Skip to main content

நானாகிய நீ

 

 

lamp_unto_my_feet_painting_by_madetobeunique-d2xsvcd
நான் மழையானால்
நீ கடலாகிறாய்.

நான் மணலானால்
நீ அலையாகிறாய்.

நான் விழி திறந்தால்
நீ இரவாகிறாய்.

நான் மடை திறந்தால்
நீ சுரமாகிறாய்.

sita-vanavasa-by-raja-ravi-verma-QB20_lநான் உலையானால்
நீ திரையாகிறாய்.

நான் திரையானால்
நீ வெளியேறுகிறாய்.

நான் வெளியாகையில்
நீ சிறை போகிறாய்.

நான் சிறை பூணுகையில்
நீ சிற்றறை ஆகிறாய்.

 



raviv4நான் நினைக்க மறக்கையில்
நீ நிலவு ஆகிறாய்.

நான் நிலவு ஆகையில்
நீ கறையாய் மாறுவாய்.

நான் கறையாய் மாறினால்
நீ தரையை மெழுகுவாய்.

நான் தரையாய் மாறினால்
நீ வலசை போயினாய்.

 

 

Ravi_Varma-Lady_Giving_Alms_at_the_Templeநான் மறை தேடினால்
நீ மனை ஏகுகிறாய்.

நான் வினை ஆற்றையில்
நீ சிலை ஆகிறாய்.

நான் சிலை ஆகையில்
நீ சிட்டாகிறாய்.

நான் சிட்டாகையில்
நீ சிறுகூடு பிரிக்கிறாய்.

 

 

e277f65d88cfd97796d3df146601cd04
நான் இயல் ஆகையில்
நீ இசையாகிறாய்.

நான் இசை மீட்டையில்
நீ செவி மூடுவாய்.

நான் கவி வரைகையில்
நீ உரை என்கிறாய்.

நான் உரை எழுதினால்
நீ எழுத்துப்பிழை ஆகிறாய்.


 

Ravi_Varma-Ravana_Sita_Jathayu
நான் வளைந்தபோது
நீ நாணேற்றுவாய்.

நான் நிமிர்ந்தபொழுதில்
நீ சரம் தொடுப்பாய்.

நான் மலர் கொடுத்தால்
நீ இதழ் பிரிப்பாய்.

நான் இதழ் பதித்தால்
நீ முகம் சுழிப்பாய்.

 

 

print1910s
நான் வனம் புகுந்தால்
நீ கனல் ஏற்றுவாய்.

நான் கனல் குளித்தால்
நீ மனம் குளிர்கிறாய்.

நான் குளிர் நடுங்கினால்
நீ துகில் உரிகிறாய்.

நான் துகில் நீக்கையில்
நீ துயில் கொள்கிறாய்.

 

painting1
நான் கடை திறக்கையில்
நீ கதவடைக்கிறாய்.

நான் இடை தழுவினால்
நீ விடம் பொழிகிறாய்.

நான் இடம் கொடுக்கையில்
நீ தடம் மறுக்கிறாய்.

நான் சடை தரித்தால்
நீ விடை கொடுக்கிறாய்.

 

 


arjunasubhadraநான் குடை பிடித்தால்
நீ மழை நனைகிறாய்

நான் மழை நனைகையில்
நீ நனைவிடைகிறாய்.

நான் மனையிருக்கையில்
நீ வெயில் தின்கிறாய்.

நான் உயிர் ஒறுக்கையில் 
நீ உளம் ஈர்க்கிறாய்.

 

Mother_and_a_child_miniature_painting
நான் சேயாகையில்
நீ செவிலி சேர்க்கிறாய்.

நான் தாயாகையில்
நீ தாரமாகிறாய்.

நான் தாரமாகையில்
நீ பாலையாகிறாய்.

நான் வாலை தாவையில்
நீ வருவேன் என்கிறாய்.

 

 

Raja_Ravi_Varma,_Markandeya
நான் இராமனானால்
நீ இராவணாகிறாய்.

நான் கண்ணனாகையில்
நீ கம்சனாகிறாய்.

நான் கடவுளாகையில்
நீ கடிவரம் கேட்கிறாய்.

நான் அவதாரமானால்
நீ ஆகுபொருள் ஆகிறாய்.


 

102-Dhamayanthi
நான் பறந்து செல்கையில்
நீ இறகு முறிக்கிறாய்

நான் நடந்து செல்கையில்
நீ முட்கள் விதைக்கிறாய்

நான் கனவு காண்கையில்
நீ தூக்கம் தொலைக்கிறாய்.

நான் நனவு வாழ்கையில்
நீ  கனவு கன்னியாகினாய்.

 

2005111900920304
நான் நெல்லு விதைக்கையில்
நீ கிளிகளாகிறாய்.

நான் கிளியாய் மாறினால்
நீ இலவு ஆகிறாய்.

நான் கதிராய் சிலிர்க்கையில்
நீ பருவம் பொய்க்கிறாய்.

நான் மருதம் எய்தினால்
நீ எளியர் ஆகிறாய்.

 

lady_with_lampநான் முடிவானால்
நீ முனை திறக்கிறாய்.

நான் முடிவிலியானால்
நீ முற்றுப்புள்ளி ஆகிறாய்.

நான் கற்பனை திறந்தால்
நீ மொழிகள் மறுக்கிறாய்.

நான் கருவுள் நுழைந்தால்
நீ கர்ப்பம் கலைக்கிறாய்.

 

Raja_Ravi_Varma,_In_Contemplation
நான் தேடும்போதல்லாம்
நீ தொலைந்துபோகிறாய்.

நான் தொலைந்துபோகையில்
நீ வாளாவிருக்கிறாய்.

நான் நீயாகும் வேளையிலே
நீ வேறாகச் செல்லுகிறாய்.

நான் நானாகும் தருணங்களில்
நீ நீயாகவே இருக்கிறாய்.

 

நானாகிய நீ.

ஓவியங்கள் : ரவிவர்மா

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.