Skip to main content

ஆம்பிளைங்க டூயட்!!!


இந்த இசைத்தொடர் குசேலன் படத்தை விட ப்ளாப்! கடந்த பதிவுக்கு வெறும் நூறு ஹிட்ஸ் தான். மற்றவர்களுக்கு எழுதாதே, உனக்கு பிடிச்சத எழுது என்றான் மன்மதகுஞ்சு. இந்த வாரம் என் வாசகர் தமிழினி ஒரு ஈமெயில் அனுப்பினார்.
“இப்போது நீங்கள் இசைப்பதிவு எழுதுவதில்லையா? நீங்கள் முன்பு சொன்னது போல் சனி அல்லது ஞாயிறில் எழுதலாமா? ரசித்துப்படித்துக் கெற்க பலர் உள்ளோம்!!!”
இந்த வாரம் என்னை கவர்ந்த ஆண்கள் இணைந்து பாடும் டூயட்கள் சில. ஸ்டார்ட் ரெடி மியுசிக்!

தென்றலே தென்றலே, இதை feel பண்ணி கேட்காத ஒருவர் தானும் இருந்தால் நான் பாடல் கேட்பதையே நிறுத்திவிடுகிறேன். அருமையான பியானோ இசையுடன் ஆரம்பிக்கும் பாடல். உன்னியின் ஹம்மிங் இழையாய் தென்றலே தென்றலே என்று ஆரம்பிக்கும்.
தூரத்தில் நிலா, பக்கத்தில் காதலி தூங்குகிறாள். இரண்டுமே எட்டாத தூரத்தில். இரண்டும் அவனை எரிக்கிறது. ஆனாலும் தூங்க வைக்கிறான். நல்ல பாடல் உருவாக வேறு என்ன situation வேண்டும்?
முதலாவது இண்டர்லூட்டில் கொஞ்சம் சறுக்கல். இசையும் காட்சியும் கவரவில்லை. சரணம் ஆரம்பிக்கும் போது ரகுமான் comes back again. இரண்டாவது இண்டர்லூட். அமிர்தம். ரகுமானின் மாஸ்டர் பீஸ் பியானோ. அது முடிய கொஞ்சம் பான் ப்ளூட் ரிதம், மனோ ஆரம்பிக்கிறார். மனோவா இது? “அதோ மேக ஊர்வலம்”  பாணி குரலில் பாடியிருப்பார்.  இந்த பாடலை ஹிந்தியில் சோனுநிகமும், எஸ்பிபியும் பாடி இருப்பார்கள். சோனுநிகம் சொதப்பி இருப்பார். ஆனால் எஸ்பிபி ஹிந்தியில் பாடும்போது, ஹிந்தி ஏன் இசைக்குகந்த மொழி என்பதை நிரூபிப்பார். Beautiful!


அடுத்த பாடல் தலைவர் பாடல்! தலைவரும் எஸ்பிபியும் சேர்ந்து பாடியது. பாலச்சந்தர், சிந்துபைரவிக்கு பின்னர், இளையராஜா இருக்கும் தைரியத்தில், இசைக்கலைஞர் சார்ந்த புது புது அர்த்தங்கள், புன்னகை மன்னன் என்று அடுத்தடுத்து எடுத்தார். அப்புறம் ரகுமானை வைத்து டூயட் கூட எடுத்தார். ஆனால் கதை அவரின் ஒரே டெம்ப்ளேட் தான். ஒரு ஆணுக்கு இரு பெண்கள். அல்லது ஒரு பெண்ணுக்கு இரு ஆண்கள். இரு கோடுகளில் ஆரம்பித்தது. ஆசாமி நிறுத்தவேயில்லை! அவ்வப்போது “வறுமையின் நிறம் சிகப்பு” போன்ற பாரதி இன்ஸ்பிரேஷன்ஸ் வருவதும் உண்டு!

இந்த பாடல் புது புது அர்த்தங்கள் படம். இசையில் சர்ப்பரைஸ் சேர்ப்பது பற்றி ஒருமுறை எழுதி இருந்தேன். இது அந்த வகை பாடல். சாதரணமான குத்து வகையில் ஆரம்பிக்கும். எஸ்பிபி ராஜா சேரும்போதே ஏதோ இருக்கவேண்டும் இல்லையா? அது சரணத்தில் புரியும்! கவனமாக கேளுங்கள்.
இளையராஜா : ஏ நான் பாட பிறந்தது ஷோ..ஷோ..ஷோ..ஷோக்கு
                               ஆனாலும் தடுக்குது நா.. நா.. நாக்கு
                              என் பாடல் இனித்திடும் தேன் தேன் தேன்
                              அட தென் பாண்டி குயிலினம் நான் தான்.
         எஸ்பிபி : நான் பாடவே ஏழு ஸ்வரங்களூம் தான் தாவிடும் மேவிடும்..
இளையராஜா : ஒ ஹோ (நக்கலை பாருங்கள்)
எஸ்பிபி : ஊர்கோடியே மாலை அனிந்திட தான் தாவிடும் ஆடிடும்
இளையராஜா : ஓ.ஓ (again!)
எஸ்பிபி விடவில்லை. அடுத்த வரியில் பாவத்தையும் மெலடியையும் கவனியுங்கள்
எஸ்பிபி : என்னிசையை கேட்டாலே வெண்ணிலா வாராதா?
இளையராஜா : அடடாடா.....(இது தனக்கு தானே சொல்லுவது!, மெலடி அவரது அல்லவா)
எஸ்பிபி :ள்ளிரவில் நான் கொஞ்ச தன்னையே தாராதா?

இளையராஜா : ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் (again)
பாருங்கள். எத்தனை நயம், இசை, நேசம் எல்லாமே இருக்கும். Very authentic ராஜா இசை. எஸ்பிபி குரல். இராட்சசர்கள்!

அடுத்த பாடல், எஸ்பிபி யேசுதாஸ் இணைந்து பாடியது. எல்லோருக்கும் உடனே ஞாபகம் வருவது “காட்டு குயிலு” தான். அதை விட இந்த பாடல் ஒரு படி அதிகம் தான்! படம் கௌரி மனோகரி. இசை மலையாளத்து இனியவன்! மெல்லிசை கர்நாடக இசைகளுக்கு இடையேயான போட்டி. இந்த இருவரை தவிர போட்டிக்கு வேறு யார் தகுதியானவர் என்று நினைக்கிறீர்கள். Amazing!
ஜேசுதாஸின் ஆலாபனையுடன் ஆரம்பிக்கிறது. எஸ்பிபி பல்லவி எடுக்க பாடல் மெதுவாக டேக் ஒப் ஆகிறது. எஸ்பிபியும் சின்ன சின்ன ஆலாபனைகள் முயற்சி செய்தாலும் ஜேசுதாஸ் முன்னால் அது வான்கோழி effort ஆகிவிடுகிறது!  இண்டர்லூட் முழுதும் இனிமையான ஜேசுதாஸ் சுரவரிசைகள். எனக்கு இந்த ராகம் மாட்டர் ஒன்றும் தெரியாது. அதை தான் எஸ்பிபியும் சரணத்தில் பாடுகிறார். சரணத்தில் எஸ்பிபி சிக்ஸ் அடித்துவிட இப்போது ஜேசுதாஸ் அண்டர் ப்ரெஷர்!
இரண்டாவது சரணத்தில் கடும் போட்டி. சுரமும் பாடலும் போட்டி போடுகிறது. இங்கே தான் எஸ்பிபி தப்பு செய்கிறார். தன் குரலில் பாவத்தை கை விட்டுவிட்டு கர்நாடக பாணிக்கு தாவுகிறார். எஸ்பிபி தன் பாணியில் பாடியிருந்திருக்கவேண்டும், இனிமை இப்போது கொஞ்சம் மிஸ்ஸிங். ஜேசுதாஸ் இரண்டாவது சரணத்தில் கொஞ்சம் பீட் பண்ணி விடுகிறார். அந்த சந்தோஷ ஸ்தாயி முடிக்கும் போது குரலில் தெரிகிறது. இறுதி பல்லவியை ஆலாபனையுடன் ஜேசுதாஸ் பாடுகிறார்!
இந்த பாடலை பேராதனை பூங்காவில், நண்பர்கள் உறவினர்களுடன் ஒருமுறை சென்றபோது பாடச்சொல்லி பாட முயற்சித்து மூக்குடைபட்டது ஞாபகம் வருகிறது! தேவையில்லாமல் பல்ப் வாங்குவதில் என்னைப்போல ஒரு ஆளை வேறு எங்கும் காண கிடைக்காது.
இரண்டு ஜாம்பவான்கள் பாடும் பாடல். இனி வருமா? ஐயோடா!



அடுத்த பாடல் அதிகம் அறிமுகம் தேவை இல்லை. படம் “படித்தால் மட்டும் போதுமா”. பிபிஸ் டிஎம்எஸ் இணைந்து கலக்கிய எவர்கிரீன் எம்எஸ்வி பாடல்.  பாடல் காட்சியில் அளவுக்கு அதிகமான நாடகத்தன்மை. கொடுத்த காசுக்கு மேலாகவே நடித்து இருக்கிறார்கள். இருவருக்கும் ஐம்பது வயது மேக் அப் வேறு போட்டு இருக்கிறார்கள்!!
இந்த பாடலுக்கு விளக்கம் தேவையில்லை. எல்லோரும் தேவையான அளவு பிரித்து மெய்ந்துவிட்டார்கள். சிவத்திரன் மாஸ்டரும், குமரன் மாஸ்டரும் 1997 ம் ஆண்டு சென்ஜோன்ஸ் கல்லூரியில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் பாடி அசத்தியது இந்த இடத்தில் ஞாபகம் வருகிறது.




அடுத்த பாடல், என்னுடைய all time favourites களில் ஒன்று. “Girl Is Mine”. பாடல் எந்த அளவுக்கு பிடிக்கும் என்றால், என்னுடைய ஒரு சிறுகதைக்கு Girl Is Mine என்று வைக்கும் அளவுக்கு பிடிக்கும். தலைவர் மைக்கல் ஜாக்சனின் த்ரில்லர் ஆல்பத்து பாடல்.  திரில்லரில் பெஸ்ட் என்று நான் நினைப்பது “wanna be starting something” என்ற பாடல் தான். ஆனால் இந்த மெலடியும் அது அளவுக்கு பிடிக்கும். மைக்கல் ஜாக்சன் ஒரு கம்போஸர், பாடலாசிரியர் மாற்றும் நடனமேதை. இப்படி ஒரு டாலேன்ட் எப்போது பார்க்கபோகிறோமோ தெரியாது.




Beatles புகழ் Paul McCartney யுடன் மைக்கல் ஜாக்சன் சேர்ந்து பாடியது. இருவரும் ஒரே பெண்ணை காதலிக்கிறார்கள். அவளும் தன்னை தான் காதலிக்கிறாள் என்று இருவருமே உரிமை கோருகிறார்கள்.  Paul இன் குரலில் அருமையான பேஸ் இருக்கும். நம்ம ஜேசுதாஸ் போல. MJ பற்றி சொல்லவே தேவையேயில்லை. ஹை பிட்சில் பிச்சு உதறுவார். இருவருமே சேரும்போது அற்புதமான இசை ஹார்மனி ஒன்று உருவாகுகிறது.
MJ இந்த பாடலை ஒரு நடுராத்திரியில் திடீரென்று எழுந்து கட கடவென எழுதியதாக கூறுவர். MJ க்கு மிகவும் பிடித்த பாடல் என அவரே சொல்லியிருக்கிறார். இந்த பாடலில் ஒரு அரசியலும் இருக்கிறது. இது த்ரில்லரில் இருந்த ஒரே ஒரு மெலடி பொப் பாடல். உயர்குடி வெள்ளையர்களை திருப்திப்படுத்த MJ உருவாக்கிய பாடல் என்றும் சிலர் சொல்லுவார்கள்.
மைக்கல் பாடலாசிரியாராக மிளிரும் இடங்கள் ஏராளம். அவரின் பாடல்களில் வரிகள் எப்போதுமே high quality இல் இருக்கும். இந்த பாடலும் குறைவில்லை. பாடலை கேட்கும் போது வரிகளையும் கவனியுங்கள்! இசையும் கவிதையும் சங்கமிக்கும் பாடல். இயல்பாக இருக்கும்.
"The Girl Is Mine"
[(Michael)]
Every Night She Walks Right In My Dreams
Since I Met Her From The Start
I'm So Proud I Am The Only One
Who Is Special In Her Heart
[Chorus]
The Girl Is Mine
The Doggone Girl Is Mine
I Know She's Mine
Because The Doggone Girl Is Mine
[(Paul)]
I Don't Understand The Way You Think
Saying That She's Yours Not Mine
Sending Roses And Your Silly Dreams
Really Just A Waste Of Time
[Chorus]
Because She's Mine
The Doggone Girl Is Mine
Don't Waste Your Time
Because The Doggone Girl Is Mine
[Bridge (Paul)]
I Love You More Than He
(Take You Anywhere)
[Michael]
But I Love You Endlessly
(Loving We Will Share)
[Michael & Paul]
So Come And Go With Me
To One Town
[Michael]
But We Both Cannot Have Her
So It's One Or The Other
And One Day You'll Discover
That She's My Girl Forever And Ever
[(Paul)]
I Don't Build Your Hopes To Be Let Down
'Cause I Really Feel It's Time
[Michael]
I Know She'll Tell You I'm The One For Her
'Cause She Said I Blow Her Mind
Chorus (Michael)
The Girl Is Mine
The Doggone Girl Is Mine
Don't Waste Your Time
Because The Doggone Girl Is Mine
[Michael & Paul]
She's Mine, She's Mine
No, No, No, She's Mine
The Girl Is Mine, The Girl Is Mine
The Girl Is Mine, The Girl Is Mine
[Paul]
The Girl Is Mine, (Yep) She's Mine
The Girl Is Mine, (Yep) She's Mine
[Michael]
Don't Waste Your Time
Because The Doggone Girl Is Mine
The Girl Is Mine, The Girl Is Mine
[Paul]
Michael, We're Not Going To Fight About This, Okay
[Michael]
Paul, I Think I Told You, I'm A Lover Not A Fighter (சூப்பர்)
[Paul]
I've Heard It All Before, Michael
She Told Me That I'm Her Forever Lover, You Know, Don't You Remember
[Michael]
Well, After Loving Me, She Said She Couldn't Love Another
[Paul]
Is That What She Said?
[Michael]
Yes, She Said It, You Keep Dreaming
[Paul]
                                                               I Don't Believe It (என்ன ரேஞ்சு இது! பாடவே முடியாது)

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக