Skip to main content

Posts

Showing posts from November, 2011

“மேகம் இடம் மாறும்போது!!”

அன்புள்ள பிருந்தன்! ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். இசையின் அரிச்சுவடி அறியாதவன் நான்.  சுருதி பிடித்து பாடுவதற்குள் கஜனிடம் நூறு தடவை குட்டு வாங்கியதால் பாடுவதை குளியலறையோடு நிறுத்தியவன். என் விமர்சனத்தை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை. குப்பையில் போட்டு விடலாம். ATM மெஷினில் வரும் Balance Receipt ஐ பார்த்து விட்டு கசக்கி எறிவது போல எறிந்துவிடுங்கள். எவ்வளவு பணம் மீதி இருக்கிறது என்று எப்படியும் பார்ப்பீர்கள் தானே! உங்களையும் உங்கள் சகோதரர்களையும் முதன் முதலில் கேள்விப்பட்டு இன்றைக்கு பத்து வருடங்கள் இருக்குமா? அப்போது தான் சில ராஜா, ரகுமான் பாடல்களை உங்கள் குரல்களில் பாடி ஒரு சீடி வெளியிட்டு இருந்தீர்கள். கஜன் கொடுக்கும் போதே, “காந்தினியின் குரலை கேட்டுப்பார், she got something” என்று சொன்னான். அதுதான் ஆரம்பம். அப்புறம் கூடிய சீக்கிரமே உங்கள் ஆல்பம் “துளிகள்” வெளியானது. கஜன் சீடீ வாங்கிக்கொண்டு நேரே என் வீட்டுக்கு தான் வந்தான். எம்மிடம் இருந்த 5 in 1 இல் போட்டு கேட்டோம் .. By then I  realised you got something! Brunthan’s masterpiece of todate! அந்த

என் கொல்லைப்புறத்து காதலிகள் : குட்டி

  எங்கள் வீட்டின் முன்னே ஒரு எலுமிச்சை மரம் இருந்தது. அது வளரும்போது எம்மை கேட்டு வளரவில்லை. நாம் கிணற்றில் அள்ளி குளித்த தண்ணீரில் தானாகவே வளர்ந்தது. காய்த்து கொட்டியது. இலைகளை விட காய்களின் எண்ணிக்கை தான் அதிகம். வளரும்போது யாரும் அதை கவனிக்கவில்லை. காய்க்க ஆரம்பித்துவிட்டதா? பாத்தி எல்லாம் கட்டி ஒரே அமர்க்களம் தான். தனியாக தண்ணீர் பாய்ச்சி, தேயிலை சாயம், கோழிச்செட்டை எல்லாம் வெட்டித்தாட்டு பெற்ற பிள்ளையை கவனிப்பது போல கவனிக்கத்தொடங்கினோம். சனிக்கிழமை வந்தால் ஐந்து மணிக்கெல்லாம் வீட்டில் எழுப்பி விடுவார்கள். ஒரு பிளேன்டீயை குடித்துவிட்டு ஒரு துவாயை தலையில் முண்டாசு போல கட்டிக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் யாழ்ப்பாண பனிக்கு முட்டுச்சளி தலைக்குள் ஏறிவிடும். எலுமிச்சை மரத்தடிக்கு போய் சந்தைக்கு கொண்டு போகக்கூடிய பதமான காய்களை பிடுங்கவேண்டும்.

“சின்ன குயிலின் சோகம்!”

அலுவலகம் முடிந்து ரயில் நிலையம் நோக்கி நடந்துகொண்டு இருக்கிறேன். ஐபாடில் சதிலீலாவதி படத்தின் “மாருகோ மாருகோ” பாடல். கமலின் கமகம்களை கேட்டபோது மெல்லிய புன்னகை என்னையறியாமல் வந்தது. நடந்து கொண்டிருந்த இடம் மெல்பேர்ன் நகரத்து யாரா(Yarra) நதியின் குறுக்கு பாலம். பாலத்தின் விளிம்பு தடுப்பில் உட்கார்ந்திருந்த வெள்ளை புறாக்களை ஒரு குட்டிப்பொண்ணு துரத்தி விளையாடிக்கொண்டு இருந்தது. அவள் தாய், தன் பருமனான உடலை தூக்கிக்கொண்டு, “Careful honey .. careful” என்று பொண்ணை அதட்டிக்கொண்டு பின்னாலேயே ஓட, அந்த சுட்டியோ சட்டை செய்யாமல் குறுக்கும் நெடுக்குமாய் ஓடியது. தாயும் சளைக்கவில்லை! “பொன்மேனி உருகுதே” என்ற இடம் வருகிறது. சித்ராவின் ஆலாப்பு. பாடல் முழுதும் ஒருவித கோவைகுசும்பு  குழைந்த குரலில் பாடியவர் சட்டென சாஸ்திரிய சாயலுக்கு மாறி சித்ரா தான் பாடுகிறேன் என்று கோடி காட்டுகிறார். இந்த சறுக்கலை எப்படி இளையராஜா அனுமதித்தார்? என்று நினைத்துக்கொண்டே இருக்கும் போது, அந்த தாயின் கையில் பொண்ணு அகப்பட திடுக்கிட்டேன். அந்த இடத்தில் சித்ராவும் அவர் மகள் நந்தனாவும் ஓடி விளையாடுவது போல கற்பனை வர, தாங்க

கடல் கோட்டை

“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று பத்தாம் வகுப்பில் படிக்கும் போது கல்லூரியில் பேச்சுப்போட்டி. ஸ்கிரிப்ட் எழுதித்தந்தவர் பொன்னுச்சாமி தமிழ் மாஸ்டர்!  கம்பவாரிதி ஜெயராஜ் ஸ்டைலில அங்கே இங்கே ஏறி இறக்கி பேசினதில் முதலிடம் கிடைத்தது. தமிழ்த்தின விழா பரிசு போட்டியில் ஆறேழு புத்தகங்கள் தந்தார்கள். தந்ததில் பிடித்தது கடல் கோட்டை! சாண்டில்யன் பாணி சரித்திர நவீனம்! மருதநாயகம் போல ஒரு வன்னிமை. போர்த்துக்கீசரை நாட்டை விட்டு கலைக்க ஒல்லாந்தருடன் கைகோர்த்து, இறுதியில் ஒல்லாந்தரிடம் வெள்ளைக்கார பெண்ணை கேட்டு, ஏமாற்றப்பட்டு அவனுக்கு வெள்ளைக்காரிக்கு பதிலாக ஒரு நாயை பெண்ணாக கொடுக்கிறார்கள். வந்ததே கோபம் வன்னிமைக்கு! இப்போது ஒல்லாந்தருக்கு எதிராக மாறுகிறான்(எங்கேயோ கேட்ட/பார்த்த கதை போல இருக்கிறதா?).  இவன் வீட்டுக்கு விசிட் அடித்தான் என்ற ஒரே காரணத்தால் படித்த மிதவாதியான பூதத்தம்பி தூக்கில் இடப்பட(அங்கேயும் பொறாமை, காட்டிக்கொடுப்பு) .. இப்படி ஈழத்து தளத்தில் ஒரு வரலாற்று கதை. நிஜக்கதையை கொஞ்சம் பூடகாமாக செங்கை ஆழியான் எழுதினாரோ என்ற சந்தேகம் எனக்கு நெடுங்காலமாக இருந்தது. வெ

“ஐ லவ் யூ ஆன்ட்ரியா!”

காதல்கொண்டேன் படத்திலே “நெஞ்சோடு கலந்தது” பாடலை ரசிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள், உயிரை அப்படியே கீறி கிழிக்கும் வயலின் செல்லோ இசையும் மெட்டும் கலந்த பாடல். என்ன கம்போசிங்டா இது, யுவன்சங்கர்ராஜா அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை என்று சிலாகித்த போது நண்பன் சொன்னான், தப்பு .. இது Corrs குழுவின் அல்பத்தில் இருந்து சுட்ட பழம் என்று. அன்றைக்கு ஆரம்பித்தது தான் ஐரிஷ் இசை பேண்ட் குழுவான  “The Corrs” மீதான காதல். பாடும் பெண் தான் ஆண்ட்ரியா. பக்கத்தில் இருக்கும் வயலினில் கொஞ்சும் பெண் அவரின் சகோதரி ஷரோன். டிரம்மர் இன்னொரு சகோதரி கரோலின். அந்த கிடார் வாசிக்கும் இளைஞன் இவர்களின் சகோதரன் ஜிம். இந்த நான்கு சகோதரர்களும் சேர்ந்து உருவாக்கிய இசை சங்கமம் தான் இந்த “The Corrs” என்ற பாண்ட். மெய் சிலிர்க்க வைப்பது என்பது இது தான் ஆன்ரியா ஓகே என்று சொல்ல பியானோ கவுன்டிங்குடன் தொடங்கும் ஒன்று. அந்த ஒன்றை என்னவென்று சொல்வேன்? வெறுமனே பாடல் என்று சொல்ல முடியாது. இசை என்றும் சொல்ல முடியாது. ஏதோ ஒன்று, உள்ளத்தையும் உடலையும் கட்டிப்போட்டு படாதபடுத்தும் ஏதோ ஒன்று. காதல் கூட இப்படி போட்டு தா

“கொச்சின் மாடப்புறா!”

1998ம் ஆண்டு தீபாவளி. காலையிலேயே பொதிகையில் புதுப்பட பாடல்கள் நிகழ்ச்சி ஆரம்பித்தது. அம்மாவிடம் ஏச்சு வாங்கிக்கொண்டு டிவி முன் உட்கார்ந்த போது,  முதல் பாடல் ஒரு சுலோகத்துடன் ஆரம்பித்து, “பச்சை மா மலை மேனி” என்று தொடர, தேவாவுக்கே உரிய வயலின் ரீங்காரத்துடன் கோரஸ் சஞ்சாரிக்க, ஹரிஹரன் கணீரென்று பாடத்தொடங்கினார். எனக்கோ ஒன்றுமே புரியவில்லை. ஒரு வித பரவசத்தில் பார்த்துக்கொண்டு இருந்ததில் எந்த படப்பாடல் என்றும் கவனிக்கவில்லை. பாடல் முடிந்த கையோடு, மிகுதி நிகழ்ச்சியை பார்க்காமல், நண்பன் பார்த்தியிடம் ஓடிப்போய் என்ன படம் என்று விசாரித்தபோது தான் தெரிந்தது அது "உன்னுடன்” என்று. வானம் தரையில் வந்து ! இந்த பாடலில், ஹரிகரனை ஷேவாக் மாதிரி அடித்து ஆட தேவா அனுமதித்திருப்பதாக தெரிகிறது. தலை சும்மா பின்னி எடுத்து இருப்பார். இன்றைக்கு வரைக்கும் யாரும் இந்த பாடலை மேடையிலோ வேறு நிகழ்ச்சியிலோ நன்றாக பாடியதாய் தெரியவில்லை. அத்தனை கடினம் இது. ஒருமுறை ஹரிஹரன் கூட மேடையில் பாடி சொதப்பி இருப்பார்! வைரமுத்துவுக்கு மெட்டை கேட்டவுடனேயே இது ஒரு கோகினூர் என்று தெரிந்து விட்டது. ஆரம்ப வரிகளே அம

“நிலவும் மலரும் பாடுது”

2001ம் ஆண்டு கொழும்பில் ஒருமுறை சக்தி FM  இன் “அழைத்து வந்த அறிவிப்பாளர்” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் நண்பன் கஜன் மூலமாக கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் நான் இரண்டாவதாக ஒளிபரப்பிய பாடல் இவருடைய பாடல். இவரை அறிமுகம் செய்யும்போது ஒரு கேள்வி கேட்டிருந்தேன். இந்த பாடலை பாடியவரை ஒரு இசையமைப்பாளர் என்று கூறுவீர்களா? இல்லை பாடகர் என்று கூறுவீர்களா? இரண்டு துறைகளையும் ஒரே விகிதத்தில் கலக்கியவர். இளையராஜா, ரகுமானை எடுத்துக்கொண்டால் அவர்கள் முதலில் கம்போசர்ஸ், பின்னர் தான் பாடகர்கள். ஹரிஹரன், SPB,  ஷங்கர் மகாதேவனை எடுத்துக்கொண்டால் அவர்கள் முதலில் பாடகர்கள். பின்னர் தான் கம்போசெர்ஸ். ரமேஷ் விநாயகம் கூட முதலில் ஒரு இசையமைப்பாளர் தான். ஆனால் இந்த இராட்ச்சனை அப்படி ஒரு வட்டத்திற்குள் அடக்கிவிட முடியாது. கம்போசிங், பாடல்கள் என்று ஒரு பத்து வருஷங்கள் திரையிசையை கலக்கியவர். ஆம், இந்த வாரம்  “உ.. ஊ.. ம ப த ப மா” வில் ஐம்பதுகளில் திரையிசை துறையில், கம்போசிங்கிலும், பாடுவதிலும் தனக்கென மூன்றாம் தலைமுறை ரசிகர்களை கூட உருவாக்கிய திரு A M ராஜா அவர்கள் பாடிய, இசையமைத்த பாடல்களின் தொக