Skip to main content

நானாகிய நீ

 

 

lamp_unto_my_feet_painting_by_madetobeunique-d2xsvcd
நான் மழையானால்
நீ கடலாகிறாய்.

நான் மணலானால்
நீ அலையாகிறாய்.

நான் விழி திறந்தால்
நீ இரவாகிறாய்.

நான் மடை திறந்தால்
நீ சுரமாகிறாய்.

sita-vanavasa-by-raja-ravi-verma-QB20_lநான் உலையானால்
நீ திரையாகிறாய்.

நான் திரையானால்
நீ வெளியேறுகிறாய்.

நான் வெளியாகையில்
நீ சிறை போகிறாய்.

நான் சிறை பூணுகையில்
நீ சிற்றறை ஆகிறாய்.

 



raviv4நான் நினைக்க மறக்கையில்
நீ நிலவு ஆகிறாய்.

நான் நிலவு ஆகையில்
நீ கறையாய் மாறுவாய்.

நான் கறையாய் மாறினால்
நீ தரையை மெழுகுவாய்.

நான் தரையாய் மாறினால்
நீ வலசை போயினாய்.

 

 

Ravi_Varma-Lady_Giving_Alms_at_the_Templeநான் மறை தேடினால்
நீ மனை ஏகுகிறாய்.

நான் வினை ஆற்றையில்
நீ சிலை ஆகிறாய்.

நான் சிலை ஆகையில்
நீ சிட்டாகிறாய்.

நான் சிட்டாகையில்
நீ சிறுகூடு பிரிக்கிறாய்.

 

 

e277f65d88cfd97796d3df146601cd04
நான் இயல் ஆகையில்
நீ இசையாகிறாய்.

நான் இசை மீட்டையில்
நீ செவி மூடுவாய்.

நான் கவி வரைகையில்
நீ உரை என்கிறாய்.

நான் உரை எழுதினால்
நீ எழுத்துப்பிழை ஆகிறாய்.


 

Ravi_Varma-Ravana_Sita_Jathayu
நான் வளைந்தபோது
நீ நாணேற்றுவாய்.

நான் நிமிர்ந்தபொழுதில்
நீ சரம் தொடுப்பாய்.

நான் மலர் கொடுத்தால்
நீ இதழ் பிரிப்பாய்.

நான் இதழ் பதித்தால்
நீ முகம் சுழிப்பாய்.

 

 

print1910s
நான் வனம் புகுந்தால்
நீ கனல் ஏற்றுவாய்.

நான் கனல் குளித்தால்
நீ மனம் குளிர்கிறாய்.

நான் குளிர் நடுங்கினால்
நீ துகில் உரிகிறாய்.

நான் துகில் நீக்கையில்
நீ துயில் கொள்கிறாய்.

 

painting1
நான் கடை திறக்கையில்
நீ கதவடைக்கிறாய்.

நான் இடை தழுவினால்
நீ விடம் பொழிகிறாய்.

நான் இடம் கொடுக்கையில்
நீ தடம் மறுக்கிறாய்.

நான் சடை தரித்தால்
நீ விடை கொடுக்கிறாய்.

 

 


arjunasubhadraநான் குடை பிடித்தால்
நீ மழை நனைகிறாய்

நான் மழை நனைகையில்
நீ நனைவிடைகிறாய்.

நான் மனையிருக்கையில்
நீ வெயில் தின்கிறாய்.

நான் உயிர் ஒறுக்கையில் 
நீ உளம் ஈர்க்கிறாய்.

 

Mother_and_a_child_miniature_painting
நான் சேயாகையில்
நீ செவிலி சேர்க்கிறாய்.

நான் தாயாகையில்
நீ தாரமாகிறாய்.

நான் தாரமாகையில்
நீ பாலையாகிறாய்.

நான் வாலை தாவையில்
நீ வருவேன் என்கிறாய்.

 

 

Raja_Ravi_Varma,_Markandeya
நான் இராமனானால்
நீ இராவணாகிறாய்.

நான் கண்ணனாகையில்
நீ கம்சனாகிறாய்.

நான் கடவுளாகையில்
நீ கடிவரம் கேட்கிறாய்.

நான் அவதாரமானால்
நீ ஆகுபொருள் ஆகிறாய்.


 

102-Dhamayanthi
நான் பறந்து செல்கையில்
நீ இறகு முறிக்கிறாய்

நான் நடந்து செல்கையில்
நீ முட்கள் விதைக்கிறாய்

நான் கனவு காண்கையில்
நீ தூக்கம் தொலைக்கிறாய்.

நான் நனவு வாழ்கையில்
நீ  கனவு கன்னியாகினாய்.

 

2005111900920304
நான் நெல்லு விதைக்கையில்
நீ கிளிகளாகிறாய்.

நான் கிளியாய் மாறினால்
நீ இலவு ஆகிறாய்.

நான் கதிராய் சிலிர்க்கையில்
நீ பருவம் பொய்க்கிறாய்.

நான் மருதம் எய்தினால்
நீ எளியர் ஆகிறாய்.

 

lady_with_lampநான் முடிவானால்
நீ முனை திறக்கிறாய்.

நான் முடிவிலியானால்
நீ முற்றுப்புள்ளி ஆகிறாய்.

நான் கற்பனை திறந்தால்
நீ மொழிகள் மறுக்கிறாய்.

நான் கருவுள் நுழைந்தால்
நீ கர்ப்பம் கலைக்கிறாய்.

 

Raja_Ravi_Varma,_In_Contemplation
நான் தேடும்போதல்லாம்
நீ தொலைந்துபோகிறாய்.

நான் தொலைந்துபோகையில்
நீ வாளாவிருக்கிறாய்.

நான் நீயாகும் வேளையிலே
நீ வேறாகச் செல்லுகிறாய்.

நான் நானாகும் தருணங்களில்
நீ நீயாகவே இருக்கிறாய்.

 

நானாகிய நீ.

ஓவியங்கள் : ரவிவர்மா

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக