Skip to main content

கந்தசாமியும் கலக்சியும் - காயத்திரி

ஒரு கணித-கணினி மூளையின்
தமிழ் பரிசோதனைகள் தரத்தில் தகதகக்கின்றன…

உங்கள் பாஷையில் சொல்வதானால்…
Virtual realitiy யில் ஓர் பிரபஞ்சப் பயணம் - கந்தசாமியும் கலக்சியும்

அசையும் கரும்பொருட்கள் எல்லாம்
அகக் கண்ணில் தெரிகிறது…
ஓடும் எலிகள் எல்லாம்
விஞ்ஞானிகளாய் மிரட்டுகிறது…

ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் ஓர் புதிர்.. பல புரிதல்கள்..
புரியாத புதிர்கள் கூட புன்னகைக்க வைக்கிறது…
நகைச்சுவை நதியில் ஓர் விஞ்ஞானப் பயணம் - ஒளித்து
வைத்திருக்கும் உள்ளுணர்வுகளுடன் கூட..
இது தான் உஙகள் வெற்றிக்கான தனித்தடம்…

எங்கள் எல்லோரினதும் - இதயத்திற்குள்
ஒளிந்திருக்கும் நப்பாசையை முடிவாக்கி
உங்கள் காவியம் தானே மகுடம் சூடிக்கொண்டது…

‘தமிழுக்கே தமிழா’.. என.. இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்..
சின்னப் பெருமையுடன்,.-எனக்கு உங்களைத் தெரியும்.. உங்களுக்கும் என்னை ஞாபகமிருக்கலாம்..
பட்டிமன்ற எதிரணியில் இருந்துகொண்டு - உங்களின்
சரளமான மொழிநடையில் ‘ஆ’வென வியந்து – அடுத்ததாய்
பேச வார்த்தைகள் இடறிய கல்லூரிக் கால நினைவுகளுடன்..

உங்கள் எழுத்துக்களின்
பல்லாயிரம் விசிறிகளில் ஒரு விசிறி
– காயத்திரி

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக