Skip to main content

Posts

Showing posts from February, 2014

தீண்டாய் மெய் தீண்டாய் - நாணமில்லா பெருமரம்.

  முதலிரவில் கௌதம் வெறும் அணைப்போடு மட்டும் நிறுத்திக்கொண்டதை அகல்யா ஆரம்பத்தில் பெரிதாக கணக்கில் எடுக்கவில்லை. கடவுள் பக்தன். கைனோகொலஜிஸ்ட். காதல் என்பது உடலில் அல்ல, மனதில் என்று முதற்தடவை சந்தித்தபோதே சொன்னான். ஜென்டில்மன்.  அகல்யாவுக்கு உள்ளம் குளிர்ந்தது. இவன் காதலில் மென்மை பாராட்டுபவன். . பூவோடு உரசும் பூங்காற்றை போலே சீரோடு அணைத்தால் அது சைவம் பாட்டு சீன் ஞாபகம் வந்தது. அகல்யா தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டாள். எவ்வளவு நாளைக்கு என்று பார்ப்போம்.

மண்ணெண்ணெய்

  கோள்மூட்டி இன்னமும் ரீ… என்று ஒரே சுருதியில் வானத்தில் சுற்றிக்கொண்டு இருந்தது. வெறும் மண்ணெண்ணெய் கானோடு வீடு திரும்பிய நமசிவாயத்தை வாசல்படியில் மறித்தபடியே மருமகள் நின்றாள். “ என்ன அதுக்குள்ள எண்ணை முடிஞ்சுதா ?” “ இல்ல கோமளா … சரியான கியூ .. நாச்சிமார் கோயிலடி வரைக்கும் போய் நிக்குது ” ” அதுக்கு ?” நமசிவாயம் தயங்கினார். ” .. மினக்கட்டு ஒரு லீட்டர் எண்ணைக்கு போய் ரெண்டு கட்டை கியூவில நிண்டு காயோணுமா ? எண்டு வந்திட்டன். ” ” ஏன் இங்க வந்தீங்கள்? .. அப்பிடியே எங்கேயும் போய் துலைஞ்சிருக்கலாமே ” குத்தினாள். அவருக்கு இது புதுதில்லை. குரலெழுப்பாமல் பதில் சொன்னார். “ இல்ல பிள்ள .. கொஞ்ச நேரம் நிண்டு பார்த்தன் .. வெயில் தாங்கேலாம போட்டுது .. தலைய சுத்திச்சுது.... ” “ ஏன் கியூல நிக்கிற மத்தவனுக்கு சுத்தாதா ? வேலை வெட்டி இல்லாம சும்மா தானே கிடக்கிறீங்கள் .. அதில போய் நிண்டு வாங்கினா குறைஞ்சா போயிடும் ? வேளாவேளைக்கு அள்ளிக்கொட்டி தின்ன மட்டும் தெரியுது .. கறுமம் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் வாங்க தெரியேல்ல ”

பாலு மகேந்திரா

  அவள் பெயர் செல்வராணி என்று நினைக்கிறேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது இருக்கும். காதலன் வெளிநாட்டுக்கு அகதியாக போனவன். விசா கிடைக்கவில்லை. வருடக்கணக்காயிற்று. நாடு திரும்பமுடியாது. அவன் கடிதங்கள் வீட்டில் குவிந்துகிடக்கின்றன. தனிமையும் வயதும் பிரிவையும் தாண்டி தாபத்தை தூண்டுகிறது. காமத்துப்பாலில் பிரிவித்துயரால் வருகின்ற அத்தனை உடல் உபாதைகளும் செல்வராணிக்கு ஏற்படுகிறது. கட்டுப்படுத்த முடியவில்லை.

யார் மேகலா?

அவன் என்பார் அவனறியாதார்! அவள் என்பார் அவளறியாதார்! அதுவென்பார் சிலர். அசையாதென்பார்! அரி என்பார் அரன் என்பார்! ஹரிஹரன் பாடும் கமகம் என்பார்! அவர் அறியாதன எல்லாம் அறிந்திட முனைவார் அவளோ அவனோ அதுவோ எதுவோ அவரவர் வடிவில் உருவம் எடுக்கும் சமயத்தில் இசை போல் அருவமும் எடுக்கும் இருளிடை ஏறிய இறையே என்றால் எதுவுமே புரியாமல் மலைத்திட இருப்பர்!

ஏகன் அனேகன்.

  "கடவுள்" கொல்லைப்புறத்து காதலியை புத்தகம் ஒன்று தொகுப்பதற்காக மீள செப்பனிட்டுக்கொண்டிருந்தேன். அந்த மூடு வரவேண்டுமென்று "ஆகாய வெண்ணிலாவே" யை மாற்றிவிட்டு பொல்லாவினையேனுக்கு மாறினேன்.