Skip to main content

Posts

'சமாதானத்தின் கதை' பற்றி சஞ்சயன் செல்வமாணிக்கம்

அ. முத்துலிங்கத்திற்கு எழுத்துலக வாரிசு கிடைத்துவிட்டார். அ. மு போன்று இலகுநடையிலும், ஐனரஞ்சகமாகவும், நகைச்சுவையாகவும், நீரில் வழுக்கிச்செல்லும் இலைபோன்று தமிழைக் கையாழ்வதும் இலகுவல்ல. வாசகனின் கவனக்குவிப்பு கலைந்துவிடாது கதை முழுவதையும் ஒரே மூச்சில் வாசிக்கவைப்பது ஒரு தனிக் கலை. இவையெல்லாமே 'சமாதானத்தின் கதை' எழுதியவரிடம் உண்டு.

'சமாதானத்தின் கதை' பற்றி ரோஸி கஜன்

ஜேகே அவர்களின் சமாதானத்தின் கதை , அதிலுள்ள 11 சிறுகதைகள் பற்றி என்ன என்னவோ எல்லாம் சொல்லவேண்டும் என்று ஒவ்வொரு கதையும் வாசித்து முடிக்கையில் நினைத்திருந்தேன். இப்போதோ கோர்வையாகச் சொல்ல ஒன்றுமே வருதில்ல. வெரைட்டியா நாலு ரெசிபி கேளுங்க நச்சென்று சொல்லுவன்.

"சமாதானத்தின் கதை" பற்றி தாரணி பாஸ்கரன்

ஜேகே ஐ பற்றி நான் தெரிஞ்சுகொண்டது கந்தசாமியும் கலக்சியும் வந்த timeலதான் . Fbல யாரோ பகிர்ந்த போஸ்ட் பார்த்து impress ஆகி படலைக்கு போய் இன்னும் நிறைய தெரிஞ்சு fbல friend request குடுத்து அதை அவர் accept பண்ணி ஆச்சரியங்களிலே காலம் கடந்தது. ஜேகேயின் எழுத்துக்கள் தன்னை நோக்கி மெல்ல மெல்ல என்னை இழுக்கத்தொடங்கியிருந்தது என்னையறியாமலே.

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி வினோத் கருணா

ஒரு சில எழுத்தாளர்களினால் மட்டுமே வாசிப்பவர்களை அவர்களாகவே மாற்றி விடுவார்கள். அந்த வரிசையில் ஜெயக்குமார் ஓர் எழுத்துலக சாணக்கியனாவர்.JK என சுருக்கமாகவும் அன்பாகவும் அழைக்கப்படும் ஜெயகுமாரினுடைய என் கொல்லைப்புறத்து காதலிகள் எம்மை JK யாகவே மாற்றி தொண்ணுறு காலப்பகுதிகளில் எம்மை யாழ் மண்ணில் உலவவிடுகின்றார். ஓர் பதினைந்து வயது சிறுவன் தொண்ணுறு காலப்பகுதியில் எம்மை a r ரகுமானையும் மணிரத்தினத்தையும் இளையராஜாவையும் ராஜனியையும் அதே நேரத்தில் இசையையும் அவனுடைய கண்களினாலும் உணர்வுகளினாலும் எம்மை அந்த சிறுவனாகவே மாற்றுகின்றார். எம்மையும் அகிலனையும் கஜனையும் காதலிக்க வைக்கின்றார்.இந்த புத்தகத்தை கையில் எடுத்தால் ஒரே மூச்சில் படித்து முடிக்க மனம் ஏங்கும் புத்தகத்தை கீழே வைக்க மனம் முயற்சிக்காது..... இந்த புத்தகத்தை வாசித்து அனுபவியுங்கள்.

“விளமீன்” பற்றி மணியாள்

மகனின் ‘விளமீன்’ கதையை வாசித்தபோது பல ஞாபகங்கள் வந்து போயின. அந்தக்காலத்தில் கொஞ்சம் வசதி கூடிய குடும்பங்களுக்கு வீட்டிற்கே மீனைக் கொண்டுவந்து கொடுப்பார்கள். வசதி குறைந்த குடும்பத்தார் கொஞ்சப்பேர் கடற்கரைக்குப் போய் தோணிக்குக் கிட்டவா நிற்பார்கள். மீன்காரன் பையை வாங்கிக்கொண்டுபோய் தோணிக்குள் இருந்து மீனை எடுத்துக் கொண்டுவந்து கொடுப்பான். ஆனால் அவர்கள் அதுவரைக்கும் பொறுக்காமல் தோணியை கரையேற்றமுதலேயே அடித்துப்பிடித்துக்கொண்டு கடலுக்குள் இறங்கிவிடுவார்கள். இப்படிப்போட்டி போட்டுக்கொண்டு நின்றால்தான் நல்ல மீன்கள் கிடைக்கும். இவர்கள் எல்லோருமே மீனுக்கான காசை மாதம் முடியும்போதுதான் கொடுப்பார்கள். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. தீவுப்பகுதி மீன்கள் எல்லாம் அந்த மக்களுக்குப் போகாமல் ஐஸ் பெட்டியில் யாழ்ப்பாணம் போய்விடுகிறது. ஊரிலும் முன்னமாதிரி ஆட்கள் இல்லை. சரசுமாமி மாதிரி வெளி நாட்டுக்கும் வெளி ஊர்களுக்கும் சென்றுவிட்டார்கள்.

ஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்

எனக்கும் மனைவிக்குமிடையில் சாப்பாட்டு விசயத்தில் அடிக்கடி சண்டை வரும். நாங்கள் ஒரு தீவுக் குடும்பம் என்பதால் கடலில் நீந்துகின்ற, கடற்கரையில் ஊருகின்ற எதையுமே ருசித்துச் சாப்பிடுவோம். ஒவ்வொரு ஜந்துவையும் எப்படிச் சமைக்கவேண்டுமென்பதை வேதங்கள்போல எங்கள் முன்னவர்கள் செவிவழியாக தம் அடுத்த சந்ததிகளுக்கு அருளிச்செய்திருக்கிறார்கள். நிலவுக் காலத்தில் நண்டு வலிச்சலாக இருக்கும். சின்னத்திரளி பதினொருமணிக்குமேலே நாறிவிடும். களங்கண்டி விளமீனைப் பொரித்துப் புட்டோடு சாப்பிடவெண்டும். ஒட்டி என்றால் தடித்த குழம்பும் சொதியும். கணவாயை ஏழு சிரட்டையில் அவிய விடவேண்டும். மட்டி எப்படி சமைப்பது. ஒடியற்கூழுக்கு என்னென்ன போடுவது, நெத்தலியில் சொதி. சூடையில் பொரியல். முரள். கிளாக்கன். சீலா, கும்பளா, அறக்குளா முதற்கொண்டு முள்ளு மீனான கொய்யையையும் பச்சைத்தண்ணியான கட்டாவையும்கூட எப்படி சமைக்கவேண்டுமென எத்தனை எத்தனை ரெசிப்பிகள். எந்தெந்த நோய்க்கு எந்தெந்த மீன்கள். எந்தெந்தக் காலத்தில் எந்தெந்த கறிகள் என எல்லாமே என் அம்மாவுக்கு அத்துப்படி. அபிமன்யுவுக்கு கருவிலேயே சக்கரவியூகம் சொல்லிக்கொடுக்கப்பட்டதுபோல ந

ஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்

அன்றிரவு ஏழு மணிக்கு வசாவிளானில் செம்முகம் ஆற்றுகைக்குழுவினரின் அரங்கு ஒன்று நடக்கப்போவதாக அக்கா சொல்லியிருந்தார். அதனாலேயே நிருபாவின் புத்தக நிகழ்விலிருந்து வெள்ளனவே கழன்று, வீடு திரும்பி ஆறரைக்கே தயாராக இருந்தேன். நேரம் ஏழு, ஏழரை மணி ஆகிவிட்டது. ஆனால் அக்கா மட்டும் வெளிக்கிடும் சிலமனே இல்லை.  “என்னக்கா லேட்டாப் போய் என்னெய்யிறது” “பொறு ஏழு மணி எண்டா இவங்கள் ஒன்பது மணிக்குத்தான் தொடங்குவாங்கள்”

நீண்ட காத்திருப்பு

கொமடோர் போயகொட ஶ்ரீலங்கா கடற்படையின் அதிகாரியாக இருந்தவர். 74ல் கடற்படையில் இணைந்து 93ல் சாகரவர்த்தனா கடற்படைக் கப்பலின் தளபதியாக நியமிக்கப்படுகிறார். 94ம் ஆண்டு கற்பிட்டிக் கடற்பகுதியில் நங்கூரம் தரித்து நிற்கும்போது சாகரவர்த்தனா புலிகளின் கரும்புலித்தாக்குத்தலில் சிக்குகிறது. போயகொட புலிகளால் கைது செய்யப்படுகிறார்.  அடுத்த எட்டு ஆண்டுகள் புலிகளின் கட்டுப்பாட்டில் சிறைக்கைதியாகத் தான் வாழ்ந்த வாழ்க்கையை ஒரு சுயசரித நூலாக, போயகொட சொல்லச்சொல்ல, சுனிலா கலப்பதி கேட்டு எழுதியிருக்கிறார்.“A Long Watch” என்று ஆங்கிலத்தில் வெளியான அந்த நூலைத் தமிழில் தேவா மொழிபெயர்த்திருக்கிறார். அந்த நூலின் பெயர்தான், “நீண்ட காத்திருப்பு”

ஒற்றன்

பெங்களூர் சென்ற சமயம் அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ நாவலை வாங்கியிருந்தேன். பெயரைப் பார்த்ததும் ஏதோ திரில்லர் கதையாக்கும் என்று இரண்டு வருடங்களாக வாசிக்காமலேயே இருந்துவிட்டேன். கிருமிக்காலத்தில் அதிகம் அழுத்தம் தராத புத்தகத்திலிருந்து மீளவும் வாசிப்பைத் தீவிரமாக ஆரம்பிக்கலாம் என்று தூக்கிய புத்தகம் ஒற்றன்.

பராபரம்

எல்லோரும் வீட்டினுள் முடங்கிக்கிடக்கையில் வெளியில் நடமாடுவதில் ஒரு சுகம் உண்டு. எங்காவது ஓரிரு மனிதர்கள். மனிதர்களைக் கண்டு ஆச்சரியமாகத் திரும்பிப்பார்க்கும் கங்காருக்கூட்டங்கள். கூட்டம் கூட்டமாகப் பறவைகள்.  இவர்களோடு நானும்.

ஊபர் ஈட்ஸ்

நேற்று ஊபர் ஈட்ஸ் விநியோகத்துக்கான பொதியை எடுப்பதற்கு இலங்கை உணவகம் ஒன்றுக்குச் செல்லவேண்டியிருந்தது. பொதியில் ஒட்டியிருந்த பெயரைப்பார்த்ததும் அது ஒரு ஈழத்தமிழரின் ஓர்டர் என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். கொத்துரொட்டியும் அப்பமும் ஓர்டர் பண்ணியிருந்தார்கள். அரைக்கட்டை தூரத்தில் உள்ள கடையின் கொத்து ரொட்டிக்கு ஊபர் ஈட்ஸ் ஓர்டர் பண்ணும் தமிழர்களும் இருப்பார்களா என்ற ஆச்சரியத்துடன் பொதியை வாங்கிக்கொண்டு அந்த வீடு நோக்கிப்புறப்பட்டேன்.

சமாதானத்தின் கதை - யாழ் நூலக சந்திப்பு

நண்பர்களுக்கு வணக்கம். வரும் சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு யாழ் நூலகத்தில், ஆதிரை வெளியீடான ‘சமாதானத்தின் கதை’ பற்றிய உரையாடல் ஒன்றை வெண்பா நிறுவனம் ஒழுங்குசெய்துள்ளது. கதைகளினூடான உரையாடல் என்பது எப்போதுமே உற்சாகத்தைக் கொடுக்கக்கூடியது. ஒருவித எண்ணச்சுழற்சியில் எழுதப்படும் கதைகள் வாசிக்கப்படும்போது முற்றிலும் பிறிதொரு வடிவம் எடுத்து எழுதப்பட்டவரிடமிருந்து பிரிந்து அந்நியப்பட்டு நிற்கையில் நிறைய ஆச்சரியமும் கொஞ்சம் ஆயாசமும் சேர்ந்துவரும். அவ்விடத்தில் எழுதியவர் தொலைந்துபோய் அவரும் அந்தக்கதைகளின் இன்னொரு வாசகராகவே ஆகிறார். அந்தப்புள்ளியிலிருந்து விரிவடையும் உரையாடலை இந்நிகழ்வில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். வாசிப்பினூடாக இணைந்திருக்கும் நண்பர்கள் அனைவரும் முடிந்தால் வருகை தாருங்கள். உங்கள் அனைவரையும் சந்தித்து உரையாட மிக ஆவலோடு இருக்கிறேன். சந்திப்போம் சனி பிற்பகம் 4.00 மணி, குவிமாடக் கேட்போர் கூடம் யாழ் பொது நூலகம் அன்புடன்.

"சமாதானத்தின் கதை" பற்றி சுபாசிகன்

"நான் வழிகாட்டிகளை நடு வழியிலேயே அடித்துத்துரத்தி விடுகிறேன். புத்தகங்களையும்தான்" சமாதானத்தின் கதை ஜேகேயின் புத்தகம் வெளிவந்து, வாங்கி நாட்கள் கடந்து விட்டன. வாசித்து முடித்து, மனதில் தோன்றியதை எழுத வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. வழமைபோல் பரபரவென வாசிக்கத் தொடங்கி இரண்டாவது கதையில் ஒரு இடைவெளி வந்து விட்டது. இந்த இரண்டாவது கதை பற்றி கொஞ்சம் விரிவாகவே கூறுகிறேன். கூற வேண்டும்! சிறிது நாட்கள் இடைவெளியின் பின் மீண்டும் வாசித்து முடிக்கையில், அவரவர் ஏற்கனவே விமரிசனங்கள் எழுதி முடித்து விட்டனர். இதற்குள் நான் என்னத்தைச் சொல்லிக் கிழிக்க? எனினும் நான் நினைத்ததை முடிக்காமல் விடுவதெப்படி?

ஏழு வாத்திகளின் கதைகள் : 2. பிரின்ஸி

இந்தச் சூழலைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஒரு பக்கம் பழைய பூங்கா. பூங்கா முழுதும் பிரிட்டிஷ்காலத்தில் நடப்பட்ட, அடர்த்தியாக வளர்ந்துநிற்கும் மலைவேம்புகள். அம்மரங்களின் உச்சிகளில் இலைகளுக்குப் போட்டியாகத் தொங்கிக்கிடக்கும் வௌவால்கள். பழையபூங்காவுக்குள் அப்போது காவல்துறை பயிற்சிமுகாம் இருந்தது. எப்போதாவது யாராவது தவறுதலாக வெடிவைத்தால் அத்தனை வௌவால்களும் தூக்கம் கலைந்து எழுந்து கூட்டமாக மேற்குப்பக்கமுள்ள பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின்மேலே ஒரு விரிப்புபோல மேவிப்பறக்கும். மற்றபடி அத்தனை வௌவால்களும் பகலில் சிறு சிறு சலசலப்புகளுடன் தொங்கியபடி. மைதானத்தின் வடக்கு மூலையில் இரண்டுமாடி வீடு ஒன்று. அதிபர் பங்களோ. கிட்டத்தட்ட எழுபது எண்பது வருடங்கள் பழமையானது அந்த வீடு. அதுவும் பிரிட்டிஷ்காலத்தில் கட்டப்பட்டதுதான். பங்களோவின் சுவர்களைத் தொட்டால் சுண்ணாம்புப்பூச்சு உதிரும். அவ்வளவு பழசு. ஆனால் அந்தப் பழமைதான் அச்சூழலை அழகுபடுத்திக்கொண்டிருந்தது. அந்த பங்களோவின் போர்ட்டிகோவில் ஒரு சாய்மனைக்கதிரை. கதிரைக்குப்பக்கத்திலேயே தேநீர்கோப்பை வைத்து எடுக்கவென அளவான உயரத்தில் ஒரு ஸ்டூல்.

ஏழு வாத்திகளின் கதைகள்: 1. கருணைநாயகத்தார்

@ http://www.thecricketmonthly.com/ எங்கள் பாடசாலையில் ‘வாழ்க்கைத்திறன் கல்வி’ என்றொரு தனிப் பாடம் இருந்தது. வாழ்க்கைத்திறன்கள் பலவகைப்படும். சைக்கிள் டியூப் ஒட்டுவது. சட்டைக்குக் ஹங்கர் சரிக்கட்டுவது. சீலைத்துணியில் தேயிலை வடி செய்வது. செவ்வரத்தையில் பதி வைப்பது. எக்ஸோராவில் பத்து ஒட்டு ஒட்டி பதினொரு கலரில் பூக்கவைப்பது. மரக்கன்று வைக்கவென வீடுவீடாகச்சென்று குப்பைகளில் லக்ஸ்பிரே, நெஸ்பிரே பாக்குகளைத் தேடிச் சேகரிப்பது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். வாழ்க்கைத்திறன் கல்வியை எங்களுக்குப் பாடசாலையில் கற்பித்தவர் கருணைநாயகத்தார்.

சமாதானத்தின் கதை : இணையத்தில் வாங்க

சமாதானத்தின் கதை : புதிய வெளியீடு

ஆதிரை வெளியீடாக நான் எழுதிய ‘சமாதானத்தின் கதை’ என்கின்ற நூல் இப்போது கடைகளில் கிடைக்கிறது. 000 கதைகளைச் சொல்லாமலேயே விட்டுவிட்டால் என்ன என்று எண்ணிய காலமது. சொல்லாத கதைகள் எப்போதுமே எம்மோடு அமுங்கியபடி கூடவே இருக்கின்றன. இரகசியங்களைப்போல. சொல்லியபின் அவை எம்மைவிட்டுப் பறந்துபோய்விடும். பின்னர் கூப்பிட்டாலும் அவை செவிமடுப்பதில்லை. எப்போதேனும் தெருவோரம் யாரோ அவற்றைக்கூட்டிச்செல்லும்போது எம் வாசலை எட்டிப்பார்ப்பதோடு சரி. அதற்குமேல் அவற்றுக்கும் எமக்குமான உறவு நெருங்குவதேயில்லை. “சமாதானத்தின் கதை” நூலில் உள்ள பதினொரு கதைகளும் எப்போதோ என்னோடு கோபித்துக்கொண்டு பிரிந்துபோன கதைகள். அவற்றை மீள எழுதும்போது நிரம்பிய அன்பும் அதற்கும்மேலாகச் சண்டையும் அவற்றோடு பிடிக்கவேண்டியிருந்தது. சில கதைகள் வளர்ந்தும் இன்னும் பல ஒடுங்கியும் கிடந்தன. ‘விசையறு பந்து’ மதுவந்திகாவைக் காணும்போது புதிதாக இருந்தது. ‘தூங்காத இரவு வேண்டும்’ சிவலிங்கத்தின் வாழ்வை நினைத்துப்பார்க்கவே ஒரு கலக்கம் வந்துபோனது. கிட்டத்தட்ட ஒரு நான்கைந்து மாதங்கள் இக்கதைகளின் களங்களிலும் கதை மாந்தரோடும் செலவிட்ட காலைப்பொழுது

அவுஸ்திரேலிய காட்டுத்தீ பற்றிய சில குறிப்புகள்

1. ஏன் அவுஸ்திரேலியக் காடுகள் மாத்திரம் இப்படி எரிகிறது? 
 முக்கிய காரணம் இங்குள்ள காடுகளில் நிறைந்திருக்கும் யூகலிப்டஸ் மரங்கள். எங்கள் ஊர்ப்பாசையில் சொன்னால் விக்ஸ் அல்லது தைல மரங்கள். அம்மரங்களில் இலகுவில் தீப்பற்றக்கூடிய யூகலிப்டஸ் எண்ணெய் இருக்கிறது. அதனால் பல மரங்கள் வெப்பநிலை அதிகமாகும்போது சூடேறி வெடிக்கவும் செய்யும். அவுஸ்திரேலியாவின் சுதேசிய மரம் இது. அதனாலேயே சிகரட் நெருப்போ மின்னலோ அல்லது இயல்பாகவே சூடேறி வெடித்தோ காடு உடனேயே தீப்பற்றிவிடுகிறது. தவிர இங்கே காற்றில் ஈரப்பதன் இருப்பதில்லை. கொஞ்சம் வெயில் என்றாலும் மண்ணிலும் வளியிலும் குளிர்மை அகன்றுவிடும். இந்த சூழ்நிலையில் காற்றும் சேர்ந்துகொள்ள தீ இலகுவில் பற்றி விரிவடைய ஆரம்பிக்கிறது.

2019

ஞாபகத்திலேயே இல்லாத, ஷோர்ட் லெக்குக்குள் சும்மா தட்டிவிட்டு அவசரமாக ஓடி எடுத்த ரன்போல இந்த ஆண்டு கழிந்துவிட்டது. இன்னொரு ஐந்து வருடங்களில் இப்படியொரு ஆண்டு கழிந்ததே ஞாபகத்தில் இருக்கப்போவதில்லை என்று தோன்றியது. 2017ல் என்ன செய்தேன் என்பதும் ஞாபகமில்லை. இந்த ஆண்டும் அப்படித்தான். வருடம் முழுதும் மொங்கி மொங்கி வேலை செய்து என்ன பயன் என்று யோசித்தேன். அதைவிட வேலைக்கு மகிழுந்தில் பயணம் செய்வது கொடுக்கும் அலுப்பு. ச்சைக்.

கருத்துகள்

வணக்கம் Mr. JK, உங்கள் வலைதளம் மிக அருமையாக உள்ளது. இரு நாட்களுக்கு முன், என் தோழியின் பரிந்துரையினால் உங்கள் *ஆட்டிறைச்சி* பதிவை தான் முதலில் படித்தேன். சாதாரண விஷயத்தை கூட மிக சுவாரசியமா சொல்லுவார்னு சொன்னா. ஆனா இவ்வளவு அருமையா , எனக்கு பிடிச்ச மிக அழகான இலங்கை தமிழ்ல இருக்கும்னு எதிர்பாக்கல. உங்கள் எழுத்து நடை ரொம்ப பிடிச்சிருக்கு. சின்ன வயசுல இருந்து நிறைய படிக்கிறேன். ஒரு எழுத்தாளரோட எழுத்து நடை பிடிச்சா மட்டுமே, படித்ததையே திரும்ப திரும்பவும் கூட படிக்கிற பழக்கம் எனக்கு இருக்கு. புது எழுத்தாளர்கள் எழுதுவதை எல்லாம் படிக்க ஆரம்பிக்கவே ரொம்ப யோசிப்பேன். உங்க பதிவுகளை இரு நாட்களாக விடாமல் தொடர்ந்து படிக்கிறேன். 2011 இல் இருந்து ஆரம்பித்து. ஒரு சின்ன வேண்டுகோள். எனக்கு உங்கள் தமிழில் சில வார்த்தைகள் புரியல. சில இடங்கள்ள, உங்கள் பேச்சு வழக்கப்படி எழுதியிருக்கீங்களா, இல்ல ஆங்கில வார்த்தையை தமிழ்ல எழுதியிருக்கீங்களானு குழப்பம் வருது. பதிவின் சுவராசியத்தில , வேகத்தில் அதை விட்டுட்டா கூட, பிறகு அது என்னவா இருக்கும்னு யோசிக்க வைக்குது. உங்கள் பேச்சு வழக்கில் இருக்குற

கிசோகர் வாங்கித்தந்த ஐபோன் - குறுநாவல்

அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4  

கிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 4

தட்ஸ் ரைட். என்ர போன் கொமெடுக்க விழுந்திட்டுது. பார்க்கவே குமட்டிக்கொண்டு வந்தது. என்னதொரு அறுந்த சீவியம் இண்டைக்கு. ச்சைக். அருமையான ஐபோன் எக்ஸ் போன் அது. ரிலீஸ் ஆன கையோட ஆசை ஆசையா ஓடிப்போய் வாங்கியோண்டு வந்தது. போட்டோ எல்லாம் சும்மா பளீரென்று எடுக்கும். பூவை போக்கஸ் பண்ணினா பின்னால கிடக்கிற இலை, குப்பைத்தொட்டி, வேலி எல்லாம் மறைஞ்சு பூ மட்டும் பிச்சுக்கொண்டு தெரியும். அர்ஜுனன் கிளிக்கழுத்த போக்கஸ் பண்ணினதுபோல. ஒருக்கா வீட்டில வாழையிலைச் சாப்பாடு. நான் தண்ணியைத் தெளிச்சு வழிச்சிட்டு சோத்தைப் போட ரெடி. அப்பப்பார்த்து ஒரு தண்ணித்துளி வாழையிலைத் தண்டுக்குள்ள சிக்கிக் கிடந்துது. உடனே போனை எடுத்தன். துளியை போக்கஸ் பண்ணினன். துளியை குளோசா எடுக்கேக்க அதில எண்ட மூஞ்சி தெரியிறமாதிரி. ஈ லோகத்தில வேற எவனும் அப்படி ஒரு படம் எடுத்திருக்கமாட்டான். நான் என் போனில எடுத்தன். படமெண்டா நெருப்புப் படம்.

கிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 3

கொமெண்டை அழிப்பது என்று சொல்லிவிட்டேனே ஒழிய எனகெண்டால் அதற்கு மனமே இல்லை. வெண்முரசு அளவுக்கு இல்லையாயினும் விஷ்ணுபுரம் அளவுக்கு நீண்டுவிட்ட ஒரு அற்புதமான கொமெண்ட். இதனைப்போய் அடிச்சுவடியே இல்லாமல் அழிப்பதா என்று ஒரே கவலையாக இருந்தது. கருத்து நல்லா இருக்கு. கிசோகருக்குத்தான் வேணாம். தனியா நானே படலைல ஒரு பதிவாப் போட்டால் என்ன? இல்லை, வேண்டாம். படலை என்ற ஒரு தளம் இருப்பது எனக்கே மறந்துவிட்டது. பேஸ்புக்கில ஷெயார் பண்ணினாலும் நாலு லைக்குகூட இப்ப விழுகுதில்ல. எதுக்காக இருக்கும்? நாலாயிரம் பிரண்டுகள் இருந்தாலும் நாலு பேரை மாத்திரம் விட்டிட்டு மத்த எல்லாரையும் அன்பஃலோ பண்ணி வச்சிருக்கிறதால மார்க்கு அலேர்ட் ஆகி என்னை இந்த சமூகத்திற்கு இருட்டடிப்பு செய்கிறான் என்று தெரிந்தது. என்ன செய்யலாம்?

கிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 2

‘மல்லி …’ கூப்பிடும் சத்தம் கேட்கிறது. ஆனால் ஆளைக் காணவில்லை. சின்னக் கக்கூசு. இதுக்குள்ள ஆரு ஒளிந்திருக்கமுடியும்? நான் சுற்றிச் சுற்றிப்பார்க்கிறேன். ம்ஹூம். மீண்டும் கொமெண்டியபடியே ஒண்டுக்கடிக்க ஆரம்பித்தேன். ‘மல்லி உன்னைத்தான்’ அப்போதுதான் கவனித்தேன். கொமெடுக்குப் பின்னாலிருந்துதான் சத்தம் கேட்டது. அங்கே ஒரு சின்னக் கரப்பான் பூச்சி. தலைகீழாகப் பிரண்டுகிடந்து துடித்துக்கொண்டிருந்தது. ஆச்சரியத்துடன் நான் கரப்பானிடம் கேட்டேன். ‘நீயா பேசியது?’ ‘யெஸ் யெஸ் … நான்தான் கடவுள், உன்னைத் தடுத்தாட்கொள்ள வந்தேன்..’

கிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 1

போன கிழமை கிசோகரின் புண்ணியத்தில் எனக்கு புதிதாக ஒரு ஐபோன் கிடைத்தது. அன்றைக்கும் வழமைபோல வெள்ளனவே நித்திரையால எழும்பி சூடா ஒரு தேத்தண்ணி வைக்கலாம் என்று கேத்திலை ஓன் பண்ணினேன். தண்ணீர் கொதிப்பதற்குள் பால்மாவையும் சீனியையும் ஒரு கப்புக்குள் போட்டுட்டு, அடுத்த கப்புக்குள் இரண்டு தேயிலை பக்கற்றைப் போட்டேன். அப்பவும் தண்ணீர் கொதிக்க ஒரு பத்துப்பதினைஞ்சு செக்கன் இருந்துது. அந்தப் பதினைஞ்சு செக்கன்களுக்குள் வாழ்க்கையில் நான் எவ்வளத்தையோ சாதித்திருக்க முடியும். சிங்குக்குள் முந்தைய நாள் பாத்திரங்கள் கழுவாமற் கிடந்தன. ஒன்றை எடுத்துக் கழுவி வைத்திருக்கலாம். குப்பைப்பையைக் கொண்டுபோய் வெளியே தொட்டிக்குள் போட்டிருக்கலாம். கழுவிக் காய வைத்திருந்த பிளேட்டுகளை கப்பேர்டுக்க வைத்திருக்கலாம். பாணுக்கு பட்டர் பூசியிருக்கலாம். வேலைகளா இல்லை. ஆனா எனக்கு அதுக்குள்ள ஒருக்கா பேஸ்புக்குக்குள்ள போயிட்டு வரலாம் என்று ஒரு அறுந்த யோசினை வந்துது. போனேன். அப்ப பிடிச்சுது சனி.

எல்லோராவின் பதினான்கு கட்டளைகள்

000 ஒரு காதலர்தினத்தின்போது எல்லோரா தன் காதலனுக்கு எழுதிய மின் அஞ்சலின் முதல் வரிகள் இவை.  “என் கண்ணே பட்டுவிடும்போலத் தோன்றுகிறது. ஒரு பாதிரியாருக்கு இவ்வளவு பயங்கர அழகு கூடாது. அதுவும் உன் கண்கள் இருக்கிறதே. அவை அதி உன்னதமானவை.” 

கந்தசாமியும் கலக்சியும் (கிண்டில்)- கீதா ஜீவனின் பார்வை

வணக்கம் ஜேகே இரு வருடங்களின் முன் ஒரு நண்பர் வீட்டிற்கு சென்ற போது  " கந்தசாமியும் கலக்சியும் " என் கைகளில் அகப்பட்டது. எனது போதாத காலம் ஒரு பக்கத்தை சும்மா பார்ப்பம் என்று திறந்து வாசித்தேன்.அது சுமந்திரனும் மிகிந்தர்களும் சந்திக்கும் தருணம். மூடி வைத்து விட்டு இவருக்கு விசர் இவரும் அரசியல் எழுத தொடங்கி விட்டார் என்று முடிவெடுத்ததுதான். அதன் பின் அந்த புத்தகத்தை வேண்டவேண்டும் என்ற எண்ணமே இல்லை . மூன்று நாட்களின் முன் இந்த புத்தகம் கிண்டிலில் கிடைப்பதாக நண்பர் மூலம் அறிந்தேன். விடுமுறை வேற வாசித்துதான் பார்ப்போமே என்று காலம் தாழ்த்திய   ஞானோதயத்தால் வாங்கியதுதான் இந்த “கந்தசாமியும் கலக்சியும்”  வாசிக்க தொடங்கியதுதான் எங்கே சுவாரசியம் போய்விடுமோ என்று இரண்டு நாட்களில் வாசித்து உங்களுக்கு பதில் எழுதுவது வரை தூண்டியிருக்கிறது இந்த புத்தகம்.

கறுப்பி

கறுப்பியை இனிமேல் விற்றே ஆகவேண்டிய நிலைமை வந்துவிட்டது.  மெல்பேர்ன் வந்ததுக்கு இது இரண்டாவது வாகனம். முதல் வாகனத்தைப் படிக்கும் காலத்தில் வாங்கியது. அறாவிலைக்கு ஓட ஓட நடுவழியில் நட்டுகள் கழன்றுவிழும் நிலையில் இருந்த வாகனத்தை வாங்கித் திருத்தி ஓட ஆரம்பித்தது. ஆனால் எத்தனை நட்டுகள் விழுந்தாலும் அந்த வாகனம் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருந்தது. வாங்கிக் கொஞ்சக் காலத்துக்கு ஹீட்டர் கூலர் இரண்டுமே வேலை செய்தது. பின்னர் ஹீட்டர் மாத்திரம் வேலை செய்தது. அதன் பின்னர் கூலர் கரைச்சல் கொடுத்தது. கொஞ்ச நாளைக்குப்பின்னர் வெறும் காற்று மட்டும் மெல்லிய எஞ்சின் நெடியுடன் பறந்தது. பாட்டுப்பெட்டிக்கும் அதே கதைதான். முதலில் சிடி பிளேயர் முழுதாக வேலை செய்தது. பின்னர் கனலில் கருவாகி புனலில் உருவானதை மாத்திரம் அது தொடர்ந்து ரிப்பீட் பண்ணியது. அதன்பின்னர் வானொலி மட்டும் தனியே பாடியது. ஈற்றில் வெறும் இரைச்சல் மாத்திரம். அதையும் ஒரு கட்டத்தில் நிறுத்தமுடியாமற்போனது. எஞ்சின் அதற்கும்மேலே. அடிப்பகுதியில் இங்கிங்கெனாது எங்கெனும் ஒயில் ஒழுகியது. ரேடியேட்டர் தண்ணீர் வடிந்தது. பெற்றோல் குடிக்கப்பட்டது. இயக

The dichotomy between Sri Lankan Tamil and Sinhalese Literature

Full Text of my speech at the session on Tamil - Sinhala Literature Translation. 000 Good Evening Everyone. First of all thanks to Poopathy uncle for inviting me to share this view with you all. As he often does, earlier this week, once he has run out of all the possible speakers, he finally reached out to me to give this speech. Thanks for the opportunity uncle. So let me commence with a disclaimer here. Attempting to provide a holistic perspective on two organically divided literature spectrum would always be a challenge. Doing that without the help of a proper literature review is an insult to such attempt. Moreover, preparing all these in a matter of few days is more sinful and this wouldn’t pass a simple pub test. Hence my proclamation follows; The views and opinions expressed in this piece are purely mine. These are solely my continuous accumulation of perceptions, often influenced by the books, social media, friends and narratives I encountered over the t

யாழ்ப்பாண நூலகம் அன்றும் இன்றும்

திருமதி ரூபா நடராஜாவுடைய ‘யாழ்ப்பாண நூலகம் அன்றும் இன்றும்’ என்கின்ற நூல் நாளை லண்டனில் வெளியாகிறது. ரூபா நடராஜா எண்பத்தொராம் ஆண்டு யாழ்ப்பாண நூலகம் ஶ்ரீலங்கா அரசாங்கத்தின் வழிநடத்தலில் எரியூட்டப்பட்டபோது பிரதம நூலகராக இருந்தவர். எரிந்த நூலகத்தில் அவர் சீ என்று வெறுத்துப்போய் உட்கார்ந்து இருக்கும் இந்தக்காட்சி எப்போதுமே மறக்கப்படமுடியாதது. இன்றைக்கு முப்பத்தெட்டு ஆண்டுகள் கழித்து அவருடைய நூல் வெளியாகிறது. யூத கவிஞரான ஹெயினின் வார்த்தைகள் இவை. “எங்கே புத்தகங்களை எரிக்கிறார்களோ, அங்கே ஈற்றில் மனிதர்களையும் எரிப்பார்கள்” எவ்வளவு உண்மை. Mrs Ruba Nadaraja’s book titled “Yaazhpaana Noolaham Anrum Inrum” (Jaffna Library, Then and Now) will be released in London tomorrow, the 1st of June, 2019. Ruba Nadaraja was the chief librarian during the time when then renowned Jaffna public library was burnt to ashes by the Sri Lankan government led organised mob in 1981. The image depicts the frustrated and helpless Ruba Nadaraja and her staff gathered inside the ruins aftermath

தோழர் நேசமணி

சற்றுமுன்னர்தான் நண்பர் கிருஷ்ணமூர்த்தியுடன் தொடர்புகொண்டு பேசினேன். தோழர் நேசமணி அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் மிகுந்த உற்சாக மனநிலையுடன் இருப்பதாகவும் கூறினார். தோழரோடு பேசப்போகிறீர்களா என்றும் கேட்டார். ஏதோ ஒன்று தடுத்தது. பின்னர் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன். நேற்றுத் தகவல் அறிந்தமுதல் எனக்குத் தோழர் நேசமணியின் ஞாபகமாகவே இருந்தது. பிரான்சில் இருக்கும் எம்முடைய இயக்கத்தோழரோடு அழைப்பெடுத்துப் பேசியபோது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இருவரும் தோழர் நேசமணியோடு பழகித்திரிந்த, கதைகள் பல பறைந்த அந்தக் காலத்தை நினைவு கூர்ந்தோம். காலமும் தூரமும் நம் உறவுகளை பிரித்தே வைத்திருந்தாலும் அனிச்சைகளால் நாங்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது.

இரண்டாயிரத்துப் பத்தொன்பது, மே, இருபத்தியேழு

குளிர் ஆரம்பித்துவிட்டிருந்தது. இலையுதிர்காலம் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. கடந்த தடவை வசந்தகாலத்துக்கும் இதுதான் நிகழ்ந்தது. வசந்தத்தையும் இலையுதிரையும் கோடையும் குளிரும்தான் நமக்கு ஞாபகப்படுத்தவேண்டியிருக்கிறது. வீட்டில் அப்பிள் மரம் காய்த்துக்கொட்டிக்கொண்டிருந்தது. கொழும்பிலிருந்து அப்பா ஓமந்தையால் கொண்டுவரும் நான்கு அப்பிள்களை முன்வீடு பின்வீடு என்று எல்லோருக்கும் பிரித்துக்கொடுத்தக் காலம் என்று ஒன்றுண்டு. நான்காய், எட்டாய்ப்பிரித்து அதிலொரு துண்டு கிடைக்கும். தீர்ந்துவிடுமே என்று நன்னி நன்னி சாப்பிட்டது. காலையில் காருக்குள் ஏறும் முன்னர் மரத்தில் எட்டி ஒன்றைப் பிடுங்கி, பக்கத்துப் பைப்பிலேயே கழுவி, கடித்தபடி புறப்படுகிறேன். இதனை முன்வீட்டு லலிக்குச் சொன்னால் புன்னகைப்பான் என்று நினைக்கிறேன்.

ஷாஜகானின் காட்டாறு

அண்மைக்காலங்களில் தமிழில் வாசிப்பது என்பது பெரும்பாலும் அயர்ச்சியையே கொடுத்து வந்திருக்கிறது. அதற்குக் காரணம் அவை வாசிப்புக்கு உகந்ததாகாமல் போய்விட்டன என்பதல்ல. அவற்றை வாசிக்கும்போது என் மனநிலை தளம்புகிறது. தமிழில் வாசிக்கும்போது கதைக்களனுக்குள் நுழைந்து ஒன்றிணையமுடியாமல் வாசிப்பு மனநிலை அலைக்கழிக்கப்படுகிறது. நூல்களையும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களையும் உள்ளடக்கிய புறச்சூழ அரசியலும் விவாதங்களும் அவர்களை வாசிக்கும்போது முழித்துக்கொண்டு ஒவ்வொரு பக்கங்களிலும் நிற்பதைத் தவிர்ப்பது கடினமாக இருக்கிறது. அதனால் அவற்றிலிருந்து வலிந்து விலகி நின்று, எழுத்தாளர்களின் பொதுவெளிகளை அவதானிக்காமல், அவர்களுடைய முகநூல், இணையத்தள, காணொலிப்பதிவுகளைக் கவனிக்காமல் நூல்களை மாத்திரமே தேடி வாசிக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. வேற்றுமொழி இலக்கியங்களை வாசிக்கும்போது இந்த மனநிலை ஏற்படுவதில்லை. அந்தப் புத்தகங்களை அவற்றின் புறவெளி விவாதங்களைப்பற்றி அறியாமலேயே அணுகமுடிகிறது. அதனால் புத்தகங்களின் உள்ளடக்கங்களோடு நெருங்குவது என்பது இலகாகிறது.  கேட்கப்படாத பாடல்கள்போல வாசிக்கப்படாத புத்தகங்களும் கொஞ்சம் அதிகம் அழக

கொள்ளை நோய்

ஓரன் என்கின்ற கடலோர நகரம் ஒன்றில் இடம்பெறும் கதை இது. ஒரு ஏப்ரல் நாளில் ஓரன் நகரமெங்கும் திடீரென்று ஆயிரக்கணக்கான எலிகள் செத்துவிழத்தொடங்குகின்றன. முதலில் ஒருவருடைய வீட்டு வாசலில் எலி ஒன்று செத்துக்கிடந்தது. பின்னர் தோட்டத்தில் ஐந்தாறு எலிகள் செத்துக்கிடந்தன. குப்பைத்தொட்டியருகே ஐம்பது எலிகள். ஒரு தானியக் கிடங்குக்குப் பின்னே நூற்றுக்கணக்கான எலிகள். இப்படித் தொடர்ச்சியாக எலிகள் செத்துவிழ ஆரம்பிக்கின்றன.

நண்பர்கள் மற்றும் பிறர்

சென்றவாரம் எனக்கொரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. புதிய இலக்கம்.  “தம்பி நான் மகாலிங்கம் கதைக்கிறன். உங்கட அப்பாண்ட பழைய பிரண்ட். ஒஸ்ரேலியால வந்து நிக்கிறன் … அவரோட கதைக்கலாமா?” அப்பாவிடம் போனைக் கொடுத்தேன். அப்பாவும் அந்த மகாலிங்கம் அங்கிளும் பேச ஆரம்பித்தார்கள். தியத்தலாவை, நொச்சியாகமை, குமரப்பெருமாள் அண்ணன், சேர்வெயிங் டிபார்ட்மெண்ட், ரெமி மார்டின், பெர்ணாண்டோ, எச்.என்.பெரேய்ரா, டோஹா, பாரெயின், தியோடலைட், டோடல் ஸ்டேசன், ஶ்ரீகரன், ஒரேட்டர் சுப்ரமணியம் என்று பொதுவாகவே இரண்டு நில அளவையாளர்கள் பேசிக்கொள்ளும்போது அடிபடும் சொற்கள் மீண்டும் கேட்டன. அவர்கள் சொல்லிக்கொண்ட பெயர்களில் பலர் இப்போது உயிரோடு இல்லை. அந்த நில அளவை உபகரணங்களும் பாவனையில் இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேசினார்கள். பேசிமுடியும்போது அப்பா மகாலிங்கம் அங்கிளுக்கு வீட்டின் முகவரியைக் கொடுத்தார். அவ்வளவுதான். இனி ஒரு வார இறுதியில் மகாலிங்கத்தாரின் மகனோ மகளோ காலையில் கொண்டுவந்து அவரை இறக்கிவிட்டுப்போனால் இரவு உணவு முடிந்து பத்துப் பதினொரு மணிவரைக்கும் அவர்களிருவரும் பேசிக்கொண்டிருப்பார்கள். அம்மா அப்பவே

நாய் கொண்டான்

இப்பக் கொஞ்சக் காலமாகவே எனக்கு நாய்களின்மீது ஒரு தனிப்பாசம் வர ஆரம்பித்துள்ளது.  நான் நித்தமும் நாய்களோடு வேலை செய்யும் அனுபவத்தில் சொல்கிறேன். அதுகள் அவ்வளவுக்கு மோசமென்று சொல்வதற்கில்லை. நாய்கள் மீது ஒருவித கரிசனைகூட எனக்கு வந்துவிட்டது. அதுகளும் என்ன செய்யும் சொல்லுங்கள்? அதுகளாக வந்து என்னை எடுத்து வளர்த்துவிடு என்று கெஞ்சியதா? இல்லையே. நீ, மனுசன், உனக்கு ஒரு அடிமை வேணும் எண்டதுக்காக நாயை வாங்கி, நலமடிச்சு வளர்த்திட்டு, நாய்கள் கியூட் என்கிறாய், நாய் நன்றியுள்ள மிருகம் என்கிறாய், நாய் வளர்ப்பது நல்லது என்கிறாய், நாய் வீட்டில் இருந்தால் குழந்தைகளின் வளர்ச்சி சிறக்கும் என்றும் சொல்கிறாய். நாய்களோடு கூட வளர்ந்தால் இம்மியூனிட்டி அதிகமாகும் என்கிறாய். இப்படி எல்லாமே நாய்களால் உனக்கும் நீ பெத்ததுகளுக்கும் என்ன நன்மை என்று வரிசைப்படுத்துகிறாயே ஒழிய நாய்களைப்பற்றி நீ எப்பனேனும் யோசித்தாயா? கேட்டால் நாய்க்கும் என்னைப்பிடிக்கும் என்று சொல்கிறாய். கூப்பிட்டோன என்னட்ட ஓடிவரும் என்கிறாய். நாய்களுக்கு ஊருலகத்தில அப்பிடி என்னதான் பிரச்சனை? என்று திருப்பி என்னையே கேட்கிறாய். அப்படியே

ராஜா ரகுமான்

ராஜா ரகுமான் சம்பவம் நடந்து இது மூன்றாவது நாள். நாற்பது ஐம்பது தடவைகளுக்கு மேல் அந்த வீடியோவைப் பார்த்தாயிற்று. இன்னமும் கெலி அடங்குவதாயில்லை. என்னைப்போன்ற, ‘யாரை உனக்கு அதிகம் பிடிக்கும்?’ என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கின்ற, இவர்களுடைய இசையை இம்மை மறுமை இல்லாமல் ரசிக்கின்ற எவருமே மிகவும் உணர்ச்சிவசப்பட்டே இந்த வீடியோவைப் பார்த்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அப்படியொரு அற்புதத் தருணம் இது.

வெம்பிளி ஓஃப் ஜாப்னா - சில கருத்துகளும் பதிலும்

வணக்கம் ஜேகே. வெம்பிளி ஓஃப் ஜாப்னா கதை(?)யின் முதல் பாகம் வாசித்துவிட்டு சத்தமே போடவில்லை. கருத்திடவில்லை. ஆனால், நிறையவே சிரித்தேன்.என்னையும் மீறி பெருமூச்சுக்களும் வெளியேறியதைத் தவிர்க்க முடியவில்லை. அதுமட்டுமின்றி உங்கள் எழுத்து அறிமுகம் செய்கின்ற அம்மாவை ஒருதடவை சந்திக்கவேண்டும் எனும் ஆவல் எழுகின்றது. இரண்டாவதை வாசித்து முடித்ததும் எப்போதும் போலவே மனதோரம் பொறாமை. 'எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுது?' என்ற வியப்பு, மகிழ்வையும் மீறி அந்த ஆமையையும் தட்டி விட்டால் நான் என்ன செய்வது?  <<<<உலகத்தின் எந்த வரலாற்றை எடுத்துக்கொண்டாலும், எல்லா இருண்டகாலங்களுக்கும் பின்னே பொற்காலங்கள் தோன்றியிருக்கும். எல்லாப் பொற்காலங்களுக்கும் பின்னே மீண்டும் இருண்ட காலங்கள் தோன்றியிருக்கும். இன்னுஞ் சொல்லப்போனால் பொற்காலங்களின் இருப்பை அதற்குப் பின்னரான இருண்ட காலங்களும், இருண்ட காலங்களின் இருப்பை அதற்கு முன்னரான பொற்காலங்களுமே எமக்கு உணர்த்தி நிற்கும். ஆனால் மிக மிக அரிதாகவே வரலாற்றின் சில காலப்பகுதிகளை எம்மால் அப்படி எடைபோட முடிவதில்லை.>>>> எனக்கு இந்த வரிக

சிறப்பான தரமான சம்பவங்கள் மூன்று

சிறப்பான தரமான சம்பவங்கள் மூன்று. சம்பவம் ஒன்று ‘பேட்ட’ ட்றெயிலரை அம்மாவிடமும் அப்பாவிடமும் போட்டுக்காட்டினேன். ‘இந்த எடுப்பையும் நடப்பையும் வச்சு இவ்வளவு காலமும் இவன் விளையாடிட்டான், வீரன்தான்’, இது அப்பா. ‘நல்லாத்தான் இருக்கு … ஆனால் இந்தாள் உளறினதை எல்லாம் கேட்டாப்பிறகு இதைப்பார்க்க விசர் வருகுது’, இது அம்மா. ‘என்ன இப்டி சொல்லுறிங்கள், வெறும்படம்தானே, வடிவேலுவும்தான் அரசியல்ல உளறிக்கொண்டு திரிஞ்சுது, ஆனாலும் அந்தாளிண்ட கொமடியை நாங்கள் ரசிக்கிறதில்லையா?’ ‘அது வடிவேலுடா … இது ரஜினிகாந்த் .. இவர் நடிப்பையும் அரசியலையும் போட்டுக் குழப்புறதாலதான் நாங்களும் குழம்பவேண்டியிருக்கு’, இது அம்மா. ‘விடு, அவன் தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்தென்ன, வராட்டியென்ன, அவங்கள் மட்டும் எங்கட சுமந்திரன், கஜா பற்றி பேசி அடிபட்டுக்கொண்டா இருக்கிறாங்கள்? நம்மளுக்கு படம் பிடிச்சா ரசிக்கலாம், இல்லாட்டி விட்டிட்டு சோலியை பார்க்கலாம்… அவங்கட அரசியல் அவங்களோட’ — அப்பா மீண்டும். இவ்வளத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அப்பாவின் சீனியர் சிட்டிசன் கிளப் அங்கிள் கேட்டார். ‘எல்லாஞ்சரி …. ஆனா படத்துக்கேன்

ஒரு காண்டாமிருகத்தைப்போல

"This is a bondage, a baited hook. There's little happiness here, next to no satisfaction, all the more suffering & pain." Knowing this, circumspect, wander alone like a rhinoceros.” "இது ஒரு கட்டு, இரையுள்ள தூண்டில். இங்கு இன்பம் குறைவு, கொஞ்சமும் திருப்தி இல்லை, துக்கமும் துன்பமுமே அதிகம்." இதை அறிந்து, எச்சரிக்கையோடு இருந்து தனித்து நடமாடு காண்டாமிருகத்தைப் போல.” கடந்துபோன இரண்டாயிரத்துப் பதினெட்டு சற்று விசித்திரமான ஒரு ஆண்டு. எதிலுமே பிடித்தமில்லாமல், எவற்றிலுமே நம்பிக்கை கொள்ளாமல் எல்லாவற்றிலுமிருந்து விடுபட்ட மனநிலை மேலோங்கியிருந்த ஆண்டு இது. என் தொலைப்பேசி முழுதும் தவறவிடப்பட்ட அழைப்புகள் நிறைந்திருந்த வருடம். தகவல் பெட்டிகளும் மின்மடல்களும் வாசிக்கப்படாமல் முடங்கியிருந்த காலம். வாசிப்பில் பிடித்தம் அருகிக்கொண்டு வந்ததும் எழுதும் எழுத்தை வெளியிடும் ஆர்வம் குறைந்ததும் இதே காலப்பகுதியில்தான். சமூக வலைத்தளங்கள் மீதான வெறுப்பும் மேலோங்க ஆரம்பித்ததும் அப்போதுதான். மனிதர்களின் போலித்தனங்கள் மேலும் மேலும் பட்டவர்த்தன