Skip to main content

Posts

Showing posts with the label என் கொல்லைப்புறத்துக் காதலிகள்

மழை நாளில் 'என் கொல்லைப்புறத்துக் காதலிகள்'

ஒரு மாதத்துக்கு முன்னர் நண்பன் ஒருவன் தன் வீட்டில் பெய்த மழையைக் காணொளி எடுத்துப் பகிர்ந்திருந்தான். நான் பிறந்து வளர்ந்த ஊரான தின்னவேலியில் பெய்த மழை அது. மல்லிகைப் பந்தல், வாழை, செவ்வரத்தை, நெல்லி, பூங்கன்றுகள், இடையே நாய்க்கூடு எனச் சூழ்ந்திருந்த அந்த மிக அழகான வீட்டு முற்றத்தில் மழை கொட்டிக்கொண்டிருந்தது. தின்னவேலி மழை எப்போதுமே அண்டாவைக் கவிழ்த்துக்கொட்டுவதுபோலத்தான் பெய்யும். நான் அன்று அவனுக்கு இப்படி ஒரு கருத்து இட்டேன். வெள்ளம் தேங்கி வீடு கசியாதவரைக்கும் தின்னவேலியின் மழை மிக அழகுதான். ஏன் அப்படிச் சொன்னேனோ தெரியாது. ஆனால் இதனைச் சொல்லிய சில வாரங்களிலேயே தீவு முழுதும் மழையும் வெள்ளமும் நிலச்சரிவும் பெருங் கோரத்தாண்டவத்தை ஆடிவிட்டன. மழை நம் வீட்டுக்குள் நுழையாதவரைக்கும்தான் அழகு. அப்புறம் அது ஒரு கொடிய அரக்கியாகிவிடுகிறது. சிரங்கு. முட்டு. கக்கூஸ் அடைப்பு. நுளம்பு. காயாத உடுப்பு. மின் வெட்டு. நிலமெல்லாம் கசிந்து சகதி ஆவது. இவை எல்லாமே சிறு வெள்ளத்துக்கே வந்து சேரக்கூடிய துன்பங்கள். நிலம் சரிந்து மொத்த வீடுமே அமுங்குவதும் குழந்தைகள் உள்ள வாகனங்கள் அடித்துப்போவதும் பெரு வெள்ளத்த...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 5. யாழ்ப்பாணத்துக் கிரிக்கட்

  இ ன்னும் ஐந்து ரன்கள் அடித்தால் வெற்றி .   நன்றாக இருட்டிவிட்டது .   தீயிடப்பட்டு நிர்மூலம் ஆக்கப்பட்டிருந்தாலும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் யாழ் நூலகத்துக்குப் பின்னாலே சூரியன் மறைந்து கொண்டிருந்தது . எங்கே வெளிச்சம் இல்லை என்று சொல்லி ஆட்டத்தை நிறுத்தி விடுவார்களோ என்ற பயம் எங்களுக்கு . மணிக்கூண்டுக் கோபுர முனையில் இருந்து பிரபா அண்ணா பந்துவீசத் தயாராகிறார் . பூங்கா முனையில் எதிர்கொள்வது காண்டீபன் அண்ணா . மொத்த மைதானமுமே ஆர்ப்பரிக்கிறது . பந்து மட்டிங் பிட்ச்சில் லெந்தில் விழ , காண்டீபன் அண்ணா லோங் ஓனில் இழுத்து அடிக்க , விர்ர் … ரென்று பந்து பறக்கிறது . அத்தனை பேரும் ஆவென்று வாய் பிளந்து பார்க்க , அது மைதானத்தைத் தாண்டி , வீதியைத் தாண்டி , மணிக்கூண்டு கோபுரத்தின் உச்சியில் இருந்த சேவல் கொண்டையில் பட்டு .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 4. அரோகரா

“ பி டிச்சிட்டன் ” குமரன் சொன்னதைக் கேட்ட கீர்த்தி ‘ எங்கடா ? ’ என்று திரும்ப எத்தனிக்கிறான் .

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 3. கம்பவாரிதி

  “ ம னப்போராட்டம் நிறைந்த யதார்த்த மானுடம் பெரிதும் வெளிப்படுவது கம்பனில் கைகேயிலா ? சூர்ப்பனகையிலா ? மண்டோதரியிலா ? ”

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 2. கடவுள்

  நி த்தியகல்யாணியில் தேடித்தேடிப் பூ ஆயும் அதிகாலை . மதிலுக்கு மேலாக வளர்ந்து நிற்கும் மரக்கொப்பை , ஆட்டுக்குக் குழை குத்தும் கம்பியால் எட்டிப்பிடித்து , கொளுவி வளைக்கும்போது , சொட்டுச் சொட்டாக கொஞ்சம் பனித்துளி , தலை , முகம் , கழுத்தடி எல்லாம் விழுந்து உடம்பு சில்லிடும் . திருவிழாவில் வாங்கிய சின்னப் பனை ஒலைப்பெட்டியில் , மொட்டுத் தவிர்த்து , பூக்களைப் பிடுங்கிப் போட்டவாறு செவ்வரத்தைக்குத் தாவுகிறேன் . ஒரே மரத்தில் எத்தனை வகைப் பூக்கள் ? அதில் ஐந்தாறை மடக் மடக்கென்று ஒடித்துப் போடுகிறேன் . தோட்டத்தில் நின்ற கனகாம்பரம் , ரோசா , கடதாசிப்பூ மரங்களில் கை வைப்பதில்லை . பேப்பர் பூ சாமிக்கு வைக்கக்கூடாது . கனகாம்பரம் கலியாண வீடு , சாமத்திய வீடு ஏதும் வந்தால் கொண்டைக்குத் தேவை . ரோசாப்பூவைப் பிடுங்கினால் அம்மா திட்டுவார் .   அது விசிட்டர்ஸ் வந்தால் மணிக்கணக்கில் போறாமைப்படுவதற்கு . பொறாமைப்படுவார்கள் .