Skip to main content

டமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்!

 

images

என் அன்புக்குரிய டமில் மக்களே,

ஐ தின்க், எங்க பிரசிடெண்ட் செய்யுற அபிவிருத்தி இஸ் குட். என்னால ஸ்ரீலங்கன் கிரிக்கட் அணில லீடிங் ஸ்பின்னரா இருக்கமுடியுமின்னா ஏன் இந்த ஜனங்களால முடியாது? என்னால எய்ட் ஹண்ட்ரட் விக்கட்ஸ் எடுக்கமுடியுதுன்னா, வை கான்ட் அதர்ஸ்? தமிழ் சிங்களம் என்று யாரையும் பிரிச்சு பாக்காதீங்க. நான் டீமில இருக்கறப்போ பீஸ் இருந்தது. சமாதானம். ஒருதடவை ஏசியன் லெவன் டீமுல கப்டினாக இருந்தன் தானே. ஸ்ரீலங்கன் டீமுல வைஸ் கப்டினாவும் இருந்தன். கப்டினா ஆக முடியல்ல. பட் அதுக்கு வன் ரீசன் இருக்கி. நான் சிங்களம் மிச்சம் பேசுவேன். ஆல் டமில்ஸ் நிச்சயமா சிங்களம் படிக்கணும். பிரித் ஒதேக்க நூலைப்பிடிச்சுகிட்டு கும்பிடணும். நீங்க சிங்கள படிச்சா சிங்களீஸ் தமிழ் படிக்க தேவையில்ல தானே. எதுக்கு பிறகு அவங்களும் தமிழ் படிச்சு, அப்புறமா தமிழன் சிங்களத்திலயும் சிங்களவன் தமிழிலையும் பேசி குழம்பி போய், வேஸ்ட்டு. அச்சுவலி வி நீட் வன் பாஷா திட்டம்.

 

mervin_silva

(சிராவ மஷான்.. சிராவ)


ஜாப்னாவுல ஆர்ப்பாட்டம் செஞ்சாங்க தானே. அந்த ஜனங்களை யாரோ தப்பா தூண்டியிருக்கிறாங்க.  .. டரெல் ஹயர் நான் எறியறேன் எண்டு சொன்னப்போ, அம்பயர் சொன்னத மதிச்சு அர்ஜூன நடந்தாரு. அதபோல நீங்களும் எங்க பிரசிடெண்ட் சொன்னத கேட்டு நடக்கோணும். திருப்பி பேசபடாது. பசங்க காணாம போனா அத பத்தி யோசிக்காம வேற பசங்க உருவாக்கிறதில வர்க்அவுட் பண்ணனும். அத வுட்டுட்டு ஆர்ப்பாட்டம் பண்ணுறது றோங். கமரூன் வரும்போது கள்ளு குடுக்கிறத வுட்டிட்டு மகஜர் குடுக்கிறீங்க.

8(கியல வடக்னா முரளி)

நம்ம பிரசிடெண்டை நீங்கல்லாரும் பிலீவ் பண்ணனும். அவரு டெவலப்மென்ட் முழுசும் நோர்த்துக்கு தான் செய்யுறார். ஏர்போர்ட், ஹார்பர், ப்ளே கிரவுண்ட், ஹைவே எல்லாமே நோர்த்துக்கு னே!.. நீங்க வேணும்னா அந்தார்டிகாவுக்கு போயி நின்னுகிட்டு நோர்த்து பாருங்க .. அம்பாந்தோட்டை தானே தெரியும்?

mervin(கொடாய் முரளி .. நியம)

நெசத்தில வோர்ல பாதிக்கப்பட்டது நானு தான். பாகிஸ்தானில நாங்க போயக்கிட்டுருக்கோம். திடீர்னு டெரரிஸ்ட் ஷூட் பண்ணினாங்க.  நான் உசக்க பணிஞ்சு போனதில தான் உசிர் தப்பினேன். பட் அதில என்னைவிட சிங்களீஸ் தான் ரொம்ப தீவிரவாதத்தால பாதிக்கப்பட்டது. சமரவீரவோட நெஞ்சு பிரிஞ்சு போச்சு. இது கமரூனுக்கு தெரியாது. டமில்ஸ் ஸ்ரீலங்காவுல நடந்ததை மறந்துட்டு பாகிஸ்தான்ல நமக்கு நடந்த தீவிரவாத தாக்குதல பத்தி பேசணும். வெஸ்டேர்ன் போர்சஸ் இன்வோல்வ்ட் இருக்கணும். பாகிஸ்தானில எங்க பஸ்ல எப்படி அமேரிக்கா குண்டு வச்சான்னு இன்டர்நேஷனல் இன்குவாரி வேணும்.

2223035629_de3b6a8af1
(மாற முரளி, மாற)

என்னைய கம்புர் கலகம் பீபில் கூப்பிட்டு பாராட்டு விளா வச்சாங்க. நான் அங்கிட்டு இங்கிலீஷ் தான் பேசினேன். எனக்கு தமிழ் தெரியாது எண்டதால தான் இங்கிலிஷ் பேசினேன்னுறாங்க. பட் தட்ஸ் ரோங். டமில்நாட்ல நடந்த கொஃபி வித் அனு ஷோவுல நான் தமிழ் தான் பேசினேன். என்னமோ தெரியேல்ல ஸ்ரீலங்கால மட்டும் எனக்கு தமிழ் பேச மாற வெட்கம். தட்ஸ் ரியலி குட். எவ்வ்ரி டமில் பேர்சனும் இப்படி தான் வெட்கப்படணும். அப்போ தான் சிங்கள பாஷாவை கத்துகிட்டு பெரிசா வரலாம். ஐ தின்க் மகாவம்சம் ஷுட் பி ட்ரான்ஸ்லெடெட் இன் டமில். அப்போ தான் டமில் எவ்ளோ கெட்ட ஜாதின்னு தெரியும் . ஐ தினக் ஐ ஆல்வேஸ் தாங் அர்ஜூன அண்ட் துட்டகைமுனு யூ னோ. அண்ட் மகிந்த ஆஸ் வெல்.

Mervin-Silva2918

(எல கிரி முரளி)

லாஸ்ட் பட் நொட் லீஸ்ட், உங்க வீட்ல யாராச்சும் காணாம போனா, இல்ல ரேப் பண்ணுபட்டா அத மறந்திடுங்க. எதிர்காலத்தில காணாம போகாம இருக்க கிரிக்கட் வெளையாடுங்க. ஒரு ஐடியா கொடுக்கறேன். ஆர்மியும் ரேப்பண்ணுப்பட்ட பொண்ணுகளும் நட்பு ரீதியான கிரிக்கட் ஆடலாம். இட்ஸ் இன்டரெஸ்டிங். நான் வேணும்னா வந்து போல் போடறேன். கிரிக்கட் மூலம் எல்லாத்தையும் மறந்து சமாதானமா போகலாம். நீங்க எப்புடி ஸ்ரீலங்கன் கிரிக்கட் டீமுக்கு சப்போர்ட் பண்ணுறீங்களோ அப்பிடியே கவர்மந்தையும் சப்போர்ட் பண்ணுங்க. கொடி பிடியுங்க. பிரசிடெண்ட் எல்லாமே செய்வாரு.

அல்லா போலும் மகிந்தாக்கே.

ரொம்ப தாங்க்ஸ்!
முரளி அய்யே

Muttiah-Muralitharan-Images-11-300x242

----------------------------------------------- யாவும் கற்பனை அல்ல -------------------------------------------------

படங்கள் : இணையம்

Comments

  1. Thakshayani Sellavel11/20/2013 10:01 pm

    "யாவும் கற்பனை அல்ல" - Thumbs up

    ReplyDelete
  2. சச்சின்--காங்ரெஸ் குறித்த பயமும் இத்தகையதே..

    ReplyDelete
    Replies
    1. Yes I agree... Hope Sachin is a smarter cricketer.

      Delete
  3. ஜேகே.உங்களால் தான் இவனை இப்படி நாறடிக்க முடியும்,நன்றி ஜேகே. இவனை எல்லாம் நார் நாராக கிழித்து ஏறிய வேண்டும்.எம்மவர்களால் (புலம் பெயர்ந்தவர்கள்) இனிமேல் செய்யக்கூடியது ஒன்றுதான். தமது பிள்ளைகளுக்கு கிரிக்கெட் பயிற்றுவித்து அணிகளில் இணைத்து இவனுடைய சாதனைகளை தூள் தூளாக்க வேண்டும்.-Vimal

    ReplyDelete
  4. //கம்புர் கலகம் பீபில் ROFL

    ReplyDelete
  5. Replies
    1. //ஆனால் JK-அண்ணா நீங்கள் ஒரு விடயத்தை குறிப்பிட மறந்துவிட்டீர்கள். அதாவது தான் ஸ்ரீலங்கன் என்டு சொல்லுறவர் எதுக்கு ஒரு இந்தியப்பெண்ணை மணந்தார்?//
      Bass I don't think we can question his choice of life partners. Let's leave his personal life away in the discussion (I madesure I don't talk about it). Can't judge a person's patriotism based on whom he married with (e.g Anton, Nadeshan, Bob Carr)

      Delete
  6. -Solli velai illai.
    (In kandy they use something like ??maara "pora",,have you heard something smilar to that that..I may be wrong)
    gopalan.

    ReplyDelete
    Replies
    1. I think I did, they do use those words, may be I was wrong. Anyway this post is a satire and I may have ignored the correctness of those slang. Saary baas.

      Delete
  7. என்ன ஒரு பற்று முரளிக்கு இனம் மீது :))

    ReplyDelete
  8. Nega ellam anga irunthukittu iwlo katha kathakkiringa aarpattam panringa. inga nadakkura mulu vishayam ungalukku theriya.Murali sonnatha thirumba kelunga. Avar sonnathu "Na solrathu na kanda vishayangalathan. wera akkal da karuththu avunga avunga vaalntha soolalukku eththa mathiri irukkum. Atha ennala pila nu solla mudiyathu."

    Murali thamizh kathaikkala nu perusa poduringale. ungada thamil naattula eththana per thani thamil la kathakkiringa? ungada ooroda parkurappo engada naadu ewalawo parawala....

    ReplyDelete
    Replies
    1. //Nega ellam anga irunthukittu iwlo katha kathakkiringa aarpattam panringa.//
      The protests and talks happened in Jaffna as well.

      Delete
  9. வாய் கிழிய கொமென்ட் போடுறவன் எல்லாம் அவன்ட இடத்திலை இருந்தால் என்ன சொல்லி இருப்பினும் எண்டதையும் யோசித்து பார்க்க வேணும் .உண்மையை சொன்னா என்ன்ன நடக்கும் எண்டு எனக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும் ,முரளிக்கும் தெரியும்

    ReplyDelete
    Replies
    1. அவர் உண்மையை சொல்லவேண்டுமென்பதில்லை ... பொய்யை சொல்லாம விடலாமே நண்பரே.

      Delete
  10. He wants to join politics.. that's y he talk like a complete idiot.... He remembered me Vadivelu :P ( He also ruined his career talked rubbiish politics)

    ReplyDelete
    Replies
    1. I personally don't believe he wanna join politics. He just thinks he awes a much to SL and majority sinhalese. May be due to the fact that they stood up for him during his difficult times. I appreciate that. But he shouldn't do that in the expense of Tamils's problems. And definitely he can't lie or mislead the people.

      Delete
  11. "என்னைய கம்புர் கலகம் பீபில் கூப்பிட்டு பாராட்டு விளா வச்சாங்க. நான் அங்கிட்டு இங்கிலீஷ் தான் பேசினேன். எனக்கு தமிழ் தெரியாது எண்டதால தான் இங்கிலிஷ் பேசினேன்னுறாங்க."
    வேறு யாரும் சொல்லவில்லை. உங்க மம்மிதான் அப்படி அந்த விழாவிலேயே சொன்னாங்க முரளி.

    இந்தப் பாராட்டுவிழா வைத்துப் பொற்கிளி கொடுத்த அதே கம்பன் கழகம்தான் 2004 சுனாமியின் பின்னர் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஏதாவது உதவிகள் அனுப்ப எண்ணுகிறீர்களா என்று அணுகிய போது "நாங்கள் இலக்கிய மற்றும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக மட்டும் இருக்கும் ஒரு அமைப்பு" என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்கள். அவர்கள்தான் பின்னர் முரளிதரன் 'இலக்கிய மற்றும் தமிழ் மொழி' வளர்ச்சிக்கு ஆற்றிய அரும்பணியைக் கண்டு அகமகிழ்ந்து பாராட்டுவிழா வைத்தார்கள்.

    ReplyDelete
  12. //"நாங்கள் இலக்கிய மற்றும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக மட்டும் இருக்கும் ஒரு அமைப்பு"//
    I haven't heard about this answer before. Its a stupid reply. They should have atleast helped in individual capacity as everybody else during the time. (They might have done it, I donno)

    ReplyDelete
  13. ஜே கே,

    உங்களுக்கு நல்லதொரு பதிப்பாளர் ஏன் கிடைக்கவில்லை? நீங்கள் ஏதாவது Terms and conditions வைத்துள்ளீர்களா, நேரமிருந்தால் எனக்கு emailல் தெரியபடுத்தவும் அல்லது படலையில் எழுதவும். எனக்கு பதிப்பாளர் யாரையும் இப்போது தெரியாது, இருந்தாலும் முயன்று பார்கிறேன். இந்த self-publishing optionனை பற்றி யோசித்தீர்களா?

    முரளிதரனை பற்றி எழுதி நேரத்தை வீணாக்காதீர்கள். இன்று உலகத்தில் பல பேர்கள் நிர்பந்ததினாலும்/சுயலாபத்திற்காகவும் பல விஷயங்கள் பேசி/செய்து வருகிறார்கள், அதையெல்லாம் பற்றி எழுத ஆரம்பித்தால் முடிவேயில்லை. இன்று பல தெற்காசிய மொழிகளின் நிலை மோசமாக உள்ளது. தமிழ்நாட்டில் தமிழை ஒரு பாடமாக படிக்க பல பேருக்கு இஷ்டமில்லை, உத்தரபிரதேசதில் convents கடந்த பத்து ஆண்டுகளில் பல்கி பெருகிவிட்டதாக Times of Indiaவில் படித்தேன். இந்நிலையில் நம் போன்ற புலம் பெயர்ந்த தமிழர்கள் எவ்வாறு நம் குழந்தைகளுக்கு தமிழை நுட்பமாக சொல்லி கொடுப்பது?

    நான் blog எழுத ஆரம்பித்தது May 2009ன் தாக்கத்தால், இப்போது சற்று இடைவேளை விட்டுருப்பது என் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லி கொடுக்க. தமிழ் மொழியை காக்க என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான திட்டமெதுவும் எனக்கு தெரியாது. இன்னொரு விஷயம், நான் தமிழ்நாட்டு தமிழன் ஆனால் வீட்டில் பரம்பரையாக பேசுவது தமிழின் சகோதரி மொழி.

    ReplyDelete
    Replies
    1. 1) மோகன் ... முதல் பிரச்சனை காசு கேட்கிறார்கள். என்னிடம் காசு இல்லை என்றில்லை (அவர்கள் கேட்கும் பணத்துக்கு மேலாக திருமணத்தில் போது புத்தகங்களை கொடுக்க செலவழித்தேன்). நானே காசு கொடுத்து நானே புத்தகம் அடிப்பதில் ஒரு நெருடல் இருக்கிறது.

      2) பதிப்பாளர்கள் ஒரு சிலர் முன்வந்தார்கள். பதிப்பது மட்டும் தான். விநியோகம், தொடர்புகள் அவர்களிடம் இல்லை. நானே செய்யவேண்டும் என்றார்கள். எனக்கு அந்த ஏரியா பழக்கம் இல்லை.

      3) இந்தியா, இலங்கை, இணையம் இந்த மூன்று இடங்களிலும் புத்தகத்தை வாங்க கூடியதாக இருக்கவேண்டும். இது ஒரு இயல்பான எதிர்பார்ப்பு தானே? புத்தகத்தை பதிப்பித்துவிட்டு வீட்டுக்குள் முடக்கி வைத்து என்ன பயன்?

      4) என்னுடைய கோளாறு. நான் பதிப்பாளர்களிடம் நாடிப்போவதில்லை. இரு நண்பர்களூடாக அணுகினேன். பதில் இல்லை. ஏன் என்று தெரியவில்லை.

      Delete
  14. Ennamo Pooda Mathava.

    Siva

    ReplyDelete
  15. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : நேசன் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தனிமரம்

    வலைச்சர தள இணைப்பு : !நெஞ்சில் உலா!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட