Skip to main content

Posts

நீ தானே எந்தன் பொன் வசந்தம்! கொலவெறி Version!!

      இந்த படைப்பை உலகம் முழுதும் பிரபலமாக்கி, இசைஞானி தனுஷின் புகழை ஹங்கேரி வரை பரப்ப, படலை வாசகர்களை வேண்டி நிற்கும், கேதா & ஜேகே             லொள்ளு மாமு லொள்ளு!!

Disgrace

அலுவலகத்தில் இருந்து இரண்டு நிமிட நடை தூரத்தில் ஐஞ்சு டாலர் புக் ஷாப் ஒன்று இருக்கிறது. புத்தகங்கள் எந்த வரிசைப்படியும் அடுக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ராண்டமாய் கிடக்கும். “Q&A” க்கு பக்கத்தில் “Pride and Prejudice” இருக்கும். “The Art Of War” க்கு பக்கத்தில் “Mother Therasa” கிடைக்கும். ஒரு முறை அங்கே வேலை செய்யும் நடாலியாவிடம் ஏன் இப்படி ஒழுங்குபடுத்தாமல்  தாறுமாறாக அடுக்கி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அப்படி தேடும்போது தான் சர்ப்பரைசிங்காக ஒன்றை காண்பாய் என்றாள்.  கண்டனன் என்றேன். வெண்மேக கூட்டம்! சூரியன் மெதுவாய் நோட்டம்! வெள்ளைக்காரி வெட்கம்! கவிதையா? என்றாள் இன்றைக்கு இரண்டாவது என்றேன்! புரிந்து சிரித்தாள்! புரியாமல் விழித்தேன். Cappucino காபி favourite என்றாள்! Coffee Bean @ Five? நம்பிக்கையில் தான் அன்றைக்கும் அந்த புக் ஷாப்புக்கு போனேன். வழமையாக நான் என் டெஸ்க்கில் இருந்தே அம்மா கட்டித்தந்த  புட்டையும் தேங்காய்ப்பூ சம்பலையும் ஸ்பூனால் சாப்பிடுவேன்.  அலுவலகத்து ஆஸி நண்பர்களுக்கு கூட யாழ்ப்பாணமும் புட்டும் எவ்வளவு tight friends என்று இப்போது தெரிய

சின்னக்கண்ணன் அழைக்கிறான்!!

என்ன ரொம்ப நாளாகிவிட்டதா! ஏதோ ஒரு மூட் வந்து மீண்டும் ஒருமுறை “என்றென்றும் ராஜா” நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன். “சின்னக்கண்ணன் அழைக்கிறான்” பாடல். சூரியனுக்கு டார்ச் அடிக்கப்போவதில்லை. ஆனால் இந்த பாடல் தான் பதிவுக்கு தலைப்பிள்ளை!  ராகம் ரீதிகௌலா. பின்னாளில் வரப்போகும் மிகப்பெரிய மெலடி ஹிட்ஸ்க்கு எல்லாம் இன்ஸ்பிரேஷன்! இரண்டு ராஜாக்களும் இணைந்திருக்காவிடில் ரீதிகௌலா இத்தனை பாடல்களை தமிழ்த்திரை இசைக்கு தந்திருக்குமா? சந்தேகம் தான்! சிங்கப்பூரில் இருக்கும்போது ஒருமுறை எழில் வீட்டுக்கு சென்றிருந்தேன். இரவு எல்லோரும் dinner க்கு food court போகிறோம். பக்கத்தில் தீபன். புதிதாக ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டு இருந்தான். “என்னடா இது பாட்டு, எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேடா” என்று சொன்னேன். “கண்டுபிடி பார்ப்போம்” என்றான். பிடித்தேன். சிரித்தான்! கிட்டத்தட்ட ஏக் டு ஏக் காப்பியாக “சின்னக்கண்ணனை” அடித்தால் நான் கூட கண்டுபிடிப்பேன் தானே!!! சேலையில் இருந்தாலும், குட்டை பாவாடை போட்டிருந்தாலும் ஹன்சிகா ஹன்சிகா தானே. நாங்க பாத்திடுவோம்ல! ஆனாலும் சான்சே இல்லாத பாடல் தான்! அதுவும்

A Thousand Splendid Suns

டெல்லி விமானநிலையத்தில் வாங்கி அங்கேயே வாசிக்க தொடங்கி, மூடி வைக்க முடியாமல், சிங்கப்பூர் விமான நிலையத்தில் taxyக்கு வரிசையில் நிற்கும்போது கூட வாசித்து, டிரைவருக்கு PIE சொல்ல மறந்து, AYE நெரிசலில் திணறும்போது நானும் காபுல் சண்டையில் சிக்கி! வீடு வந்து, இரவிரவாக வாசித்து, அடுத்த நாள் வேலைக்கு லீவு போட்டு, சாப்பாடு தண்ணியில்லாமல் அதுவே கதியென்று கிடந்து, இரவு எட்டு மணிக்கு என் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தால், அக்கா பாவமாய் பார்த்து கேட்டாள். “யாரடா அந்த பொண்ணு?” “பொண்ணு இல்ல அக்கா ….. பொண்ணுங்க! “The Kite Runner” புகழ் காலித் ஹூசைனின் “A Thousand Splendid Suns” வாசித்தால் புரியும், மரியமும் லைலாவும் உங்கள் இதயத்தின் இடது வலது என்று இடம்பிடித்து இருப்பார்கள். சம்பந்தமேயில்லாவிட்டாலும் அகிலனின் பாவை விளக்கில் வரும் தேவகியை மரியத்தோடும், கௌரியை லைலாவுடனும் மனம் ஒப்பிட்டுக்கொண்டு இருந்தது. வாசிக்கும் போது ஒரே முகங்கள் வந்துகொண்டு இருந்தன. என்ன ஒன்று ரஷீத் என்ற அரக்கனை தணிகாசலத்தோடு ஒப்பிடவேமுடியாது! ஆப்கான் கதை தான். மரியம், ஒரு பணக்கார தியேட்டர் முதலாளியின் சட்டவிர

திரட்டிகளில் என்ன தான் நடக்கிறது?

  கடந்த சில நாட்களாய் பதிவர்களுக்கு ஒரு ஆச்சரியம். தங்கள் பதிவுகளில் உள்ள திரட்டிகளில் வாக்குப்பட்டி எல்லாம் துடைத்து கிளீன் ஆக இருக்கிறது. தமிழ்மணம், தமிழ்10, உடான்ஸ், இன்டெலி என எல்லாமே மக்கர் பண்ணுகிறது. ஏன் இந்த சிக்கல் என்று மண்டையை பிய்த்துக்கொண்டவர்களுக்கு இதோ! எல்லாம் கூகுளின் கண்டறியாத புதிய பிரைவசி பாலிசி தான். எல்லா blogger.com பதிவுகளையும் அந்தந்த நாட்டு டொமைன்களுக்கு மாற்றுகிறது. உதாரணமாக நீங்கள் இந்தியாவில் இருந்தால் நீங்கள் செல்லும் blogger தளங்கள் எல்லாம் blogger.com.in என்று redirect ஆகும். ஆஸ்திரேலியாவில் இருந்தால் blogger.com.au என்று முடியும். பதிவுகளை வாசிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. திரட்டியில் தான் சிக்கல். எப்படியா? உதாரணமாக நான் இந்த பதிவை தமிழ்மணத்தில் இணைக்கிறேன். நான் இணைக்கும் URL “http://orupadalayinkathai.blogspot.com. au /2012/01/blog-post_30.html ” என்று இருக்கிறது இல்லையா. இப்போது நீங்கள் இந்தியாவில் இருந்து பதிவுக்கு வருகிறீர்கள். உங்கள் URL http://orupadalayinkathai.blogspot.com. in /2012/01/blog-post_30.html . இதனால் நீங்கள் வாக்களிப்பது எனக்கு

என் கொல்லைப்புறத்து காதலிகள் : கம்பியூட்டர்

  கௌஷல்யா அக்கா, பெரியம்மாவின் மகள். அத்தான் இன்ஜினியர். 80களிலேயே யாழ்ப்பாணத்தில் கம்பியூட்டர் வைத்திருந்தவர். நான் அறிந்த இன்ஜினீயர்களில், அந்த திறமையை வீட்டிலும் பயன்படுத்துபவர். அவர் வீட்டில் அழுக்குத்தண்ணி போகும் குழாயும் கிடங்கும் கூட ஒரு இன்ஜினியரிங் டச்சுடன் இருக்கும். பத்து வயசிலேயே அவர் மகன் சின்ன circuit இல் LED எல்லாவற்றையும் இணைத்து எனக்கு காட்டுவான். பளிச் பளிச் என்று ஒவ்வொரு கொமாண்டுக்கும் ஒவ்வொரு வரிசை காட்டும். நான் சொல்வது 88ம் ஆண்டு கதை. அப்போது தான் கணனியில் கேம் விளையாட பழக்கினார். போர் விமானம் ஒன்றை ஒரு குறுகலான கரடுமுரடான வழியில் செலுத்தவேண்டும். கல்லு விழும். மற்ற விமானங்கள் குண்டு பொழியும். தப்பவேண்டும். ஓடவேண்டும். அவர்கள் இப்போது கனடாவில் இருக்கிறார்கள்!  நான் ஆஸ்திரேலியாவில்!   1999 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை எடுத்தாயிற்று. இனி என்ன செய்ய என்று அக்காவிடம் கேட்ட போது அடுத்த முறைக்கும் இப்போதே தயாராகு என்று சொன்னா! என் ரிசல்ட்டை பற்றி வீட்டில் அவ்வளவு நம்பிக்கை! ரிப்பீட்டுக்கு டே கிளாஸ் எல்லாம் எப்போது ஆரம்பிக்கும் என்று Science hall சென்று விசாரித்ததை பார்த

படிச்சதென்ன பிடிச்சதென்ன? : புத்தனின் ஊரில் புத்தர்கள்!

இன்று காலை ஏதன்ஸ் நகரத்து வாலிபனின் வீட்டுக்கு போனேன். “புத்தனின் ஊரில் புத்தர்கள் ” என்று ஒரு கதை. சிறுகதை. சார் கவிஞர் என்பதால் கதை எழுதினாலும் கவிதை போல இருக்கிறது. நான் எழுதும் கவிதை கதை போல இருப்பது போல! கதையை அங்கே போய் வாசியுங்கள். கதைக்கு நான் போட்ட கமெண்டும் அவன் பதிலும் பதவில் ஏற்றப்படவேண்டியது போல தோன்றியதால் காப்பி பேஸ்ட் டீ! ஜேகே சொன்னது… //ஒரு காய்ந்து போன அரசமிலை காற்றில் நடமாடியது, மிதந்தது, ஒய்யாரமாய் ஊஞ்சலாடியது, கொஞ்சம் முன் சென்று பின் காட்டியது, சட்டென அம்பாகி நோக்கி நகர்ந்தது, வளையம் வளையமாய் சுழன்று பின் சட்டென நிலத்தில் சரண் புகுந்தது. அரசமிலைக்கு நிலம் சரணா சமாதியா ? என் கற்பனை செரியா ? // சங்ககால உவமானம் இன்றைக்கும் நின்றுபிடிக்கிறது! உங்கள் அளவுக்கு தமிழறிவு இல்லை. இருந்தாலும் சொல்கிறேன். ஒரு நல்ல கவிதையை கதையாக எழுதி அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் ஆக்கிவிட்டீர்களோ? உரைநடை கவிதை என்றும் சொல்லமாட்டேன். சிறுகதை தான். 70 களின் சிறுபத்திரிகைக்கதை. ஒரு உண்மை, எழுதுபோருளை, சிறுகதையாக்கினால், அப்பட்டமாக முகத்தில் அடிக்கும். ஏர்போர்ட்டிலும் அடிக்கும்! க

கவிதையும் வேண்டாம் கன்சிகாவும் வேண்டாம் :(

  சென்ற ஞாயிறு மெல்பேர்னில் பொங்கல் விழா.  கேஸி மன்றம் நடத்தியது. மன்றத்து தலைவர் call பண்ணினார். “ஹலோ மேகலாவா” “சாரி டீ இன்னும் வரல” “ஆ நான் அப்புறமா பேசறேன்” “கொய்யால, நீ எப்ப பேசினாலும் மேகலா இருக்கமாட்டா!!, தெரியும்டா ஒங்கள பத்தி!” “இல்ல ஒரு கவியரங்கம், மேகலா தான் கவித எழுதுவாளே அதான்” “ஓ சாரி , ஹன்சிகாவ ட்ரை பண்ணுங்களேன்” “ஓ ஓகே, ட்ரை பண்ணுறன், சாரி போர் த டிஸ்டர்பான்ஸ்” தலைவர் போனை வைத்துவிட, இந்த வாரம் யாரு கொல்லைப்புறத்து காதலி என்று ஐ ஆம் திங்கிங், போன் எகைன்! “ஜேகே .. நீயும் எழுதுவ தானே” “எழுதினான், பட் சரி வரல!” “ஆனா பதிவு சிலது நல்லா இருக்கே!” “ஓ அதுவா, அது சும்மா அள்ளுது, கொலை செய்யுது, அபாரம் என்று ஒரு சில வாரத்தைகள போட்டு எழுதுறது” “கவியரங்கத்துக்கு ஆறுபேரு தேவை. ஒரு கை குறையுது! அப்பிடியே ஒரு பதிவ கவிதையா எழுதி வாசிக்கிறயா?” “What the …  கவிதை என்றாலே நான் நாளு நாள் டாய்லட் போவேன். அவ்வளவு அலெர்ஜி” “இல்ல உன்னோட கேதா, உதயா கௌரி எல்லாம் கவிஞர்கள் தானே” “நான் எப்பவாச்சும் அவங்க கவிஞர் எண்டு சொன்னேனா?” “இல்ல, அவங்கட பதிவ பார்த்தா அப்புடித்தான் தெரியுது”

யாழ்ப்பாணத்தில் திமுக தலைவர்!

  இராமசாமி தண்டவாளத்தடியில் ஒன்றுக்கு போய்விட்டு வந்து சொன்னார். “வெங்காயம் வெங்காயம்! தமிழனுக்கு யாரிட்டையாவது ஏமாறிக்கொண்டு இருக்காட்டி பத்தியப்படாது. யாராவது இன்சூரன்ஸ்காரன் பல்சரில வந்து ஏமாத்துவான்! இல்லாட்டி கொழும்புல பிளாட் கட்டலாம் எண்டு உறுதியில்லாத காணிக்கு காசு குடுப்பியல், அதுவும் இல்லாட்டி பிள்ளையார் கோயிலுக்கு தங்கத்தில மணி மகுடம் வைப்பியல் .. விளங்காம தான் கேட்கிறன் கடவுள் ஆரடா?” “சாமியண்ணே, கதைய விட்டிட்டு மேசைய பார்த்து விளையாடன! விசுக்கொப்பன் துரும்பு, மசிர்.. அத பிடிக்க ஏலாதே? அடுக்கி விளையாடுற தாள், இத்தினி வருஷமா விளையாடுற, இன்னும் துரும்பு பிடிக்க மாட்டியாம், கடவுள் இல்லையெண்டு கண்டுபிடிக்க வந்திட்டார் பேராசிரியர் சிவத்தம்பி!” உங்களோட  தாள் விளையாடுற என்ன போய் செருப்பால அடிக்கோணும், சிவத்தம்பிக்கும் கடவுளுக்கும் என்னடா சம்பந்தம்? மத்தியானம் சாப்பாட்டு நேரம் தாண்டிக்கொண்டு இருந்தது. இராமசாமி பேசியதை மற்றவர்கள் கணக்கெடுத்ததாக தெரியவில்லை. எல்லோரும் ஒத்த வயதுக்காரர்கள். “ஹிட்லர் சாகிறதுக்கு முதல் கலியாணம் முடிச்சது”, “ஜி ஜி பொன்னம்பலம், பிரிட்டிஷ் மகாராணிக்கு

The Namesake

நண்பர் சுகத் ஒரு பதிவுக்கு ஒரு போட்டிருந்த கமெண்ட் இது. “The books are like Guru's, most of the good books will find you, you don't have to go and find them.” உண்மை தான். வாழ்க்கையில் சில புத்தகங்கள் நம்மை தேடிவரும். அப்படியே போட்டுதாக்கும். இது போல் ஒரு உறவு இனி இல்லை என்று அவை ஒன்றாக எம்மோடு கொள்ளும். இரவு பகல் பார்க்காது.  கடவுள் ஒவ்வொருவருக்கும் துணையாக ஏதாவது ஒன்றை அனுப்புவாராம். கணவனாக, மனைவியாக, சில கலைஞர்களுக்கு துணைவி கூட அமைவதுண்டு! சிலருக்கு அம்மா, சிலருக்கு அப்பா, ஒரு சிலருக்கு செய்யும் வேலை, சிலருக்கு பணம். துணை பல வகை. எனக்கு அது புத்தகமா என்று சில நேரங்களில் நினைப்பதுண்டு. அப்படியென்றால் கடவுளுக்கு நன்றி. உனக்கும் ஒரு புத்தகம் அனுப்புகிறேன் கடவுளே! என்னை அப்படி, கார்த்திக்குக்கு ஒரு ஜெஸ்ஸி போல போட்டு தாக்கியது இரண்டு நபர்கள். முதல் நபர் எண்டமூரி. அப்போது நான் பளையில் இடம்பெயர்ந்து அகதியாக இருக்கிறேன். 1995ம் ஆண்டு. பாடசாலை இல்லை. படிப்பு இல்லை. ஆனால் எண்டமூரியின் “ஒரு பறவையின் விடுதலை” இருந்தது. பளையில் இருக்கும் வரை மீண்டும் மீண்டும் வாசித்த புத்தகம். ச