Skip to main content

குளிர்காலம் வந்துவிட்டது

வெள்ளி அதிகாலை.
காதுகளில்
இலையுதிர் பருவத்து கூதல்.
கூடவே ஸ்டீபன் ஹோக்கிங்கும்
இளையராஜாவும்.
1064862_470431386381097_1007488176_oரயில் பயணத்தில்
யன்னலோரமாய் நான்.
நீயும் இருந்து பாரேன்.
நிச்சயம் பிடிக்கும்.
யன்னலோரத்தையும் பிடித்துவிடுவாய்.
வரிகள் மாறுகிறது.
யன்னலோரமாய் நீ.
இயர்போனில்
எனக்கு ஒரு காது.
உனக்கு மறு காது.
"இசைதேவன் இசையில்
புது பாடல் துவங்கு
எனை ஆளும் கவியே"
யூகலிப்டஸ் மரங்களில் அப்படி என்ன பித்து?
திரும்பிப் பாரேன் என்னை.
கருந்துளை விழிகளால்
கவர்ந்திழுக்கிறாய்.
விழுந்தவன்
தொலைந்து போனேன்.
"உனை பார்த்த மயக்கத்திலும் முகம் பூத்து மலரும்.
நமை வாழ்த்த வழி தேடி தமிழும் தலை குனியும்"
தான் நாணி நமை வாழ்த்தும்
தமிழும்
தன் வார்த்தை தொலைத்தது!
குறுஞ்செய்தி ஒலி.
பக்கத்தில் இருந்தும்
எஸ்எம்எஸ் அனுப்பும்
வேடிக்கை விநோதக்காரியே.
இந்த விடியலை கூடி ரசிக்கும் வேளை இது.
அதிகாலை கதிரே
அலங்கார சுடரே
புதுராகம் நான் பாட வேண்டாமா?"
சுணங்காமல் வந்துவிடு- இங்கே
குளிர்காலம் வந்துவிட்டது.

Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.