Skip to main content

“கொச்சின் மாடப்புறா!”


unnudan11998ம் ஆண்டு தீபாவளி. காலையிலேயே பொதிகையில் புதுப்பட பாடல்கள் நிகழ்ச்சி ஆரம்பித்தது. அம்மாவிடம் ஏச்சு வாங்கிக்கொண்டு டிவி முன் உட்கார்ந்த போது,  முதல் பாடல் ஒரு சுலோகத்துடன் ஆரம்பித்து, “பச்சை மா மலை மேனி” என்று தொடர, தேவாவுக்கே உரிய வயலின் ரீங்காரத்துடன் கோரஸ் சஞ்சாரிக்க, ஹரிஹரன் கணீரென்று பாடத்தொடங்கினார். எனக்கோ ஒன்றுமே புரியவில்லை. ஒரு வித பரவசத்தில் பார்த்துக்கொண்டு இருந்ததில் எந்த படப்பாடல் என்றும் கவனிக்கவில்லை. பாடல் முடிந்த கையோடு, மிகுதி நிகழ்ச்சியை பார்க்காமல், நண்பன் பார்த்தியிடம் ஓடிப்போய் என்ன படம் என்று விசாரித்தபோது தான் தெரிந்தது அது "உன்னுடன்” என்று.


வானம் தரையில் வந்து !

இந்த பாடலில், ஹரிகரனை ஷேவாக் மாதிரி அடித்து ஆட தேவா அனுமதித்திருப்பதாக தெரிகிறது. தலை சும்மா பின்னி எடுத்து இருப்பார். இன்றைக்கு வரைக்கும் யாரும் இந்த பாடலை மேடையிலோ வேறு நிகழ்ச்சியிலோ நன்றாக பாடியதாய் தெரியவில்லை. அத்தனை கடினம் இது. ஒருமுறை ஹரிஹரன் கூட மேடையில் பாடி சொதப்பி இருப்பார்!

வைரமுத்துவுக்கு மெட்டை கேட்டவுடனேயே இது ஒரு கோகினூர் என்று தெரிந்து விட்டது. ஆரம்ப வரிகளே அமர்க்களம். இந்த பாடலைப்பற்றி ஒரு முறை “சக்தி எப் எம் இளைய சக்தி” நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்ட போது வரிக்கு வரி சிலாகித்து இருப்பேன். அப்படி ஒரு காதல் இதன் மீது.
வானம் தரையில் வந்து நின்றதே
பூமி நிலவில் புகுந்துகொண்டதே
திசைகள் எல்லாம் திரும்பிக்கொண்டதே
தென்றல் பூக்களைப் ஒளிந்துகொண்டதே
என்னடா இது எல்லாமே ஏறுக்கு மாறாக இருக்கிறதே என்று பார்த்தால்,
Unnudanவிழிகளை வீசிய இளைய கொடி இந்த
விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி
ஒருமுறை அடி ஒரே முறை ஒரு பார்வை பார்
உலகம் சுழலும் மறுபடி
என்று முடித்திருப்பார்! கெட்டுது போ!
 
 
90களில் தேவாவின் வீட்டில் சரஸ்வதியின் புட்பகவிமானம் மிஸ்லாண்ட் பண்ணி இருக்க வேண்டும்! அந்நாட்களில் எல்லாம் தேவா என்றாலே தென்றல் தான். அந்த பீரியட்ல வேறு காதல் படங்கள் தான் டிரெண்ட். “ஆசை”, “காதல் கோட்டை” யில் ஆரம்பித்து, “கண்ணெதிரே தோன்றினாள்”, “நினைத்தேன் வந்தாய்” என்று தேவாவுக்கு எப்படி தான் அந்த மூடு வந்ததோ தெரியவில்லை. தலைவர் மெலடி மேல் மெலடியாக போட்டுத்தள்ளிக்கொண்டு இருந்த நேரம். ஆர்.பாலு என்ற இயக்குநர், “காதல் கோட்டை” தன்னுடைய கதை என்று புலம்பி விட்டு, பின் “காலமெல்லாம் காதல் வாழ்க” என்ற படம் எடுத்தார். பாட்டுகள் பற்றி சொல்ல தேவையில்லை. அவர் எடுத்த அடுத்த படம் தான் “உன்னுடன்”. தேவா தான் இசை. அதே முரளி கௌசல்யா ஜோடி. பாடல்கள் உலகத்தரம்!
 
இந்த படம் ஒரு நல்ல மெலடி பாடல்களுக்குரிய சூழ்நிலைகள் அமைந்த படம். கௌசல்யா ஒரு மருத்துவ கல்லூரி மாணவி, மலையாளி வேறு. முரளி வழமை போல ஒரு ரிசேர்வ்டான,  பார்மசி கடை வைத்திருப்பவர். இருவரும் நண்பர்கள். இருவருக்குள்ளும் ஒரு காதல் இருக்கும், ஆனால் சொல்ல மாட்டர்கள். ஒருவிதமான intellectually matured நிறைந்த காதல். அவர்களின் பேச்சுகளிலும் பார்வைகளிலும் அது தேங்கி இருக்கும். இது போதாதா ஒரு மியூசிக் டிரெக்டருக்கு? தேவா ஒரே ஓவரில் நான்கு சிக்ஸ்ர்ஸ்!
 

கண்டு பிடி அவனை கண்டு பிடி

SPB, ஹரிணி பாடிய பாடல். தாண்டியா வகை பாடல். ஹரிணி “நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டு பிடி” என்று கொஞ்சும் போது அதை மீண்டும் கொடுத்து விட வேண்டும் போல தோன்றும்!




திருடிச் சென்றதைத் திருப்பித் தண்டால்
அந்த இதயத்தை அவனுக்கே பரிசளிப்பேன்
என்று பெண் பாட
திருடிச் சென்றவள் திரும்பி வந்தால்,
மிச்சம் இருப்பதை மீண்டும் திருடச் சொல்வேன்
என்னும் போது SPB சின்ன சிரிப்பு சிரிப்பார்… அய்யோடா..
 
அடுத்த பாடல், சோகம் கொட்டும். அந்த நாட்களில் தேவாவின் சோகமான, மற்றும் சில ரொமாண்டிக் ஸ்லோ மேலோடிகளை உன்னிப்பாக கேட்டுப்பாருங்கள். உதாரணத்துக்கு கருடா கருடா பாடல் போல, ஒரு பேஸ் பிட்ச்சில் வயலின் அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, அப்படியே ஒரு பெண் கோரஸ் ஹார்மனி பாட, நம் மனசை ஏதோ ஒன்று பிசையும். உடனே பக்கத்தில் இருந்த பெண்ணை பார்த்து “ஐ லவ் யு” சொல்லலாமா என்று மனதுக்குள் தோன்றும். அது தான் 90களில் தேவா!

கோபமா?
கோபமா! Pan flute, வயலின், செல்லோ என எல்லாமே சேர்ந்து இதயத்தை கிழிப்பது போதாது என்று ஹரிஹரன் மென்மையான குரலில் “கோபமா?” என்று கேட்கும் போது எந்த பெண்ணும் இளகாமல் இருக்க மாட்டாள். 
மீண்டும் வைரமுத்து, மனுஷன் எப்படி அனுபவித்து எழுதி இருக்கிறார் என்று பாருங்கள்.
மெளனங்கள் மொழிகளின் வேஷமம்மா
மறு மொழி ஒன்று பேசிடம்மா
அந்த கால கட்டத்து காதல் படங்களின் ஒரு சிறப்பு அவற்றின் பாடல்களின் ஒளிப்பதிவு. பாடல் காட்சிகள் எல்லாம் ரசித்து ரசித்து ரொமாண்டிக்காக எடுத்து இருப்பார்கள். அதிகமான நடனம் இல்லை. அவனும் அவளும் காஸுவலாக நடப்பது மட்டும் தான். ஆனால் காட்சிகள் எல்லாம் சும்மா கண்களை அப்படியே அள்ளும்.
 
இந்த பாடல், இந்த ஆல்பத்துக்கே சிகரம் வைத்த பாடல் என்று சொல்லலாம். The number which sealed the album என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். உன்னிகிருஷ்ணன், சொர்ணலதா குரல்கள். கேரளத்து காட்சிகள். பெண் மலையாளி. அவளின் ஊரில் அவன், அவளோடு சுற்றிப்பார்க்கிறான், உள்ளுக்குள்ளே குமையும் காதல், சொல்லவோ தயக்கம். வேறு என்ன வேண்டும்?

கொச்சின் மாடப்புறா'!
கொஞ்சி கொஞ்சி பாடுவது என்று சொல்லி கேட்டு இருக்கிறீர்களா? உன்னி பாடுவது அப்படி இருக்கும்!
பாடலை கேட்கும் போது அந்த கொச்சின் துறைமுகமும் அது சார்ந்த பகுதியையும் உணர கூடியதான இசை கோர்ப்பும் வாத்திய தெரிவுகளும் தேவா பயன்படுத்தி இருப்பது புரியும். இடையில் “சீதா கல்யாணம்” வேறு வந்து சேர அப்படியே பாடல் கம கமக்கும்!
 
music-director-deva
என்றாவது ஒருநாள் தேவாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், எப்படி இந்த மாதிரி பாடல்களை உங்களால் 90களில் உருவாக்க முடிந்தது? என்று கேட்கவேண்டும். அது ஏன் 2000திற்கு பின்னர் நின்று விட்டது? தேவா மற்றவர்களின் இசையை பயன்படுத்துகிறார் என்பதை எல்லாம் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். இவ்வாறான உலகத்தரமான இசையை, அதை காதலித்தால் மட்டுமே தர முடியும். தேவா காதலித்தார்.
 
சின்னஞ்சிறியது பறவை தன் சிறகில் சுமக்கும் சிலுவை
இது வார்த்தை இழந்தது வாழ்வில் முதல் தடவை

என்ன? இந்தவார ♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪ பிடித்திருக்கிறதா?  மீண்டும் அடுத்த செவ்வாயில் வேறு ஒரு மியூசிக்கல் collection உடன் சந்திப்போம்!
முன்னைய வாரங்களின்  ♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪





















Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக