' சமாதானத்தின் கதை ' பற்றி வெளிப்பட்ட கருத்துகள். -- லெ. முருகபூபதி -- கதையின் வார்ப்பு சிறப்பாகவும் நுணுக்கமாகவும் வந்திருக்கிறது. பாராட்டுக்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள். பாத்திரப்படைப்பில் இருக்கும் முழுமைதான் இக்கதையின் வெற்றி. ஈழத் தமிழ் சமூக மாற்றங்களில் புலம்பெயர்ந்தவர்களின் வகிபாகமும் துல்லியமாகியிருக்கிறது. "உண்மைக்கதையோ!? " என எண்ணவைக்கிறது. சித்தர்களின் ரிஷிமூலம் கண்டறியப்படமாட்டாது. அந்த சமதானம் உருவாக்கப்பட்டிருக்கும் விதம் அதன்மீது வாசகருக்கு அனுதாபத்தையும் தோற்றுவிக்கும். பரிமளம் - வைதேகி - பிரான்ஸ் மாப்பிள்ளை - நரிக்குண்டு பிரதேசம் வாசகரின் மனதில் நெடுநாளைக்கு நிற்கும். வாசகரை உடன் அழைத்துச்செல்லும் ஜே.கே.யின் படைப்பூக்கம் இக்கதையிலும் சோடைபோகவில்லை. அன்புடன் பிரிய வாசகன் முருகபூபதி