சின்ன வயது முதல், கோயில் வீதிகளில், குருமணல் காற்சட்டையில் படிய அமர்ந்திருந்து, தமிழ் இலக்கியத்தையும், சுவையையும், நயத்தையும் இவரிடமிருந்தே கேட்டு ரசித்தேன். அவரிடமிருந்து பாராட்டு பெறுவது பேருவகை கொடுக்கிறது.
தொடர்ந்து எழுதுவது ஒன்றே இவருக்கும், என் எழுத்தில் நம்பிக்கைவைத்து ஊக்குவிக்கும் அனைவருக்கும் நான் செய்யக்கூடிய ஒரே கைம்மாறு.
எழுதுவேன்.
“என் கொல்லைப்புறத்துக் காதலிகள்” புத்தகத்தை இணையத்தில் வாங்குவதற்கு இங்கே அழுத்தவும்.
நேர்காணல் கண்டு காணொளியை தயாரித்துத் தந்த நண்பன் கேதாவுக்கு மிக்க நன்றி.