Skip to main content

Posts

கிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 2

‘மல்லி …’ கூப்பிடும் சத்தம் கேட்கிறது. ஆனால் ஆளைக் காணவில்லை. சின்னக் கக்கூசு. இதுக்குள்ள ஆரு ஒளிந்திருக்கமுடியும்? நான் சுற்றிச் சுற்றிப்பார்க்கிறேன். ம்ஹூம். மீண்டும் கொமெண்டியபடியே ஒண்டுக்கடிக்க ஆரம்பித்தேன். ‘மல்லி உன்னைத்தான்’ அப்போதுதான் கவனித்தேன். கொமெடுக்குப் பின்னாலிருந்துதான் சத்தம் கேட்டது. அங்கே ஒரு சின்னக் கரப்பான் பூச்சி. தலைகீழாகப் பிரண்டுகிடந்து துடித்துக்கொண்டிருந்தது. ஆச்சரியத்துடன் நான் கரப்பானிடம் கேட்டேன். ‘நீயா பேசியது?’ ‘யெஸ் யெஸ் … நான்தான் கடவுள், உன்னைத் தடுத்தாட்கொள்ள வந்தேன்..’

கிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 1

போன கிழமை கிசோகரின் புண்ணியத்தில் எனக்கு புதிதாக ஒரு ஐபோன் கிடைத்தது. அன்றைக்கும் வழமைபோல வெள்ளனவே நித்திரையால எழும்பி சூடா ஒரு தேத்தண்ணி வைக்கலாம் என்று கேத்திலை ஓன் பண்ணினேன். தண்ணீர் கொதிப்பதற்குள் பால்மாவையும் சீனியையும் ஒரு கப்புக்குள் போட்டுட்டு, அடுத்த கப்புக்குள் இரண்டு தேயிலை பக்கற்றைப் போட்டேன். அப்பவும் தண்ணீர் கொதிக்க ஒரு பத்துப்பதினைஞ்சு செக்கன் இருந்துது. அந்தப் பதினைஞ்சு செக்கன்களுக்குள் வாழ்க்கையில் நான் எவ்வளத்தையோ சாதித்திருக்க முடியும். சிங்குக்குள் முந்தைய நாள் பாத்திரங்கள் கழுவாமற் கிடந்தன. ஒன்றை எடுத்துக் கழுவி வைத்திருக்கலாம். குப்பைப்பையைக் கொண்டுபோய் வெளியே தொட்டிக்குள் போட்டிருக்கலாம். கழுவிக் காய வைத்திருந்த பிளேட்டுகளை கப்பேர்டுக்க வைத்திருக்கலாம். பாணுக்கு பட்டர் பூசியிருக்கலாம். வேலைகளா இல்லை. ஆனா எனக்கு அதுக்குள்ள ஒருக்கா பேஸ்புக்குக்குள்ள போயிட்டு வரலாம் என்று ஒரு அறுந்த யோசினை வந்துது. போனேன். அப்ப பிடிச்சுது சனி.

எல்லோராவின் பதினான்கு கட்டளைகள்

000 ஒரு காதலர்தினத்தின்போது எல்லோரா தன் காதலனுக்கு எழுதிய மின் அஞ்சலின் முதல் வரிகள் இவை.  “என் கண்ணே பட்டுவிடும்போலத் தோன்றுகிறது. ஒரு பாதிரியாருக்கு இவ்வளவு பயங்கர அழகு கூடாது. அதுவும் உன் கண்கள் இருக்கிறதே. அவை அதி உன்னதமானவை.” 

கந்தசாமியும் கலக்சியும் (கிண்டில்)- கீதா ஜீவனின் பார்வை

வணக்கம் ஜேகே இரு வருடங்களின் முன் ஒரு நண்பர் வீட்டிற்கு சென்ற போது  " கந்தசாமியும் கலக்சியும் " என் கைகளில் அகப்பட்டது. எனது போதாத காலம் ஒரு பக்கத்தை சும்மா பார்ப்பம் என்று திறந்து வாசித்தேன்.அது சுமந்திரனும் மிகிந்தர்களும் சந்திக்கும் தருணம். மூடி வைத்து விட்டு இவருக்கு விசர் இவரும் அரசியல் எழுத தொடங்கி விட்டார் என்று முடிவெடுத்ததுதான். அதன் பின் அந்த புத்தகத்தை வேண்டவேண்டும் என்ற எண்ணமே இல்லை . மூன்று நாட்களின் முன் இந்த புத்தகம் கிண்டிலில் கிடைப்பதாக நண்பர் மூலம் அறிந்தேன். விடுமுறை வேற வாசித்துதான் பார்ப்போமே என்று காலம் தாழ்த்திய   ஞானோதயத்தால் வாங்கியதுதான் இந்த “கந்தசாமியும் கலக்சியும்”  வாசிக்க தொடங்கியதுதான் எங்கே சுவாரசியம் போய்விடுமோ என்று இரண்டு நாட்களில் வாசித்து உங்களுக்கு பதில் எழுதுவது வரை தூண்டியிருக்கிறது இந்த புத்தகம்.

கறுப்பி

கறுப்பியை இனிமேல் விற்றே ஆகவேண்டிய நிலைமை வந்துவிட்டது.  மெல்பேர்ன் வந்ததுக்கு இது இரண்டாவது வாகனம். முதல் வாகனத்தைப் படிக்கும் காலத்தில் வாங்கியது. அறாவிலைக்கு ஓட ஓட நடுவழியில் நட்டுகள் கழன்றுவிழும் நிலையில் இருந்த வாகனத்தை வாங்கித் திருத்தி ஓட ஆரம்பித்தது. ஆனால் எத்தனை நட்டுகள் விழுந்தாலும் அந்த வாகனம் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருந்தது. வாங்கிக் கொஞ்சக் காலத்துக்கு ஹீட்டர் கூலர் இரண்டுமே வேலை செய்தது. பின்னர் ஹீட்டர் மாத்திரம் வேலை செய்தது. அதன் பின்னர் கூலர் கரைச்சல் கொடுத்தது. கொஞ்ச நாளைக்குப்பின்னர் வெறும் காற்று மட்டும் மெல்லிய எஞ்சின் நெடியுடன் பறந்தது. பாட்டுப்பெட்டிக்கும் அதே கதைதான். முதலில் சிடி பிளேயர் முழுதாக வேலை செய்தது. பின்னர் கனலில் கருவாகி புனலில் உருவானதை மாத்திரம் அது தொடர்ந்து ரிப்பீட் பண்ணியது. அதன்பின்னர் வானொலி மட்டும் தனியே பாடியது. ஈற்றில் வெறும் இரைச்சல் மாத்திரம். அதையும் ஒரு கட்டத்தில் நிறுத்தமுடியாமற்போனது. எஞ்சின் அதற்கும்மேலே. அடிப்பகுதியில் இங்கிங்கெனாது எங்கெனும் ஒயில் ஒழுகியது. ரேடியேட்டர் தண்ணீர் வடிந்தது. பெற்றோல் குடிக்கப்பட்டது. இயக