Skip to main content

மஹாகவியோடு ஒரு மாலைப்பொழுது - காணொலிப் பகிர்வுகள்


வரவேற்புரையும் கவிதை வாசிப்பும்

"சங்ககாலத்துக்குப் பின்னர் இலக்கியங்கள் அதிகாரத்தின் வசம் சிக்கிவிட்டன, அல்லது இலக்கியவாதிகள் அதிகாரபீடத்தைத் தாமே கட்டியமைத்துக்கொண்டனர்"




சேரன் உருத்திரமூர்த்தி உரை

"மஹாகவியைத் தீவிரமாக, கிளர்ச்சியுடன் ஆழமாக அணுக வேண்டுமானால் அவருடைய பரவலாக ஜனவசியமாக அறியப்பட்ட கவிதைகளைத் தாண்டி “சாதாரண மனிதனின் சரித்திரம்” போன்ற காவியங்களின் உள்ளே போய்த் தேடவேண்டும்.”


கலாதேவி பாலசண்முகன் உரை

“மஹாகவிகள் காலத்திரையின் துளையூடாக முன்னும் பின்னும் பார்க்க வல்லவர்கள்”


கேதா உரை

"உயர்வானவர்கள் என்று கருதப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்பட்டவர்களும் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் வளங்களைப் பகிர்ந்துகொண்டு வாழலாம் என்று புதிய இளைஞர்கள் நினைக்கின்றபோது ஏற்கனவே உயர்மட்டத்தில் அமர்ந்துகொண்டு வசதிகளையும் வாய்ப்புகளையும் அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் குறுக்கே வந்து எப்போதும் அதைத் தடுக்கிறார்கள் என்கிறது கண்மணியாள் காதை "


அ. முத்துக்கிருஷ்ணன் உரை

"பெருத்த முன்னெடுப்புடன் இடம்பெற்றுவரும் உலகலாவிய திணை அழிப்புகளை, அதற்குப்பின்னரான அதிகாரக் கட்டமைப்புகளை இலக்கியங்கள் வெளிப்படுத்தவேண்டும். தமிழகத்தின் நெய்தல்திணை என்பது பெரும் கம்பனிகளால் அழிக்கப்பட்டுவிட்டது. நம் கண்முன்னே இடம்பெறும் விடயங்களை உள்ளது உள்ளதுபோலப் பேசுவதற்குத் தயங்குகிறோம். பழிவாங்கப்படுவோமோ என்ற பயத்தில் பேசாமல் கடந்துவிடுகிறோம்."



நன்றி


Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...