறது.

பாழ் மனம்

ஏழாவது தடவையாக தொலைபேசி மணி அடித்தபோதே தயங்கியபடி எடுத்தேன். அம்மா. “வீட்ட வந்திட்டியா?” என்று கேட்டார். “சாப்பாடு என்ன பிளான்?” என்றார். “நேத்தையான் புட்டு இருக்கு, கறிச்சட்டியும் கிடக்கு. பிரட்டிட்டு முட்டையையும் பொரிச்சா விசயம் முடிஞ்சுது” என்றேன். “சித்தப்பாவிண்ட தமையன் இறந்துபோனார், எடுத்துக் கதைச்சியா?” என்றார். “இல்லை” என்றேன். “அண்ணாவோட கதைச்சியா?”. “இல்லை”. “ஹீட்டர் சரியா வேலை செய்யேல்ல எண்டனி, பேசினியா?”. “இல்லை”. “சரி, நாளைக்குத் தோசைக்குப் போட்டிருக்கு, ரெண்டு பெரும் வந்திடுங்கோ” என்றுவிட்டு கட் பண்ணிவிட்டார். தொலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏழு தடவைகளும் ஏன் தொலைபேசியை எடுக்கவில்லை என்று அம்மா என்னிடம் கேட்கவேயில்லை. சித்தப்பாவோடு ஏன் பேசவில்லை என்றும் திட்டவில்லை. “இவனைத் திருத்தமுடியாது” என்று மனதுக்குள் நினைத்திருக்கலாம்.