Skip to main content

யாழ்ப்பாண நூலகம் அன்றும் இன்றும்




திருமதி ரூபா நடராஜாவுடைய ‘யாழ்ப்பாண நூலகம் அன்றும் இன்றும்’ என்கின்ற நூல் நாளை லண்டனில் வெளியாகிறது.

ரூபா நடராஜா எண்பத்தொராம் ஆண்டு யாழ்ப்பாண நூலகம் ஶ்ரீலங்கா அரசாங்கத்தின் வழிநடத்தலில் எரியூட்டப்பட்டபோது பிரதம நூலகராக இருந்தவர். எரிந்த நூலகத்தில் அவர் சீ என்று வெறுத்துப்போய் உட்கார்ந்து இருக்கும் இந்தக்காட்சி எப்போதுமே மறக்கப்படமுடியாதது. இன்றைக்கு முப்பத்தெட்டு ஆண்டுகள் கழித்து அவருடைய நூல் வெளியாகிறது.

யூத கவிஞரான ஹெயினின் வார்த்தைகள் இவை.
“எங்கே புத்தகங்களை எரிக்கிறார்களோ, அங்கே ஈற்றில் மனிதர்களையும் எரிப்பார்கள்”
எவ்வளவு உண்மை.

Mrs Ruba Nadaraja’s book titled “Yaazhpaana Noolaham Anrum Inrum” (Jaffna Library, Then and Now) will be released in London tomorrow, the 1st of June, 2019.

Ruba Nadaraja was the chief librarian during the time when then renowned Jaffna public library was burnt to ashes by the Sri Lankan government led organised mob in 1981. The image depicts the frustrated and helpless Ruba Nadaraja and her staff gathered inside the ruins aftermath of that horror. Thirty eight years later, she is now releasing her account of the incident and the history of the library in general.

Quoting from the Jewish poet Heinrich Heine.

“Where they burn books, at the end they also burn people”

How true is it.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக