Skip to main content

Posts

மஹாகவியோடு ஒரு மாலைப்பொழுது - காணொலிப் பகிர்வுகள்

வரவேற்புரையும் கவிதை வாசிப்பும் "சங்ககாலத்துக்குப் பின்னர் இலக்கியங்கள் அதிகாரத்தின் வசம் சிக்கிவிட்டன, அல்லது இலக்கியவாதிகள் அதிகாரபீடத்தைத் தாமே கட்டியமைத்துக்கொண்டனர்"

மழையின் கதை

நியால் வில்லியம்ஸ் எழுதிய “The History of Rain” நாவலை ஒலிப்புத்தகத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எப்படி இந்த நாவல் என்னைத் தெரிவு செய்தது? முதல் வரியினூடாகத்தான். “We are our stories. We tell them to stay alive or keep alive those who only live now in the telling. In Faha, County Clare, everyone is a long story” இளவயதிலேயே நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாகக் கிடக்கும் ரூத். தந்தை ஒரு கவிஞர். தாத்தா ஒரு போதகர். தாத்தா இறந்துபோய்விட்டார். தந்தை எங்கென்று தெரியவில்லை. அவரும் இறந்துபோயிருக்கலாம். மேல்மாடி அறை ஒன்று. அங்கே பல ஆண்டுகளுக்கு முன்னர் தகப்பன் அரைகுறையாகத் தானே செய்துகொடுத்த படகுபோன்ற ஒரு கட்டில்தான் ரூத்தின் உலகம். சுற்றிவர புத்தகக் குவியல்கள். மொத்தமாக 3958 புத்தகங்கள். தனிமையில் வாடும் ரூத்துக்குத் தன் தந்தையைத் தேடிக்கண்டறியவேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது. விளைவு கதைகளினூடாக அவள் தன் தந்தையைக் காண முனைகிறாள்.

மஹாகவியோடு ஒரு மாலைப்பொழுது

அளவற்ற மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் இந்த அறிவிப்பினைச் செய்கிறோம். மஹாகவி பற்றிய நிகழ்வினைச் செய்தல்வேண்டும் என்பது நமது நீண்டநாளைய கனா.  திரு முத்துகிருஷ்ணனின் வருகை நம்மை அதற்காக மீண்டுமொருமுறை ஒருங்கிணைத்திருக்கிறது. “இன்னவைதாம் கவியெழுத ஏற்ற பொருள் என்று பிறர் சொன்னவற்றை நீர்திருப்பச் சொல்லாதீர். மின்னல் முகில் சோலை கடல் தென்றலினை மறவுங்கள் – மீந்திருக்கும் இன்னல் உழைப்பு ஏழ்மை உயர்ச்சி என்பவற்றைப் பாடுங்கள்” என்ற கவிஞனின் படைப்புகளோடு வரும் சனி மாலைப்பொழுதைக் களித்து மகிழ இருக்கிறோம். வந்து, கேட்டு, பகிர்ந்து, உயிர்த்து, முகிழ்த்து, நினைந்து மகிழ்வீர்கள் என்ற நம்பிக்கையுடன், அன்புடன் அழைக்கிறோம். நன்றி.

ஓய்வு

புகழின் உச்சத்தில் இருக்கும்போதே மரியாதையாக ஓய்வு பெற்றுவிடல் வேண்டும் என்பது பொதுவெளியில் இருக்கின்ற கருத்தியலாக இருக்கிறது. ஒருவர் திறமையாக விளையாடும்போது ஓய்வுபெறுதலும், கலைத்துறையில் உச்சியில் இருக்கும்போது ஓய்வுபெறுதலும் பெருமைக்குரிய விடயமாக கருதப்படுகிறது. ஒருகட்டத்தில் அந்த எண்ணம் மேலோங்கி, துறையாளர்கள் மனதிலும் ஆழத் திணிக்கப்பட்டும் விடுகிறது.

பாழ் மனம்

ஏழாவது தடவையாக தொலைபேசி மணி அடித்தபோதே தயங்கியபடி எடுத்தேன். அம்மா. “வீட்ட வந்திட்டியா?” என்று கேட்டார். “சாப்பாடு என்ன பிளான்?” என்றார். “நேத்தையான் புட்டு இருக்கு, கறிச்சட்டியும் கிடக்கு. பிரட்டிட்டு முட்டையையும் பொரிச்சா விசயம் முடிஞ்சுது” என்றேன். “சித்தப்பாவிண்ட தமையன் இறந்துபோனார், எடுத்துக் கதைச்சியா?” என்றார். “இல்லை” என்றேன். “அண்ணாவோட கதைச்சியா?”. “இல்லை”. “ஹீட்டர் சரியா வேலை செய்யேல்ல எண்டனி, பேசினியா?”. “இல்லை”. “சரி, நாளைக்குத் தோசைக்குப் போட்டிருக்கு, ரெண்டு பெரும் வந்திடுங்கோ” என்றுவிட்டு கட் பண்ணிவிட்டார். தொலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏழு தடவைகளும் ஏன் தொலைபேசியை எடுக்கவில்லை என்று அம்மா என்னிடம் கேட்கவேயில்லை. சித்தப்பாவோடு ஏன் பேசவில்லை என்றும் திட்டவில்லை. “இவனைத் திருத்தமுடியாது” என்று மனதுக்குள் நினைத்திருக்கலாம்.

நாம் தமிழர்

ஒரு தமிழ்நாட்டுத் தமிழரோடு தேநீர் குடிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது. பேச்சுவாக்கில் “ஈழத்தமிழர்களுக்கு என்று என்ன அடையாளம் இருக்கிறது? மொழி முதல் கலாச்சாரம், உணவுவரை எல்லாமே எங்களிடமிருந்து வந்ததுதானே?” என்று நெல்லிச்சாக்கைத் தெரியாத்தனமாக அவிழ்த்துவிட்டார். எனக்கு அன்றைக்கு என்ன மூடு இருந்ததோ தெரியவில்லை. அவருக்குப் பதிலளிக்கவேண்டும்போலத் தோன்றியது. ஆரம்பித்தேன்.

விளமீன் சிறுகதை பற்றி வைதேகி

விளமீன் - ஜே.கே (புதியசொல், ஏப்ரல்- ஜூன் 17) "வீ ஓல்மொஸ்ட் கோயிங் டு த்ரோ இட். நோ வன் பை இட்" என்ற நிலையில் இருந்த அந்த விளமீன் கடைசியில் சரசுமாமியின் கைப்பக்குவத்தில் குழம்பாகி ஜென்ம சாபல்யம் அடைந்தது என்பது தான் கதையின் பிரதான குறியீடு.

அங்காடிப் பெண்

இரவு உணவுக்கு நண்பர்கள் வருவதாக இருந்தது. வீடு படு குப்பையாக இருந்தது. சமையல் சாமான்கள் எல்லாம் தீர்ந்திருந்தது. வாங்கவேண்டும். சமையலறை சின்ங் முழுதும் ஒருவாரத்துப் பாத்திரங்கள் நிறைந்திருந்தன. மினுக்கவேண்டும். வேலைக்கு லீவு போடலாம் என்றால் அன்றைக்கு என்று பார்த்து ஒரு ரிலீஸ் இருந்தது. போயே தீரவேண்டும். அவளும் பிஸி. காலை ஐந்தரைக்கே அன்றைய நாள் மிரட்ட ஆரம்பித்தது. மிக நீண்ட நாளுக்கான காலை மிக அலுப்புடனேயே விடியும். அன்றும் அப்படித்தான். எல்லாவற்றையும் மறந்துவிட்டு சற்றுநேரம் தூங்கினால் என்ன என்று இருந்தது. முடியவில்லை. தேநீரை ஊற்றி ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தேன். “மாஸ்டர் அண்ட் மாகரிட்டா” நாவல் அலுப்படித்தது. கடவுள் தத்துவ விசாரங்கள் எல்லாம் இப்போது பயங்கரமாக அலுப்படிக்கின்றன. இருக்கு இல்லை என்ற விவாதங்கள் வெறும் வெற்று. இருக்கு என்றால் இருக்கு. இல்லை என்றால் இல்லை. இரண்டாலும் எந்தப்பயனும் இல்லை என்பதே உண்மை. புத்தக வாசிப்பு மனிதர்களின் இயல்புகளைப் பெரும்பாலும் மாற்றியமைப்பதில்லை. அவை கொடுக்கும் விசுவரூப தருணங்களின் நீளம் மிகக்குறைவு. அதிகம் போனால் சேம் பின்ஞ் சொல்ல வ

நாயகிகள்

எங்கள் அலுவகத்தில் இரண்டு நாய்கள் இருக்கின்றன. அல்லது இருக்கிறார்கள். ஒருத்தி பெயர் லூசி. மற்றையவள் கிரேஸ். நிறுவனத்தின் உரிமையாளர்கள் வளர்க்கும் நாய்கள் அவர்கள். இருவருமே அவுஸ்திரேலிய ஷெப்பர்ட் வகை. லூசிக்குப் பத்து வயது ஆகிறது. அனுபவம் நிறைந்தவள். புலோண்ட் முடி. கிரேஸுக்கு இரண்டு வயதுதான். கறுப்பு வெள்ளை. ஒரு இளம் நாய்க்குரிய துடிப்பும் விட்டேற்றியும் பரபரப்பும் அவளிடம் எப்போதுமே குடிகொண்டிருக்கும்.  அவ்விரு நாய்களையும் அவர்கள் தம் குழந்தைகள்போலவே வளர்த்தார்கள். அவர்கள் ஈழத்தமிழர்களாக இருந்திருந்தால் எக்கணம் லூசியையும் கிரேசையும் ஊருக்குக் கூட்டிப்போய் மண்டபம் பிடித்து சாமத்திய வீடு செய்திருப்பார்கள். அவ்வளவு பாசம். நான் அந்த அலுவலகத்துக்கு முதன்முதலாக நேர்முகத்தேர்வுக்கு உள்ளே நுழையும்போது லூசியும் கிரேசும்தான் குரைத்தபடி என்னை வரவேற்றார்கள். நேர்முகத்தேர்வுக்கேயுரிய சிறு பதட்டத்தோடுதான் உள்ளே நுழைந்தேன். நாய்கள் குரைத்ததும் “என்னடா ரிசல்ட் இப்பவே வந்துட்டுதா?” என்று சிறு அதிர்ச்சி. பின்னாலேயே வந்த நிறுவன உரிமையாளர் அவ்விருவரையும் அதட்டி, நட்போடு என்னை உள்ளே அழைத்ததும் நில

கள்ள மௌனம்

அலிஸ் மன்ரோவை ஓரிரு வாரங்களாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். மன்ரோவின் சிறுகதைகளில் இனம்புரியாத ஒரு தனிமை சூழுந்திருக்கும். வன்கூவரின் குளிர் அதற்குக்காரணமாக இருக்கலாம். குளிர் மனிதர்களை ஒடுக்குகிறது. தனிமைப்படுத்துகிறது. சக மனிதருக்கு கைலாகு கொடுக்கக்கூட அது விடுவதில்லை. "பனிக்கால பாரிஜம் போல நிறங் கூசிப் பகலோரு யுகமாக் கழித்தாளே" என்று அசோகவனத்துச் சீதையைப்பற்றி அருணாச்சலக் கவிராயர் குறிப்பிடுவார். நம் சங்கக்கவிகளை வன்கூவரின் பனிக்காலத்தில் கொண்டுபோய் வசிக்கவிட்டிருந்தால் நமக்குப் புதிதாக ஒரு நிலம் கிடைத்திருக்கும். காதலைப்பற்றி மன்ரோவின் ஒரு பாத்திரம் சொன்ன வார்த்தைகள் இன்னமும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கின்றன. பனியோடு அவை மிகவும் பொருந்தி வருகின்றன. “love is not kind or honest and does not contribute to happiness in any reliable way. "

வட்டக்கச்சி மகா வித்தியாலயம்

காலை எழுந்தபோது மின்னஞ்சலில் ஒரு மகிழ்ச்சிதரும் தகவல் வந்திருந்தது.  “வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வைரவிழா மலருக்காக க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்றவர்களது புகைப்படங்கள் தேவைப்படுவதால் வெகுவிரைவில் அவற்றைத் தந்துதவி ஆவண செய்யவும்” லிஸ்டிலே என்னுடைய பெயரும் இருந்தது. நான் ஓ.எல் எடுத்தது தொண்ணூற்றாறாம் ஆண்டு. பரீட்சை இறுதித்தினத்திலிருந்து இன்றைக்கு இருபத்தொரு ஆண்டுகள் கழிந்து எனக்கும் வட்டக்கச்சி மகாவித்தியாலயத்துக்குமிடையில் ஏற்பட்டிருக்கும் முதல் தொடர்பு இது. பதின்மக்காதலிகளில் ஒருத்தி, ‘எப்படி இருக்கிறீங்கள் குமரன்?’ என்று மெசேஜ் அனுப்புவதுபோல. மகா வித்தியாலயத்தில் படித்த காலம் என்பது மிகக்கொஞ்சம்தான். ஆனாலும் அவற்றை மீட்டிப்பார்க்கையில் கால மீளிருவாக்கமும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. எத்தனைதடவை எழுதினாலும் காரியமில்லை.

தமிழ் ஊக்குவிக்குப்போட்டிகள்

அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் 'தமிழ் ஊக்குவிப்புப் போட்டி 2017' இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கடந்த நான்கைந்து வருடங்களாக இந்தப்போட்டிகளில் நடுவராகப் பணிபுரிந்துவந்துள்ளேன். நூற்றுக்கணக்கில் மாணவர்கள் கலந்துகொள்ளும் போட்டிகள் இவை. அவுஸ்திரேலியாவின் அத்தனை மாநிலங்களிலும் போட்டிகள் நடைபெறும். மாநில அளவில் வெற்றி பெறுபவர்கள் பின்னர் தேசியமட்டப் போட்டிகளிலும் தோற்றுவார்கள். சீரிய ஒழுங்கோடும் மிக நீண்ட தயார்படுத்தல்களோடும் நடத்தப்படும் போட்டி இது.  போட்டித்தினமன்று என் மனம் எப்போதுமே ஒரு கொண்டாட்ட நிலையை அடைவதுண்டு. அந்தச் சூழலை அணு அணுவாக ரசிக்கலாம். அலிஸ் அதிசய உலகத்துக்குள் நுழைந்ததுபோலவே சிறுவர்கள் போட்டி மண்டபத்துக்குள் நுழைவார்கள். பின்னேயே பயங்கரப் பதட்டத்துடன் பெற்றோர்கள். அப்பாமார்கள் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் அம்மாக்கள்தான் கடைசிக்கணத்திலும் அக்கம்பக்கம் இருக்கும் யூகலிப்டஸ் மரங்களுக்கடியில் மீண்டுமொருமுறை குழந்தையோடு ஒத்திகை பார்ப்பார்கள். போட்டியென்று வந்துவிட்டால் நம் குழந்தைகளுக்கு இயல்பாகவே ஒரு ஓர்மம் வந்துவிடுகிறது. அம்மாக்

மடுல்கிரிய

வார இறுதியில் மெல்பேர்னில் இடம்பெற்ற எழுத்தாளர் விழாவைப் பார்க்கச்சென்றிருந்தேன். விழாவுக்கு மடுல்கிரிய விஜேரத்ன வந்திருந்தார். மடுல்கிரிய என்ற பெயர் ஈழத்து வாசகர்களுக்கு மிகப் பரிச்சயமானது. அவர் ஒரு மொழியியல் நிபுணர். ஏராளமான தமிழ் நூல்களை சிங்களத்துக்கும், சிங்கள நூல்களை தமிழுக்கும் மொழிபெயர்த்தவர். சரளமாகத் தமிழில் உரையாடக்கூடியவர். அவருடைய பேச்சைக்கேட்பதற்காகவே ஏழு கடல், ஏழு மலை தாண்டி நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். 

"ஜெயக்குமரன்" என்கின்ற...

என் அக்காமார்களுக்கு அம்மா தனக்குப் பிடித்தமாதிரியே பெயர் வைத்துக்கொண்டார். அறுபதுகளின் இறுதியில் வீரகேசரியில் ரஜினி என்றொரு எழுத்தாளர் தொடர் நாவல் எழுதிக்கொண்டிருந்திருக்கிறார். அவரின் பெயரையே எங்கள் மூத்த அக்காவுக்கும் வைத்ததாக அம்மா சொல்வார். அந்த எழுத்தாளர் ரஜினி இப்போது எங்கே, என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. அவர் நாவலை யாரேனும் ஞாபகம் வைத்திருக்கிறார்களா என்றும் தெரியாது. ஆனால் எப்படியோ அக்காவின் பெயரில் ஏறிக்குந்திவிட்டார். இப்படி எழுத்தாளர்களின், இலக்கியப்பாத்திரங்களின் பெயர்களை பிள்ளைகளுக்கு வைக்கும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. லாகிரியின் “The Namesake” அதை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டதுதான். “லாகிரி”யே ஒரு அழகான பெயர்தான். பொன்னியின்செல்வனிலிருந்தும் பலர் பெயர் எடுப்பதுண்டு. வர்மன், அருண்மொழி, குந்தவை, குந்தவி, நந்தினி, மணிமேகலை என்று பல பெயர்களைக் கவனித்திருக்கிறேன். இரண்டு தமிழ் திரைப்பட இயக்குநர்கள் தம் பெயரை கதைப்பாத்திரங்களிலிருந்து வைத்திருக்கிறார்கள். சுஜாதாவின் வசந்த் ஒன்று. தாஸ்தாவஸ்கியின் மிஷ்கின் இன்னொன்று.

கொட்டக் கொட்ட விழித்திருத்தல்

மழை, தந்தையிடம் ஏச்சு வாங்கிய மகளைப்போல இடைவெளி விட்டு இரவு முழுதும் விம்மிக்கொண்டிருந்தது.  இப்போதெல்லாம் எலார்ம் அடிக்கமுதலேயே காலையில் எனக்கு நித்திரை கலைந்துவிடுகிறது. இன்றும் அப்படித்தான். ஐந்துமணி எலார்முக்கு நான்கே முக்காலுக்கே எழுந்துவிட்டேன். ஒரு சூடான தேநீரை ஊற்றிக்கொண்டு வரவேற்பறையில் வந்து அமர்ந்தேன். வெளியே அந்தச்சிறுமியின் அழுகை இன்னமும் நின்றபாடில்லை. நேற்று எழுதிமுடித்த சிறுகதையின் பிழைகளைத் திருத்தலாம் என்று அதனைத் திறந்தால், முதல் அடிக்குமேலே வாசிப்பு நகர்வதாக இல்லை. இதே சிறுகதையோடு அணு அணுவாக கடந்த இரண்டு வாரங்களின் காலைப்பொழுதுகளைக் கழித்திருக்கிறேன். ஆனால் எழுதி முடித்ததும் அதற்கு நான் ஒவ்வாமையாகிவிட்டேன். “சந்திரா என்றொருத்தி இருந்தாள்” கதையின் வரிகள்தாம் ஞாபகம் வருகின்றன.

காற்று வெளியிடை

எவ்வாறு மழையினை செம்புலம் ஏற்றதோ அதுபோல தலைவனை நம் சங்க இலக்கியத் தலைவியும் ஏற்றுக்கொள்கிறாள். நிலத்தைப் பெண்ணுக்கும் நீரை ஆணுக்கும் உருவகிப்பதில் ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு. நிலம் என்பது இங்கே மருதத்தை குறிப்பதாம். நீர் ஒரு நிலைப்பட்டதல்ல. இருக்குமிடத்தோடு அது தன் குணத்தையும் மாற்றிக்கொள்ளும். பனியாய் உறைந்து மலை உச்சியில் கிடக்கையில் அழகாய் அது பார்ப்பவரை ஈர்த்துக்கொள்ளும். நெருங்கிப்போனால் கணத்தில் நம்மையும் அது உறைய வைத்துவிடும். சரிவும் பொழிவும் பனியின் இயல்புகளாம். நீர்  வானில் முகிலாய்த் திரண்டு நிலத்தின் பொறுமையையும் சோதிக்கும். அழும். கெஞ்சும். நிலத்தை அடைவதற்காக மழையாகவோ, ஆறாகவோ எப்படியோ அது வந்துசேர்ந்துவிடும். நீரின் கோபம் சமயத்தில் காரணமேயில்லாதது. தன்னைத்தாங்கும் நிலம்மீதே அது தன் கோபத்தை வெள்ளமாகவும் புயல்மழையாகவும் காட்டும். நிலம் பாவம். பொறுமையாய்க் காத்திருக்கும். நீர் அதனைத்தேடி வந்து கலக்கும்போது, உயிர்களெல்லாம் நிலத்தினின்று சிலிர்த்து எழும். ஆனால் அவற்றை ரசிக்கக்கூட மாட்டாமல் நீர் மீண்டும் கடலுக்கோ மலையுச்சிக்கோ சென்றுவிடும். திமிர். ஆணவம். நீரு

ஸ்டூடியோ மாமா

நான்கு வருடங்களுக்கு முன்னர் ஒரு வியாழமாற்றத்தி்ல் “ஸ்டூடியோ மாமா” பற்றி எழுதியிருந்தேன். சென்றவாரம் கோபி அண்ணாவும் அவரின் நண்பர்களும் பேபி ஸ்டூடியோவுக்குப் போனசமயத்தில் மாமாவைக் கண்டிருக்கிறார்கள். கூடவே நான் எழுதியதும் ஞாபகம் வந்து அவருக்கு இதை வாசித்துக் காட்டியிருக்கிறார்கள். “I met the baby studio owner and told him about the blog. When I showed him he was in tears. Especially when he heard that he was like Ilayaraja” வட்ஸ்அப் மெசேஜை வாசித்தபோது சிரிப்பு, நிறைய அந்தரம், பயங்கர சந்தோசம் ஏற்பட்டது. கோபி அண்ணாவுக்கு நன்றி. இளையராஜாவின் இரண்டு படங்களையும் அண்ணர் எடுத்து அனுப்பியிருந்தார். அந்தப்பதிவு மீண்டும்.

வெற்று முரசு

                                                                        அதிகாரம் என்ற சொல் ஆலமரங்களில் ஒட்டுண்ணியாகப் படரும் குருவிச்சைத் தாவரம் போன்றது. அது தான் அடையாகும் மொழியையே தனது விருந்து வழங்கியாக்கி முழுங்கிவிடவல்லது. மொழியின் எந்தச்சொல்லோடும் பொருந்திவர வல்லது. அதிகாரம் போதை. அதிகாரம் நஞ்சு. அதிகாரம் அகங்காரம். அதிகாரம் மமதை. அதிகாரம் கோபம். அதிகாரம் மடமை. அதிகாரம் மாயை. அதிகாரம் அவசரம். அதிகாரம் அரைவேக்காட்டுத்தனம். அதிகாரம் கவர்ச்சி. அதிகாரம் காமம். அதிகாரம் அடிமைத்தனம். அதிகாரம் வீழ்ச்சி. அதிகாரம் கீழ்மை. அதிகாரம் துஷ்பிரயோகம். அதிகாரம் இறை. அதிகாரம் மையம். அதிகாரம் போலி. அதிகாரம் பண்பாடு. அதிகாரம் இனம். அதிகாரம் மனிதம். அதிகாரம் மொழி. ஆனால் தனியராக அதிகாரத்தின் அர்த்தம்தான் என்ன?

அசோகமித்திரனோடு ஒரு மாலைப்பொழுது

நேற்று இடம்பெற்ற “அசோகமித்திரனோடு ஒரு மாலைப்பொழுது” ஒன்றுகூடல் மிகுந்த மனத்திருப்தியோடு நடந்து முடிந்தது. வாசிப்பின் உந்துதலில் தூரத்தையும் பொருட்படுத்தாது பன்னிரண்டுபேர் இணைந்திருந்தார்கள். எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் இருநூறு கிலோமீட்டர் தொலைவிலிருந்து வந்திருந்தார்கள். எல்லோரும் சம்மணமிட்டு, சுற்றி உட்கார்ந்து வாசிப்பு அனுபவங்களைப் பகிர்தல் என்பது ஒரு நீண்டகாலக் கனவு. சாத்தியமாக்கியதற்கு அனைவருக்கும் நன்றிகள்.

அசோகமித்திரனோடு ஒரு மாலைப்பொழுது

அது என்னவோ தெரியாது, கடந்த ஒரு சிலமாதங்களாகவே அசோகமித்திரன் புராணம்தான். ஒலிப்புத்தகத்தில் அவருடைய சிறுகதைகளைக் கேட்டு, அது பற்றிப் பேசுவதற்குத் துணை வேண்டுமென்று சொல்லிக் கேதாவையும் கேட்கவைத்துப் பின்னர் நித்தமும் காலையில் வேலைக்குப்போகையில் ஒரு மணிநேரம் தொலைபேசியில் அவரைப்பற்றியே பேசிக்கொண்டிருப்போம்.