Skip to main content

Posts

Showing posts with the label ரஜனி

சிறப்பான தரமான சம்பவங்கள் மூன்று

சிறப்பான தரமான சம்பவங்கள் மூன்று. சம்பவம் ஒன்று ‘பேட்ட’ ட்றெயிலரை அம்மாவிடமும் அப்பாவிடமும் போட்டுக்காட்டினேன். ‘இந்த எடுப்பையும் நடப்பையும் வச்சு இவ்வளவு காலமும் இவன் விளையாடிட்டான், வீரன்தான்’, இது அப்பா. ‘நல்லாத்தான் இருக்கு … ஆனால் இந்தாள் உளறினதை எல்லாம் கேட்டாப்பிறகு இதைப்பார்க்க விசர் வருகுது’, இது அம்மா. ‘என்ன இப்டி சொல்லுறிங்கள், வெறும்படம்தானே, வடிவேலுவும்தான் அரசியல்ல உளறிக்கொண்டு திரிஞ்சுது, ஆனாலும் அந்தாளிண்ட கொமடியை நாங்கள் ரசிக்கிறதில்லையா?’ ‘அது வடிவேலுடா … இது ரஜினிகாந்த் .. இவர் நடிப்பையும் அரசியலையும் போட்டுக் குழப்புறதாலதான் நாங்களும் குழம்பவேண்டியிருக்கு’, இது அம்மா. ‘விடு, அவன் தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்தென்ன, வராட்டியென்ன, அவங்கள் மட்டும் எங்கட சுமந்திரன், கஜா பற்றி பேசி அடிபட்டுக்கொண்டா இருக்கிறாங்கள்? நம்மளுக்கு படம் பிடிச்சா ரசிக்கலாம், இல்லாட்டி விட்டிட்டு சோலியை பார்க்கலாம்… அவங்கட அரசியல் அவங்களோட’ — அப்பா மீண்டும். இவ்வளத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அப்பாவின் சீனியர் சிட்டிசன் கிளப் அங்கிள் கேட்டார். ‘எல்லாஞ்சரி …. ஆனா படத்துக்கேன்

யாரு நீங்க?

கண்ணா என் பேரு ரஜினிகாந்த். எனக்கு இன்னொரு பேரும் இருக்கு (ரசிகர்கள் பாஷா பாஷா என்று அலறுகிறார்கள்). ஏய், சும்மா இருக்கமாட்டீங்களா?  தம்பி மன்னிச்சுக்குங்க. என் பேரு ரஜினிகாந்த். என் இன்னொரு பேரு சிவாஜிராவ். நான் ஒரு நடிகனுங்க. முள்ளும் மலரும், தில்லுமுல்லு, தளபதி, பாஷா இப்பிடி சில படங்கள் பண்ணியிருக்கேன். இப்போ காலான்னு ஒரு படம் ரிலீஸ் ஆகப்போகுதுன்னு நினைக்கிறேன். 2.0 ன்னு ஒரு படத்தில சிக்கி சின்னாபின்னமாகிட்டிருக்கேன். அடுத்ததா கார்த்திக் சுப்புராஜு படமும் இருக்கு. அது பேய்ப்படமா பேசும்படமா என்னன்னே புரியமாட்டேங்குது. சரி அதை விடுங்க.

லிங்கா

  91ம் ஆண்டு. தீபாவளிக்கு இன்னமும் ஒரு மாதமே இருக்கிறது. அப்போது ரஜினி “காலம் மாறிப்போச்சு” என்று ஒரு படம் நடித்துக்கொண்டிருக்கிறார். ஏதோ ஒரு காரணத்தால் படத்தைத் தொடர முடியவில்லை. தீபாவளி நெருங்குகிறது. “தலீவா உன் படம் வேணும்” என்று ரசிகர்கள் ரஜினி வீட்டுக்கு முன்னால் நின்று ஆர்ப்பாட்டமே செய்கிறார்கள். ரஜினி உடனேயே கன்னடப் படமான தேவா கதையை ரீமேக் பண்ண முடிவெடுத்து ராஜசேகரை இயக்குனராகப் போட்டு நடிக்கிறார். வழமையான, தம்பிமாருக்கு உருகும் அண்ணன், அந்தத் தம்பிமாராலேயே  ஏமாற்றப்பட்டு, எல்லாவற்றையும் இழந்து, பின் மீள எழும் டெம்ப்ளேட் கதை. “மாசி மாசம் ஆளான பொண்ணு”, “சந்தைக்கு வந்த கிளி” என்று பல இளையராஜா ஹிட்டுகள். ஒரே மாதத்தில் மொத்தப்படமும் எடுக்கப்பட்டு தீபாவளியன்று படம் வெளியாகிறது. தர்மதுரை! அந்தப்படம் ரஜனி ரசிகர்களுக்கு செம மீல்ஸ். மற்றவர்களுக்கு சாதாரணம். லிங்கா, ரஜனி நமக்குத் தந்திருக்கும் இன்னொரு தர்மதுரை.

கோச்சடையான் - வடை போச்சே!

  சுற்றிவர கோட்டை கொத்தளங்கள். பின்னணியில் அரச உடை அணிந்த மகளிரும், வீரரும் ஆட,   நடுவே தீபிகா படுகோன், செம கியூட்டாக “மெதுவாகத்தான்” என்று பாட காட்சி ஆரம்பிக்கிறது. இருபது செக்கன்கள் கழித்து தலைவர், படு ஸ்மார்ட்டாக நடந்துவருகிறார். “எனை ஈர்க்கிறாய், பழி வாங்கவா” என்னும்போது தீபிகாவின் சேலை தலைப்பை ஸ்டைலாக தூக்கிப்போட, தீபிகா வெட்கப்பட்டு ஓடுகிறார்.  தலைவரின் அதகளம் ஆரம்பிக்கிறது. “அன்னம், மடவண்ணம்” என்னும்போது மிகவேகமான நடை. “கொடிவேண்டுமா, குடை வேண்டுமா“ என்ற ஒவ்வொரு தாள கட்டுகளிலும், இருவரும் சேர்ந்து தோன்றும் ஒவ்வொரு பிரீசிங் காட்சிகளிலும் ஒரு கட். ஒருமுறை கண் மேலே எகிறும். மற்றப்பக்கம் நாடி தாழ்ந்து காதலுடன் பார்க்கும்.  “படை வேண்டுமா, பகை வேண்டுமா, உனைப்போல வேறார் ஏது?” என்னும்போது எஸ்பிபி சிரிப்பும் சேர்ந்துகொள்ள, தலைவர் நளினமாக அதற்கு எக்ஸ்பிரஷன் கொடுக்க, அப்படியே பிரமாண்டமான பின்னணி நடனங்கள் சேர்ந்துகொள்ள…..

கோச்சடையான் - முன்னோட்டம்

டொய் ஸ்டோரி படத்தில் வூடி கதவை திறந்தபடி அங்கேயும் இங்கேயும் விட்டேத்தியாக நடந்து வரும்போது ஒரு கௌபோய் மான்லினஸ் அவனுக்கு இயல்பாகவே பொருந்திவரும். அது கலக்கல். 

சச்சின்!

  Toy Story வெற்றியை தொடர்ந்து PIXAR அடுத்த படத்தை எடுக்கவேண்டும். Second system effect என்று சொல்லப்படும் இரண்டாவது அடி சறுக்கல் என்ற விஷயத்தை தவிர்க்கவேண்டும். எப்போதுமே முதல் ஹிட் கொடுப்பது இலகு. ஆண்டாண்டு காலமாக யோசித்து வைத்திருப்பதை, சக்தியை முதலாவது சிஸ்டத்தில் கொடுத்து வென்றுவிடலாம். ஆனால் தொடர்ந்து வெல்வது என்பது கடினம். Apple2 வின் வெற்றிக்கு பிறகு வந்த Apple3 அட்ரஸ் இல்லாமல் போனதுக்கு இந்த சிண்ட்ரோம் தான் காரணம். ஒரு சில இயக்குனர்கள் முதல் படத்தோடு காணாமல் போவதும் அதனால் தான். ஸ்டீவ் ஜோப்ஸ் முதல் வெற்றியை தொடர்ந்து PIXAR இயக்குனர்களுக்கு சொன்னது ஒன்றே ஒன்று தான். Toy Story செய்யும் போது எப்படி குழந்தைகள் போல வேலை செய்தீர்களோ அதை போலவே மீண்டும் குழந்தைகள் ஆகுங்கள். இந்த உலகத்தில் குழந்தைகள் அளவுக்கு புதுவிஷயங்களை கண்டுபிடிப்பவர்கள் வேறு எவரும் இல்லை. “A Bug’s Life”, PIXAR இன் இரண்டாவது படம் வெளிவந்து ஹாலிவுட்டையே ஒரு கலக்கு கலக்கியது. சமகாலத்தில் Toystory 2 எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். படம் ஓரளவுக்கு முடியும் தருவாயில் எல்லோரும் போட்டு பார்க்கிறார்கள். ஸ்டீவ் ஜாப்ஸ், ஜோ

என் கொல்லைப்புறத்து காதலிகள் : சூப்பர் ஸ்டார்!

  கையில் கமரா. பிங்க் கலர். மேலே ஒரு பட்டன் இருக்கும். அமத்தினால் “பிய்ச் பிய்ச்” என்று தண்ணி சீரும்! கிணற்றடிக்கு இரண்டு படிக்கட்டுகள். ஒரு எட்டு எட்டினால் தோய்க்கிற கல்லு. மூன்றடி உயரம். அப்படியே ஒரு கை ஊன்றி டைமிங்குடன் ஜம்ப் பண்ணி நிற்கவேண்டும். அக்கா குசினிக்குள் இருந்து “டேய் தோய்க்கிற கல்லு, வழுக்கும், விழுந்து கிழுந்து எதையும் தேடிக்கொண்டு வராம, கால கைய வைச்சுக்கொண்டு சும்மா இரு!”. போன வருஷம் நல்லூரில் எட்டாம் திருவிழாவுக்கு வாங்கிய நீலக்கலர் ஐஞ்சு ரூபாய் கூலிங் கிளாஸ். அப்பிடியே ஒரு சுழற்று சுழற்றிக்கொண்டே போட்டுக்கொண்டு, ஒரு காலை சின்னதாக மடித்து மற்றக்காலில் ஊன்றிக்கொண்டு வானத்தை ஒரு ஆங்கிளில் பார்த்துக்கொண்டே இருக்க பாட்டு ஆரம்பிக்கும்! சிலு சிலுவென குளிரடிக்குது அடிக்குது, சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடிக்குது வனம் விட்டு வனம் வந்து மரங்கொத்தி பறவைகள் மனம் விட்டு சிரிக்கின்றதே! இப்போது தலைவர் கீழே குனிந்து மண்ணை மக்களை பார்க்கிறார். அம்மா தோயச்சு ஊத்தின சவர்க்கார தண்ணி பூங்கன்றுக்கு போகாதவாறு வேறு இடத்துக்கு பாத்தி மாற்றப்பட்டு இருந்தது. வெள்ளை நுரை தள்ளியது. இடை

கணவன் மனைவி!

  “நிகழும் மங்களகரமான ஸ்ரீமுக வருடம், கார்த்திகை திங்கள், முதலாம் நாள்(16.11.1993)  செவ்வாய் கிழமை, வளர்பிறை …..” குமரன் கொடுத்த அழைப்பிதழை மண்ணெண்ணெய் கடை சங்கரப்பிள்ளை முதலாளி மேலோட்டமாக நோட்டம் விட்டார். தாலி கட்டு எத்தனை மணிக்கு தம்பி? பதினொன்றுக்கும் பதினொன்றரைக்கும் நடுவில.. கோயில்லையோ? இல்ல, பொம்பிள வீட்ட, கொக்குவில் .. குளப்பிட்டி சந்திக்கு கிட்ட, ஓ, இவன் காந்தன் விரும்பி இருந்த பிள்ளை என்ன? கொக்குவில் பெட்டையே? ஆர் ஆக்கள் எண்டு தெரியுமோ? இன்றைக்கு மட்டும் இது பத்தாவது தடவை. எதை கேட்க மறந்தாலும் எது சாதி என்று கேட்க யாழ்ப்பாணத்தார் மறக்க மாட்டார்கள்.  சரியா தெரிய இல்லை முதலாளி,  வானதியிண்ட தாய் புங்குடுதீவு அடி. .. அப்பர் நயினாதீவாம். ‘எங்கட’ ஆக்கள் தானாம். ஆனா தீவாரல்லோ தம்பி? சரி சரி, இந்த காலத்தில இத பாக்கேலுமே? வெளில கதைச்சாலும் சட்டம்பிமார் பங்கருக்க போட்டிடுவினம். குமரன் பதில் சொல்லவில்லை. சங்கரப்பிள்ளை மண்ணெண்ணெய் பதுக்கியதை கண்டுபிடித்து, இயக்கம் அவரை பங்கருக்குள் இரண்டு வாரம் வைத்திருந்தது. அதற்கு பின்பு முதலாளி தீவிர புலி எதிர்ப்பாளர் ஆகிவிட்டார். பத்து

என் கொல்லைப்புறத்து காதலிகள் : மணிரத்னம்

ஆரம்பம் ஒரு சின்ன ஒளிப்புள்ளியில் இருந்து ஆரம்பிக்கிறது. பின்னணி இசையின் எலெக்ட்ரிக் பேஸ் கிட்டார் பிட்ச் திகிலூட்டுகிறது. அப்புறம் சேசிங். ஐந்து நிமிடத்தில் காஷ்மீரிய போராளி வாசிம்கான் சுற்றி வளைக்கப்படுகிறான். கட். அடுத்த காட்சி சுந்தரபாண்டியபுரத்தில். சின்ன சின்ன ஆசை பாடல். 

மணிரத்னம் எழுதிய கவிதை!

தளபதி திரைப்படத்தின் இந்த தாய் மகன் பிரிவுத்துயர் காட்சி எல்லா இணையங்களிலும் மற்றும் Facebook, Twitter தளங்களிலும் தமிழ் ரசிகர்களால் பிரித்து மேயப்பட்டுவிட்டது. தாயும் மகனும் அந்த புகைவண்டி சத்தம் கேட்கும்போது திரும்பி பார்க்கையிலும், அதன் பின்னர் மீண்டும் திரும்பிய பின் ரஜனி காட்டும் முகபாவனையும்,  தலைவர் இளையராஜாவும் இணைந்து நம்மை உண்டு இல்லை ஆக்கிவிடுவார்கள், நாமெல்லாம் அப்படியே கனத்து போய் அமர்ந்து இருப்போம் .. எந்த சலனமும் இல்லாமல் .. அந்த காட்சியை மீண்டும் பாரத்து இரசியுங்கள்! But There's One More Thing. இந்த காட்சியின் 0:44 --- 0:51 நேரத்து காட்சியை மீண்டும் பாருங்கள். தாய் மெதுவாக திரும்பி புகைவண்டி செல்லும் திசை பார்க்கும் தருணத்தில் கேமரா மகன் பக்கம் திரும்பும். அங்கே மகன் ஏற்கனவே, அதாவது தாயுக்கும் முன்னமேயே அந்த திசை நோக்கி ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருப்பான்.    தாய் தன் மகனை பிரிந்து ஏங்கும் தவிப்பை விட, தாயில்லாமல், வளர்ந்து பட்ட வேதனையும் ஏக்கமும் மகனுக்கு அதிகம், பிரிவுத்துயர் தாயை விட அவனுக்கு தான் இன்னும் அதிகம் என்பதை இயக்குனர் அங்கே காட்டியிருப்பார்.