Skip to main content

Posts

Showing posts from December, 2015

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி விக்கி விக்னேஷ்.

தூக்கத்தை தொலைத்த ஒரு இராப் பொழுதை, என் குழந்தையின் அழுகையோடு கழிக்க நேர்ந்தது. குழந்தையை ஒரு பக்க மார்பில் சாய்த்தவாறு, குறுகிய அறைக்குள் நடந்துக் கொண்டிருந்தேன். நீண்ட தினங்களுக்கு முன்னர் வாங்கி சில அத்தியாயங்களை மாத்திரமே வசித்துவிட்டு வைத்த ஜே.கே. அண்ணாவின்; நூல் நினைவுக்கு வந்தது. புத்தகத்தை எடுத்து நடந்து கொண்டே வாசித்தேன்…

சந்திரனுக்குப் போன சுந்தரி

    அனேகமான விஞ்ஞானக் கதைகளைப்போலவே அன்றைக்கும் நாசாவின் விண்வெளி நிலையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. விண்கல ஏவுதளத்துக்கான இறுதிநேர சரிபார்த்தல்கள், தயார்படுத்தல்கள் நடந்துகொண்டிருந்தன. விஞ்ஞானிகள் குறுக்கும் நெடுக்குமாக  கைகளில் இருந்த டப்லட்டில் எதையெதையோ சுட்டிக்காட்டிப் பேசியபடி உடைகள் பறக்க நடந்து திரிந்தார்கள்.   கணனித்திரையில் ஏவுதளம் 40Bயிலே "சுண்டர்1" விண்கலம் சிறிய உருவில் தெரிந்தது. “சுண்டர்1” சந்திரனுக்கு மனிதர்களைக் கொண்டுசெல்லுகின்ற ஏழாவது விண்கலம். நாற்பது ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மனிதர் சந்திரனுக்குச் சென்று திரும்பப்போகும் பயணம். மூன்று விண்வெளி வீரர்கள், ஒன்பது பயணிகள் என்று மொத்தமாக பன்னிருவர் ஒரே சமயத்தில் பிரயாணம் செய்யும் முதல் பயணிகள் விண்கலம். அணுச்சக்தியில் இயங்கும் எஞ்சின், உள்ளக ஈர்ப்பு என்று பல நவீன தொழில்நுட்பங்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் விண்கலம். இப்படி சுண்டர்1 விண்கலத்துக்குப் பல சிறப்புகள் இருக்கின்றன. இன்னமும் மூன்று மணித்தியாலங்களில் "டி மைனஸ்" கவுண்டவுன் ஆரம்பித்து ஒவ்வொன்றாக சரி பார்க்கப்பட்டு, வானிலையும

என் சொல்லே!

படைக்கும் வார்த்தைகளை விட அழிக்கும் வார்த்தைகள் அதிகமாயின. முதல்வரியிலேயே முழுநாளும் சிறுகதைகள் தேங்குகின்றன. எது எழுதியும் எழுதா வரியதைத் தேடி மனம் அலைகிறது. வார்த்தைகளுக்காய் காத்திருந்து வாயிலிலே கறையான் ஏறிவிட்டது. வருதும், வருதும் என்று வழிபார்த்து கண்மூடி. துளிசோர கிடந்தேனடி. வருவாயோ. வரம் தருவாயோ. என் மனது சஞ்சலிக்கிறது. வருவதை எலாம் வீதியில் வைத்து வேடிக்கை மனிதரலாம் வெட்டிப் புதைத்தனரடி. பசிக்கிறது. வாசிப்பு, இருக்கும் ஓரிரு வார்த்தைகளையும் பிடுங்கிக்கொள்கிறது. எல்லாமே இங்கே எழுதிச் சிறை பிடிக்கப்பட்டுவிட்டது. தப்பிய வார்த்தைகள் கண்காணா பிரபஞ்சத்துள் சுற்றித் திரிகின்றன. எனக்கு அவை வேணும். எடுத்து வா. எப்போதோ எனக்காக புறப்பட்ட ஒளிக்கதிரின் துணுக்குகளில் உட்கார்ந்து கடுகதியில் பறந்துவா. என் சொல்லே! ஊடலுற்ற காதலிபோல உம்மணாமூஞ்சியுடன் என்னைப்பார்த்து நீ திருப்பிக்கொள்ளாதே. என் காதல் சொல்ல நீ வேண்டும். நான் காதலிக்க சொல் வேண்டும். வார்த்தைகளின் வரம் வேண்டும். அடியேய் சிவசக்தி. அதை அருள்வதில் உனக்கெதுந் தடையுண்டோ?

கறுத்தக் கொழும்பான்

  எங்கள் ஊரிலே கொழும்பர் மாமி என்கின்ற ஒரு ஆச்சி இருக்கிறார். இப்போது அவரின் வயது தொண்ணூறைத் தாண்டியிருக்கலாம். கலியாணம் கட்டி சில மாதங்களிலேயே "கொழும்பர்" இறந்துவிட, கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளாக கொழும்பரை பெயரில் தாங்கியவாறு மாமி தனிக்கட்டையாக வாழ்ந்துவருகிறார். கொழும்பர் மாமி இத்தனையாண்டுகளில் உறவுக்காரர்களின் அத்தனை பிள்ளைகளையும் தூக்கி வளர்த்தவர். என் அம்மாவைத் தூக்கி வளர்த்தவர். என் அண்ணாவை. என் அக்காவை. என்னை. இப்படி சொந்தக்காரர்கள் பலரின் பிள்ளைகளை எல்லாம் தூக்கி வளர்த்தவர். அவரின் வீடு இருப்பது என்னவோ நயினாதீவில். ஆனால் அம்பாள் கோவில் தீர்த்தத்திருவிழா முடிய அவரும் எம்மோடு யாழ்ப்பாணத்துக்கு பஸ் ஏறிவிடுவார். மாதத்துக்கு ஒரு வீடு என்று யாழ்ப்பாணத்து உறவுக்காரர்களின் வீட்டில் மாறி மாறித் தங்குவார். எவர் வீட்டிலாவது பிள்ளைப்பேறு, சாமத்தியச் சடங்கு, கலியாணம், செத்தவீடு, ஆட்டத்துவசம் என்றால் முதலில் அழைத்துவருவது கொழும்பர் மாமியைத்தான். மாமி வீட்டில் நின்றாலே போதும். வேலைகள் எல்லாமே தன்னாலே நடைபெறும். வீட்டு வாசல்கட்டில் இருந்து வெத்திலை போட்டபடியே முழு நிகழ்வையும் நெறிப்ப