Skip to main content

சாலையோர தேநீர் கடை

சாலையோர தேநீர் கடை
கோடை மழை நாசி நெடி
தாவாரத்தில் இரண்டு கதிரை
நானிருக்க இழுத்துப்போட்டான்
ஏ ஆர் ரகுமான் பிடிக்கும் என்றான். 
samantha-and-nani-upcoming-tollywood-movie-yeto-vellipoyindi-manasuராஜா என்றான் சுஜாதா என்றான்.
ரசல் பீட்டர் டோம் ஹான்ஸ் என்றான்
ராஜபக்ஸ ஒரு ஷிட் என்றான்.
ராஸ்பெரி கொஃபி இரண்டு
நாக்கு புரள ஓர்டர் செய்தான்.
“70 பர்சன்ட் பொருத்தமாம்”
"இந்த பேரண்ட்ஸ் ஆர் சோ சில்லி” 

என்று சொல்லி சிரித்தான்.
“நெடுஞ்சாலையிலே நனைய
ஒருவர் சம்மதமும் வேண்டாம்”  - என்று
மழையை பார்த்து கவிதை சொன்னான்.
“Enough is enough. “
“வா போய் நனைவோம்” என்றேன்.
“சட்டை நனைஞ்சு சளி பிடிக்கும், லேட்டர்” என்றான்
“போடா புளுகு மூட்டை”

Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.