Skip to main content

மஹாகவியோடு ஒரு மாலைப்பொழுது - காணொலிப் பகிர்வுகள்


வரவேற்புரையும் கவிதை வாசிப்பும்

"சங்ககாலத்துக்குப் பின்னர் இலக்கியங்கள் அதிகாரத்தின் வசம் சிக்கிவிட்டன, அல்லது இலக்கியவாதிகள் அதிகாரபீடத்தைத் தாமே கட்டியமைத்துக்கொண்டனர்"




சேரன் உருத்திரமூர்த்தி உரை

"மஹாகவியைத் தீவிரமாக, கிளர்ச்சியுடன் ஆழமாக அணுக வேண்டுமானால் அவருடைய பரவலாக ஜனவசியமாக அறியப்பட்ட கவிதைகளைத் தாண்டி “சாதாரண மனிதனின் சரித்திரம்” போன்ற காவியங்களின் உள்ளே போய்த் தேடவேண்டும்.”


கலாதேவி பாலசண்முகன் உரை

“மஹாகவிகள் காலத்திரையின் துளையூடாக முன்னும் பின்னும் பார்க்க வல்லவர்கள்”


கேதா உரை

"உயர்வானவர்கள் என்று கருதப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்பட்டவர்களும் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் வளங்களைப் பகிர்ந்துகொண்டு வாழலாம் என்று புதிய இளைஞர்கள் நினைக்கின்றபோது ஏற்கனவே உயர்மட்டத்தில் அமர்ந்துகொண்டு வசதிகளையும் வாய்ப்புகளையும் அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் குறுக்கே வந்து எப்போதும் அதைத் தடுக்கிறார்கள் என்கிறது கண்மணியாள் காதை "


அ. முத்துக்கிருஷ்ணன் உரை

"பெருத்த முன்னெடுப்புடன் இடம்பெற்றுவரும் உலகலாவிய திணை அழிப்புகளை, அதற்குப்பின்னரான அதிகாரக் கட்டமைப்புகளை இலக்கியங்கள் வெளிப்படுத்தவேண்டும். தமிழகத்தின் நெய்தல்திணை என்பது பெரும் கம்பனிகளால் அழிக்கப்பட்டுவிட்டது. நம் கண்முன்னே இடம்பெறும் விடயங்களை உள்ளது உள்ளதுபோலப் பேசுவதற்குத் தயங்குகிறோம். பழிவாங்கப்படுவோமோ என்ற பயத்தில் பேசாமல் கடந்துவிடுகிறோம்."



நன்றி


Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.