Skip to main content

“ஐ லவ் யூ ஆன்ட்ரியா!”


the-corrs-11காதல்கொண்டேன் படத்திலே “நெஞ்சோடு கலந்தது” பாடலை ரசிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள், உயிரை அப்படியே கீறி கிழிக்கும் வயலின் செல்லோ இசையும் மெட்டும் கலந்த பாடல். என்ன கம்போசிங்டா இது, யுவன்சங்கர்ராஜா அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை என்று சிலாகித்த போது நண்பன் சொன்னான், தப்பு .. இது Corrs குழுவின் அல்பத்தில் இருந்து சுட்ட பழம் என்று. அன்றைக்கு ஆரம்பித்தது தான் ஐரிஷ் இசை பேண்ட் குழுவான  “The Corrs” மீதான காதல்.

பாடும் பெண் தான் ஆண்ட்ரியா. பக்கத்தில் இருக்கும் வயலினில் கொஞ்சும் பெண் அவரின் சகோதரி ஷரோன். டிரம்மர் இன்னொரு சகோதரி கரோலின். அந்த கிடார் வாசிக்கும் இளைஞன் இவர்களின் சகோதரன் ஜிம். இந்த நான்கு சகோதரர்களும் சேர்ந்து உருவாக்கிய இசை சங்கமம் தான் இந்த “The Corrs” என்ற பாண்ட்.

மெய் சிலிர்க்க வைப்பது என்பது இது தான்

ஆன்ரியா ஓகே என்று சொல்ல பியானோ கவுன்டிங்குடன் தொடங்கும் ஒன்று. அந்த ஒன்றை என்னவென்று சொல்வேன்? வெறுமனே பாடல் என்று சொல்ல முடியாது. இசை என்றும் சொல்ல முடியாது. ஏதோ ஒன்று, உள்ளத்தையும் உடலையும் கட்டிப்போட்டு படாதபடுத்தும் ஏதோ ஒன்று. காதல் கூட இப்படி போட்டு தாக்குமா என்பது சந்தேகமே. அந்த பேண்ட் கலைஞர்களிடம் ஒருவித vibration இருக்கும். சின்ன சின்ன அசைவுகள், புன்னகைகள், கண்களாலேயே சக கலைஞர்களை சிலாகிப்பது, ஒரு பெருமை .. எல்லாமே இருக்கும்.

the-corrs“Say it's true, there's nothing like me and you” என்று பாடும் போது பியானோ பேஸ் இல் ரிதம் கொடுக்க, அந்த வயலின் வேறு எம்மை கொலை செய்ய, சில நேரங்களில் பாடலை கேட்க தைரியம் இல்லாமல் நிறுத்தி விடுவேன். சில மெலடிகளை கேட்கும் போது தாங்க முடியாது. கண்களில் நீர் முட்டி விடும். இது அந்த வகை இசை. அந்த இறுதி சுரம் தப்புவது கூட அந்த இசைக்கு இன்னும் அழகு சேர்த்தால் போல தான் இருந்தது. நேற்று பிறந்த பிள்ளைக்கு வைத்த திருஷ்டி பொட்டு போல!

ஐரிஷ் இசைவடிவங்கள் எப்போதுமே உயிரை பிழிவன. Pan, tin, fiddle போன்ற புல்லாங்குழல்கள் கொடுத்த மூங்கில்கள் அவர்கள். என்யாவை கேட்டு இருக்கிறீர்களா. ஒருநாள், வசந்த காலத்தில், நிலா முற்றத்தில் அவரின் இசையை நிலவை பார்த்துக்கொண்டே கேட்டுப்பாருங்கள். அது போதும். காதலிக்கவேண்டாம். அப்புறம் U2 பற்றி சொல்லவே வேண்டாம். எனக்கு அண்மையில் வந்தவர்களில் “The Script” குழுவை அதிகம் பிடிக்கும், குறிப்பாக இந்த “break even” பாடல். ஆனால் The Corrs என்றால் எப்போதுமே ஒரு எக்ஸ்ட்ரா பிரியம். அவர்களின் பாடல்களில் எப்போதுமே ஒரு soul, soft, soothness எல்லாமே இருக்கும். கொஞ்சம் பலவீனமான இசை பிரியர் என்றால் உங்களை கொன்று புதைத்து விடுவார்கள். Dangerous fellas.

அந்த கிட்டார் ரிதம் இருக்கிறதே! ஆன்ட்ரியா பாட, ஷரோன் வயலினிலும், வாய்சிலும் ஹார்மனி இசைக்க, நோட்ஸ் எல்லாமே அங்கே இங்கே என்று ஓடித்திரியும். ஒரு கட்டத்தில், ஆண்ட்ரியாவின் குரலும் ஹார்மனிக்கு மாறி, பியானோவும் வயலினும் முன்னணிக்கு வர கிட்டார் அப்போதும் ரிதம் அலுக்காமல் சிவனேன்னு கொடுத்துக்கொண்டே இருக்கும். ஒரே flow வில் இருக்கும் இசையில், இத்தனை arrangements. அது வேறு unplugged. எனக்கு “பொத்தி வச்ச மல்லிகை” பாடலை improvise பண்ணி, தேர்ந்த இசை கலைஞர்களால் இப்படி ஒரு unplugged செய்ய ஆசை. தீபன் சரி என்றால் அடுத்த முறை சிங்கப்பூர் செல்லும்போது முயற்சி செய்யவேண்டும்!

மீண்டும் கொஞ்சும் அழகு தேவதை ஆன்ட்ரியா, அதிலும் அவள் தவறு செய்யும் போது முகம் போகும் போக்கை பாருங்கள். இது தான் unplugged இசை நிகழ்ச்சியில் இருக்கும் அழகு.  அந்த வயலின் கொஞ்சம் மன்மதன் அம்புவின் “நீ நீல வானம்” ஆரம்ப இசையை ஞாபகப்படுத்தும். ஐரிஷ் இசையின் அடி நாதம் இந்த வயலின் இசை என்று நினைக்கிறேன். 
வரிகள் இன்னும் அபாரம், எப்படி முடிகிறது இப்படி இசை தர?
I know this face I'm wearing now
I've seen this in my eyes
And though it feels so great, I'm still afraid

90களில் புகழ்பெற்று ஐரோப்பாவை ஒரு கலக்கு கலக்கிக்கொண்டு இந்த நூற்றாண்டுக்குள் நுழையும்போது குழுவிலே பிரிவு வந்துவிட்டது. எந்த ஒரு பெரிய பாண்டுக்கும் இது நடப்பது தான். பீட்டில்ஸ், பாக்ஸ்ட்ரீட் பாய்ஸில் இருந்து நம்முடைய தேவா சகோதரர்கள் வரை பிரிவு என்பது ரசிகர்களுக்கு ஒரு இழப்பாகவே இருக்கும். The Corrs பேண்டில் இருவர் காலாகாலத்தில் குடும்பத்தை கவனிக்க போக, ஆன்ட்ரியா அப்புறம் தனி ஆவர்த்தனம் தொடங்கினாலும், முன்னே இருந்த உயிரும், அந்த கெமிஸ்ட்ரியும் தொலைந்து போனது.


இந்த பாடல், The Corrs இன் பாடல்களிலேயே உலகை ஒரு கலக்கு கலக்கிய பாடல். அந்த lullaby இசைக்கு காரோலினின் ட்ரம்ஸ் சும்மா அடி பின்னும். ஹாரிஸ் ஜெயராஜ் ஏன் தான் இன்னும் இந்த பாடலை கேட்கவில்லையோ தெரியாது!
I met you on a sunny Autumn day
You instantly attracted me
When asking for the way
God if I had known the pain I'd make you feel
I would have stopped this thought of us
And turned upon my heel

ஆன்டிரியா flute … அதகளம்

இந்த குழுவில் ஆண்ட்ரியா ஒரு படி எப்போதுமே மேலே தான். அவர்களிலே ஊன் உயிர் உறக்கம் எதிலுமே இசை இருப்பது இந்த பெண்ணில் போல தான் தெரிகிறது. அதுவும் இந்த பெண் டின் ப்ளூட்(Tin Flute) வாசிக்கும் பாங்கு, செலின் டியனையே தூக்கி சாப்பிட்டு விடும். கேட்டு பாருங்கள்!

“The Corrs” இசைக்குழு மீண்டும் ஒரு ஆல்பம் வெளியிட ஒன்று சேர்வதாக ஒரு கதை உலாவுகிறது. சேரவேண்டும். மீண்டும் ஒருநாள் அந்த அல்பத்தை இந்த தொடரிலே நான் சிலாகிக்க வேண்டும். “The Corrs” இன் பல பாடல்களை ஆரம்பத்தில் தொகுத்தேன். ஆனால் பின்பு யோசித்தபோது, இந்த இசையை தொட்டும் தொடாமலும் சொன்னால தான், வாசிப்பவர் தன் வசம் மறந்து இவர்களின் இசையை தேடி தேடி கேட்பார். அப்படி உணர்ந்தால், அப்படி கேட்டால், ப்ளீஸ் ஒரு கமெண்ட் போடுங்கள். இந்த இசைய பற்றி பேச வேண்டுமானால் அலுவலகத்துக்கு ஒருநாள் லீவு போடவும் நான் தயார், அட வேலையை விடலாம், அந்த கொஞ்சும் சலங்கை ஆண்ட்ரியாவுக்காக!!

andrea-corr-2074
இறைவா, இறவாமை வேண்டும்,
மீண்டும் பிறப்பு உண்டேல் – இம்மாதிரி
பாடல்கள் ரசிக்கும் மனப்பான்மை வேண்டும்- வேண்டும் 
என்று கேட்கும் மட்டும் இசை தரும்
இவர்கள் இன்னும் இன்னும் வேண்டும்!
அப்புறம் ஒரு சின்ன request மை லார்ட்
அந்த பொண்ணு சூப்பரா பாடுது, அட்லீஸ்ட்
அவள்  போன் நம்பராவது வேண்டும்!!




என்ன? இந்தவார ♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪ பிடித்திருக்கிறதா?  மீண்டும் அடுத்த செவ்வாயில் வேறு ஒரு மியூசிக்கல் collection உடன் சந்திப்போம்!
 ♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪ : சீனி கம்
♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪ : தேடித்தேடி தேய்ந்தேனே
♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪ : நிலவும் மலரும் பாடுது
♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪ : கொச்சின் மாடப்புறா



Comments

  1. ஆன்ட்ரியா அழகாகவும் இருக்காங்க பாஸ் ஹி.ஹி.ஹி.ஹி....

    ReplyDelete
  2. //“The Corrs” இன் பல பாடல்களை ஆரம்பத்தில் தொகுத்தேன். ஆனால் பின்பு யோசித்தபோது, இந்த இசையை தொட்டும் தொடாமலும் சொன்னால தான், வாசிப்பவர் தன் வசம் மறந்து இவர்களின் இசையை தேடி தேடி கேட்பார். அப்படி உணர்ந்தால், அப்படி கேட்டால், ப்ளீஸ் ஒரு கமெண்ட் போடுங்கள். //

    1.45 AM :). if you gave the list it may listened more song today ;)

    ReplyDelete
  3. Rajh .. தெரியும் சாரே .. லொள்ளு பண்ணுவீங்கனு

    ReplyDelete
  4. திலகன், The Corrs நிறைய பாடல்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். எல்லாவற்றையும் கொடுத்தால், அந்த ஆர்வம போய்விடும். பிடித்தால் நீங்கள் எப்படியும் தேடி தேடி கேட்பீர்கள் தானே!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட