Skip to main content

டமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்!

 

images

என் அன்புக்குரிய டமில் மக்களே,

ஐ தின்க், எங்க பிரசிடெண்ட் செய்யுற அபிவிருத்தி இஸ் குட். என்னால ஸ்ரீலங்கன் கிரிக்கட் அணில லீடிங் ஸ்பின்னரா இருக்கமுடியுமின்னா ஏன் இந்த ஜனங்களால முடியாது? என்னால எய்ட் ஹண்ட்ரட் விக்கட்ஸ் எடுக்கமுடியுதுன்னா, வை கான்ட் அதர்ஸ்? தமிழ் சிங்களம் என்று யாரையும் பிரிச்சு பாக்காதீங்க. நான் டீமில இருக்கறப்போ பீஸ் இருந்தது. சமாதானம். ஒருதடவை ஏசியன் லெவன் டீமுல கப்டினாக இருந்தன் தானே. ஸ்ரீலங்கன் டீமுல வைஸ் கப்டினாவும் இருந்தன். கப்டினா ஆக முடியல்ல. பட் அதுக்கு வன் ரீசன் இருக்கி. நான் சிங்களம் மிச்சம் பேசுவேன். ஆல் டமில்ஸ் நிச்சயமா சிங்களம் படிக்கணும். பிரித் ஒதேக்க நூலைப்பிடிச்சுகிட்டு கும்பிடணும். நீங்க சிங்கள படிச்சா சிங்களீஸ் தமிழ் படிக்க தேவையில்ல தானே. எதுக்கு பிறகு அவங்களும் தமிழ் படிச்சு, அப்புறமா தமிழன் சிங்களத்திலயும் சிங்களவன் தமிழிலையும் பேசி குழம்பி போய், வேஸ்ட்டு. அச்சுவலி வி நீட் வன் பாஷா திட்டம்.

 

mervin_silva

(சிராவ மஷான்.. சிராவ)


ஜாப்னாவுல ஆர்ப்பாட்டம் செஞ்சாங்க தானே. அந்த ஜனங்களை யாரோ தப்பா தூண்டியிருக்கிறாங்க.  .. டரெல் ஹயர் நான் எறியறேன் எண்டு சொன்னப்போ, அம்பயர் சொன்னத மதிச்சு அர்ஜூன நடந்தாரு. அதபோல நீங்களும் எங்க பிரசிடெண்ட் சொன்னத கேட்டு நடக்கோணும். திருப்பி பேசபடாது. பசங்க காணாம போனா அத பத்தி யோசிக்காம வேற பசங்க உருவாக்கிறதில வர்க்அவுட் பண்ணனும். அத வுட்டுட்டு ஆர்ப்பாட்டம் பண்ணுறது றோங். கமரூன் வரும்போது கள்ளு குடுக்கிறத வுட்டிட்டு மகஜர் குடுக்கிறீங்க.

8(கியல வடக்னா முரளி)

நம்ம பிரசிடெண்டை நீங்கல்லாரும் பிலீவ் பண்ணனும். அவரு டெவலப்மென்ட் முழுசும் நோர்த்துக்கு தான் செய்யுறார். ஏர்போர்ட், ஹார்பர், ப்ளே கிரவுண்ட், ஹைவே எல்லாமே நோர்த்துக்கு னே!.. நீங்க வேணும்னா அந்தார்டிகாவுக்கு போயி நின்னுகிட்டு நோர்த்து பாருங்க .. அம்பாந்தோட்டை தானே தெரியும்?

mervin(கொடாய் முரளி .. நியம)

நெசத்தில வோர்ல பாதிக்கப்பட்டது நானு தான். பாகிஸ்தானில நாங்க போயக்கிட்டுருக்கோம். திடீர்னு டெரரிஸ்ட் ஷூட் பண்ணினாங்க.  நான் உசக்க பணிஞ்சு போனதில தான் உசிர் தப்பினேன். பட் அதில என்னைவிட சிங்களீஸ் தான் ரொம்ப தீவிரவாதத்தால பாதிக்கப்பட்டது. சமரவீரவோட நெஞ்சு பிரிஞ்சு போச்சு. இது கமரூனுக்கு தெரியாது. டமில்ஸ் ஸ்ரீலங்காவுல நடந்ததை மறந்துட்டு பாகிஸ்தான்ல நமக்கு நடந்த தீவிரவாத தாக்குதல பத்தி பேசணும். வெஸ்டேர்ன் போர்சஸ் இன்வோல்வ்ட் இருக்கணும். பாகிஸ்தானில எங்க பஸ்ல எப்படி அமேரிக்கா குண்டு வச்சான்னு இன்டர்நேஷனல் இன்குவாரி வேணும்.

2223035629_de3b6a8af1
(மாற முரளி, மாற)

என்னைய கம்புர் கலகம் பீபில் கூப்பிட்டு பாராட்டு விளா வச்சாங்க. நான் அங்கிட்டு இங்கிலீஷ் தான் பேசினேன். எனக்கு தமிழ் தெரியாது எண்டதால தான் இங்கிலிஷ் பேசினேன்னுறாங்க. பட் தட்ஸ் ரோங். டமில்நாட்ல நடந்த கொஃபி வித் அனு ஷோவுல நான் தமிழ் தான் பேசினேன். என்னமோ தெரியேல்ல ஸ்ரீலங்கால மட்டும் எனக்கு தமிழ் பேச மாற வெட்கம். தட்ஸ் ரியலி குட். எவ்வ்ரி டமில் பேர்சனும் இப்படி தான் வெட்கப்படணும். அப்போ தான் சிங்கள பாஷாவை கத்துகிட்டு பெரிசா வரலாம். ஐ தின்க் மகாவம்சம் ஷுட் பி ட்ரான்ஸ்லெடெட் இன் டமில். அப்போ தான் டமில் எவ்ளோ கெட்ட ஜாதின்னு தெரியும் . ஐ தினக் ஐ ஆல்வேஸ் தாங் அர்ஜூன அண்ட் துட்டகைமுனு யூ னோ. அண்ட் மகிந்த ஆஸ் வெல்.

Mervin-Silva2918

(எல கிரி முரளி)

லாஸ்ட் பட் நொட் லீஸ்ட், உங்க வீட்ல யாராச்சும் காணாம போனா, இல்ல ரேப் பண்ணுபட்டா அத மறந்திடுங்க. எதிர்காலத்தில காணாம போகாம இருக்க கிரிக்கட் வெளையாடுங்க. ஒரு ஐடியா கொடுக்கறேன். ஆர்மியும் ரேப்பண்ணுப்பட்ட பொண்ணுகளும் நட்பு ரீதியான கிரிக்கட் ஆடலாம். இட்ஸ் இன்டரெஸ்டிங். நான் வேணும்னா வந்து போல் போடறேன். கிரிக்கட் மூலம் எல்லாத்தையும் மறந்து சமாதானமா போகலாம். நீங்க எப்புடி ஸ்ரீலங்கன் கிரிக்கட் டீமுக்கு சப்போர்ட் பண்ணுறீங்களோ அப்பிடியே கவர்மந்தையும் சப்போர்ட் பண்ணுங்க. கொடி பிடியுங்க. பிரசிடெண்ட் எல்லாமே செய்வாரு.

அல்லா போலும் மகிந்தாக்கே.

ரொம்ப தாங்க்ஸ்!
முரளி அய்யே

Muttiah-Muralitharan-Images-11-300x242

----------------------------------------------- யாவும் கற்பனை அல்ல -------------------------------------------------

படங்கள் : இணையம்

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக