Skip to main content

Posts

'சமாதானத்தின் கதை' பற்றி ஹஸனாஹ் கவிதா

ஜே.கே இனது கொல்லைப்புறத்துக் காதலிகளை அனுபவித்து, இரசித்ததைப் போன்று ஆதிரை வெளியீடாக வந்துள்ள சமாதானத்தின் கதையை இரசிக்க முடியவில்லை. கொல்லைப்புறத்துக் காதலிகளை ஒரே மூச்சில் வாசித்து முடித்ததைப் போன்று சமாதானத்தின் கதையை வாசித்து முடிக்க முடியவில்லை.

'சமாதானத்தின் கதை' பற்றி சஞ்சயன் செல்வமாணிக்கம்

அ. முத்துலிங்கத்திற்கு எழுத்துலக வாரிசு கிடைத்துவிட்டார். அ. மு போன்று இலகுநடையிலும், ஐனரஞ்சகமாகவும், நகைச்சுவையாகவும், நீரில் வழுக்கிச்செல்லும் இலைபோன்று தமிழைக் கையாழ்வதும் இலகுவல்ல. வாசகனின் கவனக்குவிப்பு கலைந்துவிடாது கதை முழுவதையும் ஒரே மூச்சில் வாசிக்கவைப்பது ஒரு தனிக் கலை. இவையெல்லாமே 'சமாதானத்தின் கதை' எழுதியவரிடம் உண்டு.

'சமாதானத்தின் கதை' பற்றி ரோஸி கஜன்

ஜேகே அவர்களின் சமாதானத்தின் கதை , அதிலுள்ள 11 சிறுகதைகள் பற்றி என்ன என்னவோ எல்லாம் சொல்லவேண்டும் என்று ஒவ்வொரு கதையும் வாசித்து முடிக்கையில் நினைத்திருந்தேன். இப்போதோ கோர்வையாகச் சொல்ல ஒன்றுமே வருதில்ல. வெரைட்டியா நாலு ரெசிபி கேளுங்க நச்சென்று சொல்லுவன்.

"சமாதானத்தின் கதை" பற்றி தாரணி பாஸ்கரன்

ஜேகே ஐ பற்றி நான் தெரிஞ்சுகொண்டது கந்தசாமியும் கலக்சியும் வந்த timeலதான் . Fbல யாரோ பகிர்ந்த போஸ்ட் பார்த்து impress ஆகி படலைக்கு போய் இன்னும் நிறைய தெரிஞ்சு fbல friend request குடுத்து அதை அவர் accept பண்ணி ஆச்சரியங்களிலே காலம் கடந்தது. ஜேகேயின் எழுத்துக்கள் தன்னை நோக்கி மெல்ல மெல்ல என்னை இழுக்கத்தொடங்கியிருந்தது என்னையறியாமலே.

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி வினோத் கருணா

ஒரு சில எழுத்தாளர்களினால் மட்டுமே வாசிப்பவர்களை அவர்களாகவே மாற்றி விடுவார்கள். அந்த வரிசையில் ஜெயக்குமார் ஓர் எழுத்துலக சாணக்கியனாவர்.JK என சுருக்கமாகவும் அன்பாகவும் அழைக்கப்படும் ஜெயகுமாரினுடைய என் கொல்லைப்புறத்து காதலிகள் எம்மை JK யாகவே மாற்றி தொண்ணுறு காலப்பகுதிகளில் எம்மை யாழ் மண்ணில் உலவவிடுகின்றார். ஓர் பதினைந்து வயது சிறுவன் தொண்ணுறு காலப்பகுதியில் எம்மை a r ரகுமானையும் மணிரத்தினத்தையும் இளையராஜாவையும் ராஜனியையும் அதே நேரத்தில் இசையையும் அவனுடைய கண்களினாலும் உணர்வுகளினாலும் எம்மை அந்த சிறுவனாகவே மாற்றுகின்றார். எம்மையும் அகிலனையும் கஜனையும் காதலிக்க வைக்கின்றார்.இந்த புத்தகத்தை கையில் எடுத்தால் ஒரே மூச்சில் படித்து முடிக்க மனம் ஏங்கும் புத்தகத்தை கீழே வைக்க மனம் முயற்சிக்காது..... இந்த புத்தகத்தை வாசித்து அனுபவியுங்கள்.

“விளமீன்” பற்றி மணியாள்

மகனின் ‘விளமீன்’ கதையை வாசித்தபோது பல ஞாபகங்கள் வந்து போயின. அந்தக்காலத்தில் கொஞ்சம் வசதி கூடிய குடும்பங்களுக்கு வீட்டிற்கே மீனைக் கொண்டுவந்து கொடுப்பார்கள். வசதி குறைந்த குடும்பத்தார் கொஞ்சப்பேர் கடற்கரைக்குப் போய் தோணிக்குக் கிட்டவா நிற்பார்கள். மீன்காரன் பையை வாங்கிக்கொண்டுபோய் தோணிக்குள் இருந்து மீனை எடுத்துக் கொண்டுவந்து கொடுப்பான். ஆனால் அவர்கள் அதுவரைக்கும் பொறுக்காமல் தோணியை கரையேற்றமுதலேயே அடித்துப்பிடித்துக்கொண்டு கடலுக்குள் இறங்கிவிடுவார்கள். இப்படிப்போட்டி போட்டுக்கொண்டு நின்றால்தான் நல்ல மீன்கள் கிடைக்கும். இவர்கள் எல்லோருமே மீனுக்கான காசை மாதம் முடியும்போதுதான் கொடுப்பார்கள். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. தீவுப்பகுதி மீன்கள் எல்லாம் அந்த மக்களுக்குப் போகாமல் ஐஸ் பெட்டியில் யாழ்ப்பாணம் போய்விடுகிறது. ஊரிலும் முன்னமாதிரி ஆட்கள் இல்லை. சரசுமாமி மாதிரி வெளி நாட்டுக்கும் வெளி ஊர்களுக்கும் சென்றுவிட்டார்கள்.

ஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்

எனக்கும் மனைவிக்குமிடையில் சாப்பாட்டு விசயத்தில் அடிக்கடி சண்டை வரும். நாங்கள் ஒரு தீவுக் குடும்பம் என்பதால் கடலில் நீந்துகின்ற, கடற்கரையில் ஊருகின்ற எதையுமே ருசித்துச் சாப்பிடுவோம். ஒவ்வொரு ஜந்துவையும் எப்படிச் சமைக்கவேண்டுமென்பதை வேதங்கள்போல எங்கள் முன்னவர்கள் செவிவழியாக தம் அடுத்த சந்ததிகளுக்கு அருளிச்செய்திருக்கிறார்கள். நிலவுக் காலத்தில் நண்டு வலிச்சலாக இருக்கும். சின்னத்திரளி பதினொருமணிக்குமேலே நாறிவிடும். களங்கண்டி விளமீனைப் பொரித்துப் புட்டோடு சாப்பிடவெண்டும். ஒட்டி என்றால் தடித்த குழம்பும் சொதியும். கணவாயை ஏழு சிரட்டையில் அவிய விடவேண்டும். மட்டி எப்படி சமைப்பது. ஒடியற்கூழுக்கு என்னென்ன போடுவது, நெத்தலியில் சொதி. சூடையில் பொரியல். முரள். கிளாக்கன். சீலா, கும்பளா, அறக்குளா முதற்கொண்டு முள்ளு மீனான கொய்யையையும் பச்சைத்தண்ணியான கட்டாவையும்கூட எப்படி சமைக்கவேண்டுமென எத்தனை எத்தனை ரெசிப்பிகள். எந்தெந்த நோய்க்கு எந்தெந்த மீன்கள். எந்தெந்தக் காலத்தில் எந்தெந்த கறிகள் என எல்லாமே என் அம்மாவுக்கு அத்துப்படி. அபிமன்யுவுக்கு கருவிலேயே சக்கரவியூகம் சொல்லிக்கொடுக்கப்பட்டதுபோல ந

ஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்

அன்றிரவு ஏழு மணிக்கு வசாவிளானில் செம்முகம் ஆற்றுகைக்குழுவினரின் அரங்கு ஒன்று நடக்கப்போவதாக அக்கா சொல்லியிருந்தார். அதனாலேயே நிருபாவின் புத்தக நிகழ்விலிருந்து வெள்ளனவே கழன்று, வீடு திரும்பி ஆறரைக்கே தயாராக இருந்தேன். நேரம் ஏழு, ஏழரை மணி ஆகிவிட்டது. ஆனால் அக்கா மட்டும் வெளிக்கிடும் சிலமனே இல்லை.  “என்னக்கா லேட்டாப் போய் என்னெய்யிறது” “பொறு ஏழு மணி எண்டா இவங்கள் ஒன்பது மணிக்குத்தான் தொடங்குவாங்கள்”

நீண்ட காத்திருப்பு

கொமடோர் போயகொட ஶ்ரீலங்கா கடற்படையின் அதிகாரியாக இருந்தவர். 74ல் கடற்படையில் இணைந்து 93ல் சாகரவர்த்தனா கடற்படைக் கப்பலின் தளபதியாக நியமிக்கப்படுகிறார். 94ம் ஆண்டு கற்பிட்டிக் கடற்பகுதியில் நங்கூரம் தரித்து நிற்கும்போது சாகரவர்த்தனா புலிகளின் கரும்புலித்தாக்குத்தலில் சிக்குகிறது. போயகொட புலிகளால் கைது செய்யப்படுகிறார்.  அடுத்த எட்டு ஆண்டுகள் புலிகளின் கட்டுப்பாட்டில் சிறைக்கைதியாகத் தான் வாழ்ந்த வாழ்க்கையை ஒரு சுயசரித நூலாக, போயகொட சொல்லச்சொல்ல, சுனிலா கலப்பதி கேட்டு எழுதியிருக்கிறார்.“A Long Watch” என்று ஆங்கிலத்தில் வெளியான அந்த நூலைத் தமிழில் தேவா மொழிபெயர்த்திருக்கிறார். அந்த நூலின் பெயர்தான், “நீண்ட காத்திருப்பு”

ஒற்றன்

பெங்களூர் சென்ற சமயம் அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ நாவலை வாங்கியிருந்தேன். பெயரைப் பார்த்ததும் ஏதோ திரில்லர் கதையாக்கும் என்று இரண்டு வருடங்களாக வாசிக்காமலேயே இருந்துவிட்டேன். கிருமிக்காலத்தில் அதிகம் அழுத்தம் தராத புத்தகத்திலிருந்து மீளவும் வாசிப்பைத் தீவிரமாக ஆரம்பிக்கலாம் என்று தூக்கிய புத்தகம் ஒற்றன்.