“புஞ்சிரி தஞ்சி கொஞ்சிக்கோ. முந்திரி முத்தொளி சிந்திக்கோ, மொஞ்சனி வர்ண சுந்தரி வாவே. தாங்குனக்க தகதிமியாடும் தங்க நிலாவே. தங்க கொலுசல்லே குருகும் குயிலல்லே மாறன மயிலல்லே” ‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’ பாடலிலிருக்கும் மலையாள வரிகள் அவை. தமிழாக்கும்போது அவ்வரிகள் இப்படி அமைகின்றன. “அழகிய நிறங்கள் நிறைந்த சுந்தரியே. தாங்கு தக்கென தகதிமி ஆடும் தங்க நிலாவே. உன் தலைவனோடு நீ, புன்னகை சிந்திக் கொஞ்சி விளையாடு. உன் திராட்சை இரசமூட்டும் முத்துப்பற்களால் சிரித்து அவனைச் சிதறவிடு. நீ, தங்கக் கொலுசல்லவா? கூவும் குயிலல்லவா? உன் மாறனின் மயிலல்லவா?” இரசித்துக் கேட்டுக்கொண்டிருக்கையில் அந்த இறுதி வரி மாத்திரம் சற்றே நெருடியது. பெண்ணை எப்படி அவளுடைய மாறனுடைய மயில் என்று ஒப்பிடலாம்? பெண் மயில் அத்தனை அழகல்லவே? தன் தோகையை விரித்து ஆடல் செய்வது ஆண் மயில்தானே? ஒரு ஆணுக்குத்தானே மயிலை உவமைப்படுத்தவேண்டும்? எப்போதிருந்து பெண்ணை ஒரு ஆணின் அழகுக்கு ஒப்பிட ஆரம்பித்தார்கள்? பப்புவா நியூகினியிலிருக்கும் அடர்ந்த காட்டிடை வாழுகின்ற குருவி அது. ஒருவிதமான சாம்பல் வண்ணத்துச் சிறகுகளைக் கொண்ட பறவை. சாதாரணமாகப் பார்த்தால் அது