Skip to main content

Posts

Showing posts from September, 2017

சொல்லவேண்டிய கதைகள்

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான லெ. முருகபூபதி எழுதிய “சொல்லவேண்டிய கதைகள்” என்கின்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு வரும் சனிக்கிழமை மாலை இடம்பெற இருக்கிறது. முருகபூபதி நிறைய அனுபவங்களைச் சுமந்து திரிபவர். அவர் அவற்றைச் சொல்லும்போது ஒருவித பத்திரிகைத் துணுக்குத்தனம் தொனிக்கும். பெரும்பாலும் புனைவு கலக்காமல், முன்முடிபுகள் சேர்க்காமல் செய்தியாகவே அனுபவங்களை முருகபூபதி சொல்வார். ஒரு அனுபவத்தைப் பகிரும்போது மூலச் செய்தி என்று ஒன்று இருக்குமல்லவா? ஏனைய விடயங்கள் எல்லாம் அந்த மூலச் செய்தியைச் சுற்றி, அல்லது அதனை நோக்கியே நகருவதுண்டு. ஆனால் முருகபூபதியின் அனுபவப்பகிர்வுகள் அப்படியானவை அல்ல. செய்தியின் மூலம் என்பது அவருக்கு எந்நேரமும் நகர்ந்துகொண்டே இருக்கும். அல்லது பல மூலங்களின் வழியே செய்தி கடத்தப்படும். அல்லது ஒரே மாட்டை முருகபூபதி பல மரங்களில் கட்டிவிட்டுப் பல மரங்களைப்பற்றிப் பேசுவார். மாடும் அவ்வப்போது வந்து வந்து போகும். இதன் சிறப்பு என்னவென்றால், அவரே அறியாமல், உணராமல் பல பொக்கிசங்கள் அவர் பேச்சின்வழி வந்து வீழும். அதற்காகவே அவரின் கதைகளை நான் குறுக்கிடாமல் தொடர்ந்து கேட்பதுண்டு.

மச்சாங்

“ஐ,நா கோஷ்டியோடு சங்கமித்து ரோகிங்கியா மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இதே ஐநா கூட்டம்தான் இலங்கைக்கு எதிராகவும் “fake news” பிரச்சாரத்தை, நாம் தீவிரவாதத்தை முறியடித்துக்கொண்டிருக்கையில் நமக்கெதிராகக் கையாண்டது. நான் அந்த மக்கள் கொல்லப்படவில்லை என்று சொல்லவில்லை. ஆனால் எதையும் இலகுவில் முடிவு செய்துவிடாதீர்கள்”

பால் சமத்துவத் திருமணங்கள்

“பால் சமத்துவத் திருமணங்களைச் சட்டரீதியாக அங்கீகரிக்கவேண்டுமா?” என்கின்ற தபால்மூலக் கருத்துக்கணிப்பு ஒன்று அவுஸ்திரேலியாவில் விரைவில் இடம்பெற இருக்கிறது. தீவிரமான ஆதரவு, எதிர்ப்புப் போராட்டங்கள், இருபெரும் அரசியல் கட்சிகளின் எதிரெதிர் நிலைகள், நீதிமன்ற வழக்குகள் என்று இந்தப்பிரச்சனையில் அவுஸ்திரேலியா ஒரு தீர்வினை எட்டமுடியாமல் தள்ளாடினாலும்கூட தொடர்ச்சியாகச் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் இந்தப்பிரச்சனை பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆங்கில ஊடகங்களிலும் சமூக அமைப்புகள் மத்தியிலும் இது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் மிக ஆழமாக இடம்பெறத்தொடங்கிவிட்டன. கருத்துக்கணிப்புப் பற்றிய அறிவுப்பு வெளிவந்தபின்னர் “வேண்டும்” என்கின்ற பிரிவும் “கூடாது” என்கின்ற பிரிவும் தத்தமக்கு ஆதரவுதேடி மிகப் பரவலான பிரச்சாரங்களை ஆரம்பித்துவிட்டன. ஆனால் அவுஸ்திரேலியாவிலுள்ள தமிழ் சமூகத்தின் மத்தியில் இதுபற்றியக் கலந்துரையாடல்கள் இன்னமும் பரவலாக இடம்பெறத் தொடங்கவில்லை என்றே தோன்றுகிறது. நாம் வாழும் சூழலில் இடம்பெறுகின்ற, நம்மோடு வாழுகின்ற சக மனிதர்களின், அதுவும் சிறுபான்மை மனிதர்களின் உரிமைசார்ந்த ஒரு விடயத்தை,