Skip to main content

தேடித்தேடி தேய்ந்தேனே!!


சிறுவயதில் உங்களுக்கு அந்த பெண்ணை பிடித்திருக்கும்! ஒரு பதினைந்து வயது என்று வையுங்கள். அப்போது அவளுக்கு தெரியாமலேயே அவளை நோட்டம் விட்டிருப்பீர்கள். கணக்கே எடுத்திருக்கமாட்டாள்.  அவள் போகும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து, அத்தனை இளையராஜா டூயட்களையும் அவளோடு வயற்காட்டிலோ இல்லை இண்டோர் செட்டிலோ பாடிப்பார்த்து இருப்பீர்கள். ஒரு மழைக்கால இரவில் “புதுவெள்ளை மழை” பாட்டை ரேடியோவில் போட்டுவிட்டு அவளின் கண்கள் இரண்டையும் உங்கள் கைகளால் பொத்திக்கொண்டு கூட்டிச்சென்று காஷ்மீர் பனிமலைகள் காட்டி இருப்பீர்கள். அவளும் சொக்கிப்போய் சுத்தி சுத்தி பார்க்க, கண்ணாடி சில்லுகளாய் இசை சிதறி கிறங்கடிக்கும். ஆனால் நிஜத்தில் அவள் நேரில் வந்தால் அப்போது தான் பனைமரத்தில் எத்தனை நொங்குகள் இருக்கின்றன என்று எண்ணியிருப்பீர்கள். சரி, காலம் ஓடிவிட்டது, இப்போது வளர்ந்து பெரியவன் ஆகி விட்டீர்கள். ஒருநாள் திடீரென்று அவள் எதிரே வந்து நிற்கிறாள். ஒரு உறவுக்கார திருமணம் என்று வைய்யுங்களேன்! நீங்கள் நினைத்த கலரிலேயே சேலை, நீங்கள் நினைத்ததுபோலவே சிரிக்கிறாள். உங்களை ஞாபகம் வைத்து பேசுகிறாள்.  ரோஜா மதுபாலா போல “சிறு பறவை நீயானால் உன் வானம் நானே” என்று பாடுகிறாள். எப்படி இருக்கும் உங்களுக்கு? 


அப்படி இருந்தது இந்த பாடல்களை நான் தேடிக்கண்டுபிடிக்கும் போது.  ஆம்  இந்தவாரம் “உ.. ஊ.. ம ப த ப மா” வில் அதிகம் கேட்கப்படாத, கேட்கக்கிடைக்காத ஆனால் கேட்கும் போது “ச்சே இவ்வளவு காலமும் மிஸ் பண்ணிட்டோமே” என்று எண்ணத்தூண்டும் சில பாடல்களை பகிரப்போகிறேன். இப்படியான பாடல்கள் ஆளாளுக்கு மாறுபடும், இளமைக்கால காதலிகள் போல. ஆனால் பலர் ஒருவரை காதலிப்பது ஒன்றும் புதிதில்லையே. நீங்களும் இந்த பாடல்களை காதலித்து இருப்பீர்கள். நிச்சயம்! சரி பாடல்களுக்கு போவோம்.


இந்த பாடல், ஆண்டுக்கணக்கில் நான் தேடிய பாடல். அப்போது எல்லாம் tape recorder தான். இந்த பாடலை நான் தேடாத இடம் இல்லை. எந்த கடையிலும் இல்லை. சில வருடங்களுக்கு முன்னர் தான் யாரோ ஒரு புண்ணியவான் இன்டர்நெட்டில் ஏத்தி இருந்தான். மெய்யாலுமே அவள் வந்து நின்ற மாதிரி இருந்தது. இப்போது youtube இலும் வந்து விட்டது. நல்ல பாடல் எப்போதும் கேட்கப்படுகிறது தான். அகத்தியன் இசை என்று நினைக்கிறேன். உன்னி, மனோ, சித்ரா, சுஜாதா என்று ஒரு கூட்டமே பாடியிருப்பார்கள். A terrific song!



வெள்ளி கொலுசு ஜதி போடுதே!

இதை youtube இல் ஏத்தியவன் உண்மையிலேயே ஒரு பக்கா ரசிகனாக இருக்கவேண்டும். “பொன் மோதிரம்” என்ற சொல் வரும் இடத்தில் ஒரு மோதிரத்தின் படமே போட்டிருப்பான்!


அடுத்த பாடல், தேவாவின் இசையில் வந்த கோல்மால் திரைப்பட பாடல். ஓரளவுக்கு பிரபலமான பாடல் தான். ஆனால் சிலவருடங்களுக்கு முன்னர் தேடும்போது கிடைக்கவில்லை. இன்னமும் யூடுயூபில் கூட இல்லை. இப்போது சேர்த்துவிட்டேன். சரணத்தில் எல்லாம் ஹரிகரனின் குரல் குழையும் பாருங்கள். பிடித்தால் நிச்சயம் எழுதுங்கள். இசையை கேட்பதும் அதைப்பற்றி பேசுவதும் எப்போதும் சுகமே.


படங்கள் : சயந்தன்



Again தேவா. “அன்பே டயானா” திரைப்படம். தொண்ணூறுகளில் தேவா இருந்த போர்மில் துக்கடா படங்களுக்கெல்லாம் நல்ல இசை வழங்கிக்கொண்டு இருந்த நேரம். இந்த பாடலை எல்லாம் திரையில் பார்த்தால் சகிக்கவேமுடியாது. ஆனால் பாடலின் இசை வேறு எந்த நல்ல பாடலுக்கும் சற்றேனும் குறைந்ததில்லை. “நேற்று வரையிலும் வெறும் வண்ணமாக வாழ்ந்தேன், இன்று காதலால் நான் வானவில்லாய் ஆனேன்” என்ற வரியில் ஹரிகரன் சங்கதி சும்மா சந்திலே சிந்து பாடும். என்ன ஒரு பாடல்! இரவோடு இரவாய் யூடியுபில் எத்திவிட்டேன். கேளுங்கள், கேட்டுவிட்டுச்சொல்லுங்கள். 


படங்கள் : சயந்தன்


அடுத்த பாடல், yet again தேவா. இன்னொரு அல்வா படம். மாப்பிள்ளை கவுண்டர் என்று நினைக்கிறேன். ஆனால் தேவா எந்த பெண்ணைக கண்டாலும் காதலித்துக்கொண்டிருந்த பருவம் அது. கொஞ்சம் “ஆலோலங்கிளி தோப்பிலே” என்ற ராஜா பாடலின் சாயல் சரணத்தில் இருந்தாலும், தேவாவுக்கு இது ஒன்றும் புதுசு இல்லையே!




விஸ்வதுளசி.  சிலவருடங்களுக்கும் முன்னர் வந்த படம். இரண்டு தலைவர்கள் செந்தமிழ்பாட்டுக்குப்பின்னர் இணைந்தது என்று நினைக்கிறேன்.  இயக்குனரை கட்டி வைத்து அடிக்கவேண்டும். அழகான மெட்டுகள் உள்ள பாடல்களை எல்லாம் சின்ன சின்னதாக வெட்டி குதறியிருப்பார். ஒரு பெண் இயக்குனர் என்று நினைக்கிறேன். 

இந்த பாடலின் இறுதியில் வரும் வீணையை பாருங்கள். எப்போதாவது கேட்ட ஞாபகம் இருக்கிறதா? அதே தான். “பூ முடித்து போட்டு வைத்த வட்ட நிலா, புன்னகையில் பாட்டெழுதும் வண்ணபுறா” வில் வரும் சில arrangements தான். தலைவர் பழைய போர்மில் இருக்கிறார் என்பதற்கு அந்த இடமே நல்ல சாட்சி!

எங்கு பிறந்தது?


இந்த பாடல்களையெல்லாம் கேட்கும்போது இந்த ஒரு வரி அடிக்கடி ஞாபகம் வருகிறது.
“கேட்காத கீதம், அதுதானே அழகு கலைஞனின் மனம் அறியும்” 

என்று ஒரு இளையராஜா பாடல் அண்மையில் வந்தது.  சரணத்தில் வரும் வரிகள் அவை. அந்த பாடல் அண்மையில் வந்த ராஜாவின் பாடல்களுக்குள் ஒரு milestone என்று சொல்லலாம். ராஜா ரசிகர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். கண்டுபிடியுங்கள்! கருத்திடுங்கள். கலந்துரையாடுவோம்! 


என்ன? இந்தவார ♫♫ உ.. ஊ.. ம ப த ப மா ♪♪ பிடித்திருக்கிறதா? பிடித்திருந்தால் வாக்களிக்க மறக்காதீர்கள். மீண்டும் அடுத்த செவ்வாயில் வேறு ஒரு மியூசிக்கல் collection உடன் சந்திப்போம்.

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே!

Comments

  1. மச்சி அந்த "வெள்ளிக்கொலுசு" பாடல் 1995 இல் வெளிவந்த " பார்வை" படத்தில் இடம்பெற்றது, அன்றைய காலத்தில் நானும் E.சஞ்சீவனும் பார்த்தியும் இந்தப்பாட்டை ஷண் ரெக்கோர்டிங் செண்டரில போய் ரெக்கோர்ட் பண்ணி டேப் தேய தேய கேட்ட பாடல், அண்மையில் நானும் பிriயாவும் கொழும்பில் இருந்து வந்துகொண்டிருந்த போது மீண்டும் மீண்டும்கேட்டுக்கொண்டே வந்த பாடல்.. அருமையா இசை,மிருதங்கம் அட்சர சுத்தம இருக்கும் பாடலுக்கேற்றால் போல..

    ReplyDelete
  2. " திருமலை நாயகனே" பாட்டின் சரணம் ராஜாவின் ஈரமான ரோஜாவே படத்தில் வரும் " அதோ மேக ஊர்வலம் " பாட்டின் சரணமும் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கு கேட்டு பாரு, http://www.youtube.com/watch?v=yHAC43c6Prk

    ReplyDelete
  3. அனைத்தும் அருமையான நெஞ்சை விட்டகலாத பாடல்கள்..

    ReplyDelete
  4. நன்றி குஞ்சு ... திருமலை நாயகனே இல் இந்த பாடலின் பாதிப்பும் இருக்கிறது போல ... தேவா தானே ... ஆனாலும் நல்ல பாடல்... வெள்ளி கொலுசு மாதிரி பாடல்கள் ஏன் தான் பிரபலமடையவில்லையோ தெரியாது ...இந்த பதிவு போல !! இசை பற்றிய பதிவுக்கும் அதிகம் வரவேற்பில்லை .. ஏன் என்று தெரியவில்லை ;) ஹ ஹா ஹா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட