Skip to main content

'சமாதானத்தின் கதை' பற்றி ஹஸனாஹ் கவிதா




ஜே.கே இனது கொல்லைப்புறத்துக் காதலிகளை அனுபவித்து, இரசித்ததைப் போன்று ஆதிரை வெளியீடாக வந்துள்ள சமாதானத்தின் கதையை இரசிக்க முடியவில்லை. கொல்லைப்புறத்துக் காதலிகளை ஒரே மூச்சில் வாசித்து முடித்ததைப் போன்று சமாதானத்தின் கதையை வாசித்து முடிக்க முடியவில்லை.
சமாதானத்தின் கதை ஒவ்வொன்றும் அத்தனை கனதி. பல ஆழமான விடயங்கள் விரவிக் கிடக்கின்றன.

கனகரத்தினம் மாஸ்டரை வாசித்தபின் நான்கு நாட்களாக அதனையே அசைபோட்டபடி இருந்தேன். மீண்டும் அதனையே மீள்வாசிப்புச் செய்தேன். அதற்கப்புறம் அதனை சிலாகித்தபடி இரு நாட்கள். இதற்கிடையே அக்கதையைப் பற்றிய கதையாடலை சில தோழமைகளிடமும் பகிர்ந்திருந்தேன். பின்னர் மீண்டும் அக்கதையை வாசித்தேன்.

பெண்ணிலைவாதத்தின் அடிநாதம் குறுக்குவெட்டுத்தன்மை சார்பான கூருணர்வு. பாரபட்சங்களை ஏற்படுத்தும் அந்த குறுக்கு வெட்டுப்பகுப்பாய்வினை அங்குலம் அங்குலமாக, அத்தனை சுளுவாக, அத்தனை ஆழமாக ஒற்றைக் கதையில் கொண்டுவந்திருந்தமை பெரிதும் பாராட்டப்பட வேண்டிய விடயம்.

வைட் சுப்ரிமஸி, ஆணாதிக்கம், சாதியம், நாடற்றவர், தேசியம், எல்லை, செவ்விந்தியர், கறுப்பு ஆபிரிக்கன், பிரவுன் பீப்பிள், சப்பைமூக்கு ஆசியன், நிறவாதம், இனவாதம், வர்க்கம், வயது, பால், பால்நிலை, பாலியல் நாட்டம், திருமணம், மதம், மொழி, கலாசாரம்- அத்தனையையும் கலந்து கட்டி ஒற்றைக் கதையில் அலுப்படிக்காமல், சுவாரஸ்யமாக வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் ஜே.கே.

இப்படியானதொரு கதைசொல்லிக்கு பெரும் நன்றி.

ஹஸனாஹ் கவிதா
18.03.2020

Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.