Skip to main content

Posts

Showing posts from May, 2023

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

கந்தசாமியும் கலக்சியும் - புதுப்பதிப்பு

வணக்கம் நண்பர்களே, என்னுடைய புத்தகங்களை மறுபதிப்பு செய்யவேண்டும் என்ற ஆவலை வெண்பா புத்தக நிலையத்தின் நிறுவனர் சுதர்சன் சென்ற வருடம் வெளிப்படுத்தியிருந்தார். தாமே பதிப்பகம் ஒன்றை ஆரம்பிக்கப்போவதாகவும் “கந்தசாமியும் கலக்சியும்” நாவலிலிருந்து ஆரம்பிக்கலாம் என்றும் சொன்னார். அப்படித்தொடங்கியதுதான் இந்த மூன்றாம் பதிப்புக்கான வேலைகள்.

பர்மா புத்தர் - சிறுகதை

வாசக நட்புகளுக்கு வணக்கம். ஈழத்திலிருந்து வெட்சி எனும் பெயரில் சிறு பத்திரிகை இதழ் ஒன்று அச்சில் வெளியாக ஆரம்பித்திருக்கிறது. வெட்சி தொடர்ந்து முக்கியமான பல இலக்கியப் படைப்புகளைக் கொடுத்து வாசகர்களை முன்னகர்த்திச் செல்ல என் மனப்பூர்வமான வாழ்த்துகள். வெட்சியை ஈழத்திலும் கனடாவிலும் அவுஸ்திரேலியாவிலும் நேரடியாகவோ அல்லது தபால்மூலமாகவோ பெற்றுக்கொள்ளமுடியும்.

இல்லாள் - சிறுகதை

அகழ் இதழில் நான் எழுதில் இல்லாள் சிறுகதை வெளிவந்துள்ளது. https://akazhonline.com/?p=3677

மூளா தீ

காலி எண்ணெய்க்கலனுடன் பெற்றோல் வரிசையில் பல மணி நேரம் கால் கடுக்க நின்ற மாதனமுத்தாவை பின்னால் நின்ற காசிம் பாவா தட்டிக் கேட்டார். ‘லாம்புக்கா? அடுப்புக்கா?’ ‘இல்லை, வீட்டுக்கு. நான் வீட்டை எரிக்கப்போகிறேன்’ காசிம் பாவா உற்சாகமடைந்தார். ‘எந்த மினிஸ்டர் என்று சொன்னால் நானும் வருகிறேன்’ ‘மினிஸ்டர் வீடில்லை, என் வீட்டைத்தான் எரிக்கப்போகிறேன்’ ‘என்ன பிசுக்கதை இது? அவனவன் மினிஸ்டர் வீடுகளை எரிக்கிறான். நீ என்னடா என்றால் உன் வீட்டை எரிக்கப்போகிறேன் என்கிறாய்’ ‘அவனெல்லாம் திருடன், முடிச்சவிக்கி, ஒன்றுக்கும் உதவாதவன், கொலைகாரன் என்று தெரிந்துதானே வாக்களித்து அனுப்பினோம். அவன் தன்னிலை மாறவில்லை. உண்மையில் எரிப்பதாக இருந்தால் அவனைத் தேரில ஏத்திவிட்ட எங்கள் வீடுகளைத்தானே எரிக்கவேண்டும்? அதைத்தான் செய்யப்போகிறேன்’ மாதனமுத்தா சொன்னதைக் கேட்டதும் டென்சனாகிய காசிம் பாவா வரிசையில் கொஞ்சம் பின் தங்கிவிட்டார். நாள் முழுதும் வரிசையில் நின்று ஒருவாறாக அரைப்போத்தில் எண்ணெயை வாங்கியபடி மாதனமுத்தா வீட்டுக்குத் திரும்பியபோது நன்றாக இருட்டிவிட்டிருந்தது. மின் வெட்டும் வந்து சேர மாதனமுத்தாவின் மனைவி விளக்கை ஏற்ற

ஒலிவியாவின் பில்டிங்

எங்கள் வீட்டிலிருந்து சற்றுத் தள்ளி அமைந்திருக்கும் ஒஸ்டின் வைத்தியசாலையில்தான் அப்பாவுக்குப் புற்று நோய் சிகிச்சை இடம்பெற்றது. புற்று நோய் சிகிச்சை என்பது ஓரிரு நாட்களில் நிகழ்ந்து முடிவதில்லை என்பதை அனைவரும் அறிவார்கள். அப்பருக்கும் இது வருசக்கணக்கில் இழுத்தது. பல்வேறு சோதனைகள். ரேடியேசன், கீமோ, சத்திர சிகிச்சை என ஒன்று மாறி ஒன்று எப்போதும் வந்துகொண்டேயிருக்கும். ஒரு கட்டத்தில் முட்டி மோதி நோயைக் கட்டுப்படுத்திவிட்டாலும் வைத்தியசாலை விட்டுவைப்பதாக இல்லை. அடிக்கடி அவர்கள் அப்பரை அழைத்து எப்பன் எங்காவது நோய் மறுபடியும் எட்டிப்பார்க்கிறதா என்று மேன்மேலும் சோதனை செய்துகொண்டேயிருப்பார்கள். அப்பாவும் அனைத்துக்கும் தயாராகவே இருந்தார். தன் நோயைக் குணப்படுத்தவேண்டும், ஊருக்குப் போகவேண்டும் என்ற ஓர்மம் முக்கிய காரணம் என்றாலும் அயர்ச்சியோ வெறுப்போ இல்லாமல் அவர் அங்குத் தொடர்ச்சியாகப் போய் வந்தமைக்கு வைத்தியசாலையின் கவனிப்பும் ஒரு காரணம். அந்தப் புற்றுநோய் சிகிச்சை நிலையத்தின் வரவேற்பு மண்டபம் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றின் மண்டபத்தைப்போல அழகாகவும் பொலிவுடனும் இருக்கும். அப்பர் போனவுடனேயே உள்ளே

பொன்னியின் செல்வன் - இராட்சச மாமனே

கடந்த சில வாரங்களாக நான் திரும்பத் திரும்பக் கேட்டு லயித்துக்கிடக்கும் பாடல்கள் பொன்னியின் செல்வனுடைய பாடல்கள். தலைவர் ரகுமான் எப்போதும்போல நெருப்பெடுத்திருக்கிறார். என் ரசனையின் அடிப்படையில் ரகுமான் என்றைக்குமே அவுட் ஓஃப் போர்மில் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது. உதாரணத்துக்கு அண்மையில் வெளியான “தமிழ் நாட்டின்” வெந்து தணிந்தது காடு, இரவின் நிழல், கோப்ரா, மலயான் குஞ்சு, அற்றாங்கி ரே எல்லாமே அட்டகாசம். அதற்கும் முன்னர் வந்த 99 Songs பற்றி பேசவே தேவையில்லை. என்ன ஒன்று பலருக்கு ஒரு இசைத்தொகுப்பை ஆற அமர இருந்து, திரும்பத் திரும்பக் கேட்பதற்கு இப்போதெல்லாம் சந்தர்ப்பங்கள் அமைவதில்லை. முன்னர் வானொலிகள் அந்த வேலையை எமக்குச் செய்துகொண்டிருந்தன. இப்போது நாமே பாடல்களைத் தெரிவுசெய்து கேட்பதால் ஒன்று பழைய பாடல்களையே திரும்பவும் தெரிவு செய்கிறோம். அல்லது வைரலாக சுற்றும் பாடல்களைக் கேட்கிறோம். புதிய ரகுமான் பாடல்கள் இவற்றுக்கிடையில் என்னைப் போன்ற ரசிகர்களிடம் மாத்திரமே சென்று சேர்கின்றனவோ தெரியாது. பொன்னியில் செல்வனில் ரகுமான் தனியாக ஒரு தேவராளன் ஆட்டமே ஆடியிருக்கிறார். பொன்னி நதி, காதொடு சொல், அலை க

வாத்துக்கூட்டம்

வசந்த காலத்தின் நடைப்பொழுதுகள் எப்போதும் உவகை கொடுக்கக்கூடியவை. அதுவும் மனைவியோடு நடக்கும்போது நகைக்குப் பஞ்சமிருப்பதில்லை. மற்றவர்கள் எப்படியோ தெரியாது, ஆனால் ஆண் பறவைகளைப்போலப் பெண் துணைக்கு ஆடியும் பாடியும் நகாசுகள் என பல வித்தைகள் காட்டியும் கவனத்தை ஈர்க்கும் முயற்சி பத்தாண்டுகளாக இன்னமும் தொடர்கிறது. அவள்தான் எல்லாவற்றையும் வெறும் இறக்கைச் சிலிர்ப்போடு சலிப்பாகக் கடந்துபோய்விடுகிறாள். ஆற்றங்கரையோடே நடைபாதை அமைந்திருக்கிறது. கூடற் பருவம் முகிழ்ந்து குஞ்சுகள் சகிதம் வாத்துக்கூட்டங்கள் பல வலம் வந்துகொண்டிருந்தன. கூட்டத்துக்கு ஒரு இருபது குஞ்சுகளும் தாயும் தகப்பனும் இருக்கும். அப்போதுதான் நடை பழகும் குஞ்சுகள். சிலது நீந்தக்கற்றுக்கொள்கின்றன. சில குஞ்சுகள் சொல்வழி கேளாமல் அங்கிங்கே எடுபட்டுப்போனால் தாயோ தகப்பனோ ஓடிச்சென்று மீண்டும் அவற்றைக் கூட்டத்தினுள் துரத்திவிடுகின்றன. சிலது தம் பெற்றோரைப்போலவே கரையோரச் சகதிக்குள் தலையை உள்ளே நுழைத்து பிட்டத்தை உயர்த்திப்பிடித்து என்னவோ செய்கின்றன. கேட்டால் தாங்களும் மீன் பிடிக்கிறார்களாம்.

பரி. யோவான் பொழுதுகள் - ஜூட் பிரகாஷ்

பள்ளி நினைவுகளுக்கு வயதாவதேயில்லை.   பசுமரத்தாணிபோல அவை நம்முள் புதைந்துபோய் மீட்டும்பொழுதெலாம் சுகமான வலியைக் கொடுத்து மாய்த்துவிடுகின்றன . வழுக்கைத் தலையும் வண்டித் தொப்பையுமாய்க் கிழப்பருவமெய்திய பின்னுங்கூட நம் பள்ளி நண்பர்கள் மட்டும் காற்சட்டையிலும் அரும்பு மீசையிலும் காட்சி கொடுப்பதன் மாயமெதுவோ யாமறியோம். அறுபது வயதாகிப் பேரப்பிள்ளையையும் கண்டபின்னருங்கூட நம் வயது சுண்டிக்குளிப் பெட்டைகள் என்னவோ இன்றும் நல்லூர் வடக்குவீதியில் ஹாஃப் சாறி அணிந்து உலா வரக் காண்கின்ற அதிசயமும் ஏதறியோம்.

தலித்துகளும் பௌத்தமும்

இந்து மதத்தின் சாதிய அமைப்பில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கும் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் இந்து மதத்தின் அதிகாரத்துக்கு எதிராக பௌத்தத்தைத் தம் ஆயுதமாக எடுத்துக்கொள்வதை நம்மில் பலர் கவனித்திருக்கக்கூடும். அவர்களுடைய கூட்டங்களில் பௌத்தம் பற்றிப் பேசப்படும். நேர்காணல்களில் அவர்களுக்குப் பின்னே புத்தர் வீற்றிருப்பார். இச்சிக்கல்களைப் பேசும் திரைப்படங்களில் புத்தர் சிலைகளைக் கவனிக்கமுடியும். இதற்கு ஆரம்பப்புள்ளி வைத்தது அம்பேத்கர். அவர் இலங்கைக்கும் பர்மாவுக்கும் சென்று பௌத்த துறவிகளின் கூட்டங்களில் கலந்துகொண்டு பின்னர் நீண்ட யோசனைக்குப் பின்னர் பௌத்தத்தைத் தழுவிக்கொண்டார். இதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று பௌத்தம் பிறப்பின் நிமித்தம் பிரிவினைகளைச் செய்யாது அனைவரையும் சமனாக ஏற்றுக்கொள்கிறது என்பதாகும்.

"பூப் புனிதக் கொலைகள்" நாவல் பற்றிக் கம்பவாரிதி இ. ஜெயராஜ்