டேய் ஜேகே

சம்பந்தர், விடமேறியோன்!
திருகோணமலை
தம்பி ஜேகே, நாங்கள் இப்பொழுது மிகமுக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவேண்டுமானால் அதற்கென்று ஒரு முறை இருக்கிறது. வரையறை இருக்கிறது. ஆனால் எம் செயற்பாடுகளில் குறை இருக்கிறது என்று கூறிக்கொண்டு ஒரு சில புத்திஜீவிகள் புறப்பட்டு இருக்கிறார்களே! யார் அவர்கள்?
ஐயா! எனக்கு அரசியல் தெரியாது என்று சொல்லிக்கொண்டுதான் கக்கூஸுக்கு கூட போக வேண்டிய நாட்டு நிலைமை! வெளிநாட்டு பாஸ்போர்ட் இல்ல பாருங்க! மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் எண்டுவாங்கள். எனக்கு அது ஓகே! ஏனெண்டா வெளிச்சம் இல்லாத இருட்டில இருக்கும்போது பேய் கூட வெளிச்சம் கொடுக்கும் இல்லையா? இப்படி ஏதாவது அலம்பிக்கொண்டு ஆரம்பித்தால் தான் அவ்வளவு சீரியஸா வாசிக்கமாட்டாங்கள் ஐயா. பொறுங்க மாட்டருக்கு வாறன்!ஆல்ரெடி வவுத்த லைட்டா கலக்குது!
![Sprit_of_Bangla_Join_Hand_489962bc14b90[1] Sprit_of_Bangla_Join_Hand_489962bc14b90[1]](http://lh4.ggpht.com/-25UOsEFlFh0/T4bVub2IPAI/AAAAAAAAC1M/hQLNzHKUyrg/Sprit_of_Bangla_Join_Hand_489962bc14b90%25255B1%25255D_thumb%25255B3%25255D.png?imgmax=800)
ஈழத்து அரசியல், பாராளுமன்ற அரசியல்வாதிகள், தீவிரபோக்குள்ள இளைஞர்கள் கைகளில் இருந்த காலத்தில் தூரநின்று தயக்கத்துடன் வேடிக்கை பார்த்த இந்த மாதிரி ஆட்கள், இப்போது வாய் திறந்திருப்பது கொஞ்சம் நிம்மதி தரும் விஷயம். மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், மலினப்படுத்தல்கள் அனைத்தையும் தாண்டியும் அவர்கள் செயலில் இருப்பது, இவர்கள் சீரியஸாக இறங்கியிருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது! Need for the hour! ஆனால் யாழ்ப்பாணத்து “நண்டு” குணம் வந்து ஒருவரை ஒருவர் இழுத்து விழுத்தாமல்! தொடர்ந்து இவர்கள் செயல்பட “நல்ல புத்தியை கொடு தாயே” என்று எல்லாம் வல்ல நயினை நாகபூஷணி அம்மன் திருவடிகளை என் சிரமேற்கொண்டு பணிந்து வணங்கி … ஐயோடா .. ஓவரா எழுதீட்டமோ!
ஜெனீவா தீர்மானம் முடிவடைந்துவிட்டது? அடுத்து என்ன தமிழ் சிங்கள புத்தாண்டா? கூட்டமைப்பு இந்த நேரத்தில் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறாய்? சரி வந்த மட்டுக்கும் லாபம் என்று 13வது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்ளலாமா?
வாங்க பாஸ்! வாரா வாரம் இப்படி ஒரு கேள்வியை தபாலட்டையில் அனுப்பி என்னைய கோர்த்துவிடாட்டி உங்களுக்கு தூக்கமே வராதே! நமக்கெல்லாம் வெள்ளைவான் சீட்டு அவ்வளவு சௌகரியம் இல்லை தல.. வாணாம்! ஓகே ஓகே இந்த வாரம் மட்டும்!
கூட்டமைப்பு என்ன செய்யவேண்டும் என்பதை நான் இங்கே இருந்துகொண்டு சொன்னால் நடுவிரல் தான் காட்டுவார்கள்! அதனால் அங்கேயே வடக்கு கிழக்கில் இயங்கும் இந்த புத்திஜீவிகள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்ப்போம்!
தற்சமயம் அங்கே நிலைமை என்ன? சம்பந்தன் போன்ற தலைவர்கள் நீண்ட போராட்டத்தால் கொஞ்சம் ஆயாசப்பட்டு விட்டதாய் தெரிகிறது. கிடைத்ததை பெற்றுக்கொண்டு மனேஜ் பண்ணுவோம் என்பதே அவருடையதும் சுமந்திரனதும் எண்ணமாக இருக்கலாம். கொஞ்சம் இளரத்தமான ஸ்ரீதரன், சுரேஷ் போன்றவர்கள் இறுக்கிப்பிடித்து ஒழுங்கானதை பெறவேண்டும் என்ற நிலையில். கஜேந்திரகுமாரோ, ஒரு நாடு இருதேசம் என இன்னொரு எக்ஸ்ட்ரீம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற தாடிக்கார அண்ணே “என்ன கையை பிடிச்சி இழுத்தியா” என வடிவேல் கணக்கா கேட்டுக்கொண்டு இருக்கிறார்! சங்கரியார் தன்னுடைய பரந்தன் வயலுக்க கூட கால்வைக்க ஏலாத நிலைமை! மனோ அண்ணா அமெரிக்கன் எம்பசியில் ஒரு வேலைக்கு அப்பிளை பண்ணுவோமா என்று யோசிக்கிறாராம்! இந்த அல்லோகல்லோகத்துக்கு மத்தியில் உனக்கு வடக்கு முதலமைச்சர் பதவி, எனக்கு கிழக்கு முதலமைச்சர் என்று பதவி இழுபறி வேறு இருக்கிறது. இப்படி போகிறது உள்வீட்டு சீன்!
இந்த திருவிழா நெரிசலில், தேர் இழுக்கிறது கஷ்டம் என்று நினைத்து எங்கே இவர்கள் 13ம் திருத்தத்தை வைத்தே வெளிவீதி “சுற்றிவிடுவார்களோ?” என்ற பயத்தில் தான் புத்திஜீவிகள் களத்தில் இறங்கி இருக்கிறார்கள். உலக நாடுகளும், கலியாணத்தை கட்டி வச்சிட்டா அப்புறம் எல்லாம் சரியாகிடும் என்று நினைப்பதால், எங்கள் பிரச்சனை 13ம் திருத்தத்துடன் அவுட்டாக்கப்பட்டுவிடும் என்று அவர்கள் பயப்படுவதிலும் காரணமில்லாமல் இல்லை!
அப்படி என்ன தான் 13ம் நம்பரில் சிக்கல்? 13இல் ஒரு அதிகாரமுமில்லை என்பது ஒரு புறம். வழுக்கை தலையில் இருக்கும் ஓரிரு மயிர்களையும் 18ம் திருத்தம் புடுங்கிவிட்டது என்பது இன்னமும் பரிதாபம். அதிகம் இழுக்காமல், ஒரு சாம்பிள் clause தருகிறேன்!
13th Amendment, Article 154F(1):
"There shall be a Board of Ministers with the Chief Minister at the head and not more than four other Ministers to aid and advice the Governor of a Province in the exercise of his functions. The Governor shall in the exercise of his functions act in accordance with such advice, except in so far as he is by or under the Constitution required to exercise his functions or any of them in his discretion."
எல்லா வீதிகளும் ரோம் நகரத்தை நோக்கியே என்பது போல, ஆணி புடுங்கும் அதிகாரம் கூட தெளிவாக ஆளுநரை கேட்டே செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறது. ஆளுநர், நிறைவேறு அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் நியமிக்கபடுவார். அப்போ முதலமைச்சர்? பெப்பே தான்!
ஒன்றுமே வாங்காவிட்டால், ஜட்டி கூட தேறாது என்ற சுமந்திரனின் வாதத்தையும் புத்திஜீவிகள் புறக்கணிக்கவில்லை! 13ஐ கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டால் அதுவே நிரந்தர தீர்வாகிவிடும் இல்லையா? அவர்கள் இல்லாமல், ஒரு முகாமைத்துவ குழு ஏற்றுக்கொண்டால் அது வெறும் இடைக்கால நடைமுறை தானே! எனவே கூட்டமைப்பு தொடர்ந்து நிலையான உரிமைக்காக போராடிக்கொண்டு இருக்க, இடைக்கால தீர்வாக 13ஐ ஒரு administrative committee யிடம் கொடுத்துவிடலாம். இதை தான் புத்திஜீவிகள் சொல்லுகிறார்கள். Give it a thought folks!
என்ன ஆச்சரியம் என்றால், இவ்வளத்தையும் எழுதினாப்பிறகும் எனக்கு ஒரு மண்ணும் விளங்கேல்ல! இதால தான் அரசியல் படலைக்குள் வராமல் பார்த்துகொள்கிறேன்! ஷப்பா எப்படியெல்லாம் சமாளிக்கவேண்டியிருக்கு!
ஹேய் ஜேகே! ஐபிஎல் ஸ்டார்ட் பண்ணியாச்சு! நீ யாருக்கு சப்போர்ட்?
இது என்ன கேள்வி! வங்கக்கடல் எல்லை! அவன் சிங்கம் பெற்ற பிள்ளை! Prince of Kolkata! Sweetest timer of offside! Merciless hitter off down the track! ஒரே நிலா, ஒரே சூரியன், தலைவர் சவுரவ் கங்குலியின் பூனா வாரியர்ஸுக்கு தான் நம்மளோட சப்போர்ட்! தல இந்த வருட ஐபிஎல் இல் முதலாவது டபிள் செஞ்சரி அடிக்க, எல்லாம் வல்ல நயினை நாகபூஷணி அம்மனின் திருவடிகளை சிரமேற்கொண்டு வணங்கி …. ஐயோ அம்மா!!
டேய் ஜேகே, நாளைக்கு புத்தாண்டு கொண்டாடுவியா? நீ தமிழனா? இந்துவா? ஆரியனா? திராவிடனா?
ஆகா, ஆரம்பிச்சிட்டீங்களாடா? போன தைப்பொங்கலுக்கு விஷயம் தெரியாம ஒரு மேடையில ஏறி நின்னா, சுற்றும் முற்றும் பயில்வான்கள் எல்லாம் உறுமிக்கிட்டு இருந்தாங்க. மேடையிலேயே பேஸ்மண்ட் நனைஞ்சு போச்சு! பயத்தில என்னா மாட்டாருன்னு கேட்டா, கவிஜ போட்டியாம்! என்ன கருமம்டா! எனக்கு ஹன்சிகாவை தானே தெரியும் என்று, அவளை மனதில் இருத்தி தமிழ் பெண்ணை பற்றி நானும் ஒண்ண வெளிய விட்டேன்! அத போயி கவுஜன்ன சொல்லி தக்காளி கைதட்டு கிழிஞ்சுதுன்னா பாரேன்! அதில இருந்து ஒரு பிட்டு பாஸ்!
தைப்பெண்ணே உன்னிடம் சங்கடமான கேள்வி!
ஒரு தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி!
தமிழ் வருடம், அவன் உனக்கு பிறந்தானா?
இல்லை சித்திரைக்கு பிறந்தானா?
ஐயா உன்னதாம்!
அம்மாவோ இல்லையாம்!
தமிழனே!
தகப்பனை தான் தொலைத்துவிட்டாய்!
தாயை கூடவா?
ஜேகே, வர வர உண்ட பதிவுகள் எல்லாம் ரொம்பா நீநீநீநீநீநீநீநீநீநீளமாக போகுதே? வாறவங்க ஆற ஆமர இருந்து வாசிப்பாங்களா?
என்னம்மா! நீயே இப்படி சொன்னா? வியாழ மாற்றம் என்பது ஒரு கதம்பம்! Reader’s Digest, விகடன் போல! ஒரே மூச்சில் படிக்கவேண்டும் என்பதில்லை! ஒரு வாரம் இருக்கிறதே! கொஞ்சம் கொஞ்சமாக படிக்கலாம். ஆங்காங்கே இருக்கும் லிங்க் எல்லாம் பார்க்க நேரம் தேவை! அதைவிட இதை எழுதுவதும் ஒரு அனுபவமே! உதாரணத்துக்கு 13ம் சட்டதிருத்தம் பற்றி சும்மா போகிற போக்கில Facebook கமெண்ட் போல எழுத முடியாது இல்லையா? இரண்டு மணிநேரமாக வாசித்தே அந்த கேள்விக்கு பதிலளிக்கவேண்டி வந்தது. ஒரு முயற்சி தான்! நீ கூடவா வாசிக்கமாட்டாய் கண்ணு?

குஷ்புவின் இடத்தை பிடிக்கபோவதாக ஹன்சிகா சூளுரைத்திருக்கிறாரே?
சுந்தர்.சி க்கு உடம்பு முழுக்க மச்சம்டா!
வாங்க பில்லியனெயர் ஆகலாம்!
2003ம் ஆண்டு பல்கலைக்கழகத்தில், Multimedia Systems என்ற இருந்த பாடத்துக்கு ஒரு போட்டோ எடிட்டிங் மென்பொருள் எழுதவேண்டும். ImageJ என்ற ஒரு ஓபன்சோர்ஸ் மென்பொருளை எடுத்து, அதில், கட்டிங், டிங்கரிங் செய்து, செப்பனிட்டு, பதப்படுத்தி கொடுத்ததில் A+ வந்தது! சந்தோஷத்தில் கிடைத்த வேலையில் சேர்ந்து அங்கே ஓரளவுக்கு ஆணி புடுங்கி, அவர்கள் சிங்கப்பூர் போய் ஆணி புடுங்கடா என்று அனுப்ப, அப்படி இப்படி என்று எட்டு வருஷத்தில் புடுங்கியது எல்லாமே தேவையில்லாத ஆணி என்பது வேற விஷயம்!
அதே இமேஜ் எடிட்டிங் filters ஐடியாவை இரண்டு வருடங்களுக்கு முன்னம், காலத்துக்கேற்ற HTML5 இல் ரெண்டு பேர் எழுதி, அதை முதலில் iOS இல் ஏத்தி, அப்புறம் அண்டோரோயிட், அண்ட்ராயர் என எல்லா தளத்திலும் எழுதிவிட, ஆறே மாதத்தில் ஒரு மில்லியன் பாவனையாளர்கள். இரண்டு வருடத்தில் தக்காளி முப்பது மில்லியன் யூசர்ஸ்! இதன் வெற்றியை கண்ட Facebook அதை தானே சுவீகரித்துக்கொள்ள பேசிய விலை எவ்வளவு தெரியுமா? மூச்சை பிடியுங்கள்! பில்லியன் டொலர்கள்!
ச்சே இது தெரிஞ்சா அப்பவே செய்திருக்கலாமே? இது நம்ம ஏரியாவே! வட போச்சே என்று நான் அழ, அண்ணன் சயந்தன் SurveyMonkey ஐடியாவை தான் சின்னவயதிலேயே உருவாக்கிவிட்டதாக சொல்லி அழுததும் ஞாபகம் வருது.
ஐடியா இருந்தாலும் எங்களால் ஆணி புடுங்கமுடியவில்லை. ஆனால் சிலிக்கன் வாலியில் ஒண்ணுக்கு போனா கூட மில்லியன் டாலர் கிடைக்குதே பாஸ்? எப்பிடி?
அங்கே தான் venture capital என்ற விஷயம் வருகிறது! இளையராஜாவுக்கு கிடைக்காத ஒஸ்கார் ரகுமானுக்கு கிடைத்த அதிசயமும் இது தான். சரியான முதலீட்டாளர்கள், மார்க்கட்டிங், சேல்ஸ் என்ற ஒரு முழுச்சங்கிலியும்(ecosystem) ஒரு சின்ன ஐடியா பூவாகி, மொட்டாகி, விதையாகி மரமாக தேவையாகிறது. வெறும் “வண்டு உட்கார்ந்த மலர்” வகை கவிதை எழுதிக்கொண்டு இருந்தால் படலை தான் மிஞ்சும்!
ஆக நம்மவர்கள் ஏதாவது செய்ய ஆரம்பித்தால் உருப்படியாக உதவவேண்டும்! Venture investment இல் இருந்து, sales, marketting என்று செய்து கலக்க வேண்டும்! அதற்கு “Tipping Point” என்ற புத்தகம் முதலில் வாசிக்கவேண்டும்!!மன்மதகுஞ்சு : அடேய் பனங்கொட்டை தலையா? நீ முக்கி முக்கி எழுதினாலும் சின்ன லைக்கு கூட பண்ண மாட்டேங்கிறாங்க. இதுக்குள்ள venture capital ஆ? ஷப்பா!!
இராவணன் ஒரு இலக்கிய கும்மி!!


ஆற்றாமையால் இராவணன் தன்னுடைய கடைசி ஆயுதமான சூலாயுதத்தையும் விட்டுப்பார்க்கிறான். அது போனால் கொல்லாமல் திரும்பாதாம். ஆனால் அதுவும் பொடிப்பொடியானதை கண்டு இராவணனுக்கு மெல்ல அறிவு திரும்புகிறது! அடடே, தம்பி அப்பவே சொன்னானே! ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டோம். இவன் இராமன் விஷயம் உள்ளவன் போல இருக்கிறது என்று நினைக்கிறான். யாராய் இருக்கும்? சிவனோ, பிரம்மனோ, திருமாலோ? இவையெல்லாவற்றையும் மிஞ்சிய ஆதிப்பரம்பொருளோ? என்று வியக்கிறான்!
'சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்?' என்றான்.
என் பதிவுகளை வாசிப்பவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை! உண்மைக்கு முன்னால் சொல்லும் பொய் போல எவ்வளவு எழுதினாலும் காறித்துப்புகிறார்கள். இவர்களோடு எழுத்துலகில் போருதல் முடியாத காரியம்! சக்திவேல் அண்ணா பதிவில் “யாழ் தமிழ்” கொஞ்சுகிறது. வாலிபன் கவிதையில் வாலி வைரமுத்து எல்லாம் வழுக்கி விழுகிறார்கள். சரி இதோட முடிஞ்சுது எண்டு பார்த்தால் கீதா வேறு ஆட்டோ ஒன்றில் .. சாரி .. ஓ சொறி .. ஓட்டோ ஒன்றில் வந்து பக்கத்தில் இருக்கும் “சந்துக்குள்”, அடக்கடவுளே, “ஒழுங்கைக்குள்” வைத்து வரிக்கு வரி “கிழிக்க”, நானும் எவ்வளவு நேரம் தான் “நோகேல்ல” என்று நடிக்கிறது? இலக்கியவாதிகள், இவர்களுக்கு இணையாய் சிறு துரும்பை தூக்கி போடுவதற்கு கூட, அழகு தமிழாம் யாழ் தமிழில் லக்கியதனமாக எழுதவேண்டும் என்று ஞானோதயம் வர, “நல்லா” ஒரு பதிவு எழுதி, மீண்டும் வாசித்து ஒருத்தனுக்கும் “விளங்காது” என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு நிமிர்ந்த போது தான் இந்த ஈமெயில் வந்து விழுந்தது,
வணக்கம் நண்பா,
உங்களுக்கு என்னை தெரியாது! தெரிந்து கொள்ளும் அளவுக்கு நான் முக்கியமானவனும். இல்லை நான் ஒரு இலங்கை தமிழ் அகதி. தற்சமயம் டென்மார்க் இல் வசிக்கிறேன். யாழ் தளத்தில் உங்கள் கடவுள் தேடலை வசித்து உங்கள் வலை பக்கம் வந்தேன் 2 நாட்களாக உங்கள் பதிவு வாசித்து வருகிறேன் தொடர்ந்து வாசிக்க ஆவலாக உள்ளேன். உங்களுக்கு இன்னுமொரு வாசகன் கிடைத்தது. மகிழ்ச்சியாக இருக்குமோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு ஒரு எழுத்தாளன் கிடைத்த மகிழ்ச்சிக்கு இணையே இல்லை! இணையத்தில் எத்தனயோ பதிவுகள். ஆனால் எந்த பதிவும் இப்படி என்னை முழுதாக 2 நாட்கள் கட்டிபோட்டது இல்லை. வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுங்கள். என்னை போன்ற பல பேர் நிச்சயம் வாசிக்க காத்திருப்பார்கள். பல விடயங்களில் நான் ஓர் டுபாகூர் மாதிரி இந்த டைப்பிங்கும் ஒன்று. உங்கள் தொலை பேசி இலக்கம் கிடைத்தால் உங்களுடன் பேச மிகவும் ஆவலாக உள்ளேன். மீண்டும் ஒரு முறை உங்கள் பதிவிற்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.நட்புடன்,
குகன்
ஒரு கணம் தான். ஞானோதயம் கண்ட இராவணன் “தன்னிலை” அடைகிறான். போடாங் நீங்களும் உங்கட இலக்கியமும்! “ஏதொக்கும் ஏதொவ்வா ஏதாகும் ஏதாகா ஏதொக்கும் என்பதனை யார்அறிவார்” என்ற காரைக்கால் அம்மையார் பன்ச் டயலாக் போல, இனிமேல் இன்னும் கவனத்துடன் எழுதுகிறேன் மக்களே! ஆனால் எது தகும், தகாது என்பதை யாரறிவார்?
யாரேனும் தான் ஆகுக! யான் என் தனி ஆண்மை
பேரேன்; நின்றே வென்றி முடிப்பென்; புகழ்பெற்றேன்;
நேரே செல்லும் கொல்லும் எனில் தான் நிமிர்வென்றி
வேரே நிற்கும்; மீள்கிலென்' என்னா, விடலுற்றான்.
யாராவதாகவும் இருந்துவிட்டு போகட்டும். நான் எனக்கேயுரிய தனியாற்றலில் இருந்து பெயரமாட்டேன்!
இதை கொண்டு தானே புகழ்பெற்றேன். இதை கொண்டு தானே வெற்றி கொண்டேன். எது வரினும் என்வழியே நிற்பேன் என்று இராவணனுக்கு அடுத்த கணமே தலைக்கனம் ஏற, கடைசியில் இராவணனுக்கு நடந்த நிலையை யோசிக்க… wait I am confused!


இந்த வார புத்தகம்/படம்/பாடல்!
“ரகுபதி ஒரு இஞ்ச் உயரத்தில் மிதந்து சென்று வீட்டுக்கு வந்தான். மதிமிதாவை திறந்து முகத்தில் மதுமிதாவை இறைத்துக்கொண்டு, மதுமிதா போட்டுக்கழுவிக்கொண்டு, மதுமிதாவால் துடைத்துக்கொண்டு, மதுமிதாவை திறந்து மதுமிதாவை படித்தான்”

“நீங்க தானா அது?”
ரகுபதிக்கு புரியவில்லை. “என்ன இது, என்னை பத்தி ஏதாவது புரளியா?” என்றான்.
இல்லை இல்லை, ஐ ஆம் சப்போஸ்ட் டு மீட் யு இன் திஸ் பார்ட்டி
எதுக்கு
நமக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாமான்னு ஜனங்க யோசிச்சுக்கிட்டு இருக்கு
இப்படி ஆரம்பிக்கும் ரத்னா “காய்ச்சல்” போக போக எகிறுகிறது. புத்திசாலி அமெரிக்க வாழ் இந்திய பெண். ஈகோ ஏறிய ஆண்களுக்கு எரிச்சல் வர வைக்கும் க்யூட் இண்டலக்ட்! அவள் ரகுவுக்கு முகத்துக்கு நேரேயே அவன் வண்டவாளத்தை புட்டு புட்டு வைக்க நெற்றி வியர்க்கும். பிரிவோம் சந்திப்போம் வாசித்த நாள் முதல் ரத்னாவுடன் பேசி, சேர்ந்து பாடி, இளையாராஜா, ரகுமான் எல்லாம் டிஸ்கஸ் பண்ணி, wall street இல் இன்றைக்கு ஆப்பிள் வாலியுவேஷன் 600பில்லியனாம், ஐம்பது ஷேர் வாங்குவோமா என்று பிஸ்னெஸ் பேசி ... ரத்னாஆஆஆ…. இவள் தான் நான் எழுதும்போது அவ்வப்போது எட்டிப்பார்க்கும் மேகலா! “உஷ் இது கடவுள்கள் துயிலும் தேசத்தில்” வரும் கிருஷாந்தி!
இந்த கதையை படமாக்குகிறார்கள். திரைக்கதை வசனமும் தலைவர் தான் என்றவுடன் ஜிவ்வென்று எதிர்பார்ப்பு எகிறிவிட்டது. ரத்னா கரக்டருக்கு “ருக்மணி தேவி” என்றவுடன் புதுமுகம், ஹெவியான ரோல், சொதப்பபோறாங்கள் என்று நினைத்து பயந்தபோது தான் படம் வெளிவந்தது. வரும்போது சுஜாதா உயிரோடு இல்லை! படத்தை ஓரளவுக்கு நேர்மையாக எடுத்திருந்தார்கள். அதிலும் அந்த ரத்னா, what a brilliant casting! சாஸ்திரிய நடனம் பயின்ற திறமையான நடிகை. ருக்மணி தேவியை தான் 2009ம் ஆண்டின் சிறந்த நடிகையாகவும் அடியேன் தேர்வு செய்து இருந்தேன்!!!
இசை ஜி.வி.பிரகாஷ். சுஜாதா படம் என்பதால் பையன் கொஞ்சம் கவனம் எடுத்து “சுடாமல்” இசையமைத்ததில் பல வைரங்கள்! “பூவினை திறந்து கொண்டு போய் ஒளிந்த வாசமே”, “கள்ளில் ஆடும் தீவே” என்று வைரமுத்து ஆனந்த தாண்டவம் ஆடிய பாடல்கள்! நானும் எந்த வகையிலும் ராஜா ரகுமானுக்கு சளைத்தவன் இல்லை என்று ஜிவி சொல்லிவைத்து போட்ட பாட்டு தான் “கனா காண்கிறேன்”. இப்படி ஒரு பாடல் எப்போதாவது ஒரு முறை தான் ராஜாவோ, ரகுமானோ அல்லது வித்தியாசாகரோ மனமுவந்து தருவார்கள். ஜி.வி நம்பிக்கை தருகிறார்.
பாடியவர்கள் நித்யஸ்ரீ, சுபா முட்கல் என்ற ஹிந்துஸ்தானி பாடகருடன் சேர்ந்து வினித்ரா என்ற புதிய பாடகி. பாடலில் உள்ள மென்மையான குரல் வினித்ராவுடையது.
மார்போடு பின்னிக்கொண்டு மணிமுத்தம் எண்ணிக்கொண்டுஎன்னும்போது நித்யஸ்ரீ நிஜமாகவே உணர்ச்சி வசப்பட்டு “மடியோடு” என்ற இடத்தில் அலாதியாக ஒரு ஆலாப் போட, அப்படியே நெஞ்சுக்குழி கிறுகிறுக்கும் என்று நான் சொன்னால், நான் ஏதோ கிறுக்கில் எழுதுகிறேன் என்று நினைப்பீர்கள். கேட்டுவிட்டு சொல்லுங்கள் .. கிறக்கம் தீரும் முன்னர்!
மடியோடு வீடுகட்டி காதல் செய்வாயே

மன்மதகுஞ்சு : தல, “நம்ம” ருக்மணி தான் தலைவரோட “கோச்சட்டி”ல நடிக்கபோறதா நியூஸ் வந்திச்சு!
ஹாட் நியூஸ்!
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும் மொழி வேண்டும்
முன்னம் இருக்கும் இந்த சின்ன முகத்தில்
பல மொழிகள் பாடம் பெற வரவேண்டும் .
பல மொழிகள் பாடம் பெற வரவேண்டும் .
..
..
..
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
நேற்று இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் என்றவுடன், டென்சனாகி, நித்யாவுக்கு போன் போட்டேன்.
எண்டே நித்யா ஓமனக்குட்டி ஈ சுனாமி வருதல்லோ! பயமில்லா! யான் இருக்கேனாக்கும்! கறையாண்டா!
ஆமா ஜேகே .. இந்த கறையான் தொல்லை தாங்க முடியேல்ல! மருந்து அடிக்கணும்!
இந்த வாரமும் வியாழமாற்றம் நல்லாயிருக்கு. பாதி தான் வாசித்திருக்கேன். மீதியை பிறகு வாசிக்கிறேன்.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் ஜே.கே.
நன்றி தலைவரே !!! .... புத்தாண்டு வாழ்த்துக்கள் .. கைவிஷேஷம் எல்லாம் கொடுக்க மாட்டீங்களா?!!
ReplyDeleteகலக்கல் தலை.
ReplyDeleteஅரசியல் தூள் கிளப்புகிறது!!!!!
ஆளுனரின் அதிகாரங்கள் இதைவிட அதிகம்!!
ஆணைப்பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியாததை விட எல்லாம் முடிந்த சர்வவ்ல்லமை பொருந்திய ஒரு குட்டி நிறைவேற்றதிகாரம் மிகுந்த ஜனாதிபதி தான் ,ஆளுனர்!
13ம் திருத்தம் பற்றி மேலும் எதிர்பார்க்கிறோம்!!!
{இப்படி எழுதுவதும், தெளிவு படுத்துவதும்கூட Nation building process தான் என நினைக்கிறேன்}
அண்ணே பாலா ... உசுப்பெத்தி உசுப்பேத்தி ஒடம்ப ரணகளமாக்காமல் விட மாட்டீங்களா? நாங்க அலெர்ட்டு மாமோய்! ஆங்காங்கே சிரிப்பு போலீஸ் சேர்த்து நம்மள காமெடி பீஸ் ஆக்கிவிட்டா, கை வைக்க மாட்டாங்க பாஸ்!!!
ReplyDeleteஅவையடக்கமாம்!!
ReplyDelete{ அதுசரி, நான் பெயர் மாற்றலாம் என இருக்கிறேன், ஏதாவது நல்ல பெயர் இருந்தால் தெரிவிக்கவும் எழுத்தாளரே!}
நான் பிடிச்ச முயலுக்கு மூண்டு கால் எண்டு சொல்லுறியள் :)
ReplyDeleteடேய் புலின்னா பாயணும்டா , தவண்டுகிட்டிருக்கு இண்டைக்கு மட்சில, இதில அந்தாளுக்கு குயிக் ரன் எண்டு குண்டன் ரெய்டர் சிக்னல் கொடுக்கிறாப்பில,தாதா இப்போ தாத்தா ஆகி சிலோ மோஷனில ஓடுறாரு, அப்படியே கெலிச்சிட்டாலும் சூப்பர் கின் மட்ச் பார்த்தியாடா கோழிப்பயலோட செஞ்சோற்றூக்கடனை.. அப்படி அடிக்கணும்டா டூபீசு பிராவோடு டோனி நிண்டு நிதானாம அடிச்ச அடீ கண்ணுக்குள்ளே நிக்குது
ReplyDeleteவணக்கம் ஜே.கே!(என்ன பேருய்யா இது,என்னமோ பேட்டை ரௌடியாட்டம்?)எல்லாம் நல்லாருக்கு!ஒரே மூச்சுல?படிச்சேன்னா பாத்துக்குங்களேன்.சரி ராவணனோட உங்களுக்கு என்ன பிரச்சினை?பனங்கொட்டைத் தலையா எண்டு கூப்பிடுற பழக்கத்தை கிட்டத்தட்ட இருவத்தெட்டு வரியமா மறந்து போயிருந்தம்!ஞாபகப் படுத்தினதுக்கு நன்றி!!!!!வரியப் பிறப்புக்கு உங்களுக்கு வாழ்த்துச் சொல்லுறான் இந்த பனங்கொட்டை சூப்பி,ஹி!ஹி!ஹி!!!
ReplyDeleteஅண்ணா உண்மையிலேயே மிக நன்றாக எழுதுகிறீர்கள் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நாங்கள் கேள்விகள் அனுப்பினாலும் பதிலளிப்பீர்களா ? அவ்வாறின் எந்த மின்னஞ்சல் முகவரி ?
ReplyDeleteஎனக்கும் ஒரே குழப்பம். Tea என்பதை எப்படித் தமிழில் எழுதுவது? 'டீ' என்று எழுதினார் என்போன்ற பனங்கொட்டைத் தமிழர்கள் "Dea" என்று வாசிப்பர். 'ரீ' என்று எழுதினால் தமிழ்நாட்டு அன்பர்கள் "Ree" என்று வாசிப்பார்கள். பேசாமல் எழுத்தாணியை வீசி எறியலாம் போலுள்ளது. ஆனால் தமிழ் கூறும் நல்லுலகம் சந்தோஷமாக இருந்தால் எனக்குப் பிடிக்காது. எனவே நான் தொடந்து எழுதுவேன்.
ReplyDelete"“விளங்காது”-என்பதை வாசிக்கும்போது என் சிங்கப்பூர் ஞாபகங்கள். "விளங்காது" என்பது உங்களுக்குப் 'புரியாது' என்று முஸ்தபாவில் வேலைசெய்த ஒரு அன்பருக்குச் சொல்ல, அவர் 'இளங்கிளியே... இன்னும் விளங்கலியே.. " என்று ஒரு பாட்டைக் கேட்கவில்லையா என்று சொல்ல- நான் வாயெல்லாம் பல்லாக. (இதிலிருந்து யாவரும் அறிவது என்னவென்றால்.... அந்தக்காலத்தில் இருந்து நான் இப்படித்தான் என்பதாகும்)
ReplyDelete@பாலா இனி முருகன் என்று மாத்துவோம்!
ReplyDelete@திலகன் ... நாங்க பிடிச்சது முயலே இல்லை ... அது மூஞ்சூறு!
ReplyDeleteதம்பி மன்மதகுஞ்சு .. நாங்கள் மெதுவாகவும் பலமாகவும் தான் அடித்து ஆடுவோம் ... தல டபிள் சென்ஷரி அடிக்கிற போது பாரு பாஸ்!
ReplyDeleteநன்றி யோகா .. பெயர் நன்னா இருக்கென்று ஹன்சிகா கூட கோல் பன்னி சொன்னாப்ல!
ReplyDeleteநன்றி கண்ணன் .. அண்ணாவா .. உங்கள விட எனக்கு வயசு குறைவு!!! கேள்விகளை எழுதி அனுப்புங்க தலைவரே .. jkpadalai@gmail.com
ReplyDeleteசக்திவேல் அண்ணே விளங்காது என்று இதிலே எழுதினேன். விளங்கேல்ல என்று சொல்லும்போது விளங்காமல் தான நிற்பார்கள்!
ReplyDeleteடீ, ரீ .. இந்த பிரச்சனைக்காக நான் சிலவேளைகளில் ஆங்கிலத்திலேயே எழுதிவிடுவதுண்டு!!
நீங்க மூத்த உறுப்பினர் என்று எங்கள் எல்லாருக்கும் தெரியும்னே!!
சக்தி மற்றும் ஜேகே போன்ற மூத்த உறுப்பினர்களோடு நான் இனி எந்த D-link உம் வைக்குறதா இல்லை, ஒரே பஞ்சாயத்தை ஒன்பது முறை கூட்டிற உங்கட கூத்துக்கு சம்பந்தனே தேவல -
ReplyDeleteஎனக்கு புரியல;
ஓ உங்களுக்கு விளங்கேல்லையா ?;
(குழப்பத்துடன்) புரியல;
அதான் விளங்கேல்ல;
.............
இப்பிடியே பண்ணிட்டு இருங்க விளங்கிடும்.
_________________________________________
நகுல பாண்டிகளா ஒரு தேத்தண்ணி கொண்டுங்கப்பா...
வாலிபன் .. இந்த வார அந்த விஷயம் கம்ப ராமாயண சுவைக்கும், அந்த வாசகர் கடித்தத்துக்கும் லிங்க் ஏற்படுத்த எழுதப்பட்டது ... கம்பரை கொஞ்சம் வித்தியாசமாக சொல்லிப்பார்ப்போம் என்ற "cat" இன் முயற்சி தான் அது .... கண்ணாடி ஓகே யா?
ReplyDelete>நீங்க மூத்த உறுப்பினர் என்று எங்கள் எல்லாருக்கும் தெரியும்னே!!
ReplyDeleteஐயகோ, வெறும் 43 வயதிலேயே மூத்தகுடியா? என் செய்வேன் ..
//ஈழத்து அரசியல், பாராளுமன்ற அரசியல்வாதிகள், தீவிரபோக்குள்ள இளைஞர்கள் கைகளில் இருந்த காலத்தில் தூரநின்று தயக்கத்துடன் வேடிக்கை பார்த்த இந்த மாதிரி ஆட்கள்//",
ReplyDeleteமற்றவர்களால் மாற்றப்படாமல் இருந்தால் வண்டி ஒரு திசையில் செல்லும்
//எல்லா வீதிகளும் ரோம் நகரத்தை நோக்கியே//
பதின்மூன்றாம் திருத்தச்சட்டத்தின் விளக்கத்திற்கு நன்றி
//சரியான முதலீட்டாளர்கள், மார்க்கட்டிங், சேல்ஸ் என்ற ஒரு முழுச்சங்கிலியும்(ecosystem) ஒரு சின்ன ஐடியா பூவாகி, மொட்டாகி, விதையாகி மரமாக தேவையாகிறது. //
உண்மை தான்....... பார்ப்போம்
//உண்மைக்கு முன்னால் சொல்லும் பொய் போல எவ்வளவு எழுதினாலும் காறித்துப்புகிறார்கள்.//
உங்களுடைய partyக்கு என்னை bite ஆக்கிவிட்டீர்களே ???என்ன ஆட்டோ ரேஞ்சுக்கு போயிருக்க தேவையில்லை .
//பாடியவர்கள் நித்யஸ்ரீ, சுபா முட்கல் என்ற ஹிந்துஸ்தானி பாடகருடன் சேர்ந்து வினித்ரா என்ற புதிய பாடகி//
சுபாவின் குரல்தான் ஒருமாதிரி இருக்கிறது. நித்யஸ்ரீ பிரமாதம்.
//நேற்று இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் என்றவுடன், டென்சனாகி//
சுனாமி எச்சரிக்கை கொடுத்த இடத்துக்கெல்லாம் இது தான் சாட்டென்று கதைச்சிருப்பியல்
அட ஜேகே நான் சொம்மா ஒரு கலாய் தான் பண்ணினேன். நீங்க நடத்துங்க, அனா ஊன்ன நம்மள எதோ கவிதை கண்ணாயிரம், கம்பன் கழனித் தண்ணி எண்டு சொல்லுறது கேரா இருக்கு.
ReplyDelete