நேற்று அவள் இருந்தாள்.

 

185815_10151190737308313_1351057308_n

பாக்கியம் செத்து போனாள்.

மீண்டும் ஒரு முறை சாமி நெஞ்சில் காது வைத்துப்பார்த்தார். அசுமாத்தம் இல்லை. மூச்சுக்கான எந்த சிலமனும் இல்லை. உடல் ஏற்கனவே சில்லிட ஆரம்பித்துவிட்டிருந்தது. பின்னந்தலையில் இருந்து இரத்தம் திட்டு திட்டாக இன்னமும் வழிந்து ஓடியபடியே. தரையில் சுளகு, கொஞ்சம் தாறுமாறாக கிடந்த முருங்கை இலைகள். நிச்சயமாக பாக்கியம் செத்துதான் போனாள். பக்கத்திலேயே ஒரு ஸ்பானர். ஸ்பானரின் முனையில் மாத்திரம் கொஞ்சம் இரத்தம் ஒட்டியிருந்தாற்போல; சாமி அதை எடுத்துப்பார்த்தார். பாக்கியத்தை பார்த்தார். பற்கள் கொஞ்சம் வெளித்தள்ளி சாமியை பார்த்து ஏளனமாக சிரிப்பது போல தோன்றியது.

வியாழமாற்றம் 09-05-2013 - இளிச்ச வாய் பூனை

 

eye

 

சிவகாமியும் இளிச்ச வாய் பூனையும்!

கோழிக்கூட்டுக்கு பக்கத்தில் நின்ற சின்ன நெல்லி மரத்தின் நடுக்கொப்பில் இருந்தபடி சிவகாமி விக்கி விக்கி அழுதுகொண்டிருந்தாள். புலமைப்பரிசில் பரீட்சைக்கு இன்னமும் நான்கு மாசங்கள் கூட இல்லை. ஆனால் இந்த சிட்டை கணக்கு மட்டும் சிவகாமிக்கு சமப்படுதே இல்லையாம். படிக்கும்போது அப்பா தலையில் ஒரு குட்டு போட்டு விட, கிளுக் என்று அழுதபடியே அதே வேகத்தில் நெல்லி மரத்தில் ஏறியவள் தான். வீட்டில் உள்ளவர்கள் கேட்கும் டெசிபலில் இன்னமும் அழுதுகொண்டிருந்தாள்.

வியாழமாற்றம் 02-05-2013 : கள்ளக்காயச்சல்

 

604145_436509086438264_1618075806_n

உரைநடை

இது ஒருவித ரெடிமேட் காய்ச்சல்.  ஹோம் வோர்க் செய்யாமல் விடுவது தொடக்கம் மூலைவீட்டு லாவண்யா சாமத்தியப்படுவது வரைக்கும் பலவேறு காரணங்களுக்காக வரும். முதல்நாள் அன்று எந்த சிலமனும் இல்லாமல் கம்மென்று இருப்பவன் விடியக்காலமை ஏழு மணி தாண்டியும் எழும்பவில்லை என்றாலே சம்திங் ரோங் என்று அம்மாவுக்கு தெரிந்துவிடும்.

“அப்பன் எழும்படா”

என் கொல்லைப்புறத்து காதலிகள் : கக்கூஸ்

 

timthumbநடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக போவதென்றால் அது ஒரு பெரிய அரசியல் பிரச்சனை. தனியாக போகமுடியாது. செத்துப்போன தாத்தா பத்திக்குள்ளே சுருட்டு பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் வேறு நிற்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரையில் இருக்கும் அம்மாவை எழுப்பவுவது. முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார்.

“பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”

ஆத்தில வாசகன் … குளத்தில எழுத்தாளன்!

 

1950s-photo-of-two-boys-r-007

“என் இனிய இயந்திரா”, தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், யாழ்ப்பாணத்து வகுப்பறைகளில் அந்த புத்தகம் தவணை முறையில் கை மாறும். யார் அன்றைக்கு அதை வீட்டுக்கு கொண்டு போவது என்று போட்டி இருக்கும். அந்த இயந்திர நாயை பற்றி மாணவர்கள் கலந்து பேசுவார்கள். அடுத்த சில நாட்களில் “ஏன் எதற்கு எப்படி” என்ற இன்னொரு நூல் இதே போன்று ஒரு சுற்று வரும். மாணவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு நூலகத்தில் உறுப்பினராக இருப்பர். அம்புலிமாமா, ராணி காமிக்ஸில் ஆரம்பிக்கும் வாசிப்பு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கல்கி, பாலகுமாரன், ஜெயகாந்தன், அகிலன் வரைக்கும் நீளும். எழுத்தாளர் விழாக்கள் எல்லாம் பாடசாலை முடிந்தபின் மதியம் இரண்டு மணிக்கு, உச்சி வெயிலில், பாடசாலை முடிந்து வீடு திரும்பும் வழியில், சமாந்தரமாக துவிச்சக்கரவண்டிகளில் பயணம் செய்யும்போது தினம் தினம் இடம்பெறும். சில மாணவர்கள் பாலர் கவிதைத்தொகுப்பு வெளியிடுவார்கள். ஆசிரியர்கள் மாணவர்களை சிறுகதை எழுத சொல்லுவார்கள். மாலை ஆறு மணிக்கு மேசைவிளக்கில் படிக்கும் சிறுவனை எட்ட நின்று கவனித்தால், புத்தகம் நடுவே செங்கை ஆழியானின் கடல்கோட்டை இருக்கும். கதிரையை இழுத்து முற்றத்தில் போட்டு, பக்கத்தில் அரிக்கன் இலாம்பை வைத்து நிலவு வெளிச்சமும் கூட இருக்க, அக்கா வந்தியத்தேவனோடும் குந்தவையோடும் மூழ்கிக்கிடப்பார். புத்தகங்களும் வாசிப்பும் ஈழத்து வாழ்க்கையில் இன்றியமையாத பின்னிப்பிணைந்த தோழனாக, தோழியாக, சுற்றமாக எப்போதுமே இருந்திருக்கிறது.

வியாழமாற்றம் 18-04-2013 - ஓடு ஓடு ஓடு.

 

திடீரென்று சூரியன் இருந்த இடம் இல்லாமல் போய்விட்டால் அதன் உடனடி தாக்கம் எப்படியாக இருக்கும்? பூமியில் நிலைமை என்னவாக இருக்கும்? அடுத்தகணமே இருண்டுவிடுமா? விலகி போய்விடுமா? ஈர்ப்பு விசைக்கு என்ன நடக்கும்?

 

கனவு மெய்ப்படவேண்டும்!

vasul_12_800“வாழ்க்கையில் என்னவாக வரப்போகிறாய்” என்ற சின்ன வயது கேள்விக்கு ரெடிமேட்டான பதில் “டொக்டர்” தான். எனக்கும் வளர்ந்து FRCS முடித்து ஏழைகளுக்கு இலவச சத்திரசிகிச்சை செய்யவேண்டும் என்று ஐந்து வயதில் ஒரு ஆசை இருந்தது. கஜனிடம் சொன்னேன். தனக்கு மூன்று வயதிலேயே அது வந்தது என்றான்.