வணக்கம் ஜேகே இரு வருடங்களின் முன் ஒரு நண்பர் வீட்டிற்கு சென்ற போது " கந்தசாமியும் கலக்சியும் " என் கைகளில் அகப்பட்டது. எனது போதாத காலம் ஒரு பக்கத்தை சும்மா பார்ப்பம் என்று திறந்து வாசித்தேன்.அது சுமந்திரனும் மிகிந்தர்களும் சந்திக்கும் தருணம். மூடி வைத்து விட்டு இவருக்கு விசர் இவரும் அரசியல் எழுத தொடங்கி விட்டார் என்று முடிவெடுத்ததுதான். அதன் பின் அந்த புத்தகத்தை வேண்டவேண்டும் என்ற எண்ணமே இல்லை . மூன்று நாட்களின் முன் இந்த புத்தகம் கிண்டிலில் கிடைப்பதாக நண்பர் மூலம் அறிந்தேன். விடுமுறை வேற வாசித்துதான் பார்ப்போமே என்று காலம் தாழ்த்திய ஞானோதயத்தால் வாங்கியதுதான் இந்த “கந்தசாமியும் கலக்சியும்” வாசிக்க தொடங்கியதுதான் எங்கே சுவாரசியம் போய்விடுமோ என்று இரண்டு நாட்களில் வாசித்து உங்களுக்கு பதில் எழுதுவது வரை தூண்டியிருக்கிறது இந்த புத்தகம்.