நீயும் குப்பை, நானும் குப்பை
சேர்ந்து பொறுக்கினோம் அதுவும் குப்பை
நிலவின் ஒளியில் நீயும் நெளித்து
நெடித்து வளைத்து நிற்க கண்டு
ரெண்டும் ஒண்டு எண்டு நினைச்சு
மதியை இழந்து தளர்ந்த நேரம்
காமம் கடுகென உடலது பரவிட
கலப்பை உழுது கண்ட கமத்தில
விளைஞ்சது எதுவோ ஆறடி பயறோ?
பூனைக்கு ஏதும் பிறந்திடும் புலியோ?
அதுவும் வளர்ந்து ஆனது குப்பை.
குப்பைக்குள் குண்டு மணிவரு மென்றுநம்பி
இது தான் கடைசின்னு பலமுறை கெஞ்சி
இனியும் ஏலாது எண்டு காந்தாரியும் சொல்லி
ஓய்ஞ்சு ஒடிஞ்சு நிமிர்ந்து பார்த்தா
கண்ணுக்கு முன்னாலே நிக்குது நூறு
நூறும் சேர்ந்து நாறும் வாயால்
நம்மைப்பார்த்து உறைக்கச்சொன்னது
நீரும் குப்பை, நாமும் குப்பை
நாம சேர்ந்தா நாடே குப்பை!
சேர்ந்து பொறுக்கினோம் அதுவும் குப்பை
நிலவின் ஒளியில் நீயும் நெளித்து
நெடித்து வளைத்து நிற்க கண்டு
![dhritarashtra_and_gandhari_by_vachalenxeon-d5pqsef dhritarashtra_and_gandhari_by_vachalenxeon-d5pqsef](http://lh5.ggpht.com/-K2_6bgU4zaw/UV1_7Pb3jlI/AAAAAAAAIAQ/W6MiB1__3gA/dhritarashtra_and_gandhari_by_vachalenxeon-d5pqsef_thumb%25255B1%25255D.png?imgmax=800)
மதியை இழந்து தளர்ந்த நேரம்
காமம் கடுகென உடலது பரவிட
கலப்பை உழுது கண்ட கமத்தில
விளைஞ்சது எதுவோ ஆறடி பயறோ?
பூனைக்கு ஏதும் பிறந்திடும் புலியோ?
அதுவும் வளர்ந்து ஆனது குப்பை.
குப்பைக்குள் குண்டு மணிவரு மென்றுநம்பி
இது தான் கடைசின்னு பலமுறை கெஞ்சி
இனியும் ஏலாது எண்டு காந்தாரியும் சொல்லி
ஓய்ஞ்சு ஒடிஞ்சு நிமிர்ந்து பார்த்தா
கண்ணுக்கு முன்னாலே நிக்குது நூறு
நூறும் சேர்ந்து நாறும் வாயால்
நம்மைப்பார்த்து உறைக்கச்சொன்னது
நீரும் குப்பை, நாமும் குப்பை
நாம சேர்ந்தா நாடே குப்பை!
Comments
Post a Comment