Skip to main content

'சமாதானத்தின் கதை' பற்றி ஹஸனாஹ் கவிதா




ஜே.கே இனது கொல்லைப்புறத்துக் காதலிகளை அனுபவித்து, இரசித்ததைப் போன்று ஆதிரை வெளியீடாக வந்துள்ள சமாதானத்தின் கதையை இரசிக்க முடியவில்லை. கொல்லைப்புறத்துக் காதலிகளை ஒரே மூச்சில் வாசித்து முடித்ததைப் போன்று சமாதானத்தின் கதையை வாசித்து முடிக்க முடியவில்லை.
சமாதானத்தின் கதை ஒவ்வொன்றும் அத்தனை கனதி. பல ஆழமான விடயங்கள் விரவிக் கிடக்கின்றன.

கனகரத்தினம் மாஸ்டரை வாசித்தபின் நான்கு நாட்களாக அதனையே அசைபோட்டபடி இருந்தேன். மீண்டும் அதனையே மீள்வாசிப்புச் செய்தேன். அதற்கப்புறம் அதனை சிலாகித்தபடி இரு நாட்கள். இதற்கிடையே அக்கதையைப் பற்றிய கதையாடலை சில தோழமைகளிடமும் பகிர்ந்திருந்தேன். பின்னர் மீண்டும் அக்கதையை வாசித்தேன்.

பெண்ணிலைவாதத்தின் அடிநாதம் குறுக்குவெட்டுத்தன்மை சார்பான கூருணர்வு. பாரபட்சங்களை ஏற்படுத்தும் அந்த குறுக்கு வெட்டுப்பகுப்பாய்வினை அங்குலம் அங்குலமாக, அத்தனை சுளுவாக, அத்தனை ஆழமாக ஒற்றைக் கதையில் கொண்டுவந்திருந்தமை பெரிதும் பாராட்டப்பட வேண்டிய விடயம்.

வைட் சுப்ரிமஸி, ஆணாதிக்கம், சாதியம், நாடற்றவர், தேசியம், எல்லை, செவ்விந்தியர், கறுப்பு ஆபிரிக்கன், பிரவுன் பீப்பிள், சப்பைமூக்கு ஆசியன், நிறவாதம், இனவாதம், வர்க்கம், வயது, பால், பால்நிலை, பாலியல் நாட்டம், திருமணம், மதம், மொழி, கலாசாரம்- அத்தனையையும் கலந்து கட்டி ஒற்றைக் கதையில் அலுப்படிக்காமல், சுவாரஸ்யமாக வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் ஜே.கே.

இப்படியானதொரு கதைசொல்லிக்கு பெரும் நன்றி.

ஹஸனாஹ் கவிதா
18.03.2020

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக