Skip to main content

குப்பை

நீயும் குப்பை, நானும் குப்பை
சேர்ந்து பொறுக்கினோம் அதுவும் குப்பை
நிலவின் ஒளியில் நீயும் நெளித்து
நெடித்து வளைத்து நிற்க கண்டு
dhritarashtra_and_gandhari_by_vachalenxeon-d5pqsefரெண்டும் ஒண்டு எண்டு நினைச்சு
மதியை இழந்து தளர்ந்த நேரம்
காமம் கடுகென உடலது பரவிட
கலப்பை உழுது கண்ட கமத்தில
விளைஞ்சது எதுவோ ஆறடி பயறோ?
பூனைக்கு ஏதும் பிறந்திடும் புலியோ?
அதுவும் வளர்ந்து ஆனது குப்பை.
குப்பைக்குள் குண்டு மணிவரு மென்றுநம்பி
இது தான் கடைசின்னு பலமுறை கெஞ்சி
இனியும் ஏலாது எண்டு காந்தாரியும் சொல்லி
ஓய்ஞ்சு ஒடிஞ்சு நிமிர்ந்து பார்த்தா
கண்ணுக்கு முன்னாலே நிக்குது நூறு
நூறும் சேர்ந்து நாறும் வாயால்
நம்மைப்பார்த்து உறைக்கச்சொன்னது
நீரும் குப்பை, நாமும் குப்பை
நாம சேர்ந்தா நாடே குப்பை!

Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.