கிழமைக் கடைசியில் மைத்திரிபால சேனநாயக்கா கட்சி தாவினதில அதிகம் பயனுற்றவர் நம்ம வெடி அண்ணர்தான். வழமைபோல அன்றைக்கும் ஒரு "குட் ஷொட்" பார்ட்டி. வெடி அண்ணை செம போர்மில இருந்தார். அவர் போர்மில இருக்கையில் ஆனானப்பட்ட சுமந்திரன் கூட அம்மிக்கொண்டு இருக்கவேண்டும். அந்தளவுக்கு அண்ணர் இராஜதந்திரத்தை பிழிஞ்சு ஊத்துவார். அப்படி அவர் புல் போர்மில் இருந்தபோதுதான், கல்மடு குளக்க்கட்டு உடைக்கப்பட்டு இராணுவ உடல்கள் ஓமந்தை வரைக்கும் வெள்ளத்தில் மிதந்து சென்றன. ஒரு ஏ4 தாளில் கல்மடுக் குளக்கட்டு பிளானைக் கீறி, எப்படி தண்ணி ஓமந்தை மட்டும் மற்றப்பக்கத்தாலை பாய்ந்தது என்று அவர் ஸ்கெட்ச் போட்டு பூகொளவியலை விளக்கியபோது மொத்த பார்ட்டியே தண்ணீரில் சந்தோஷத்தில் மிதந்தது தனிக்கதை. இப்போது கொஞ்சநாளாக பெரிய அளவில விஷயம் சிக்காததால் காய்ந்து கிடந்த வெடி அண்ணருக்கு, மைத்திரி மாமா இப்பிடி பாய்ஞ்சது ஒல்மோஸ்ட் தமிழீழம் கிடைத்தமாதிரி உற்சாகத்தைக் கொடுத்தது. மீண்டும் தாய் நாட்டை நிர்மாணிக்க காசு கலக்ட் பண்ணி அனுப்புற அளவுக்கு ஒரேநாளில் வெடி அண்ணர் ரோட் மப் போட்டுவிட்டார். ஆளுக்கு பயங்கர புளுகம். நான்தான் ச