Skip to main content

யாழ்ப்பாணம் அன்றும் இன்றும்!


புதுப்பெயிண்ட் வாசத்தோடு கோயில் மாடப்புறாக்கள்.
வாசகனுக்காக காத்திருக்கும் நூலகங்கள்.
பேசுவதற்கு ஆள் இன்றி தனித்திருக்கும் மரத்தடிகள்.
காற்றுப்போய் பத்தியில் தூங்கும் மிதிவண்டிகள்.
குழைக்க ஆள் இல்லாமல் குழையும் பழஞ்சோறு.
தேங்காய்ப்பூ காய்ந்த அம்மிக்கல்லுகள்.
தார் மெழுகிய உந்துருளி வீதிகள்.
சீருடை காணாத தெருச்சந்திகள்.
ஆறரை இருட்டில் நல்லூர் திருவிழா.
காவல்துறை போலீசாகி
நயினாதீவு நாகதீபவாகி
தண்ணீர்க் கிணறுகள் எண்ணெய்ப்போத்தல்களாகி
எண்ணெய்ப் போத்தல்கள் தண்ணீர் கிணறுகளாகி
மாற்றம் ஒன்றே மாறிலி என்ற
தேற்றத்தை உணர்த்தி நிற்கின்றன.

கசக்கும் புலம்பெயர் உறவுகள்.
இனிக்கும் இருதய தொடர்புகள்.
மதில் சுவர்களில் கிழிந்து தொங்கும்
தன்னாட்சி, தேசிய கோஷங்களுக்கு மேலே
புதிதாய் பசை மணக்கும்
தனி ஒருவன் போஸ்டர்கள்.
வேலிகள் தொலைத்த படலையை திருத்தி
இரும்பு கேற்று போடுகிறது
இன்றைய யாழ்ப்பாணம்.
வெளியே நான்!

Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.