Skip to main content

Posts

Showing posts from October, 2016

The Human Exodus

Today marks the 21st anniversary of the tragic internal displacement of Jaffna, a northern city of Sri Lanka. I was fifteen at the time. I was living with my sister who had just finished her Advanced Levels and my brother who had started to practice as an English teacher. Both my parents were not in the town by then. My cousin sister hosted a Deepavali fiesta with a delicious mutton curry and yellow rice as per my family’s usual festive custom. My tummy was full after three or four servings and I could barely walk. “Kaushalya akka, I never had such Deepavali lunch ever after!” It was around three in the afternoon, an announcement was made throughout the entire Valigamam region that people are to be moved from the town before the dusk. Three wheel auto vehicles (Tuk Tuk) were running around the city with loudspeakers on their top announcing the news. Sri Lankan Army had initiated a military operation, was marching towards the city from the north and there was a rumor tha

பத்தில வியாழன்

காலை ஏழரை மணிக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. தெரியாத இலக்கம். ஹலோ சொன்னேன். “தம்பி, நான்தான் அண்ணா கதைக்கிறன்” அண்ணா. பேர்த்தில் அப்போது அதிகாலை நாலரை மணி இருக்கும். அவ்வளவு வேளைக்கே எனக்கு அழைப்பு எடுக்குமளவுக்கு அப்படி என்ன அவசரம்? குழப்பமாகவிருந்தது. அப்படியொன்றும் நாங்கள் அநுதினமும் அழைத்துப் பேசுபவர்கள் அல்லர். வருடத்துக்கு இரண்டுமுறைதான் அண்ணாவும் நானும் பேசுவதுண்டு. அவருடைய பிறந்தநாளுக்கு நான் அழைப்பு எடுப்பேன். என்னுடையதன்று அவர் எடுப்பார். “ஹப்பி பேர்த்டே, என்ன நடக்குது? பிறகென்ன? சரி. அப்ப வைக்கிறன்”. அவ்வளவுதான் எங்களுடைய தொடர்பாடல். நிலைமை இப்படியிருக்க திடீரென்று வந்த அண்ணாவின் அழைப்பு சற்று பயத்தையும் ஏற்படுத்தியது.  “ஆ .. அண்ணை . வணக்கம்... எப்பிடி சுகங்கள்? என்ன இந்த நேரம்?” சம்பிரதாய சுகவிசாரிப்புகளுக்குப் பதில் சொல்லும் நிலையில் அவர் இருக்கவில்லை.  “தம்பி, உனக்கு வியாழன் மாறப்போகுது... கவனமா இரு”

பொப் டிலான்

பொப் டிலானுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. ஆங்கில இசை உலகில் “பாடல் எழுதுவது (song writing)” என்பதன் அர்த்தம் அதன் வரிகளை எழுதி, இசையமைத்து பாடுவது வரை நீளும். இவற்றை வேறுவேறு நபர்கள் சேர்ந்து ஒரு பாடலுக்குச் செய்தால் எல்லோரையும் பாடலாசிரியர்கள்(Song writers) என்று அழைப்பார்கள். அநேகமான சமயங்களில் ஒருவரே எல்லாவற்றையும் செய்வதுமுண்டு. மைக்கல் ஜாக்சன் கூடுதலாக நடன அமைப்பையும் தானே பார்த்துக்கொள்வார். பொப் டிலானும் தானே பாடலை எழுதி இசையமைத்து பாடவும் செய்பவர். பொப் பற்றிய தகவல்களை இணையத்திலேயே பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் இங்கே அவை தேவையற்றவை.  பொப் டிலான், மைக்கல் ஜாக்சன் போன்றோ, போல் மக்கார்டினி போன்றோ ஒரு தனித்துவ அற்புதக்குரலுக்கு சொந்தக்காரர் என்று சொல்லமுடியாது. ஆனால் அவருடைய பலம் அவர் எழுதும் பாடல் வரிகள். அந்த வரிகளைக் கடத்துவதற்குத் தேவையான இசையை மாத்திரம் பெரும்பாலும் கிட்டாரின் உதவிகொண்டு அவர் நிகழ்த்திவிடுவார். ஐம்பது வருடங்களுக்கு மேலாக இன்னமும் அது நிலைத்து நிற்பதற்கு அவருடைய இந்த எளிமையான minimalist பாணியே காரணம் என்பார்கள். “Music &