Skip to main content

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் பற்றி டிலக்சனா


இது கொல்லைப்புறத்துக் காதலிகள் வாசித்தபிறகு சிலநாட்கள்/கிழமை சென்றபின் என் மனதிலே உள்ள பதிவுகளை உங்களுக்கு கூறுவதற்காக எழுதுகிறேன். தமிழில் டைப் பண்ணே நீண்ட நேரம் எடுக்கும் என்பதற்காக என் கைப்பட எழுதுறன்! 
- நிறைய நினைவுகளையும் கடந்த கால இரை  மீட்டல்களையும் உங்கட கதைகளை வாசிக்கும்போது உண்டரக்கூடியதாக இருந்தது! நன்றி. “இலங்கைத் தமிழில்” ஒரு நல்ல எழுத்தாளனை அவரது படைப்புகளை வாசிக்க எதேச்சையாக கிடைத்த சந்தர்ப்பம். யாழ்ப்பாணத் தமிழ் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. நான் வவுனியாவை பிறப்பிடமாகக் கொண்டவள்! வவுனியா மக்களின் தமிழும் தனித்துவமானதுதான்.  தமிழ் என்றால் யாழ் மட்டுமே என்று குறுக்குவதில் விருப்பமில்லை.
- எக்ஸாமுக்கு போறதுக்கு முதல் சாமி கும்பிடுறது. எல்லா சாமியையும் ஒரேயளவு கும்பிடுறது. இதே பழக்கம் எனக்கும் இருக்கு! வாசிக்கேக்க பஸ் முழுவதும் சிரிச்சுக்கொண்டே வந்தன். 
- குட்டியன் கதை செம. “Touching”. என்ன எண்டு சொல்லத் தெரியேல்ல.
- எல்லோரும் கூடுதலாக உங்கட எழுத்துக்களை பாராட்டியிருப்பார்கள். So மேலும் பாராட்டுவதைவிட இன்னும் நீங்கள் சில Topics பற்றி எழுதவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
1) நீங்கள் சிங்கப்பூரில் இருந்ததெண்டபடியால், இங்குள்ள மக்கள், அவர்களின் நினைவுகள் (This is just to see how you captured the moments and your opinion compared to mine, ha ha)
2) வன்னி வவுனியா மக்களைப்பற்றியும் எழுதவேண்டும். பரந்துபட்டு எழுதவேண்டும். உங்களுக்கு அனுபவம் இருக்கலாம். நீங்கள் ஆராய்ந்து எழுதுபவர் என்றும் தெரியும்.
3) உங்கள் எல்லா male, female characters உம் “குமரன்”, “ஆங்கில இலக்கியம்” படித்தவனாக இருக்கவேண்டும் என “fix” பண்ணாமல் எல்லாவிதமான மனிதர்களையும் சூழலையும் பற்றி எழுதுங்கள்.
எதுவும் தவறெனின் மன்னிக்கவும். இப்பத்தான் உங்கட blog வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.
--- டிலக்சனா.

12

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.