Skip to main content

Posts

Showing posts with the label கடிதங்கள்

அன்புள்ள கம்பவாரிதி ஐயாவுக்கு

  கம்பன் விழா நிகழ்வுகள் இனிதே நிறைவேறியிருக்கும் என்று நம்புகிறேன். விழாவிலே கலந்துகொள்ளமுடியாவிட்டாலும் விழா நாட்களை நானும் கம்பனோடே கழித்தேன். இம்முறை விழா நாட்களில் மிகச்சிரத்தை எடுத்து படிக்க முயன்ற பாடல்கள் வாலி வதை சார்ந்தவை. எனக்கு நீங்கள் அடிக்கடி சொல்லுவதொன்று ஞாபகம் வருகிறது. இராமனது அம்பு தோற்ற ஒரே இடம் வாலிவதை. “செம்மை சேர் இராம நாமம்” எனும் இடத்தில் கம்பன் கூட சற்றே சறுக்கினான் என்று சொல்வீர்கள். வாலிமீது மறைந்திருந்தேனும் கணை வீசும் தகுதியும் துணிச்சலும் எவருக்கும் கிடையாது. அதானாலே தன்மீது ஒரு சரம் பாய்ந்ததும் அவன் ஆச்சரிய மிகுதியில் குழம்புவான். யாரவன் என்று வினவுவான். 'தேவரோ?' என அயிர்க்கும்; 'அத் தேவர், இச் செயலுக்கு ஆவரோ? அவர்க்கு ஆற்றல் உண்டோ?' எனும்; 'அயலோர் யாவரோ?' என நகைசெயும்; 'ஒருவனே, இறைவர் மூவரோடும் ஒப்பான், செயல் ஆம்' என மொழியும். “ஒருவனே, இறைவர் மூவரோடும் ஒப்பான், செயல் ஆம்” எல்லாம் கம்பன் மாத்திரமே பண்ணக்கூடிய நுட்பங்கள். நீங்கள் சொல்லச்சொல்ல, தெரு மணலில் உட்கார்ந்து கேட்டதில் கையில் வைத்திருந்த கச்சான் பக்கற் இளகிப்ப

பிடிச்சதும் பிடிக்காததும் 2013

  சம்பவங்கள் நாளாந்தம், மணித்தியாலம், நிமிடம், கணம் என்று நடந்துகொண்டே இருக்கும். யாருக்கும் காத்திருக்காது. ஒருநாள் சிட்னி செல்லும் ஹியூம் நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருக்கும்போது கண் சொருக ஆரம்பிக்க, காரை அவசர லேன் பக்கம் நிறுத்தினேன். நண்பன் சிகரட் பற்றவைத்துக்கொண்டான். முகத்தை போத்தல் தண்ணீரால் அடித்து கழுவிவிட்டு, ஆயாசமாய் காரிலே சாய்ந்தபடி நெடுஞ்சாலையை அவதானித்துக்கொண்டிருந்தேன். வாகனங்கள், வேகமாக, மிகவேகமாக மணிக்கு 100, 110, 120, 140 கிலோமீட்டர்கள் என்று பறந்துகொண்டிருந்தன. சில வாகனங்களில் சிரிப்புகள், சிலதில் குழந்தைகள், ஒன்றில் வயோதிபர் ஒருவர் தொப்பியும் அணிந்தவாறு மனைவி சகிதம், இன்னொன்றில் நான்கு இளைஞர்கள் யன்னல் இறக்கி கூக்குரலிட்டுக்கொண்டு. இடையிடையே லாரிகள், கெண்டையினர்கள், பெருத்த உருவத்தில் ஓட்டுனர்கள். எல்லோருக்குமே பொதுவான ஒன்று இருந்தது. அது வேகம். அப்படி எங்கே போகிறார்கள். வேகக்கட்டுப்பாட்டை மீறி அப்படி ஓடுவதற்கு என்ன அவசரம்?

பிடிச்சதும் பிடிக்காததும் 2012

  நான்கு வருடங்களாக இப்படி பிடித்ததையும் பிடிக்காததையும் தொகுப்பது தொடர்கிறது.  இப்போது பழையதை வாசித்துப்பார்க்க ஒரு வித சுவாரசியம்; 2008 இன் சிறந்த படமாகவும் , இசை அல்பமாகவும் கருபழனியப்பனின் “பிரிவோம் சந்திப்போம்” படத்தை குறிப்பிட்டிருந்தேன். இன்றைக்கு எனக்கு “பிரிவோம் சந்திப்போம்” தமிழில் ஹேராமுக்கு பின்னர் வந்த சிறந்த படம் என்று தோன்றுகிறது. Best emerging application என்று 2009 இல் Google Wave ஐ சொல்லியிருந்தாலும் அது பின்னர் டிஸ்கன்டினியூ ஆகிவிட்டது. 2010 இல் man of the year விருது அசாஞ்னேக்கு குடுத்திருந்தேன். தல ஈகுவடோர் எம்பசிக்குள் படுத்து கிடக்கிறார். சென்ற வருடம் Yarl IT Hub ஒரு சிறந்த தொழில்நுட்ப முயற்சி என்று சொல்ல, நினைத்ததற்கு மேலாக அது யாழ்ப்பாணத்தில் பல செயற்பாடுகளையும் நெட்வோர்க்கிங்கையும் உருவாக்கியது. இதை யார் யார் வாசிக்கிறார்களோ இல்லையோ, எனக்கொரு பெர்சனல் தொகுப்பு தான். 2012 எனக்கும் மிகவும் அமைதியாக சிம்பிளாக எந்த சிக்கலுமில்லாமல் கடந்து போன வருடம். ஒருவேளை சிக்கல்களை சிம்பிளாக எடுக்க பழகிவிட்டேனோ தெரியாது. All is well.