Skip to main content

Posts

இரண்டாயிரத்துப் பத்தொன்பது, மே, இருபத்தியேழு

குளிர் ஆரம்பித்துவிட்டிருந்தது. இலையுதிர்காலம் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. கடந்த தடவை வசந்தகாலத்துக்கும் இதுதான் நிகழ்ந்தது. வசந்தத்தையும் இலையுதிரையும் கோடையும் குளிரும்தான் நமக்கு ஞாபகப்படுத்தவேண்டியிருக்கிறது. வீட்டில் அப்பிள் மரம் காய்த்துக்கொட்டிக்கொண்டிருந்தது. கொழும்பிலிருந்து அப்பா ஓமந்தையால் கொண்டுவரும் நான்கு அப்பிள்களை முன்வீடு பின்வீடு என்று எல்லோருக்கும் பிரித்துக்கொடுத்தக் காலம் என்று ஒன்றுண்டு. நான்காய், எட்டாய்ப்பிரித்து அதிலொரு துண்டு கிடைக்கும். தீர்ந்துவிடுமே என்று நன்னி நன்னி சாப்பிட்டது. காலையில் காருக்குள் ஏறும் முன்னர் மரத்தில் எட்டி ஒன்றைப் பிடுங்கி, பக்கத்துப் பைப்பிலேயே கழுவி, கடித்தபடி புறப்படுகிறேன். இதனை முன்வீட்டு லலிக்குச் சொன்னால் புன்னகைப்பான் என்று நினைக்கிறேன்.

ஷாஜகானின் காட்டாறு

அண்மைக்காலங்களில் தமிழில் வாசிப்பது என்பது பெரும்பாலும் அயர்ச்சியையே கொடுத்து வந்திருக்கிறது. அதற்குக் காரணம் அவை வாசிப்புக்கு உகந்ததாகாமல் போய்விட்டன என்பதல்ல. அவற்றை வாசிக்கும்போது என் மனநிலை தளம்புகிறது. தமிழில் வாசிக்கும்போது கதைக்களனுக்குள் நுழைந்து ஒன்றிணையமுடியாமல் வாசிப்பு மனநிலை அலைக்கழிக்கப்படுகிறது. நூல்களையும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களையும் உள்ளடக்கிய புறச்சூழ அரசியலும் விவாதங்களும் அவர்களை வாசிக்கும்போது முழித்துக்கொண்டு ஒவ்வொரு பக்கங்களிலும் நிற்பதைத் தவிர்ப்பது கடினமாக இருக்கிறது. அதனால் அவற்றிலிருந்து வலிந்து விலகி நின்று, எழுத்தாளர்களின் பொதுவெளிகளை அவதானிக்காமல், அவர்களுடைய முகநூல், இணையத்தள, காணொலிப்பதிவுகளைக் கவனிக்காமல் நூல்களை மாத்திரமே தேடி வாசிக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. வேற்றுமொழி இலக்கியங்களை வாசிக்கும்போது இந்த மனநிலை ஏற்படுவதில்லை. அந்தப் புத்தகங்களை அவற்றின் புறவெளி விவாதங்களைப்பற்றி அறியாமலேயே அணுகமுடிகிறது. அதனால் புத்தகங்களின் உள்ளடக்கங்களோடு நெருங்குவது என்பது இலகாகிறது.  கேட்கப்படாத பாடல்கள்போல வாசிக்கப்படாத புத்தகங்களும் கொஞ்சம் அதிகம் அழக

கொள்ளை நோய்

ஓரன் என்கின்ற கடலோர நகரம் ஒன்றில் இடம்பெறும் கதை இது. ஒரு ஏப்ரல் நாளில் ஓரன் நகரமெங்கும் திடீரென்று ஆயிரக்கணக்கான எலிகள் செத்துவிழத்தொடங்குகின்றன. முதலில் ஒருவருடைய வீட்டு வாசலில் எலி ஒன்று செத்துக்கிடந்தது. பின்னர் தோட்டத்தில் ஐந்தாறு எலிகள் செத்துக்கிடந்தன. குப்பைத்தொட்டியருகே ஐம்பது எலிகள். ஒரு தானியக் கிடங்குக்குப் பின்னே நூற்றுக்கணக்கான எலிகள். இப்படித் தொடர்ச்சியாக எலிகள் செத்துவிழ ஆரம்பிக்கின்றன.

நண்பர்கள் மற்றும் பிறர்

சென்றவாரம் எனக்கொரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. புதிய இலக்கம்.  “தம்பி நான் மகாலிங்கம் கதைக்கிறன். உங்கட அப்பாண்ட பழைய பிரண்ட். ஒஸ்ரேலியால வந்து நிக்கிறன் … அவரோட கதைக்கலாமா?” அப்பாவிடம் போனைக் கொடுத்தேன். அப்பாவும் அந்த மகாலிங்கம் அங்கிளும் பேச ஆரம்பித்தார்கள். தியத்தலாவை, நொச்சியாகமை, குமரப்பெருமாள் அண்ணன், சேர்வெயிங் டிபார்ட்மெண்ட், ரெமி மார்டின், பெர்ணாண்டோ, எச்.என்.பெரேய்ரா, டோஹா, பாரெயின், தியோடலைட், டோடல் ஸ்டேசன், ஶ்ரீகரன், ஒரேட்டர் சுப்ரமணியம் என்று பொதுவாகவே இரண்டு நில அளவையாளர்கள் பேசிக்கொள்ளும்போது அடிபடும் சொற்கள் மீண்டும் கேட்டன. அவர்கள் சொல்லிக்கொண்ட பெயர்களில் பலர் இப்போது உயிரோடு இல்லை. அந்த நில அளவை உபகரணங்களும் பாவனையில் இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேசினார்கள். பேசிமுடியும்போது அப்பா மகாலிங்கம் அங்கிளுக்கு வீட்டின் முகவரியைக் கொடுத்தார். அவ்வளவுதான். இனி ஒரு வார இறுதியில் மகாலிங்கத்தாரின் மகனோ மகளோ காலையில் கொண்டுவந்து அவரை இறக்கிவிட்டுப்போனால் இரவு உணவு முடிந்து பத்துப் பதினொரு மணிவரைக்கும் அவர்களிருவரும் பேசிக்கொண்டிருப்பார்கள். அம்மா அப்பவே

நாய் கொண்டான்

இப்பக் கொஞ்சக் காலமாகவே எனக்கு நாய்களின்மீது ஒரு தனிப்பாசம் வர ஆரம்பித்துள்ளது.  நான் நித்தமும் நாய்களோடு வேலை செய்யும் அனுபவத்தில் சொல்கிறேன். அதுகள் அவ்வளவுக்கு மோசமென்று சொல்வதற்கில்லை. நாய்கள் மீது ஒருவித கரிசனைகூட எனக்கு வந்துவிட்டது. அதுகளும் என்ன செய்யும் சொல்லுங்கள்? அதுகளாக வந்து என்னை எடுத்து வளர்த்துவிடு என்று கெஞ்சியதா? இல்லையே. நீ, மனுசன், உனக்கு ஒரு அடிமை வேணும் எண்டதுக்காக நாயை வாங்கி, நலமடிச்சு வளர்த்திட்டு, நாய்கள் கியூட் என்கிறாய், நாய் நன்றியுள்ள மிருகம் என்கிறாய், நாய் வளர்ப்பது நல்லது என்கிறாய், நாய் வீட்டில் இருந்தால் குழந்தைகளின் வளர்ச்சி சிறக்கும் என்றும் சொல்கிறாய். நாய்களோடு கூட வளர்ந்தால் இம்மியூனிட்டி அதிகமாகும் என்கிறாய். இப்படி எல்லாமே நாய்களால் உனக்கும் நீ பெத்ததுகளுக்கும் என்ன நன்மை என்று வரிசைப்படுத்துகிறாயே ஒழிய நாய்களைப்பற்றி நீ எப்பனேனும் யோசித்தாயா? கேட்டால் நாய்க்கும் என்னைப்பிடிக்கும் என்று சொல்கிறாய். கூப்பிட்டோன என்னட்ட ஓடிவரும் என்கிறாய். நாய்களுக்கு ஊருலகத்தில அப்பிடி என்னதான் பிரச்சனை? என்று திருப்பி என்னையே கேட்கிறாய். அப்படியே

ராஜா ரகுமான்

ராஜா ரகுமான் சம்பவம் நடந்து இது மூன்றாவது நாள். நாற்பது ஐம்பது தடவைகளுக்கு மேல் அந்த வீடியோவைப் பார்த்தாயிற்று. இன்னமும் கெலி அடங்குவதாயில்லை. என்னைப்போன்ற, ‘யாரை உனக்கு அதிகம் பிடிக்கும்?’ என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கின்ற, இவர்களுடைய இசையை இம்மை மறுமை இல்லாமல் ரசிக்கின்ற எவருமே மிகவும் உணர்ச்சிவசப்பட்டே இந்த வீடியோவைப் பார்த்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அப்படியொரு அற்புதத் தருணம் இது.

வெம்பிளி ஓஃப் ஜாப்னா - சில கருத்துகளும் பதிலும்

வணக்கம் ஜேகே. வெம்பிளி ஓஃப் ஜாப்னா கதை(?)யின் முதல் பாகம் வாசித்துவிட்டு சத்தமே போடவில்லை. கருத்திடவில்லை. ஆனால், நிறையவே சிரித்தேன்.என்னையும் மீறி பெருமூச்சுக்களும் வெளியேறியதைத் தவிர்க்க முடியவில்லை. அதுமட்டுமின்றி உங்கள் எழுத்து அறிமுகம் செய்கின்ற அம்மாவை ஒருதடவை சந்திக்கவேண்டும் எனும் ஆவல் எழுகின்றது. இரண்டாவதை வாசித்து முடித்ததும் எப்போதும் போலவே மனதோரம் பொறாமை. 'எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுது?' என்ற வியப்பு, மகிழ்வையும் மீறி அந்த ஆமையையும் தட்டி விட்டால் நான் என்ன செய்வது?  <<<<உலகத்தின் எந்த வரலாற்றை எடுத்துக்கொண்டாலும், எல்லா இருண்டகாலங்களுக்கும் பின்னே பொற்காலங்கள் தோன்றியிருக்கும். எல்லாப் பொற்காலங்களுக்கும் பின்னே மீண்டும் இருண்ட காலங்கள் தோன்றியிருக்கும். இன்னுஞ் சொல்லப்போனால் பொற்காலங்களின் இருப்பை அதற்குப் பின்னரான இருண்ட காலங்களும், இருண்ட காலங்களின் இருப்பை அதற்கு முன்னரான பொற்காலங்களுமே எமக்கு உணர்த்தி நிற்கும். ஆனால் மிக மிக அரிதாகவே வரலாற்றின் சில காலப்பகுதிகளை எம்மால் அப்படி எடைபோட முடிவதில்லை.>>>> எனக்கு இந்த வரிக

சிறப்பான தரமான சம்பவங்கள் மூன்று

சிறப்பான தரமான சம்பவங்கள் மூன்று. சம்பவம் ஒன்று ‘பேட்ட’ ட்றெயிலரை அம்மாவிடமும் அப்பாவிடமும் போட்டுக்காட்டினேன். ‘இந்த எடுப்பையும் நடப்பையும் வச்சு இவ்வளவு காலமும் இவன் விளையாடிட்டான், வீரன்தான்’, இது அப்பா. ‘நல்லாத்தான் இருக்கு … ஆனால் இந்தாள் உளறினதை எல்லாம் கேட்டாப்பிறகு இதைப்பார்க்க விசர் வருகுது’, இது அம்மா. ‘என்ன இப்டி சொல்லுறிங்கள், வெறும்படம்தானே, வடிவேலுவும்தான் அரசியல்ல உளறிக்கொண்டு திரிஞ்சுது, ஆனாலும் அந்தாளிண்ட கொமடியை நாங்கள் ரசிக்கிறதில்லையா?’ ‘அது வடிவேலுடா … இது ரஜினிகாந்த் .. இவர் நடிப்பையும் அரசியலையும் போட்டுக் குழப்புறதாலதான் நாங்களும் குழம்பவேண்டியிருக்கு’, இது அம்மா. ‘விடு, அவன் தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்தென்ன, வராட்டியென்ன, அவங்கள் மட்டும் எங்கட சுமந்திரன், கஜா பற்றி பேசி அடிபட்டுக்கொண்டா இருக்கிறாங்கள்? நம்மளுக்கு படம் பிடிச்சா ரசிக்கலாம், இல்லாட்டி விட்டிட்டு சோலியை பார்க்கலாம்… அவங்கட அரசியல் அவங்களோட’ — அப்பா மீண்டும். இவ்வளத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அப்பாவின் சீனியர் சிட்டிசன் கிளப் அங்கிள் கேட்டார். ‘எல்லாஞ்சரி …. ஆனா படத்துக்கேன்

ஒரு காண்டாமிருகத்தைப்போல

"This is a bondage, a baited hook. There's little happiness here, next to no satisfaction, all the more suffering & pain." Knowing this, circumspect, wander alone like a rhinoceros.” "இது ஒரு கட்டு, இரையுள்ள தூண்டில். இங்கு இன்பம் குறைவு, கொஞ்சமும் திருப்தி இல்லை, துக்கமும் துன்பமுமே அதிகம்." இதை அறிந்து, எச்சரிக்கையோடு இருந்து தனித்து நடமாடு காண்டாமிருகத்தைப் போல.” கடந்துபோன இரண்டாயிரத்துப் பதினெட்டு சற்று விசித்திரமான ஒரு ஆண்டு. எதிலுமே பிடித்தமில்லாமல், எவற்றிலுமே நம்பிக்கை கொள்ளாமல் எல்லாவற்றிலுமிருந்து விடுபட்ட மனநிலை மேலோங்கியிருந்த ஆண்டு இது. என் தொலைப்பேசி முழுதும் தவறவிடப்பட்ட அழைப்புகள் நிறைந்திருந்த வருடம். தகவல் பெட்டிகளும் மின்மடல்களும் வாசிக்கப்படாமல் முடங்கியிருந்த காலம். வாசிப்பில் பிடித்தம் அருகிக்கொண்டு வந்ததும் எழுதும் எழுத்தை வெளியிடும் ஆர்வம் குறைந்ததும் இதே காலப்பகுதியில்தான். சமூக வலைத்தளங்கள் மீதான வெறுப்பும் மேலோங்க ஆரம்பித்ததும் அப்போதுதான். மனிதர்களின் போலித்தனங்கள் மேலும் மேலும் பட்டவர்த்தன

நிஸ்ஸி

நேற்று காலை, வேலையிலும் பாட்டிலும் மூழ்கியிருந்தபோது பென் வந்து முதுகில் தட்டினான். “உன்னோடு வேலை செய்யக்கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியானது” “என்ன நடந்தது?” என்றேன். “வேலை போய்விட்டது … இப்போதே வெளியேறுகிறேன். இந்த கக்காவை இனிமேலும் சகித்துக்கொள்ள முடியாது” தூக்கிவாரிப்போட்டது. பென் என்னைவிட அதிகக்காலம் இங்கே வேலை செய்பவன். செய்தவன். வேலையை விட்டு ஆள்கள் போவதும் வருவதும் சகஜமான விசயம்தான். ஆனால் இந்த இக்கணத்தில் போட்டது போட்டதுபடியே அவனை வெளியேறச்சொன்னதுதான் அதிர்ச்சியாக இருந்தது. வார்த்தைகள் வரவில்லை.

கன்னடக் கதைகளு 1: நெல்லி

மாலை ஐந்து மணி தாண்டியிருந்தது. ஹம்பி எக்ஸ்பிரஸ் ஹோஸ்பேட்டுக்கு வந்துசேர இன்னமும் நான்கு மணித்தியாலங்கள் இருந்ததால், அவ்வளவு நேரமும் என்ன செய்வது என்று தெரியவில்லை. வெளியே இறங்கி நடக்கலாம் என்றால் மழை தூறிக்கொண்டிருந்தது. தனியனாக உணவகத்துக்குள்ளேயே முடங்கிக்கிடந்து வெறுமனே கிங்பிஷரை அருந்திக்கொண்டிருக்க அலுப்படித்தது. இன்னொரு மிளகு மசாலா சொல்லலாம் என்றால் வயிறு வாய்தா கேட்டது. இன்னொருபுறம் மனம் இக்கணங்களை இப்படிக் கழித்து இலகுவில் இழந்துவிடாதே என்று சொல்லியது.  வெளியே வந்தேன்.  மழையை எவருமே பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. தெருவோரமாக ஒரு பெண்மணி சோளம் பொத்திகளை நெருப்பில் சுட்டு விற்றுக்கொண்டிருந்தார். இடது கையால் ஒரு பழைய கறுப்புக்குடையை நெருப்பு அணையாவண்ணம் மழைக்குப் பிடித்தபடி, மறு கையில் ஒரு குழாயை ஊதி ஊதி தணலை எரியூட்டிக்கொண்டிருந்தார். அவருக்கருகிலேயே சிறு பெட்டிக்கடையில் வெங்காயப்பஜ்ஜி போட்டுக்கொண்டிருந்தார்கள். சூடாக எதையாவது வாங்கிச்சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. வீதியைக் குறுக்கே கடந்து போனபோது, பக்கத்திலேயே ஒரு சிறுமி நெல்லிக்காய் விற்றுக

96

அலுவலகத்திலிருந்து காரை எடுத்துப் பிரதான வீதிக்குள் திரும்பமுதலே சசி அண்ணாவிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போதே தெரியும் அண்ணர் 96 பார்த்துவிட்டுத்தான் இருப்புக்கொள்ளாமல் எடுக்கிறார் என்று. அடுத்த முக்கால் மணிநேரம் நானும் அவரும் பேசிக்கொண்டதன் தொகுப்பு இது. படம் பார்க்காதவர்கள்கூட வாசிக்கலாம். ஒரு ஸ்பொயிலரும் கிடையாது. மே பி, கலாச்சார காவலர்கள், ஸ்கிப் இட். 

அயல்

நேற்று வீடு கூட்டிக்கொண்டிருக்கும்போது துணைக்குப் ப்ளே லிஸ்ட் ஒன்றைக் கொஞ்சம் சத்தமாகவே ஒலிக்கவிட்டிருந்தேன். ‘நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ’. கூடவே சேர்ந்து பாடியபடி. கூட்டிக் குவித்து குப்பையை அள்ளி வெளியே தொட்டியில் போட்டுவிட்டுத் திரும்பும்போது, பின்கதவை இழுத்துச்சாத்த மறந்துவிட்டேன். அடுத்து ‘திமு திமு தீம் தீம்’ ஒலித்தது. அதன் இதமான தாளத்திற்கேற்ப தும்புத்தடி மெதுவாகவே கூட்டிக்கொண்டிருந்தது. பாட்டு முடியும்போது வாசல் மணி அடித்தது. முதலும் பல தடவைகள் அடித்திருக்கவேண்டும். எனக்கு அப்போதுதான் கேட்டது. போய்த்திறந்தேன்.  பக்கத்துவீட்டு மனிசி. முறைத்துக்கொண்டு நின்றது. இத்தாலிக்காரி. 

ஆதிரை வாசகர் சந்திப்பு - படங்கள்

  எழுத்தாளர் சயந்தன் மெல்பேர்ன் வந்திருப்பதைச் சாட்டாக வைத்துக்கொண்டு ஆதிரை, ஆறாவடு பற்றிய ஒரு வாசகர் சந்திப்பை நேற்று மாலை செய்திருந்தோம். ஆதிரை பற்றி ஒரு சந்திப்பு செய்யவேண்டுமென்பது மூன்று வருடக்கனவு. நிறைவேறியிருக்கிறது. கடைசிநேர அழைப்பு என்றாலும் நேரம் ஒதுக்கி கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. நம்முடைய கதைகளை எல்லாம் சிறு புன்னகையுடன் கடந்துகொண்டிருந்த சயந்தனுக்கும் நன்றி.

பெற்ரா

இன்று அலுவலகத்தில் புதிதாக ஒரு நாய் வந்து சேர்ந்தது. இம்முறை அல்சேசன். கஸ்டமர் சேர்விஸில் இருந்த பெண் ஒருத்தி அதனை அழைத்து வந்திருந்தாள். “சோ கியூட், இத்தனை நாள் இவன் எங்கிருந்தான்? ஏன் கூட்டி வரவில்லை?” என்று கேட்டேன். ஒரு அல்சேசனை கியூட் என்று சொல்லலாமா என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. “ஓ … தாங்ஸ். இவன் இல்லை இவள் .. பெயர் பெற்ரா.. எனது நண்பியின் நாய் இது. நண்பி புளோரன்சுக்கு விடுமுறைக்குப் போய்விட்டதால் பெற்ராவை நான்தான் பார்த்துக்கொள்கிறேன்”

சமாதானத்தின் கதை - கருத்துகள்

' சமாதானத்தின் கதை ' பற்றி வெளிப்பட்ட கருத்துகள். -- லெ. முருகபூபதி -- கதையின் வார்ப்பு சிறப்பாகவும் நுணுக்கமாகவும் வந்திருக்கிறது. பாராட்டுக்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள். பாத்திரப்படைப்பில் இருக்கும் முழுமைதான் இக்கதையின் வெற்றி. ஈழத் தமிழ் சமூக மாற்றங்களில் புலம்பெயர்ந்தவர்களின் வகிபாகமும் துல்லியமாகியிருக்கிறது. "உண்மைக்கதையோ!? " என எண்ணவைக்கிறது. சித்தர்களின் ரிஷிமூலம் கண்டறியப்படமாட்டாது. அந்த சமதானம் உருவாக்கப்பட்டிருக்கும் விதம் அதன்மீது வாசகருக்கு அனுதாபத்தையும் தோற்றுவிக்கும். பரிமளம் - வைதேகி - பிரான்ஸ் மாப்பிள்ளை - நரிக்குண்டு பிரதேசம் வாசகரின் மனதில் நெடுநாளைக்கு நிற்கும். வாசகரை உடன் அழைத்துச்செல்லும் ஜே.கே.யின் படைப்பூக்கம் இக்கதையிலும் சோடைபோகவில்லை. அன்புடன் பிரிய வாசகன் முருகபூபதி

குஷி

நேற்றிரவு கீர்த்தி யாழ்ப்பாணத்திலிருந்து அழைப்பு எடுத்தான். அவனோடு பேசிக் கனகாலம். ஏண்டா பேஸ்புக்குக்கு இப்போதெல்லாம் வருவதில்லை என்று கேட்டேன். ‘அது அலுப்படிக்குது, ஆனால் டுவிட்டர் சூடாகப்போகுது’ என்றான். பிக் பாஸ் ஆரம்பித்துவிட்டது. தான் இம்முறை ‘மும்தாஜ் ஆர்மி’ என்று சொன்னான். ஏன் என்று கேட்டதற்கு,  ‘ஏண்டா மறந்துட்டியா, குஷி வந்த மூட்டம் மாஸ்டரிட்ட மோர்னிங் ஷோ இல்லை எண்டு கல்வியங்காட்டு மினி சினிமால போய்ப்பார்த்தோமே’ பதிலுக்கு நான்,  ‘இல்ல மச்சான் நான் அண்டைக்கு சிவால மோர்னிங் ஷோவே பாத்திட்டன்’ சிவா அதிகம் பேசப்படாத, ஆனால் ஈழ சினிமா உலகத்தின் மிக முக்கிய திரையரங்குகளில் ஒன்று. ‘ஜீன்ஸ்’, ‘ஆசைத்தம்பி’, ‘சுயம்வரம்’ போன்ற உலக சினிமாக்களை அங்கேதான் நான் பார்த்தேன். வைத்தீஸ்வராக்கு அருகில் இருந்தது. உள்ளே மின்விசிறி ஒழுங்காக வேலை செய்யாது. ஆரேனும் சிகரட் ஊதினால்தான் அங்கே காத்துவரும். இப்போது யோசித்துப்பார்க்கையில் ஒவ்வொரு பிரபல பாடசாலைகளுக்கும் அருகே ஒவ்வொரு மினிசினிமா இருந்திருக்கிறதுபோலத் தெரிகிறது. திட்டமிட்டு செய்தார்களா தெரியவில்லை. 

உலகப் பழமொழிகள்

மொழிபெயர்ப்புகளில் கீதா மதிவாணன் அக்காவுக்கு எப்போதுமே தனியிடம் உண்டு. நிறைய அவுஸ்திரேலிய படைப்புகளை அவர் மொழிபெயர்த்திருக்கிறார். அண்மைக்காலங்களில் அவர் பல்வேறு சமூகங்களில் வழக்கத்திலுள்ள் பழமொழிகளைத் தமிழ்ப்படுத்தித் தந்துகொண்டிருக்கிறார். மூலம் சிதறாமலும் அதே சமயம் மொழிபெயர்ப்பு என்று தெரியாதவண்ணமும் அவை மிக இயல்பாக இருக்கின்றன. உதாரணத்துக்கு சில. முட்டாள்கள் சந்தைக்குப் போகாவிடில் மோசமானவை எல்லாம் எப்படி விற்பனையாகும்? - ஸ்பெயின் கழுதையிடம் பூக்களை முகர்ந்துபார் என்று நீட்டினால் அது தின்றுவிடும். - ஆர்மீனியா சேவலைத் தலைவனாய்க் கொண்டு நடந்தால் கோழிப்பண்ணைக்குத்தான் வழி நடத்தப்படுவாய். - லெபனான் பட்டப்பகலை அரசன் இரவென்று சொன்னால், அதோ நட்சத்திரங்கள் என்று சொல். - அரேபியா உலகம் முழுதுமே மனிதர்களும் குணங்களும் ஒரேமாதிரியாகவே இருந்திருக்கின்றன என்பது இவற்றை வாசிக்கும்போது மீளவும் உறுதிப்படுத்தப்படும். மிக எளிமையான இவ்வகை பழமொழிகளை நம் தமிழ்போட்டிகளில் பயன்படுத்தக்கொடுக்கலாம். மாணவர்களிடம் இவற்றின் ஆங்கில வடிவத்தைச் சொல்லி தமிழில் மொழிபெயர்க்குமாறு கேட்கலாம். கீதா அக

விருந்து

ஶ்ரீயும் நிர்மாவும் ஒன்றாகப் படகில் அவுஸ்திரேலியா வந்தவர்கள். கிட்டத்தட்ட ஆறரை வருடங்களாக அவர்கள் புரோட்மெடோஸில் இருந்த தடுப்பு முகாமில்அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். வெளியில் விட்டபின்னரும் அவர்களுக்கு இங்கே ஒழுங்கான ஒரு வேலை கிடைக்கவில்லை. ஒரு வழியாக உதவிநிறுவனம் ஒன்றினூடாக அவர்கள் ‘விருந்து’ என்கின்ற ஒருநாள் உணவகத்தை ஆரம்பிக்கிறார்கள். நான்கு மாதங்களின் பின்னர் நிரோவும் தடுப்புமுகாமிலிருந்து வெளியே வருகிறார். பின்னர் நியேதனும் முகாமிலிருந்து வெளியேறி இவர்களோடு இணைகிறார். இப்போது உணவகம் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என்று நான்கு நாள்களும் நடைபெறுகிறது.

யாரு நீங்க?

கண்ணா என் பேரு ரஜினிகாந்த். எனக்கு இன்னொரு பேரும் இருக்கு (ரசிகர்கள் பாஷா பாஷா என்று அலறுகிறார்கள்). ஏய், சும்மா இருக்கமாட்டீங்களா?  தம்பி மன்னிச்சுக்குங்க. என் பேரு ரஜினிகாந்த். என் இன்னொரு பேரு சிவாஜிராவ். நான் ஒரு நடிகனுங்க. முள்ளும் மலரும், தில்லுமுல்லு, தளபதி, பாஷா இப்பிடி சில படங்கள் பண்ணியிருக்கேன். இப்போ காலான்னு ஒரு படம் ரிலீஸ் ஆகப்போகுதுன்னு நினைக்கிறேன். 2.0 ன்னு ஒரு படத்தில சிக்கி சின்னாபின்னமாகிட்டிருக்கேன். அடுத்ததா கார்த்திக் சுப்புராஜு படமும் இருக்கு. அது பேய்ப்படமா பேசும்படமா என்னன்னே புரியமாட்டேங்குது. சரி அதை விடுங்க.